Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaazhum Deivam Mahatma
Vaazhum Deivam Mahatma
Vaazhum Deivam Mahatma
Ebook315 pages1 hour

Vaazhum Deivam Mahatma

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

உலகை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான ஒரே வழி காந்தியம். “எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாதே; தீமைக்குத் தீமை செய்யாதே; துன்பம் பொறு; பகைவரிடத்தும் அன்பாயிரு; தீச்செயல்களில் வெறுப்புக் காட்டு; அச்செயல் புரியும் மனிதரி டத்தில் வெறுப்புக் காட்டாதே; இயற்கையோடியைந்து வாழ்” - காலத்தை வென்று நிற்கும் அண்ணலின் சிந்தனைகள் இன்றைய உலகுக்கு அவசியம் என்பதை உலகம் உணர ஆரம்பித்து விட்டது; காந்தியத்தை உலகம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்து விட்டது.

பல்வேறு கால கட்டங்களில், அன்பும், அமைதியும் உலகில் நிலைத்து நீடித்து நிற்க அண்ணல் கூறிய தத்துவங்களையும், சமுதாய வளர்ச்சிக்கு அவர் விடுத்த வேண்டுகோள்களையும் தனி மனித ஒழுக்குத்திற்கு அவர் கூறிய அறிவுரைகளையும் மக்களிடம் கொண்டு செலுத்துதல் வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையை, எனது அறிவுக்கு எட்டிய சிந்தனைகளுடன் கலந்து இப்புத்தகத்தின் வாயிலாக நிறைவேற்றியுள்ளேன்.

Languageதமிழ்
Release dateAug 14, 2021
ISBN6580147007362
Vaazhum Deivam Mahatma

Related to Vaazhum Deivam Mahatma

Related ebooks

Reviews for Vaazhum Deivam Mahatma

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings2 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 4 out of 5 stars
    4/5
    Very Interesting &Informative Book to read..The is highlighted with Rare & Unseen Pictures Of Gandhi ..
  • Rating: 5 out of 5 stars
    5/5
    Want to know about Mahatma Gandhi,..should read this book.We can see many rare pictures of Mahatma Gandhi in this book. So many Principles of Mahatma Gandhi have been narrated .Foreword Introduction have been Written by The Great lyricist KaviPerarusu VARAMUTHU, Mahatma Gandhi's Personal Secretary Thiru V.KALYANAM & also by Arutchelvar.Pollachi N.MAHALINGAM.
    Hats off to the Author N.Perumal


    1 person found this helpful

Book preview

Vaazhum Deivam Mahatma - N. Perumal

https://www.pustaka.co.in

வாழும் தெய்வம் மகாத்மா

Vaazhum Deivam Mahatma

Author:

நா.பெருமாள்

N. Perumal

For more books

https://www.pustaka.co.in/home/author/n-perumal

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

என்னைப் பற்றி

பிறப்பு : 12-5-1947

பிறந்த ஊர் : குப்பல்நத்தம், பேரையூர் வட்டம், மதுரை மாவட்டம்

முகவரி : பிளாட் எண் : 46, நாகப்பா நகர், குரோம்பேட்டை, சென்னை - 600044

படிப்பு : பி.எஸ்.ஸி., எம்.ஏ.

தொழில் : மாவட்ட வருவாய் அலுவலர் - ஓய்வு

பெற்றோர் : வெ. நாராயணசாமி திருமதி. நா. ராமக்கம்மாள்

மனைவி : கோகிலா, எம்.ஏ.

படித்தது : பொதுநலம்

பிடிக்காதது : சுயநலம்

பயப்படுவது : முதுமையில் தனிமை

பலம் : இடைவிடா உழைப்பு

பலவீனம் : அனைவரிடத்தும் அன்பை எதிர்பார்த்தல்

ஆசைப்படுவது : உழைத்துக்கொண்டிருக்கும் போதே இறக்க வேண்டும்.

முன்னுரை

450 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திய ஏகாதிபத்திய சாம்ராஜ்யத்தை தனது அன்பு, அஹிம்சை, சத்தியம், நேர்மை ஆகிய எளிய நடைமுறைகளின் மூலம் கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமின்றி முடிவுக்குக் கொண்டுவந்தவர் உத்தமர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. நமது பாரத தேசம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, நமது நாட்டு மக்கள் விழிப்புணர்வு பெற்று புதிய விடியலைக் காண தனது வாழ்நாள் முழுவதும் உழைத்து, தனது இன்னுயிரை ஈந்த மாபெரும் மனித தெய்வம் அவர்.

அண்ணலின் உன்னதமான கொள்கைகளும், உயர்வான கோட்பாடுகளும், தூய்மையான வழிமுறைகளும், எளிமையான வாழ்க்கை முறையும் உலகுக்கு வழிகாட்டு நெறிமுறைகளாக பின்பற்றப்பட்டிருக்குமேயானால், உலகம் முழுவதும் ஒன்றாக, உலக மக்கள் அனைவரும் சகோதரர்களாக அன்புடனும் அமைதியுடனும், ஆனந்தத்துடனும் வாழ்ந்திருக்க முடியும்.

உலகின் இன்றைய நிலை என்ன? எங்கு பார்த்தாலும் வன்முறை, ஜாதி, மத, இனக் கலவரங்கள்; மனிதனை மனிதன் சுரண்டும் தன்மை; கண்ணுக்கு கண் - பல்லுக்கு பல் – ஹிம்சை வழிப்பயணம் - அணு ஆயுதப் போட்டி. இன்றைய உலகம் அமைதியை இழந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதே சூழலில் உலகம் தொடர்ந்து பயணிக்குமேயனால், உலகம் அழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

உலகை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான ஒரே வழி காந்தியம். எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாதே; தீமைக்குத் தீமை செய்யாதே; துன்பம் பொறு; பகைவரிடத்தும் அன்பாயிரு; தீச்செயல்களில் வெறுப்புக் காட்டு; அச்செயல் புரியும் மனிதரிடத்தில் வெறுப்புக் காட்டாதே; இயற்கையோடியைந்து வாழ் - காலத்தை வென்று நிற்கும் அண்ணலின் சிந்தனைகள் இன்றைய உலகுக்கு அவசியம் என்பதை உலகம் உணர ஆரம்பித்துவிட்டது; காந்தியத்தை உலகம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.

பல்வேறு கால கட்டங்களில், அன்பும், அமைதியும் உலகில் நிலைத்து நீடித்து நிற்க அண்ணல் கூறிய தத்துவங்களையும், சமுதாய வளர்ச்சிக்கு அவர் விடுத்த வேண்டுகோள்களையும் தனிமனித ஒழுக்கத்திற்கு அவர் கூறிய அறிவுரைகளையும் மக்களிடம் கொண்டு செலுத்துதல் வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையை, எனது அறிவுக்கு எட்டிய சிந்தனைகளுடன் கலந்து இப்புத்தகத்தின் வாயிலாக நிறைவேற்றியுள்ளேன்.

இப்படியொரு மனிதர் தசையும் தோலுமாய், இரத்தமும், நரம்புமாய் எலும்புமாய் வாழ்ந்தார் என்று வருங்கால உலகம் நம்ப மறுக்கும் என்றார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன். இப்படியொரு மாமனிதர் உலகில் வாழ்ந்தது உண்மைதான் என எதிர்கால சந்ததியினர் அனைவரும் நம்பும் வகையில் அண்ணலின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான முக்கியமான நிழற்படங்களையும், அவரது வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளின் நிழற்படங்களையும், சிறிய குறிப்புகளுடன், ஒவ்வொரு தலைப்பிலும் சேர்த்துள்ளேன். அண்ணலின் வரலாற்றை அனைவரும் எளிதில் புரிந்துகொள்வதற்கு இது உதவியாக இருக்கும் என நம்புகின்றேன்.

இப்புத்தகம் உருவாக உறுதுணையாக இருந்த எனது அன்பு நண்பர் தேனி செய்திகள் ஆனந்தன் அவர்களுக்கும் திருமதி ஆனந்தன் அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கியுள்ள மதிப்பிற்குரிய ஐயா பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களுக்கும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் மகாத்மா காந்தியின் தனிச் செயலாளர் திரு. வே. கல்யாணம் அவர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

முழுமையாகத் தமிழின் ஆழம் அறிந்த அறிஞன் அல்ல நான். இந்நூலில் பிழைகள் இருப்பின் அவைகளை வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்.

மனித நேயம் வளரட்டும்! மகாத்மாவின் புகழ் உயரட்டும்!!

வாழ்த்துரை

வெ. கல்யாணம்

பெருமாள் அவர்கள் வாழும் தெய்வம் மகாத்மா என்ற இந்த நூலை ஒரு உயர்ந்த நோக்கத்துடன் எழுதி இருக்கிறார். காந்தி எந்த கொள்கைகளுக்காக உலகின் வலிமையான ஆயுதமான அகிம்சை வழியில் போராடினாரே அந்தக் கொள்கைகள் காந்தியின் குரல்களாக இந்த நூலில் ஒலிக்கின்றன. இன்னும் அந்தக் கொள்கைகளைக் குறித்து உரிய மேற்கொள்களுடனும், உதாரணங்களுடனும் ஆசிரியர் அழகுற விளக்குகிறார். உலகின் உயர்ந்த உதாரண புருஷராக வாழ்ந்தவர் காந்தி. உலகமே அமைதியின் உறைவிடமாக விளங்க வேண்டுமென்ற உயர்ந்த கனவோடு தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அத்தகைய காந்தியின் வாழ்க்கை தத்துவத்தை நன்றாக சித்திரப்படுத்தி இருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர். ஒரு அரசுப் பொறுப்பில் பணியாற்றிக்கொண்டு ஓய்வுபெற்ற பின் நல்ல நோக்கத்துடன் மக்களுக்காக காந்தியின் கொள்கை விளக்க நூலை எழுதி இருப்பது மிகவும் பாராட்டிற்குரியது. காந்தியின் வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளடங்கிய புகைப்படங்கள் இந்த நூலிற்கு இன்னும் அணி சேர்க்கின்றன. நூலாசிரியர் அவர்களின் இத்தகைய ஆர்வத்திற்கும் அரும்பணிக்கும் வாழ்த்துக்கள்.

வெ. கல்யாணம்

மகாத்மா காந்தியின் தனிச் செயலாளர்,

சென்னை

15.10.2011

வாழ்த்துரை

அருட்செல்வர் நா. மகாலிங்கம்

உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் செயல்படுத்தாத அகிம்சை வழிப் போராட்டத்தை அறிமுகப்படுத்தியவர் மகாத்மா காந்திஜி. இந்த அகிம்சைப் போராட்டமே எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வாக இருக்கும் என்பதை உலக நாடுகளும் உலகெங்கும் இயங்கி வரும் பல்வேறு இயக்கங்களும் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

காந்திய நெறியே மனிதநேய நெறியாகும். மகாத்மாவின் வழிமுறைகளை மறக்கத் தொடங்கியதால்தான் தீவிரவாதம் உலகெங்கும் பரவி வருகிறது. இந்நிலையில் காந்தியத்தை மக்களிடையே மேலும் பரப்ப வேண்டிய கட்டாயத் தேவையாக உள்ளது. அதற்கான செயல்பாடுகளில் ஒன்று காந்திஜியைப் பற்றியும் அவரது கொள்கைகள் மற்றும் போராட்ட நெறிகள் பற்றியும் நூல்களை எழுதி மக்களிடம் கொண்டுசெல்வதாகும்.

அவ்வகையில் காந்திஜியின் கொள்கைகளையும், எளிய வாழ்க்கை முறைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியாக வாழும் தெய்வம் மகாத்மா என்ற நூலை ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலரான திரு என். பெருமாள் அவர்கள் எழுதியுள்ளார்.

இந்நூலில் மகாத்மாவின் கொள்கைகள் பல்வேறு தலைப்புகளில் கூறப்பட்டுள்ளன. ஒவ்வோர் அத்தியாயத்திலும் காந்திஜியின் பொன்மொழிகளும் அவற்றிற்கான எளிய விளக்கங்களுமாக நூல் படைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் காந்திஜியுடைய மற்றும் அவரது வாழ்வோடு தொடர்புடைய பல அரிய புகைப்படங்களை இணைத்திருப்பது நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது.

உலக அமைதிக்காகப் பாடுபட வேண்டிய இந்நேரத்தில் அதற்குரிய மேன்மையான வழியான காந்தியத்தை மக்களுக்கு நினைவூட்டும் இந்நூலைத் தமிழ் மக்கள் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும். ஆசிரியரை வாழ்த்துகிறேன்.

தங்கள் அன்புள்ள

நா.மகாலிங்கம்

வாழ்த்துரை

கவிப்பேரரசு வைரமுத்து

இந்திய தேசத்தின் பெரும்பான்மை மக்களால் ஒரு தெய்வம்போல் கொண்டாடப்பட்டவர் மகாத்மா காந்தி. அவரது கருத்துக்கள் தயக்கமின்றி ஏற்கப்பட்டன. அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை பொதுமக்கள் ஏற்றனர். அவர் நிராகரித்தவற்றை அவர்களும் நிராகரித்தனர். காரணம் காந்தியின் தத்துவங்களின் அடிப்படை, அன்பும், சத்தியமுமாக இருந்ததே ஆகும்.

காந்தியார் சமூகத்திற்கு விடுத்த முக்கிய செய்திகளை அறுபத்தெட்டு பகுதிகளாகப் பிரித்து, அத்துடன் தனது எண்ணங்களையும் கலந்து வாழும் தெய்வம் மகாத்மா எனும் சீரிய - அரிய நூலைப் படைத்துள்ளார் திரு. நா. பெருமாள் அவர்கள், அதுமட்டுமன்று, ஏழு வயது காந்தி முதல் இறுதி ஊர்வல காந்தி வரை முக்கியமான புகைப்படங்கள் அனைத்தையும் தொகுத்து ஒவ்வொரு கட்டுரைக்கு முன்பும் அழகுற அமைத்திருக்கிறார்.

‘நண்பர்களை நேசிப்பது அல்ல, எதிரியை நேசிப்பதே உண்மை அன்பு’ -

‘நம் மதத்தைப் போன்றே பிறருடைய மதத்தையும் நாம் நேசிக்க வேண்டும்’ -

‘ஒரு தேசத்துரோகியைக் கூட வெறுக்க நான் இடங்கொடேன்’ -

‘நம்பிக்கையற்றவன் பயனற்றவன்’ -

‘நாத்திகவாதியின் நாத்திகவாதமாகவும் கூடக் கடவுள் இருக்கிறார்’ -

இப்படிப்பட்ட ஒப்பனைகளற்ற நேரடித்தன்மை கொண்டவை காந்தியின் கருத்துக்கள்.

உலகம் உள்ளவரை கருத்து வேறுபாடுகளும் இருந்தே தீரும் என்பதை ஒப்புக்கொண்ட போதிலும், பகைமையைப் பகைமையால் தணிக்க முடியாது என்கிற கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தவர் காந்தியடிகள்.

அது மட்டுமன்று, காந்தியார் அன்று கூறிய, ‘ஆண் குழந்தை பிறந்தால் குதூகலமடைவதற்கோ பெண் குழந்தை பிறந்தால் துக்கப்படுவதற்கோ எந்தக் காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இரண்டுமே கடவுள் அருளியவையே’ என்கிற கருத்தும் -

‘மனைவியை இழந்தவனுக்கு மறுமணம் செய்துகொள்ள எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதேபோல் எந்த விதவைக்கும் மறுமணம் செய்துகொள்ள உரிமை உண்டு என்கிற கருத்தும்’ -

‘துர்பாக்கியவசமாக நாம் பெறுகிற கல்வி நமது சூழ்நிலையுடன் எவ்வித தொடர்பும் அற்றதாயிருக்கிறது’ என்கிற கருத்தும் -

‘ஒருவரது சமயத்தை நிந்தித்தலும், வாயில் வந்ததை உளறலும், பொய் பேசலும், ஒன்றும் அறியாத மக்கள் மண்டைகளை உடைத்தலும், கோவில்களையும் மசூதிகளையும் கெடுத்தலும், கடவுளுண்மையை மறுத்தலாகும்’ என்கிற கருத்தும் இன்றைய சமூகச் சூழலுக்கும் பொருந்திப் போவதையெண்ணி மகிழ்வதைவிடவும் அதிகமாக வருந்தத்தான் வேண்டியுள்ளது.

அண்ணல் காந்தியின் கருத்துக்களைத் தொடர்ந்து இந்நூலாசிரியர் தானும் பல கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.

அவற்றுக்குத் துணையாக அப்துல்கலாம் முதல் ஆர்தர் எரிஸ்டன் வரை பலருடைய கருத்துக்களை மேற்கோள்களாக பயன்படுத்தியுள்ளார். இந்திய அளவில் பேச்சிலும் எழுத்திலும் அதிகமாக பயன்படுத்தப்படுபவை காந்தியின் மேற்கோள்களே. அவ்வாறு புகழ்மிக்க ஒருவரைப் பற்றி நூலில் பிறரது மேற்கோள்கள் கூடாது என்பதல்ல; வரலாம்தான். ஆயினும் இந்நூலில் அவை சற்று அதிகம்தான். நூலாசிரியர் தனது கருத்து என்கிற பெயரில் அர்த்தமற்ற அறிவுரைகளை வழங்கிக்கொண்டிருக்காமல்.

இன்றைய சமூக சூழலுக்கு இன்றியமையா தேவையான மத ஒற்றுமை, சமத்துவம், பெண் கல்வி, மனமுறிவுகளை தவிர்த்தல், முதியோர் இல்லங்களை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல கருத்துக்களை முன்வைத்திருப்பது பாராட்டத்தக்கது.

பிறந்தநாளன்று மட்டுமே பேசப்படுகின்ற தலைவர்கள் பலர். நினைவு நாளான்றும் நினைக்கப்படுகிற தலைவர்கள் சிலர். ஆனால் நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும் உச்சரிக்கப்பட வேண்டிய பெயரல்லவா மகாத்மா காந்தி. காந்தி மறைந்தபோது தந்தை பெரியார் கூறினார். ‘இந்த தேசத்துக்கே காந்தி தேசம்னு பேர் வைக்கணும்.’ அது ஒன்றும் உணர்ச்சிவசப்பட்ட உரை அல்ல. ஒவ்வொரு குடிமகனுடைய குரலுமாகும்.

இன்றைய இளைஞர்கள் எந்தவொரு செய்தியையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிய விரும்புகின்றனர். அவர்கள் இந்த நூலைப் படிப்பதன் மூலம் காந்தியின் கொள்கைகள், நம்பிக்கைகள், தத்துவங்கள் யாவற்றையும் எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும். அவ்வகையில் இந்நூலாசிரியரின் பணி பெரிதும் போற்றுதற்குரியது.

உத்தமர் காந்தியடிகள் வாழ்நாளெல்லாம் ராமனாகிய பெருமாளின் புகழ்பாடிக்கொண்டிருந்தார். இந்நூலில் பெருமாள் காந்தியாரின் புகழ்பாடுகிறார். நூலாசிரியர் நம் அனைவரின் வாழ்த்துக்குரியவர்.

வாழ்த்துக்களோடு...

வைரமுத்து

உள்ளுறை

அன்பு

அன்பின் ஒளி - ஆண்டவனைக் காணும் வழி

அன்பால் ஆளுங்கள் - ஆண்டவனாய் வாழுங்கள்

அன்பு உலகைத் தாங்கும் ஆயுதம்

அன்பில்லாதவன் - உயிரில்லாதவன்

Enjoying the preview?
Page 1 of 1