Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vilaimagalin Vilaiyilla Kaditham
Vilaimagalin Vilaiyilla Kaditham
Vilaimagalin Vilaiyilla Kaditham
Ebook66 pages23 minutes

Vilaimagalin Vilaiyilla Kaditham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொருவரின் பார்வையிலும் அவரின் குற்றங்களுக்கான நியதிகள் இருக்கும். அதன் வெளிப்பாடுதான் இக்கடிதங்கள் விலைமகளின் மனநிலையில் எழுதப்பட்டவை. அவளின் ஆதி முதல் அந்தம் வரையில்

பெண்ணின் உடலை மட்டும் மூலதனமாய்க் கொண்ட இந்தத் தொழில், உலகம் தோன்றிய காலத்திலிருந்து வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே தானிருக்கிறது. வீட்டின் ஒரு பக்கம் கழிவறை போல இந்தச் சமூகத்தின் கழிவறையாக மாறிப்போன இந்த இருட்டுலகத்தின் கொடூர முகங்களில் ஒரு துளியளவே இந்தப் புத்தகம்.

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580126908425
Vilaimagalin Vilaiyilla Kaditham

Read more from Latha Saravanan

Related to Vilaimagalin Vilaiyilla Kaditham

Related ebooks

Reviews for Vilaimagalin Vilaiyilla Kaditham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vilaimagalin Vilaiyilla Kaditham - Latha Saravanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விலைமகளின் விலையில்லாக் கடிதம்

    Vilaimagalin Vilaiyilla Kaditham

    Author:

    லதா சரவணன்

    Latha Saravanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-saravanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கடிதம் ஒன்று...!

    கடிதம் இரண்டு

    கடிதம் மூன்று

    கடிதம் நான்கு

    கடிதம் ஐந்து

    கடிதம் ஆறு

    கடிதம் ஏழு

    கடிதம் எட்டு

    கடிதம் ஒன்பது

    கடிதம் பத்து

    கடிதம் பதினொன்று

    கடிதம் பன்னிரெண்டு

    கடிதம் பதிமூன்று

    கடிதம் பதினான்கு

    கடிதம் பதினைந்து

    கடிதம் பதினாறு

    கடிதம் பதினேழு

    கடிதம் பதினெட்டு

    அன்புமிக்க லதா சரவணன்...

    வணக்கம். நலமா?

    தங்கள் ‘விலைமகளின் விலையில்லாக் கடிதம்’ புத்தகம் வாசித்தேன். சூழ்நிலைக் கொடுமைகளுக்குப் பலியாகி, விலைமாதாய் மாறிய ஒரு பெண்ணின் மனதிற்குள் கூடு பாய்ந்து, ஏதோ அவளோடு சிலகாலம் வாழ்ந்த ஒரு இனிய அன்புத் தோழியாய் நிஜமான அக்கறையுடன் அவளுக்காகச் சிந்தித்திருக்கிறீர்கள்.

    பெண்ணின் உடலை மட்டும் மூலதனமாய்க் கொண்ட இந்தத் தொழில், உலகம் தோன்றிய காலத்திலிருந்து வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே தானிருக்கிறது. வீட்டின் ஒரு பக்கம் கழிவறை போல இந்தச் சமூகத்தின் கழிவறையாக மாறிப்போன இந்த இருட்டுலகத்தின் கொடூர முகங்களில் ஒரு துளியளவே இந்தப் புத்தகம்.

    ஆனால் இந்தப் புத்தகம் பேசும் கரிசனம் உண்மையானது. அவசியமானது. எங்கோ ஒரு விழிப்புணர்வு கொஞ்சமாகவாவது நிகழ்ந்தால் போதும்.

    இந்தப் புத்தகத்தில் உங்கள் எழுத்தின் வன்மையைப் பெரிதும் கவனித்தேன். தமிழ் மீதான தங்கள் ஆதிக்கம் புலப்படுகிறது. அழகான, வலிமையான வார்த்தைகள் உங்களின் தேர்வுக்காகக் கைகட்டி நிற்கின்றன. நீங்கள் அவற்றை வாஞ்சையுடன் அள்ளியெடுத்துச் சரங்களாகத் தொடுக்கிறீர்கள்.

    வாசிக்க வாய்ப்பளித்தமைக்கு மகிழ்ச்சியும், நன்றியும்...

    ATHMA HOUSE, 37/1, CANAL BANK ROAD

    KASTURIBA NAGAR, ADYAR, CHENNAI – 600020

    PHON: 044 -24415709, 9840148222 MAIL: pkpchennai@yahoo.co.in

    முன்னுரை

    முன்னுரையும் முதலுரையும் முகவுரையாய் காத்திருக்கிறது உங்களின் கண்கள் வாசிக்க, உதிர்த்த வார்த்தைகளை பிரித்து வைக்கிறேன் வாக்கியங்களைச் சேர்த்து வைக்க?! வெறும் இரவுச் சேர்க்கைப் பறவையென வாழ்ந்து விட்ட என் அந்தரங்க இரவை அதில் தினம் நிறமிழந்த சிறகுகளை கோர்வையாக்கி தரப் போகிறேன்...

    இனம் காணா நிழல் உலகில் ஒரு சிறு வெளிச்சமாய் விநாடிக்கு ஒருமுறை கண்சிமிட்டும் விளக்கின் ஒளியில் ஏற்றதும் பெற்றதும் சிதைந்ததும் சீர்படுத்தியதும் சிக்கலான நூல்கண்டாய் தீர்க்கப்படும் விரல்களாய் காத்திருந்து காத்திருந்து யாரோ ஒரு கவிஞனின் பாடலின் வரிபோல காலங்கள் போனதுதான் மிச்சம்.

    என்னவோ எழுதப்போகிறாய் எதையோ சொல்லப்போகிறாய் என்ற ஆர்வக் குறியீட்டில் புருவம் உயர்த்த வேண்டாம் இவையாவும் சுடுமணலில் எழுதப்பட்ட வார்த்தைகள் அதற்கு நீர் தெளித்து சூடு தணிக்கும் விரல்களை விழியீர்ப்பில் தேடித் தேடி அலைந்தது ஒரு காலம்

    Enjoying the preview?
    Page 1 of 1