Ithanai Naalai Engirunthai?
By Rajashyamala
4.5/5
()
About this ebook
Inspired by mother Lakshmi Rajarathnam, started to write from the age of 10 in kids magazines and even won a prize in Balamitra.
Written more than 250 short stories, 30 novels and serials in all leading magazines like Kumudam, Kalki, Devi, Rani, Amuthasurabi, Penmani, Kanmani, Malaimadhi, Ranimuthu etc. Also, written many dramas for All India Radio (AIR).
Won Dinamalar short story prize for the story "Jeevanadigal Vatruvadillai"
Recent Kumudam short story Kalasam was a historical story which got lot of appreciation
Having given 100s of Bharathanatya performances, currently running a dance class and also interested in paintings.
Married to Priya Kalyanaraman , also a journalist
Read more from Rajashyamala
Suriyan Theyumo? Rating: 0 out of 5 stars0 ratingsUyire... Uyire... Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Ragam Rating: 5 out of 5 stars5/5Sila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsKannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsThalli Ponal Theipirai Rating: 0 out of 5 stars0 ratingsEngey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Alli Rating: 0 out of 5 stars0 ratingsAnnaparavai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsMaya Pozhuthugal... Rating: 4 out of 5 stars4/5Udhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsRajashyamalavin Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Ungal Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ithanai Naalai Engirunthai?
Related ebooks
Nenjodu Kalanthidu Uravalae..! Rating: 4 out of 5 stars4/5Yamunai Aatriley… Era Kaatriley… Rating: 4 out of 5 stars4/5Vanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Devathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Anbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Indha Pookkal Unakkaga Rating: 4 out of 5 stars4/5Sandhiya Rating: 5 out of 5 stars5/5Thiruttu Payale Rating: 0 out of 5 stars0 ratingsUyir Unarum Va(li)zhiyo Kaadhal Rating: 3 out of 5 stars3/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Nesam Thanthaval Neethane! Rating: 0 out of 5 stars0 ratingsKalvanin Kaadhali Rating: 5 out of 5 stars5/5Thoduvaanam Thodum Dhooram Rating: 4 out of 5 stars4/5Sugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogiraai? Rating: 5 out of 5 stars5/5Uyiriley Ninaivugal Thalumbuthey! Rating: 4 out of 5 stars4/5Sagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratingsIthu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Endhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Azhagai Pookkuthe... Rating: 5 out of 5 stars5/5Nenjirukkum Varaikkum! Rating: 1 out of 5 stars1/5Mannikka Mattaya? Rating: 4 out of 5 stars4/5Maiyal Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Vaasal Vantha Vanaville Rating: 5 out of 5 stars5/5Thunaiyaga Varuvaya Thozhaney...! Rating: 5 out of 5 stars5/5Unai Sera Uyir Sumanthean Rating: 5 out of 5 stars5/5Engirundho Vandhan Rating: 1 out of 5 stars1/5
Reviews for Ithanai Naalai Engirunthai?
2 ratings0 reviews
Book preview
Ithanai Naalai Engirunthai? - Rajashyamala
http://www.pustaka.co.in
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
Ithanai Naalai Engirunthai?
Author:
ராஜசியாமளா
Rajashyamala
For more books
http://www.pustaka.co.in/home/author/rajashyamala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
1
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமைப் போர்வை, தொடுவான எல்லையில் இளம் பச்சை தேயிலைப் படுக்கைகளும் வெளிர்நீல வான விளிம்பும் இதமாய்க் கலக்க, ஏதோ கைதேர்ந்த ஓவியன் சிரத்தையாய் வரைந்தது போல் இருந்தது. ஷாலினியால் இந்த இயற்கை அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை
எத்தனை அழகு! வானில் தான் எத்தனை வண்ணக் கோலங்கள் இள நீலத்தோடு ரம்யமாய்ச் சேரும் இளம் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள். அவற்றுள் புகுந்து வெளிப்படும் மாலைச் சூரிய கிரணங்களை உள்வாங்கி தகதகக்கும் வெண் பஞ்சு மேகங்கள்.
‘இது ஒரு பொன் மாலைப் பொழுது,
வான மகள் நாணுகிறாள்,
வேறு உடை பூணுகிறாள்...'
மெல்ல முணு முணுத்தாள் ஷாலினி.
இதமான காற்று சற்றே குளிர் காற்றாய் மாறத் துவங்கியது. ஆயிற்று இன்னும் அரைமணியில் சூரியப் பந்து பள்ளத்தாக்கில் காணாமல் போய்விடும். இருட்டில் யாரால் அதைத் தேட முடியும்? சிரித்துக் கொண்டாள் ஷாலினி. இதென்ன சிந்தனை? பயித்தியக்காரத் தனமா, கவித்துவமா?
மடியில் புத்தகமாய் இயற்கைக் கவி வோர்ட்ஸ்வர்த் ஷெல்லி, கீட்ஸ் எல்லோரும் கனத்தார்கள். இவர்கள் தாக்கம் தான் இந்த சிந்தனை ஓட்டமா? புத்தகங்களை அள்ளிக் கொண்டு மெல்ல நடந்தாள். இப்படியே இருபது நிமிடம் நடந்தால் வீட்டுக்குப் போய் விடலாம். இப்போதே கிளம்பி விடலாமா சற்று நேரம் போகட்டுமா என்று யோசித்தாள். இன்னும் சற்று நேரம் இருந்து விட்டுப் போயேன் என்று மனம் கெஞ்சியது. இயற்கையை விட்டுக் கிளம்ப மனம் வரவில்லை என்பது மட்டுமா? வீட்டுக்கப் போகவே பிடிக்கவில்லை என்பதும் தானே காரணம்.
இந்த மரம், செடி, கொடி, பறவைகள், மலை இவற்றோடு ஏற்படும் ஒட்டுறவு கூட வீட்டில் ஏற்படுவதில்லையே எல்லாம் அந்த வர்மாவுக்கு பயந்து பயந்து வாழ்வதில் ஒட்டாவது உறவாவது? மனம் விட்டுப் பேசி, சிரித்துப் பேசிய நாட்கள் கடந்துவிட்டன அவன் நினைவு வந்தவுடன், நடையை எட்டிப் போட்டாள். இல்லாவிட்டால், வாசல் போர்டிகோவிலேயே நின்று ஒரு பிடி பிடித்து விடுவான்!
மலைபிரதேசம் பனியும் குளிருமா சீக்கிரமே இருட்டிடும். ஒரு வயசுப் பொண்ணு இப்படியா நேரம் கழிச்சு வருவே? பொறுப்பு வேணாம்?
என்று சீறுவான். ஏதோ அவனுக்குத் தான் பொறுப்பும் அக்கரையும் இருப்பது போல்
இதமான குளிர்காற்று உடல் தழுவியது. அது கூட மனதில் பதியாமல் வீடு சேர்ந்தாள், வர்மா ஹாலில் அமர்ந்து கொண்டு கேபிட்டல் ‘இன்வெஸ்ட்மெண்ட்’ படித்துக் கொண்டிருந்தான். பி.பி.சி தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. இவள் நுழைந்தவுடன் அவன் தலையை நிமிர்த்தாமல் கண்களை மட்டும் மலர்த்திப் பார்த்தான்.
குளிர்காற்று ஏற்படுத்தாத தாக்கத்தை சிலீரென்று அந்த குளிர் பார்வை ஏற்படுத்தியது. பார்வையை விலக்கிக் கொண்டவள் அங்கிருந்து வேகமாய் கடந்தாள்.
அறைக்கு வந்த பின்பும் படபடப்பு அடங்கவில்லை புத்தகங்களை மேஜை மேல் விசிறிவிட்டு அப்படியே கட்டிலில் சாய்ந்தாள். அவளுக்கு ஆவேசமாய் இருந்தது. இன்னும் குறைந்தது ஒரு வருடம் இந்த வர்மரவை சகித்துக் கொள்ள வேண்டுமா என்று நினைத்த போதே வயிற்றை சுருட்டி இழுத்தது.
எல்லாம் இந்த அண்ணனால் வந்த விணை ஏன் அண்ணா இப்படி செய்தாய்? எங்களை இந்த அரக்கனிடம் மாட்டி விட்டு நீ குஷியாய்ப் போய், அமெரிக்காவில் அமர்ந்து விட்டாயே! இது நியாயமா?
அழுகை பொங்கி வந்தது. அதையும் சுட்டுப் படுத்தினாள். இல்லாவிட்டால் அதற்கு வேறு, ஒரு பாட்டு விழும் அந்த வர்மாவிடம்!
அடிப்படை தேவைகளான உணவு, உடை, வீடு கூட கிடைக்காம எத்தனை பேர் அவதிபடறாங்கனு போய்ப் பார். இங்கே எல்லாம் கொட்டிக் கிடந்தும், எதுக்கு இந்த அனாவஷ்ய அழுகை?
கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு மேஜை மேல் சிதறிக் கிடந்த புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்தாள். அதது அதனதன் இடத்தில் இல்லாவிட்டால் வர்மாவிற்குக் கோபம் வரும். அவள் அறைக்குள் வரமாட்டான், அறை வாசலில் நின்றபடி அவன் கண்களை ஓட விட்டால் போதும். அந்த கூரிய பார்வைக்கு எதுவும் தப்பாதே!
மணி ஆறடிக்க குடு குடென்று கீழே ஓடினாள், டைனிங் டேபிள் மேல் தட்டில் முழுப்பயறு சுண்டலும், சில பழத்துண்டுகளும் தயாராய் இருந்தன. அக்கா மாமா, தாத்தா மூவரும் வர, இவளும் மௌனமாய் தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள், செல்போனில் பேசியபடி வர்மாவும் வந்து, வழக்கம் போல் இவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான். யாரும் அறியா வண்ணம் முகத்தை ஒரு சுழிப்பு சுழித்தாள்.
மாமா, தாத்தா, வர்மா மூவரும் கம்பெனி விஷயமாய் பேச இவளும் அக்காவும் மௌனமாய் கொறித்தார்கள்.
ஒரு வருடம் முன்பு டைனிங் டேபிளில் கூடினால் இப்படியா சூழல் இருக்கும், கலாட்டாவும் கேலியும் கிண்டலும் சிரிப்புமாய் அமளி படுமே!
அந்த நாளும் வந்திடாதோ...!
அவளால் ஏங்கத் தான் முடிந்தது. அந்த நாட்களில் சந்தோஷம் மனதில் பசுமையாய் மலர்ந்தது...
*****
2
அந்த மாளிகையின் குட்டி இளவரசி தான் ஷாலினி. மூத்தவள் மாலினி. ஒரே ஆண் வாரிசு பரத். கடைக்குட்டி இந்த ஷாலினி. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று பாச மழை பொழியும் அன்பு இதயங்களுக்கோ, செழுமைக்கோ பணத்திற்கோ குறைவில்லாத சுகமான வாழ்க்கை, கோவையில் இரண்டு மில்கள் இவர்களுக்கு சொந்தம். சந்தோஷம், கலகலப்பு என்று துள்ளித் திரிந்த நாட்கள் அவை.
பத்து வயது வரை சோகம் என்றால் என்னவென்றே தெரியாத சூழலில் தான் வளர்ந்தாள். அவளக்கு முதல் அடி அவள் பெற்றோர் மரணத்தின் மூலம் விழுந்தது. ஒரு கார் விபத்தில் இருவரும் ஒரே நேரத்தில் பலியாகி விட வாழ்க்கை இத்தனை குரூரமானதா என்ற இடிந்து போனாள், அப்போது மாலினிக்கு பதினாறு வயது. பரத்திற்கு பதினைந்து, குழந்தைகள் பொருட்டு தாத்தாவும் பாட்டியும் தான் அந்த சோகத்தை பெரிதும் தாங்கிக் கொண்டார்கள். மெல்ல மூன்று குழந்தைகளையும் சகஜ நிலைக்குக் கொண்டு வர அவர்கள் அதிகம் பாடுபட வேண்டி இருந்தது. தாத்தாவிற்கோ ஒரே மகனின் இழப்பு அலுவலக பாரத்தையும் சேர்த்து சுமக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. பரத் தலையெடுக்கும் வரை ஆறேழு வருடங்கள் - பல்லைக் கடித்துக் கொண்டு தான் தான் வியாபாரப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று உணர்ந்து அந்தத் தள்ளாத வயதில் மகன் பிரிந்த சோகத்தையும் தாங்கிக் கொண்டு தியாகராஜன் ஓடத் துவங்கினார். சுகமான சுமைகள் தான். ஆனால், சோகத்தோடல்லவா சுமந்தார்
நான்கு வருடங்கள் மெல்ல உருண்டன. மாலினி - தான் இன்னும் குழந்தை இல்லை என்பதை மெல்ல உணர்த்தினாள். கல்லூரியின் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.
பாட்டி கூட தாத்தாவிடம், ஏங்க, நம்ம மாலுவுக்கு ஜாதகத்தை எடுத்துடலாமா?
என்று மெல்ல ஆரம்பித்தார்.
தாத்தா அந்தக்கால மனிதர் என்றாலும், முற்போக்கு சிந்தனைகள் உள்ளவர். பெண்கள் ஏதோ திருமணத்திற்காக மட்டுமே பிறந்தவர்கள் என்ற சிந்தனை அவருக்கு எரிச்சலூட்டும்.
ஏன் கெளரி, அவ நல்ல சூட்டிகையான பொண்ணு. மேல் எம்.பி.ஏ, சி.ஏனு ஏதாவது பண்ணட்டுமே!
ஆமா, நாலு அஞ்சு தலைமுறைக்கு காணும் சொத்து இருக்க. இவ படிச்சு என்ன செய்யப் போரா?
"தப்பு, கெளரி படிப்புங்கறது சம்பாதிக்க மட்டும் பயன்படற விஷயமில்லை. பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் விஷயம். அறிவு வளரும். உலகம் புரியம். நம்ம வீட்ல இருக்கற வரை நம்ம கம்பெனிகளை கவனிச்சுக் கட்டும். பிறகு, புகுந்த வீட்ல போய் தன் சாமர்த்தியத்தை நிரூபிக்கட்டுமே! நாம் அவளைப் பெரிய இடத்துலதான் கட்டிக் கொடுப்போம். போற இடத்துல நம்ம வீடு மாதிரி சமைக்க, வீட்டைப் பராமரிக்க ஆட்களுக்குப் பஞ்சம் இருக்காது. இவ வெறும் பொம்மை மாதிரி செய்ய ஒண்ணுமில்லாம் காலம் கடத்தணுமா? சொல்லு.
தாத்தாவுக்கு பேரன் பேத்திகளைப் பற்றி ஆயிரம் கனவுகள் இருந்தது. ஆனால், பேத்திக்கு வேறு மாதிரி ஆசை, நல்ல புத்திசாலிப் பெண் தான் மாலினியும், ஆனால், மனம் அவள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போய் விட்டதே. படிப்பில் கவனம் சிதறி புத்தி காதல், காதல் என்று கீர்த்தி வசம் ஓடி விட தாத்தாவின் கனவு புஸ்வானமானது."
அவள் கடைசி