Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Palan Tharum Parigara Koyilgal - Part 1
Palan Tharum Parigara Koyilgal - Part 1
Palan Tharum Parigara Koyilgal - Part 1
Ebook149 pages44 minutes

Palan Tharum Parigara Koyilgal - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'பலன் தரும் பரிகாரக் கோயில்கள்' என்னும் இந்த நூலில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனையும், அதற்கு பரிகாரமாக வழிபட வேண்டிய கோயில்கள் பற்றியும் புண்ணிய பூமியாம் தமிழகத்தில் உள்ள கோயில்களைப் பற்றிய தல வரலாறு, அதன் சிறப்புக்கள், வழிபாட்டு முறைகள், செய்ய வேண்டிய பரிகாரங்கள், செல்லும் வழி முதலிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

'லேடீஸ் ஸ்பெஷல்' மாத இதழில் 'பரிகாரக் கோயில்கள்' என்னும் தலைப்பில் ஐந்து வருடங்களாக வெளிவந்த இந்தத் தொடரின் முதல் பகுதியாக இருபது கோயில்களைப் பற்றி இத்தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாய் தோஷம், சனி பகவானால் ஏற்படும் தோஷம், இதய நோய், கண் நோய், நரம்பு நோய், யம பயம், போன்றவை நீங்குதல், திருமணத் தடை விலக, சொந்த வீடு கிடைப்பதற்கு உண்டான பரிகாரங்களை எந்த கோயிலுக்குச் சென்று செய்தால் நன்மை கிடைக்கும் என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பர்கள் இப்புத்தகத்தை வாங்கிப் படித்து அந்த தலங்களுக்குச் சென்று வழிபட்டு பயன் பெறலாம்.

Languageதமிழ்
Release dateDec 31, 2022
ISBN6580160709433
Palan Tharum Parigara Koyilgal - Part 1

Related to Palan Tharum Parigara Koyilgal - Part 1

Related ebooks

Reviews for Palan Tharum Parigara Koyilgal - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Palan Tharum Parigara Koyilgal - Part 1 - M. Nithyanandam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பலன் தரும் பரிகாரக் கோயில்கள் - பாகம் 1

    Palan Tharum Parigara Koyilgal - Part 1

    Author:

    ம. நித்யானந்தம்

    M. Nithyanandam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-nithyanandam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    பழங்காலம் தொட்டு நமது முன்னோர்கள் நாள்தோறும் தங்கள் பகுதியில் உள்ள கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் காலப்போக்கில் அவை மாறி, இப்போது முக்கிய நாட்களிலோ அல்லது திருவிழாக் காலங்களிலோ மட்டுமே கோயிலுக்குச் செல்வது என்றாகி விட்டது.

    மனிதர்களின் வாழ்க்கைச் சூழ்நிலை மாறிவிட்டது இதற்கு ஒரு காரணமாக உள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன. வாழ்க்கையில் துயர் வரும்போதுதான் நமக்கு இறைவன் நினைவு வருகின்றது. அவ்வாறு நாம் இறைவனை சரணடையும்போது அவரும் நமக்கு அருளுகின்றார்.

    அந்த வகையில் 'பலன் தரும் பரிகாரக் கோயில்கள்' என்னும் இந்த நூலில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனையும், அதற்கு பரிகாரமாக வழிபட வேண்டிய கோயில்கள் பற்றியும் புண்ணிய பூமியாம் தமிழகத்தில் உள்ள கோயில்களைப் பற்றிய தல வரலாறு, அதன் சிறப்புக்கள், வழிபாட்டு முறைகள், செய்ய வேண்டிய பரிகாரங்கள், செல்லும் வழி முதலிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

    'லேடீஸ் ஸ்பெஷல்' மாத இதழில் 'பரிகாரக் கோயில்கள்' என்னும் தலைப்பில் ஐந்து வருடங்களாக வெளிவந்த இந்தத் தொடரின் முதல் பகுதியாக இருபது கோயில்களைப் பற்றி இத்தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    செவ்வாய் தோஷம், சனி பகவானால் ஏற்படும் தோஷம், இதய நோய், கண் நோய், நரம்பு நோய், யம பயம், போன்றவை நீங்குதல், திருமணத் தடை விலக, சொந்த வீடு கிடைப்பதற்கு உண்டான பரிகாரங்களை எந்த கோயிலுக்குச் சென்று செய்தால் நன்மை கிடைக்கும் என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பர்கள் இப்புத்தகத்தை வாங்கிப் படித்து அந்த தலங்களுக்குச் சென்று வழிபட்டு பயன் பெறலாம்.

    'லேடீஸ் ஸ்பெஷல்' மாத இதழில் இத்தொடரை எழுத அனுமதி தந்த ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு எனது நன்றி!

    குறுகிய காலத்தில் கட்டுரைகளைப் படித்து அணிந்துரை வழங்கிய அன்பிற்குரிய எழுத்தாளர் திருமதி காந்தலக்ஷ்மி சந்திரமௌலி அவர்களுக்கு எனது வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எல்லாம் வல்ல திருப்போரூர் முருகப்பெருமான் கருணையினால் வெளிவரும் எனது இந்த ஐந்தாவது நூலை வெளியிடும் கலைச்செல்வி பதிப்பகத்தாருக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

    கோயில்களுக்கு நேரில் சென்று தரிசிப்பதற்கு எனக்கு உறுதுணையாக இருந்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. K. மோகன், 'வெற்றி விடியல்' திரு. சீனிவாசன் ஆகியோருக்கு இந்த நூலை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    12/T182, கட்டபொம்மன் தெரு,

    ம. நித்யானந்தம்

    பாரிநகர், ஜாபர்கான்பேட்டை,

    9841398516

    சென்னை - 600 083.

    அணிந்துரை

    ம. நித்யானந்தம் அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதைத் தாண்டி, ஒரு மிகப் பெரிய பாரம்பரியத்தை பின்னணியாகக் கொண்டவர் என்பதைத் தாண்டி, மிக நல்ல மனிதர் என்பதுதான் உண்மை.

    மிக ஆழமான இறையுணர்வும், ஆழமான ஆன்மீக உள்ளமும் கொண்டவர் என்பதை அவருடைய எழுத்துக்கள் தொடர்ந்து அளித்துக் கொண்டேயிருக்கின்றன.

    பல புத்தகங்களை வெளியிட்டுள்ள நித்யானந்தம், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களைப் பற்றி எழுதும் தொடர்கள் மிக, மிக அருமையானவை.

    பொதுவாக கோயில்களைப் பற்றி எழுதுவது சுலபமல்ல. அதன் பாரம்பரியம், கலை, கலாச்சார பின்னணி, அதன் கால கட்டம், கோயிலுக்குள் உள்ள வழிபாட்டுச் சிலைகள், அதன் ஆன்மீகம், இத்தகைய கோயில்களுக்கு சென்றால் என்ன பலனை அங்கு குடி கொண்டிருக்கும் இறைவன் அளிப்பார், அக்கோயிலுக்கு எப்படி செல்ல வேண்டும் என்பது போன்ற அனைத்து விவரங்களும் மிக, மிக துல்லியமாக இருக்க வேண்டும் என்று எனக்கு கூறி வழி நடத்திய மறைந்த மூத்த ஆன்மீக எழுத்தாளர் பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன் அவர்களை நினைவு கூறுகிறேன்.

    அந்த வகையில் இளம் வயதிலேயே ம. நித்யானந்தம் அவர்களின் எழுத்துக்கள் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு எழுதியுள்ள வகையைச் சார்ந்தவை.

    புத்தகத்தின் பொருளடக்கத்தைப் பார்த்தாலே ஆசிரியர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்று புரியும். ஒவ்வொரு கோயிலுக்கும் நேரில் சென்று, விவரங்களைச் சேகரித்து, அவற்றினை பழமை மாறாமல் வாசகர்களுக்கு அனுப்புவது சுலபமல்ல.

    ஒவ்வொரு கோயிலின் தனித்தன்மை, கோபுரத்தின் பாணி, ஆகம முறைப்படி கட்டியுள்ள விவரங்கள் என்று ஆசிரியர் அளித்திருப்பதைப் படித்தால், கட்டிட சாஸ்திரம், சரித்திரம் போன்றவற்றிலும் அவருடைய ஆர்வம் வெளிப்படுகின்றது.

    விவரங்களை மட்டுமே அளிப்பவர்கள் உண்டு. அதைத் தாண்டி நம்மை கைபிடித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்று, ஒவ்வொரு பிரகாரமாக காண்பித்து, விவரங்களை அளித்து, நம்மை பக்தி பரவசம் அடைய வைப்பதில் மட்டுமல்ல, அறிவாற்றலோடு சிந்திக்க வைக்கும் தன்மையும் இவருடைய எழுத்துக்களில் பிரதிபலிக்கின்றன.

    ம. நித்யானந்தம் அளிக்கும் மற்றொரு தகவல் அனைவரையும் கோயில்களின்பால் ஈர்க்கக் கூடியவையாகும். ஆம்! ஒவ்வொரு கோயிலின் விவரங்களோடு, பரிகாரத் தலங்களாக அக்கோயில்கள் உள்ளதையும், அப்பரிகாரங்கள் எத்தகைய சோதனைகளையும் முறியடிக்கக் கூடியவை என்றும் விவரிக்கின்றார்.

    உதாரணத்திற்கு இன்று எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் விவாகரத்திற்காக கூடும் கூட்டம் மிக, மிக அதிகம் என்பதைக் காண்கிறோம்.

    அந்த வகையில் பிரிந்த தம்பதிகளைச் சேர்த்து வைக்கும் சத்திமுத்தம் கோயிலைப் பற்றி எழுதுகையில் அக்கோயிலைப் பற்றிய புராண கதையையும் கூறி, நம் முன்னோர்கள் நமக்காக அளித்துள்ள சொத்துக்களை பற்றிய விவரங்களை அளிக்கின்றார்.

    மேலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 85வது தலம் என்றும், காவிரி தென்கரையில் அமைந்துள்ள திருத்தலங்களில் 22வது திருத்தம் என்றும் குறிப்பிடுகின்றார். இது நித்யானந்தம் அவர்களை எழுத்தாளர் என்பதைத் தாண்டி ஒரு ஆராய்ச்சியாளராக அறிமுகப்படுத்துகிறது.

    'சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன்' கோயிலைப் பற்றி எழுதியுள்ள விவரங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

    திருப்புகழில் துவங்கி, இராமாயணக் காவியத்தின் தாக்கம் உள்ள இக்கோயிலின் விவரங்களை எழுதி, அருணகிரியாரின் பாதங்கள் பட்டட தலம் என்றும், இங்கு வாழ்ந்த முருகப் பெருமானின் பக்தை முருகம்மையார் பற்றி விவரித்து ... அப்பப்பா 63 நாயன்மார்களின் கதைகள் நம்மை எவ்விதம் பரவப்படுத்துகின்றதோ, அதே போன்ற உணர்வை நித்யானந்தம் அவர்களின் எழுத்துக்களும் அளிக்கின்றன.

    சகோதரி கிரிஜா ராகவன் அவர்களின் லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழில் வெளிவந்த

    Enjoying the preview?
    Page 1 of 1