Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Minmini Poochikal
Minmini Poochikal
Minmini Poochikal
Ebook139 pages1 hour

Minmini Poochikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்தாளர் லதா சரவணன் 1981ல். பிறந்தார் சென்னை பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகப் படிப்பினை முடித்தார். வடசென்னையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஸ்ரீ சாந்தி சாரீஸ் என்னும் நிறுவனத்தில் கணவருடன் இணைந்து நடத்திவருகிறார். இரட்டை பெண் குழந்தைகள் 10ம் வகுப்பிற்கு அடியெடுத்து வைக்கிறார்கள். 2003 ல் முதல் சிறுகதை தங்கமங்கை என்னும் இதழில் வெளியானது. முதல் நாவல் 2004 ஜனவரியில் பொங்கல் விருந்தாக கண்மணியில் பனிக்கால் வசந்தங்கள் என்னும் தலைப்பில் வெளியாகி இருந்தது. அது முதல் 53 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், கட்டுரைகளும், வெகுஜனப்பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளளது. (ராணி, தேவி, குமுதம், மாலைமலர், குடும்ப நாவல், தினமலர், தினதந்தி குடும்பமலர், பெண்மணி).

இவரது திருநங்கைகளின் வாழ்க்கை குறித்து காகிதப்பூக்கள் என்னும் நாவல் பிரசத்தி பெற்றது. அதே போல் ராணி வார இதழில் 2016 ம் ஆண்டில் 23 வாரத்தொடராக திருநங்கைகள் ஒவ்வொருவரின் வாழ்வியல் இவரது எழுத்தில் வெளிவந்திருந்தது. திருக்குறள் மையம் சார்பாக முப்பது திருக்குறளிற்கு - அதன் சாரம்சம் குறையாமல் நவீன காலத்தின் இயல்புகளை தொகுத்த உயிரோவியமும் 2015 ம் ஆண்டிலேயே ராஜா அண்ணாமலை மன்றத்தில் திருக்குறன் செம்மல் திரு. தாமோதரன் அவர்களால் வெளியிடப்பட்டது.

எழுதுவதோடு மட்டுமன்றி முருகதனுஷ்கோடி, கேசிஎஸ், எம்.ஜியார் ஜானகி கல்லூரி, சேம் வைவா, விநாயகா மிஷன், சாரதாம்மாள் மகளிர் கல்லூரி, எத்திராஜ், குயின்மேரிஸ், ஸ்டெல்லா மேரிஸ் இன்னும் பல இடங்களில் தன்னம்பிக்கைக் குறித்த பேச்சுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் நீங்கலான தொலைக்காட்சி நிகழ்வுகளில் பெண்ணியம் தொடர்பான கருத்துக்களையும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளையும் வலியுறுத்தியிருக்கிறார். (மக்கள், சன்டிவி, புதிய தலைமுறை, பெப்பர்ஸ், நியூஸ் 7, பொதிகை, வானொலி நிலையம், வின்டிவி)

தற்போது ஒன் இந்தியா தமிழ், மற்றும் சில்சி என்னும் ஆன்லைன் தளங்களில் இவரது கதைகள் கட்டுரைகள் வெளியாகிவருகிறது. சென்ற வருடம் குமுதத்தில் நாவல் வெளியாகி இருந்தது. 2011ல் குயின் மேரிஸ் கல்லூரியிலும், 2012 போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் 2015 நேசம் மனிதவள மேம்பாட்டு மையம், 2016ல் ஒ.எம்.சி வில் மதுரை தமிழ் இலக்கிய மன்றம் சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிதையாசிரியர் என்னும் விருதும், 2008 ல் அரசாங்கம் நூலகம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் கவரிமான் என்னும் கதைக்கு தேவநேயப்பாவணர் அரங்கில் திரு.பரிதி இளம்வழுதி அவர்களின் மூலம் பரிசு பெற்றார்.

உமாபதி கலையரங்கத்தில் தங்கமங்கை நடத்திய விழாவில் தங்கமங்கை என்னும் விருதை பெற்றார். அண்மையில் நடைபெற்ற அறம் தமிழ்பண்பாட்டு மையத்தில் ஆற்றல் அரசி என்னும் விருது தரப்பட்டது. எழுத்துலகிலும் தொழில் துறையிலும் அவர்களின் பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126904295
Minmini Poochikal

Read more from Latha Saravanan

Related to Minmini Poochikal

Related ebooks

Reviews for Minmini Poochikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Minmini Poochikal - Latha Saravanan

    http://www.pustaka.co.in

    மின்மினிப் பூச்சிகள்

    Minmini Poochikal

    Author:

    லதா சரவணன்

    Latha Saravanan

    For more books

    http://pustaka.co.in/home/author/latha-saravanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    கண் மூடி ஆயாசமாய்ப் படுத்திருந்தான் கமல். அன்றிரவு மெயிலில் வந்திருந்த அந்தச் செய்தி அவனை அடித்துப் போட்டிருந்தது. இது எப்படிச் சாத்தியம்? மாயா, எங்கே நீ? என்னை இப்படி ஏங்க வைத்துவிட்டுச் செல்லும் அளவுக்கு உனக்கு எப்படி மனம் வந்தது? அய்யோ! அந்தத் தருணங்களில் நீ என்னவெல்லாம் எண்ணித் துடித்திருப்பாய். என்னை நினைத்தாயா? இந்தக் கமலின் அருகாமை வேண்டும் என்று உன் சகலமும் இழக்கத் தயாராய் இருந்தாயே! கன்னங்களின் ஓரம் சூடான திரவம் வழிந்தது. தவித்துப் போய் இருந்தான்.

    அவனின் கைபேசி ஒலித்தது. நண்பன் அசோக். அவன் ஒரு டிடெக்டிவ் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டு இருக்கிறான். அவன் ஒருவனுக்குத்தான் மாயா - கமலின் காதல் விவகாரம் தெரியும். மாயாவைப் பற்றிய விவகாரத்தையும் அவன் தான் சொல்லி இருந்தான்.

    சொல்லு அசோக்...!

    ம்...! டிக்கெட் புக் பண்ணிட்டியா? இங்கே எல்லாம் முடிந்து போய்விட்டது. நீ வாடா. நான் தெரிந்த போலீஸ் அதிகாரியிடம் பேசிவிட்டேன். சில தகவல்கள் எல்லாம் கிடைத்தது. ஆனால் நேரில் பேசினால்தான் நன்றாக இருக்கும்.

    இதெல்லாம் அவளுக்காகத்தானேடா… இனிமே எனக்கு என்னடா வேலை? டிக்கெட் புக் பண்ணியாச்சு. காலையில் அங்கே இருப்பேன். சரி, அதுக்குள்ளே என்ன தான் நடந்ததுன்னு சொல்லுடா. போனை கட் செய்தான்.

    கண் முன்னே மாயாவை முதன் முதலாய்க் கண்ட அந்த நாள் விரிந்தது. கமல் நகரத்தின் மையப் பகுதியில் புதுவிதமான பாணியில் பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருந்தான். தொழில் சம்பந்தமான ஒரு மீட்டிங்கிற்குப் போகும் போதுதான் மாயாவை அவன் முதலில் சந்தித்தது.

    ஜெர்மனியில் அவனுடன் தொழில் செய்யும் கம்பெனியின் மேலாளர் சென்னை வந்திருந்தார். அவரிடம் பர்னிச்சர் அனுப்பியதற்குப் பணம் பெறுவதற்கும் மேற் கொண்டு ஏற்றுமதி பற்றிய விவரங்களைத் தருவதற்கும் அவரைச் சந்திக்கச் செல்ல வேண்டியிருந்தது. அவர் தமிழ் வாழ் இந்தியர் என்பதால் அவர் தங்கியிருந்த ஓட்டலில் நடைபெறும் நடன நிகழ்விற்கு அன்று இரவு செல்வதாகவும் தங்களுக்கு வேறு வேலை இல்லையெனில் நீங்களும் வரலாமே என்றும் அழைத்திருந்தார். ஆர்வம் இல்லையென்றாலும் நல்ல பிஸினெஸ் கெட்டு விடக்கூடாதே என்று அவனும் அதற்கு உடன் செல்ல வேண்டியிருந்தது. அதிலும் புதுவிதமான நடனங்கள் வந்து விட்ட நிலையில் இந்த மனிதர் ஏன் அந்தக் கால கிளாசிக் நடனத்தை விரும்புகிறார் என்று நொந்தபடிதான் சென்றான். வேறு வழியில்லை. ஒரு மணி நேரம் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்துவிட வேண்டியதுதான் என்ற நினைப்போடுதான் போனான்.

    இந்த நினைப்பெல்லாம், அந்த நாட்டிய நிகழ்ச்சி தொடங்கிடும் வரையில்தான். பட்டாம்பூச்சியெனப் பட படக்கும் விழிகளும், குடையாய் அடைகாத்த இமைகளும், பொய்யோ என்னும் இடையுமுடையவள் என்ற வர்ணனைக்கு ஏற்ப அழகாய் இருந்தாள் அவள். அன்னமென அசைந்தாள் அவள். இசைக்கு ஏற்றாற்போல பம்பரமெனச் சுழன்று ஆடுவதையும் கண்டவனுக்கு அப்போதே தானும் அவளிடம் விழுந்து விட்டோம் என்றே தோன்றியது. அது ஒரு நாட்டிய நாடகம். சாகுந்தலையின் புலம்பல்.

    கணவன் தன்னைக் கைவிட்டுச் சென்றபோது, ஏற்படும் காதலின் பிரிவுத் துயரை, மறந்துவிட்ட கணவனிடம் தன்னை வெளிப்படுத்தும் இடமும், அவளின் முகபாவங்களும், அழகும் கொள்ளை கொண்டன. நடனம் முடிந்து அவள் சென்றும் அசையாமல் அமர்ந்திருந்த அவனைக் கண்டால் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. என்னவோ அவளை உடனே காண வேண்டும் என்ற ஆவல் எழ, ஒப்பனை அறைக்குச் சென்று விட்டான்.

    அந்த ஜெர்மனி மேலாளரும் கூடவே ஒட்டிக் கொண்டார். விழிகள் நிரம்பிய அந்தப் பிம்பத்தின் ஒளி அவனை இழுத்துச் சென்றது. ஆனால் அங்கும் இருள் மட்டுமே சூழ்ந்திருந்தது.

    ஓ... என்ன மிஸ்டர் கமல், முதலில் கூப்பிட்டபோது வரமாட்டேன்னு சொல்லிட்டு இப்போ இத்தனை ஆர்வமா நடனப் பெண்மணியைப் பார்க்க வந்திருக்கீங்களே? தமிழ்நாட்டின் கலை ஆர்வம் யாரையும் விடாது.

    உண்மைதான். பிறர் வந்து சொல்லும் வரையில், நம்முடைய மதிப்பு நமக்குத் தெரிவதில்லைதான். அவள் உடனே வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் தாமதிக்காமல் சென்று விட்டாளாம். எனவே அவளுடைய செகரட்டரியின் எண்களைத் தெரிந்து கொண்டான். இரவு முழுவதும் அந்தக் காரிகையின் நினைப்பாகவே இருந்தது. எப்படியாவது தன் அன்பில் மறந்து போன மணவாளனைக் கவர வேண்டும் என்று அவள் துடித்த துடிப்பும், ஏற்றுக் கொள்ளேன் என்று ஏங்கியதும் இன்னமும் கண் முன்னாடியே நின்றது. விடியும் வரை காத்திருந்து மறுநாள் காலையில் போனில் தொடர்பு கொண்டான்.

    ஆனால், அவள் கலை விழாவென்று பெங்களூர் வரை சென்றிருப்பது தெரிய வந்தது. யோசித்த மறு நிமிடமே தானும் பெங்களூர் செல்வதென்று தீர்மானித்து அவளின் அறைக்கு அருகிலேயே அறை எடுத்துத் தங்கினான். ஆனால் முதன் முறையில் ஒரு பெண்ணிற்காக இத்தனை தூரம் மெனக்கெட்டது அவனுக்கே சற்று அதிகப்படியோ என்று தோன்றியது. ஆனால் அந்த ஆடலரசியைச் சந்திக்காமல் இருக்க இயலவில்லையே.

    அதிகாலை அள்ளிப் பூசிய குங்குமமாய்ச் சிவந்து விளங்கியது. இருள் கவிழ்த்து வைத்திருந்த கூடையை அகற்ற விடியல் பறவைகள் சுதந்திரமாய்க் கூட்டிலிருந்து வெளியேறி ஒலிபரப்பின. அழகான பூக்களைக் கொண்டு ஒரு பூச்செண்டும், அதோடு ஒரு தங்கக் கொலுசும் கொண்டு வந்த அவனைக் கண்டதும், யார் கொடுத்து அனுப்பியது என்றாள் மாயா.

    மேடம்! அவர் அடுத்த அறையில் இருக்கிறார். அவர் தந்தது, என்று அவன் கன்னடத்தில் பேசிட, பெற்றுக் கொண்டு அதைப் பிரித்தாள். ஒரு கடிதம் வந்து மடியில் விழுந்தது. அதில் அழைக்கவும் என்று அவனின் பத்து இலக்க எண்ணுடன் அன்புடன் கமல் என்று எழுதியிருந்தது.

    இந்த ஆறு வருட நடன வாழ்க்கையில் இப்படிச் சில விசிறிகளை அவள் கண்டதுதான். அவர்களின் ரசனைகள் எல்லாம் அவளின் அங்கத்தின் மீதே இருக்கும். ஆடலின் மீது இருக்காது. அதென்னவோ எந்தத் தொழிலும் பெண் என்றால் ஒரு இளப்பம் இருக்கத்தான் செய்கிறது. பெண்களை மென்மையாய்ப் படைத்த இறைவனைச் சொல்ல வேண்டும். தன் எண்ணங்களைச் சாகடிக்கும் சிலரை எதிர்க்கும் சக்தியையாவது அவர்களுக்குக் கடவுள் தந்திருக்க வேண்டாமா? இதோ இவனையே எடுத்துக் கொண்டால், முன்பின் அறியாதவன் தங்கக் கொலுசு பரிசு தந்தால் மயங்கி விடுவேன் என்று எண்ணி விட்டான் போலும். இந்த மாயாவைப் பற்றிச் சரியாக அறியாதவன் இல்லையா? நன்றாய் நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்றுதான் அவள் அந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டதே! காத்திருப்பதைப் போல் உடனே போன் எடுக்கப்பட்டது. வணக்கம்! நான் மாயா.

    நான் கமல்.

    ம். பார்த்தேன். மிஸ்டர் கமல், தங்கள் பரிசும், பூக்களும் கிடைத்தது. ஆனால் நான் பரிசுக்கு மயங்குபவள் இல்லை.

    உண்மையான அன்பு நிச்சயம் மயக்கம் தரும். நாம் கோவிலில் சந்திப்போமா? என்றான். அவனின் குரலில் இருந்த குழைவு அவளை ஏதோ இம்சிப்பதைப் போல இருந்தது. இதுவரையில் அவளை நெருங்கிய பலர் சந்திக்க விரும்பும் இடம் வேறாக இருக்கும். எத்தனையோ பேரை லாவகமாய்த் தவிர்த்திருக்கிறாள் மாயா. ஆனால் இவன் சற்று வித்தியாசமாய் உணர வைத்தான். ஒரு வேளை பசுத்தோல் போர்த்திய புலியோ என்று கூட எண்ணத் தோன்றியது!

    சற்றே யோசித்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1