Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalvanin Kaadhali
Kalvanin Kaadhali
Kalvanin Kaadhali
Ebook102 pages57 minutes

Kalvanin Kaadhali

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

எதிர்பாராத ஒரு நிகழ்வில் சந்திக்கும் சித்ரஞ்சனியும் மதனவர்மனும் காதலில் இணைந்து பின் பிரிகிறார்கள் அந்நிய தேசத்தில் வசிக்கும் சித்ரஞ்சனியும் சென்னையில் வசிக்கும் மதனவர்மனின் ஊடலும் கூடலும் கதைக்களம் ராமருக்கு அணிலைப் போலவே உதவும் இன்னொரு இளம் பறவைகள் என ஜெட் வேகத்தில் பயணிக்கும் காதல் கதை கள்வனின் காதலி.

Languageதமிழ்
Release dateJun 19, 2020
ISBN6580126905576
Kalvanin Kaadhali

Read more from Latha Saravanan

Related to Kalvanin Kaadhali

Related ebooks

Reviews for Kalvanin Kaadhali

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalvanin Kaadhali - Latha Saravanan

    http://www.pustaka.co.in

    கள்வனின் காதலி

    Kalvanin Kaadhali

    Author:

    லதா சரவணன்

    Latha Saravanan

    For more books

    http://pustaka.co.in/home/author/latha-saravanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    ஆயிரமாயிரம் பறவைகளுக்கு நடுவில் புதிதாய் பூத்தெழுந்த வெண்ணிற மேகத்தின் வானவீதியில் கோடு இழுத்தாற் போல் இயந்திர இறக்கை கொண்டு பறந்து வந்தது. அந்த உலோகப் பறவை தரையோடு காதல் கொண்டு தன் சிறகுகளை சிக்கென மூடிக்கொண்டது.

    மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் திருவிழா பூண்ட கோவிலைப் போல கூட்டமும் நிரம்பி வழிந்தது. தோளில் கறுப்பு நிற ஹேண்ட் பேக், கண்களில் குளிர் கண்ணாடி சகிதம் சற்று முன்னரே பறித்த சிகப்பு ரோஜா போல் நின்றிருந்தாள் சித்ரஞ்சனி.

    வழக்கம்போல் டாக்ஸிகாரர்களும், ஆட்டோ ஒட்டுநர்களும் பயணிகளை நெருங்கிக் கொள்ள, சந்தடியிலிருந்து சற்றுத் தள்ளி வெள்ளைச் சீருடையில் மிஸ்டர் சாரதி என்னும் பலகை தாங்கிய அந்த டிரைவரை நெருங்கினார்கள் இருவரும்.

    ஐயாம் சாரதி

    குட்மார்னிங் ஸார் உங்களை ரிசீவ் பண்ணித்தான் நான் வந்திருக்கிறேன் என்று கையில் ஒரு பூச்செண்டை திணித்தான் அவன். வாங்க ஸார் கார் அங்கேயிருக்கு.

    பவ்யமாய் அவர் கையிலிருந்த பெட்டியைப் பெற்றுக்கொண்டான். லக்கேஜ்கள் ஏற்றப்பட்டவும் தந்தையும் மகளும் அந்த சிகப்பு நிற ஜிப்சியில் அமர்ந்தார்கள்.

    அப்பா யார் இந்த ரங்கராஜன்?

    நம்ம சதாசிவம் அங்கிளோட ப்ரெண்ட் சன்தான் இந்த ரங்கராஜன். பாரினில் படிச்சிட்டு வந்து இங்கே பிஸினஸ் பண்றான். நல்ல பையன், சின்ன வயசிலேயேயே சாதிக்கனுன்னு வெறி கொண்டவன்னு சதாசிவம் கூட அடிக்கடி சொல்லுவான். ஒரு டீல் விஷயமா அவனை நான் மீட் பண்ணனும்.

    அடக் கடவுளே அப்ப இதுவும் அபீஷியல் ட்ரிப்தானா?

    ஒரு நல்ல வியாபாரிக்குத் தூக்கத்தில் கூட அவன் தொழில்தான் நினைவிருக்குமாம்.

    அத்தை வீட்ல நம்மளை எதிர்பார்த்துக்கிட்டு இருப்பாங்க இல்லைப்பா?!

    நான் ஏர்போர்ட்டில் இருந்து வரும்போதே போன் பண்ணிட்டேன் என்றார் தந்தை.

    தன் கடல் நிறக் கண்களில் உற்சாகம் அலையலையாய் பொங்க கார் கண்ணாடிக்கு வெளியே பார்வையைப் பரப்பிக்கொண்டிருந்தாள் சித்ரஞ்சனி. சுவற்றில் புன்னகை சுமந்தபடி இருந்த யாரோ ஒரு இளம்நாயகனின் போஸ்ட்டரை பசு மாடு வெகு சுவாரஸ்யமாய் மென்று கொண்டு இருக்க, ஐஸ்கிரீமிற்காய் தன் தந்தையிடம் சிணுங்கிக் கொண்டு இருந்தாள் அந்த காண்வென்ட் சிறுமி.

    மக்கள் புற்றிலிருந்து வெளியேறும் எறும்புகளாய் ஓடித்திரிந்தார்கள். பரபரப்பாக இருந்தாலும் இங்கே உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கயைில் இல்லாத இயந்திரத்தனம் மனதிற்கு ஆசுவாசமாய் இருந்தது. எத்தனை நாள் இந்தியாவிற்கு வரவேண்டும் என்ற ஆசை எப்படியோ முட்டி மோதி ஒரு வழியாக வந்து குதித்தாகிவிட்டது. மனம் குழந்தையாய் ஆர்ப்பரித்தது.

    சித்ரஞ்சனியின் பிறப்பு இந்தியாவாய் இருந்தாலும் வளர்ந்தது என்னவோ அமெரிக்காவில்தான் ஆனால் சிறு வயது முதலே அந்த நாகரீகத்தில் மனம் ஒன்ற மறுத்தது.

    அதற்கு ஒரு வகையில் அவளின் தாயார் மீனாட்சியும் அவரின் பண்புமிக்க வளர்ப்புமே காரணம் என்றால் மிகையாகாது. குழந்தை முதல் உணவு அளிக்கும் போதே பிறந்த நாட்டின் பெருமைகளை விடாமல் சொல்லிச் சொல்லியே மகளின் மனதில் இந்திய மோகம் வளர வித்திட்டு விட்டார் அன்னை மீனாட்சி சித்ரஞ்சனியின் தந்தை சாரதி ஒரு சுறுசுறுப்பான தொழிலதிபர். சாப்பிடக் கூட நேரமின்றி உழைத்தாலும் வாரக் கடைசியை மட்டும் குடும்பத்துடன்தான் செலவழிப்பார்.

    சாரதிக்கு பூர்வீகம் சென்னைதான். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் அவரையடுத்துப் பிறந்தவர் வசந்தா. பதினெட்டு வயதிலேயே புக்ககத்து ஜாகை. அவளின் கணவன் சிவசு என்கிற சிவசுப்பிரமணியம். கலெக்டர் அலுவலகத்தில் குமாஸ்தாவாய் பணிபுரிபவர். இவர்கள் திருமணம் முடிவான சமயத்தில்தான் சாரதி தொழிலில் காலூன்றிய நேரம், ஐந்து பவுன் நகையும், சீர்வரிசையும் செய்து தங்கைக்கு திருமணம் முடிந்து வைப்பதற்குள் மூச்சு முட்டியது அவருக்கு.

    வசந்தாவிற்கு பிறகு சாரதி என்றாகிப் போக அடுத்த கல்யாண நச்சரிப்பு ஆரம்பித்தது.

    மயிலாப்பூரில் ஒண்டுக் குடித்தனம் ஒன்றில் வாழ்க்கைை ஒட்டிக்கொண்டிருந்த கிருஷ்ணனின் மகள் மீனாட்சியை அவரின் சகதர்மினியாய் நியமித்தனர் பெற்றோர்கள். மினாட்சிக்கு அப்போது வயது இருபது ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

    அத்துடன் தங்கள் கடமைகள் முடிந்தது என எண்ணினார்களோ என்னவோ காசி இராமேஸ்வரம் செல்ல முடிவு செய்தவர்களை பெருமாள் தன்னிடம் அழைத்துக் கொண்டார்.

    அதன் பின்னர் சாரதி தன் பணியில் அதிக ஈடுபாடு செலுத்த ஆரம்பிக்க, புது விதமான ஆடைகளை ஏற்றுமதி செய்யும் காஸ்ட்யூம் டிஸைனரான அவரின் வடிவமைப்புகளில் ஈற்று அமெரிக்காவின் மிகப்பெரிய ஆடை

    Enjoying the preview?
    Page 1 of 1