Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kai Nilai
Kai Nilai
Kai Nilai
Ebook116 pages36 minutes

Kai Nilai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது கைந்நிலை ஆகிய ஆறு நூல்களும் அகப் பொருள் குறித்த நூல்களும் அவற்றில் ஒன்றாக வருவது கைந்நிலை.

‘கை’ என்பதற்கு ஒழுக்கம் என்று அர்த்தம். ஐந்து நிலங்களிலும் கூறப்பட்டுள்ள ஒழுக்கத்தை இந்த நூல் கூறுவதால் இதற்கு ‘கைந்நிலை’ என்று பெயர். இந்த நூலில் ஒரு திணைக்கு 12 பாடல்கள் என்று ஐந்து திணைகளுக்கும் 60 பாடல்களை இந்த நூல் கொண்டுள்ளது.

இந்த நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல் என்ற வரிசையில் திணைகள் அமைந்துள்ளது. இந்த நூலை இயற்றியவர் மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க்காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பவர். இந்த நூலின் ஆசிரி யரின் இயற்பெயர் புல்லங்காடனார் என்று தெரிகிறது. காவிதியார் என்பது நூலாசிரியரின் தந்தை பெயர். மாறோக்கம் என்பது கொற்கையை அடுத்துள்ள ஒரு ஊராகும்.

இதன் மூலம் இந்த நூலாசிரியர் கொற்கையை அடுத்திருக்கும் முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நூலில் உள்ள சில செய்யுள்களை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரனார் போன்றவர்கள் எடுத்தாண்டு இருப்பதிலிருந்து இந்த நூலின் சிறப்பை அறியலாம்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580144206847
Kai Nilai

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Kai Nilai

Related ebooks

Reviews for Kai Nilai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kai Nilai - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    கைந்நிலை

    Kai Nilai

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. குறிஞ்சி

    2. பாலை

    3. முல்லை

    4. மருதம்

    5. நெய்தல்

    முன்னுரை

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது கைந்நிலை ஆகிய ஆறு நூல்களும் அகப் பொருள் குறித்த நூல்களும் அவற்றில் ஒன்றாக வருவது கைந்நிலை.

    ‘கை’ என்பதற்கு ஒழுக்கம் என்று அர்த்தம். ஐந்து நிலங்களிலும் கூறப்பட்டுள்ள ஒழுக்கத்தை இந்த நூல் கூறுவதால் இதற்கு ‘கைந்நிலை’ என்று பெயர். இந்த நூலில் ஒரு திணைக்கு 12 பாடல்கள் என்று ஐந்து திணைகளுக்கும் 60 பாடல்களை இந்த நூல் கொண்டுள்ளது.

    இந்த நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல் என்ற வரிசையில் திணைகள் அமைந்துள்ளது. 60 பாடல்களை உடைய இந்த நூலில் 1, 8, 14 முதல் 17, 20, 26 முதல் 35, 38 ஆகிய எண்களில் வரும் 18 பாடல்களும் சிதைவுடன் காணப்படுகின்றன.

    குறிப்பாக 1, 8, 38 ஆகிய 3 பாடல்களில் இடையில் ஓரிரு சொற்கள் சிதைந்துள்ளன. 14, 17, 26, 32, 33, 34 எண்களைக் கொண்ட 6 பாடல்களிலும் முதல் சீ¢ர் முதல் அடியோ இல்லாமல் மற்றைய அடிகளில் ஒன்றிரண்டு சீர்களோ, அடிகளோ சிதைந்துள்ளன.

    எஞ்சியுள்ள 15, 16, 20, 27, 28, 29, 30, 31, 35 போன்ற எண்களைக் கொண்ட 9 பாடல்களிலும் முதல் அடி அல்லது முதல் சீர்கள் சிதைந்து மற்றும் உள்ள அடிகளிலும் பல சீர்கள் பல அடிகள் சிதைந்து காணப்படுகின்றன.

    ஆக மொத்தத்தில் எந்தச் சிதைவும் இன்றி கிடைத்துள்ள பாடல்கள் 22 ஆகும். குறிப்பாக நெய்தல் திணையில் மட்டும்தான் எந்தச் சிதைவும் இல்லாமல் 12 பாடல்களும் முழுமையாக கிடைத்துள்ளன.

    இந்த நூலை இயற்றியவர் மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க்காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பவர். இந்த நூலின் ஆசிரி யரின் இயற்பெயர் புல்லங்காடனார் என்று தெரிகிறது. காவிதியார் என்பது நூலாசிரியரின் தந்தை பெயர். மாறோக்கம் என்பது கொற்கையை அடுத்துள்ள ஒரு ஊராகும்.

    இதன் மூலம் இந்த நூலாசிரியர் கொற்கையை அடுத்திருக்கும் முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்த நூலில் உள்ள சில செய்யுள்களை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரனார் போன்றவர்கள் எடுத்தாண்டு இருப்பதிலிருந்து இந்த நூலின் சிறப்பை அறியலாம்.

    அன்புடன்

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    கைந்நிலை
    (புல்லங்காடனார்)

    1. குறிஞ்சி

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    நுகர்தல் இவரும் கிளிகடி ஏனல்

    நிகரில் மடமான் எரியும் அமர் சாரல்

    கானக நாடன் கலந்தான் இவன் என்று

    மேனி சிதையும் பசந்து.

    மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி நிலம் எனப்படுகிறது. இங்குள்ள மக்களுக்கு திணை மாவு முக்கிய உணவாக கருதப்படுகிறது.

    திணைப் பயிர்கள் முற்றிய நிலையில் அவற்றைப் பறவைகள் வந்து பறித்துச் செல்லாமல் தலைவி காவலுக்கு செல்வாள்.

    அதுபோன்ற சமயங்களில்தான் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் உண்டாகும். அவ்வாறு தலைவனைச் சந்தித்து மகிழ்ந்த தலைவித் தன் தலைவன் வரவை நினைத்து ஏங்கிய நிலையில் தோழியிடம் கூறுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.

    என் அன்புக்குரிய தோழியே திணைக் கதிர்கள் நன்கு விளைந்திருக்கும் சமயத்தில் அதை விரும்பி உண்பதற்காகக் கிளிகள் போன்ற பறவைகள் வந்தன.

    அந்தப் பறவைகளை விரட்டி விடுவதற்காக நான் திணைப்புனத்தில் காவல் இருந்தேன். பறவைகளை விரட்டி விட்ட என்னைத் தலைவன் விரட்டிப் பிடித்துக் கொண்டான்.

    பறவைகள் திணை முற்றிய பின் பிரிந்து சென்றது. அதுபோல, தலைவன் அழகு மிக்க மான்கள் சிலிர்த்து விளையாடும் மலைச்சாரலில் வந்து நின்றான்.

    அவன் தன்னை இந்த கானக நாட்டுக்குத் தலைவன் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டான்.

    அப்போது அவனுக்கும் எனக்கும் ஏற்பட்ட காதலால் அவன் என்னுடன் சேர்ந்தான். இனி எப்போதும் என்னை விட்டு பிரிவதில்லை என்று கூறினான்.

    பிரியமாட்டேன் என்று சொன்னவன் ஏன் பிரிந்தான். அவன் என்னுடன் இல்லை என்பதை அறிந்த என் உடல் வருந்துகிறது.

    எனவே, என் உடல் எங்கும் பசலை நிறம் கொண்டு அழகு இழந்து வருத்தம் அடைந்து விட்டேன்.

    2

    வெந்த புனத்துக்கு வாச முடைத்தாகச்

    சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம்

    வஞ்ச மலைநாடன் வாரான்கொல்

    Enjoying the preview?
    Page 1 of 1