Maha Periyavaa - Part 9
()
About this ebook
வறியவர்களைத் தேடித் தேடித் தன் அருகே அழைத்து ஆசிர்வதிக்கின்ற திருக்கண்கள்.
என்ன பிரார்த்தனையோ, வேண்டுகோளோ... அவற்றை வரமாக வழங்கி ஆசிர்வதிக்கிற திருமுகம்.
தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தேடி வருகின்றவர்கள் அனைவருக்கும் திரவியத்தை (பொருட்களை) வாரி வழங்குகிற அருட்கரங்கள்.
மத வேறுபாடு காணாமல் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மகானைத் தேடி வந்து, வணங்கி அருள் பெற்றார்கள்.
மகா பெரியவா தன் திருக்கரத்தை உயர்த்தி ஆசி கிடைக்கப் பெற்றவர்கள், எட்டவே முடியாத உயரத்தை வாழ்வில் அடைந்து இன்புற்றார்கள்.
அவரது திருமேனி குடி கொண்டிருக்கிற
காஞ்சிபுரம் ஸ்ரீமடத்துக்குச் சென்று உளபூர்வமாக அவரை வணங்குகின்றவர்கள், மகானின் பரிபூரண ஆசிகளைப் பெற்றவர்கள் ஆகிறார்கள்.
மகா பெரியவாளின் பிருந்தாவனத்தின் முன் நின்று, கண்கள் பனிக்கத் தங்கள் குறைகளை உருக்கமாகச் சொன்னால், அதற்குரிய பலன் உடனடியாகக் கிடைக்கிறது.
உலகெங்கும் வசித்து வரக் கூடிய மகா பெரியவா பக்தர்களின் குடும்பத்தில் மகான் தொடர்பான பல அனுபவங்கள் நீங்கா நினைவுகளாக இன்றைக்கும் இருந்து வருகின்றன.
உயிரைக் காத்தது, நோயை விரட்டியது, துயர் துடைத்தது - இப்படிப் பரவசம் தருகிற அந்த அனுபவங்களில் மகானின் குருவருள் இழையோடும்.
அத்தகைய நெகிழ்ச்சியான அனுபவங்களைப் படித்து, அந்த மகானின் பரிபூரணமான அருளை அனைவரும் பெறுவோம்.
Read more from P. Swaminathan
Azhagu Muruganin Aalayangal Rating: 0 out of 5 stars0 ratingsSathuragiri Rating: 3 out of 5 stars3/5Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal Rating: 0 out of 5 stars0 ratingsVainavathin Perumaiyum Adiyargal Magimaiyum! Rating: 0 out of 5 stars0 ratingsBhagavan (Yogi Ramsuratkumar) Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsPandaripurathu Mahaangal Rating: 0 out of 5 stars0 ratingsThiruvadi Saranam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsShirdi Baba Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsParvathamalai Rating: 0 out of 5 stars0 ratingsThiruvadi Saranam - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 8 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 10 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsNeengalum Saathikkalam Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 6 Rating: 0 out of 5 stars0 ratingsAalaya Dharisanam Part-1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Maha Periyavaa - Part 9
Related ebooks
Jagam Pugazhum Jagathguru Rating: 0 out of 5 stars0 ratingsSwami Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsThathuva Gnaniyarin Kutti Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsShirdi Baba Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 10 Rating: 0 out of 5 stars0 ratingsSankarar Endra Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsSri Kanchi Mahanin Karunai Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsJaya Jaya Shankara Rating: 0 out of 5 stars0 ratingsSri Mahavishnu Mahatmyam Rating: 0 out of 5 stars0 ratingsSri Paramacharya Swamigal Aruliya Arputha Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsSri Kanchi Mahanin Padhugai Mahimaigal Rating: 0 out of 5 stars0 ratingsC. K. Subramania Subramania Mudhaliyarin Periyapuranam Uraithiran Rating: 1 out of 5 stars1/5Arputham Arubathu Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsVaazhum Deivam Mahatma Rating: 5 out of 5 stars5/5Palan Tharum Parigara Koyilgal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsBhagavan Baba Rating: 0 out of 5 stars0 ratingsதிருக்குமரனடியார்கள் Rating: 0 out of 5 stars0 ratingsOru Mahaanin Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsHindu Madham Bathilalikkirathu Rating: 0 out of 5 stars0 ratingsThiruppavai Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Balaji Tamil Kadavul Murugan! Arunagirinathar Podum Puthir!! Rating: 0 out of 5 stars0 ratingsVaradha Varam Thaa Rating: 0 out of 5 stars0 ratingsஸ்ரீ விஜயேந்திர வாணி Rating: 0 out of 5 stars0 ratingsBhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Maha Periyavaa - Part 1 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Maha Periyavaa - Part 9
0 ratings0 reviews
Book preview
Maha Periyavaa - Part 9 - P. Swaminathan
http://www.pustaka.co.in
மகா பெரியவா – தொகுதி 9
Maha Periyavaa - Part 9
Author:
பி. சுவாமிநாதன்
P. Swaminathan
For more books
http://www.pustaka.co.in/home/author/p-swaminathan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. நலம் பெற்றார் நாராயணஸ்வாமி
2. 'நீ தாமரைப்பூவோட புள்ளைதானே...!'
3. மேடையில் ஏற வைத்து வழங்கிய மகா பிரசாதம்
4. காணாமல் போன வைரத் தோடு
5. 'அவன் சொல்லட்டும்... பல்லக்குல ஏறறேன்...'
6. 'கும்பாபிஷேகத்தன்னிக்கு கோயில் பக்கம் வராதே!'
7. அச்சு வெல்ல ஆபத்து அகன்று போனதா?
8. 'அறுபதாம் கல்யாணம் அவஸ்யம் பண்ணிக்கோ...'
9. செங்கல்பட்டும் சேங்காலிபுரமும்
10. நெஞ்சை அள்ளிய கிள்ளுக்குடி சம்பவம்
11. மஞ்சக்குடி சாஸ்திரிகளும் மரத் தட்டு பிரசாதமும்
12. 'நீ டெல்லிக்குப் போகாததும் நல்லது...'
மகா பெரியவா - தொகுதி 9
'செந்தமிழ்க் கலாநிதி'
'குருகீர்த்தி ப்ரச்சாரமணி'
பி. சுவாமிநாதன்
என்னுரை
வியர்வையைப் போக்க விசிறி தேவைப்படுகிறது.
பசியைப் போக்க உணவு தேவைப்படுகிறது.
வறுமையைப் போக்க பணம் தேவைப்படுகிறது.
வியர்வை, பசி, வறுமை போன்ற எல்லாவற்றையும் கொடுப்பது இறைவன்.
அதில் இருந்து மீள்வதற்காக விசிறி, உணவு, பணம் போன்றவற்றைத் தருவதும் இறைவன்.
துன்பங்களை மனிதர்களுக்குக் கொடுக்கின்ற இறைவனே அதில் இருந்து மீள்வதற்கான உபாயத்தையும் தந்தருள்கிறான்.
உயிரைக் கொடுத்த இறைவன், சம்பந்தப்பட்டவரின் ஆயுட்காலம் முடிந்ததும், அவனே எடுத்துக் கொள்கிறான். இதைத்தான் 'கொடுத்தவனே எடுத்துக் கொண்டான்' என்று கிராமங்களில் சொல்வார்கள்.
இடைப்பட்ட இந்தக் காலத்தில் எத்தனை எத்தனை துன்பங்கள்... வேதனைகள்... அவமானங்கள்... சோகங்கள்... வலிகள்... வேதனைகள்... ஏராளமானவற்றை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
பணம், பாசம், அன்பு, கருணை - இப்படிப் பல நல்ல விஷயங்கள் கிடைக்காமல் இவற்றுக்காக ஏங்கித் தவிக்கிறோம்.
துன்பம் என்று வந்து விட்டால், அதில் இருந்து மீள்வதற்கு வழிகள் இருக்கின்றன என்பதை உணராமல் சோர்ந்து போய் உட்கார்ந்து விடுகிறோம்.
நமது முந்தைய ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை - அதாவது, கர்ம வினைகளை அனுபவிக்கத்தான் இந்தப் பிறவியே கிடைத்திருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம்.
தீர்க்க வேண்டிய பாவக் கணக்குகள் அதிகம் இருந்தால், தீராத நோய்கள் போன்ற துன்பங்களைக் கொடுத்து முற்பிறவிக் கணக்கைத் தீர்த்து வைக்கிறான் இறைவன்.
துன்பங்களில் இருந்து மீள்வதற்குக் கோயில் கோயிலாக ஏறுகிறோம். எல்லா தெய்வங்களையும் தரிசிக்கிறோம்.
அதே சமயம், 'குருவருள்' என்கிற ஒன்றும் நம் அனைவருக்கும் முக்கியம். மகான்களின் திருச்சமாதிகளைத் தரிசிப்பதன் மூலமும், நடமாடுகின்ற நல்ல ஆத்மாக்களின் அருளாலும் நாம் அனுபவிக்க வேண்டிய பாவக் கணக்குகளில் இருந்து சற்று விலக்குப் பெறலாம். அதாவது, குறைத்துக் கொள்ளலாம்.
குருவருள் அதிகம் ஒருவருக்குக் கிடைத்தால், மொத்தமும்கூட அனுபவிக்காமலே கரைந்து விட வாய்ப்பு உண்டு.
எனவேதான், இந்தக் கலியுகத்தில் மகான்கள் குடி கொண்டிருக்கிற திருச்சமாதிகளைத் தேடித் தேடி தரிசித்து வருகிறோம்.
ராகவேந்திரர், ஷீர்டி பாபா, காஞ்சி மகா பெரியவா, பகவான் ரமணர், சத்ய சாய்பாபா - இப்படி எண்ணற்ற மகான்களை இந்த வரிசையில் சொல்ல முடியும்.
இவர்களுள் காஞ்சி மகா பெரியவா என்று அழைக்கப்படும் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் குறிப்பிடப்பட வேண்டியவர்.
ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக விளங்கியவர். நூறு வருடங்கள் இந்த பூலோகத்தில் வாழ்ந்து, தன்னைத் தேடி வருகிறவர்களின் பசி, பட்டினி, வறுமை, வியாதி உள்ளிட்ட பிணிகளை முற்றிலுமாக வேரறுத்தவர்.
எத்தனையோ துறவிகள் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்திருந்தாலும், மகா பெரியவா இன்றைக்கும் பலரது மனதிலும் நீக்கமற நிறைந்திருப்பதற்கு என்ன காரணம் என்றால், அவர் கொண்டிருந்த எளிமையே!
வறியவர்களைத் தேடித் தேடித் தன் அருகே அழைத்து ஆசிர்வதிக்கின்ற திருக்கண்கள்.
என்ன பிரார்த்தனையோ, வேண்டுகோளோ... அவற்றை வரமாக வழங்கி ஆசிர்வதிக்கிற திருமுகம்.
தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தேடி வருகின்றவர்கள் அனைவருக்கும் திரவியத்தை (பொருட்களை) வாரி வழங்குகிற அருட்கரங்கள்.
மத வேறுபாடு காணாமல் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மகானைத் தேடி வந்து, வணங்கி அருள் பெற்றார்கள்.
மகா பெரியவா தன் திருக்கரத்தை உயர்த்தி ஆசி கிடைக்கப் பெற்றவர்கள், எட்டவே முடியாத உயரத்தை வாழ்வில் அடைந்து இன்புற்றார்கள்.
அவரது திருமேனி குடி கொண்டிருக்கிற
காஞ்சிபுரம் ஸ்ரீமடத்துக்குச் சென்று உளபூர்வமாக அவரை வணங்குகின்றவர்கள், மகானின் பரிபூரண ஆசிகளைப் பெற்றவர்கள் ஆகிறார்கள்.
மகா பெரியவாளின் பிருந்தாவனத்தின் முன் நின்று, கண்கள் பனிக்கத் தங்கள் குறைகளை உருக்கமாகச் சொன்னால், அதற்குரிய பலன் உடனடியாகக் கிடைக்கிறது.
உலகெங்கும் வசித்து வரக் கூடிய மகா பெரியவா பக்தர்களின் குடும்பத்தில் மகான் தொடர்பான பல அனுபவங்கள் நீங்கா நினைவுகளாக இன்றைக்கும் இருந்து வருகின்றன.
உயிரைக் காத்தது, நோயை விரட்டியது, துயர் துடைத்தது - இப்படிப் பரவசம் தருகிற அந்த அனுபவங்களில் மகானின் குருவருள் இழையோடும்.
அத்தகைய நெகிழ்ச்சியான அனுபவங்களைப் படித்து, அந்த மகானின் பரிபூரணமான அருளை அனைவரும் பெறுவோம்.
இந்த நூலில் வெளியாகி இருக்கின்ற கட்டுரைகள் அனைத்தும் 'தின மலர்' திருச்சி மற்றும் வேலூர் பதிப்பின் ஆன்மிக இணைப்பில் வாரா வாரம் வந்தவை. 'தின மலர்' இதழில் மீண்டும் எழுதுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த ஆசிரியர் டாக்டர் ஆர். ராமசுப்பு அவர்களுக்கும், வெளியீட்டாளர் திரு ஆர்.ஆர். கோபால்ஜி அவர்களுக்கும் என் மனபூர்வமான நன்றிகள். தவிர, செய்தி ஆசிரியர் திரு பார்த்திபன் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்.
'மகா பெரியவா தொகுதி மிஙீ' என்ற பெருமைக்குரிய இந்த நூல், கோமலில் பிறந்து கோவையில் வசித்து வருபவருமான திரு.கிருஷ்ணன் அவர்களின் 'மஹாசங்கரா ஹால்' மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
வடவள்ளியில் அமைந்துள்ள மஹாசங்கரா ஹாலின் திறப்பு விழா நிகழ்ச்சியிலேயே இந்த நூலும் வெளியிடப்படுவது எல்லோருக்கும் மகிழ்ச்சியே!
நூல் வெளியீட்டுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த திரு. கிருஷ்ணனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்' குடும்பத்தினரின் நன்றிகள் உரித்தாகுக!
நூல் வெளியீட்டில் கலந்து கொண்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்.
மகா பெரியவாளின் ஒன்பது நூல்களையும் உற்றாருக்கும் உறவினர்களுக்கும் வாங்கிப் பரிசளித்து மகிழுங்கள்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
98401 42031
email: swami1964@gmail.com
https://www.facebook.com/swami1964
http://pswaminathan.in
1. நலம் பெற்றார் நாராயணஸ்வாமி
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்றைக்கு மன்னார்குடி ஒரு தாலுகா. ராஜமன்னார்குடி என்றும் வழங்குவார்கள். ஸ்ரீராஜகோபால ஸ்வாமியும், செங்கமலத் தாயாரும் அருள் புரியும் அற்புத பூமி. இன்றைக்குத் திருவாரூர் மாவட்டம்.
மன்னார்குடிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் பள்ளிவர்த்தி. இந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நாராயணஸ்வாமி என்கிற பக்தரது அனுபவத்தைப் பார்க்க உள்ளோம்.
கும்பகோணம் ஸ்ரீமடத்தில் காஞ்சி பீடம் இயங்கிய காலத்தில் மகா பெரியவாளைத் தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்களுக்கு சமைத்துப் போட ஸ்ரீமடத்தில் கைமணம் கொண்ட சமையல்காரர்கள் அதிகம் உண்டு. அவர்களுள் ஒருவரான ரங்கஸ்வாமி என்கிற சமையல் கலைஞர், இதே பள்ளிவர்த்தியைச் சேர்ந்தவர்.
பம்பாய் நகரத்தில் ரயில்வேயில் பணி புரிந்த கிருஷ்ணமூர்த்தி ஐயர் என்பவரும், அங்கு 'ஸ்ரீகாஞ்சி சேவா சமிதி' ஏற்படுத்தி, காஞ்சி ஸ்ரீமடத்தின் மீதான பக்தியைப் பரப்பியவர். இவரும் பள்ளிவர்த்தியே!
இப்படி மகா பெரியவா கைங்கர்யத்தில் தன்னை அதிகம் இணைத்துக் கொண்ட கிராமம் பள்ளிவர்த்தி.
திருவிடைமருதூருக்கு 1949-ல் யாத்திரை வந்த மகா பெரியவா, மன்னார்குடிக்கும் ஒரு விசிட் அடித்தார்.
தடபுடலான வரவேற்பு மகா பெரியவாளுக்கு வழங்கப்பட்டது. ஊரே திரண்டு வந்து