Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Annaparavai Manithargal
Annaparavai Manithargal
Annaparavai Manithargal
Ebook151 pages50 minutes

Annaparavai Manithargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Inspired by mother Lakshmi Rajarathnam, started to write from the age of 10 in kids magazines and even won a prize in Balamitra.

Written more than 250 short stories, 30 novels and serials in all leading magazines like Kumudam, Kalki, Devi, Rani, Amuthasurabi, Penmani, Kanmani, Malaimadhi, Ranimuthu etc. Also, written many dramas for All India Radio (AIR).

Won Dinamalar short story prize for the story "Jeevanadigal Vatruvadillai"

Recent Kumudam short story Kalasam was a historical story which got lot of appreciation

Having given 100s of Bharathanatya performances, currently running a dance class and also interested in paintings.

Married to Priya Kalyanaraman , also a journalist

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126004320
Annaparavai Manithargal

Read more from Rajashyamala

Related to Annaparavai Manithargal

Related ebooks

Reviews for Annaparavai Manithargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Annaparavai Manithargal - Rajashyamala

    http://www.pustaka.co.in

    அன்னப்பறவை மனிதர்கள்

    Annaparavai Manithargal

    Author:

    ராஜசியாமளா

    Rajashyamala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajashyamala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    கண்ணுக்குள்ளே காதலா? கண்டதும் நெஞ்சில் தென்றலா?

    மெல்ல காரின் ஸ்டீரியோ பாடிக் கொண்டிருந்தது. வளைந்து வளைந்து கார் மலை மேல் ஏறத் துவங்கியிருந்தது.

    'மலைகளின் அரசி உங்களை வரவேற்கிறாள்' என்ற போர்டு வரவேற்றது. சில்லென்ற காற்று மூலிகை வாசத்தோடு வீசியது. பஞ்சு மேகங்கள் ஏதோ தொட்டு விடும் தூரம் போல் போக்குக் காட்டின. மேகத்தை தொட முயன்று தோற்கும் மரங்கள், அதற்கு ஆறுதல் கூறுவது போல் எப்போதாவது கூவிடும் பறவைகள், 'போ, மலைமேல் என்ன இருக்கிறது? நான் கீழே போகிறேன்' என்று ஐஸ்கிரீம் கிடைக்காமல் கோபம் கொண்டு ஓடும் சிறுமி போல் பாய்ந்து வரும் அருவி...

    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காட்சிகள். மஹிதாவும் பலமுறை பெற்றோரோடு வந்திருக்கிறாள். ஓங்கி உயர்ந்த மலைத் தொடர்களும் பலவித பச்சை நிறங்களில் மரக் கூட்டங்களும் முகில் ஓட்டங்களும் கவிதை பேசும் காற்றும் நீர்நிலைகளும் மனதுக்கு நிம்மதியும் இதமும் தந்திருக்கின்றன தான். ஆனால், இந்த முறை அவள் அருகில் சொர்க்கம் அல்லவா வருகிறது. மகிழ்ச்சி இரட்டிப்பாகி விட்டதே!

    கடைக்கண்ணால் அருகில் கார் ஓட்டும் புதுக்கணவனைப் பார்த்தாள். கழுத்தில் ஒரு நாள் முன் கட்டப்பட்ட புதுத் தாலி. இந்த அழகன் கையால் கட்டப்பட்டது. விழுங்கி விடுவது போல் கணவனைப் பார்த்தாள். அமீர்கானும், கமல்ஹாசனும் கலந்த கலவையைப் போல் இருந்தான்.

    நிச்சயதார்த்தத்து அன்று அவனைப் பார்த்த அவள் தோழிகள் எல்லோரும் வாய் பிளந்து விட்டார்கள்.

    வாவ்! மஹி, உன் ஆளு என்னடி இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்காரு?

    ஏதாவது சேட்டுப் பையனாடி?

    சேச்சே. நம்ம ஊருதான். ஏழு வருஷமா கனடாவில் வேலை பார்க்கறார். பனிப் பிரதேசமில்ல. பழுத்த தக்காளிபோல் இருக்காரு. பெருமையாய் சொன்னாள் மஹி, பிரமிப்பு மாறாமலே.

    எனிவே மஹி, நீ ரொம்ப லக்கிடி

    அதான், 'மேலே படிக்கணும். இப்பக் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்'னு சொல்லிக்கிட்டிருந்தவ தடால்னு குப்புற கவுந்துட்டா.

    கொல்லென்று தோழிகள் சிரித்தார்கள்.

    சீ... போங்கடி என்று போலியாய் எரிந்து விழுந்தாலும், அதில் கொஞ்சம் உண்மை இருப்பதை அவள் உள்மனம் உணரத் தான் செய்தது. இல்லாவிட்டால் எம்.சி.ஏ. அப்ளிகேஷனை எல்லாம் பரணில் போட்டு விட்டு அவள் கௌதமின் தாலியை ஏற்றிருப்பாளா? என்ன ரகளை செய்தாள்! அப்போது மஹிதா பி.காம். கடைசி வருடம் பரீட்சை முடித்திருந்தாள். அம்மா சுலோசனா மெல்ல ஜாதகம் எடுப்பதைப் பற்றி ஆரம்பிக்க, மஹிதா தயாராய் வாங்கி பூர்த்தி செய்யப்பட்டிருந்த எம்.சி.ஏ. விண்ணப்பத்தை எடுத்து வந்து அப்பாவிடம் நீட்டினாள்.

    அப்பா, ப்ளீஸ். மேலே படிக்கறேனே.

    சிரிப்புடன் ராகவனும் படிவத்தை வாங்கி கையெழுத்துப் போட்டுத் தான் தந்தார்.

    சுலோசனா தான், என்னங்க இது? அவ தான் ஏதோ சொல்றான்னா, நீங்களும் அவ இஷ்டப்படி இப்படி...

    சுலோ, அவ ஆசை தவறானது இல்லையே. படிச்சு சொந்தக் கால்ல பெண்கள் நிக்கறது நல்லதில்லையா?

    நானெல்லாம் ஏதோ டிகிரி படிச்சேன். முடிச்சவுடன் கல்யாணம் செஞ்சு கொடுத்தாங்க. இப்ப என்ன குறைஞ்சு போயிட்டோம்? ஆயிரத்தைனூறு சதுர அடி பிளாட், கார், நகை, கைநிறைய சம்பாதிக்கற கணவன், ஒரே செல்ல மகள்... என்னங்க குறை எனக்கு? காலா காலத்துல எல்லாம் நடக்கணும். வசதியான இடமாப் பார்த்துக் கொடுத்தா, இவ எதுக்கு ஆபீஸ், வீடுனு மாடு மாதிரி ஓடாத் தேய்ஞ்சு உழைக்கணும்?

    நீ சொல்றது ரொம்பச் சரி, சுலோ. ஆனா உன் காலத்துக்கும் இப்ப இருக்கிற தலை முறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. நம்ம இளமைக் காலத்துல கார், ஏசி, பிரிட்ஜ், டிவியெல்லாம் பகட்டான லக்ஷரி ஐடெம்ஸ். ஆனா, இப்ப இதெல்லாம் இல்லாத நடுத்தர குடும்பம் இருக்கா? கணவன் மனைவி ரெண்டு பேரா சம்பாதிச்சு வசதியா வாழத்தான் இந்தத் தலைமுறை விரும்புது.

    நமக்கு வசதிக்கு என்னங்க குறைச்சல்? தேவையான அடிப்படை பொருட்களை எல்லாம் நாம் செஞ்சு கொடுத்துடுவோம். மாச செலவும் சேமிப்பும் மாப்பிள்ளையோட சம்பளத்துல செஞ்சுக்கட்டும். நல்ல வசதியான பையனாப் பார்ப்போம். நமக்கு ஒரே மக தானே. அவளுக்கு செய்யாம நாம யாருக்குச் செய்யப் போறோம்?

    பாசமான அம்மா கணக்குப் போட்டார். பாவம், கல்வி தான் உண்மையான செல்வம் என்பதைப் புரிந்து கொள்ளாத பல இந்தியத் தாய்மார்களைப் போலவே சுலோசனாவும் இருந்து விட்டார். தன்னம்பிக்கையும், பெண் சுயமாய் தன் காலில் நிற்க உதவும் கல்வியுமே இக்காலப் பெண்களுக்குத் தாய்மார்கள் தரும் சீதனமாய் இருக்க வேண்டும் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

    ராகவனும் மஹிதாவும் எத்தனை வாதாடியும் சுலோசனாவிடம் எடுபடவில்லை.

    வேணும்னா கல்யாணம் பண்ணிக்கிட்டுப் படி என்று பிரச்சினைக்கு முடிவு கட்டி விட்டார் சுலோசனா.

    அம்மா தலை உள் பக்கம் மறைந்தவுடன் மஹிதா சிணுங்கினாள். அப்பா, என்னப்பா இது? நீங்க கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொல்லக் கூடாதா?

    அப்பா அலட்டிக் கொள்ளாமல் மஹி, ஜாதகம் எடுத்தவுடனே கல்யாணம் முடிஞ்சுடாதுடாம்மா... ஜாதகம் பொருந்தணும், பையனை, அவன் குடும்பத்தை, அவன் வேலையைனு எல்லாம் நமக்குப் பிடிக்கணும். அதுக்கெல்லாம் டயம் எடுக்கும். நீ உன் வழியில எம்.சி.ஏ.வோ, எம்.பி.ஏ.வோ எது படிக்கணுமோ படி. உங்கம்மா மாப்பிள்ளை தேடட்டும். கிளிக்காச்சு, அவங்ககிட்ட மேல படிப்பைத் தொடர சம்மதம் வாங்கிடுவோம், ரைட்டா? ஆப்டரால், நீ சம்பாதிச்சா அந்தப் பணமெல்லாம் அவங்களுக்குத் தானே?

    அவள் சற்று நிம்மதியானாள்.

    சுலோசனா சொன்னதோடு நிற்காமல் தீவிர மாப்பிள்ளை வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால், முதல் சில மாதங்கள் ராகவன் சொன்னது போல் எந்த வரனும் திருப்திகரமாய் வரவில்லை. ஜாதகம் பொருந்தினால், குடும்ப விவரம் திருப்தி தரவில்லை. குடும்பம் நல்லதாய் பட்டால் பையன் வேலை சரியில்லை. சுலோசனா கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தேடினார்.

    அப்போது தான், அவர் தோழி ரமா மூலம் கெளதம் பற்றி கேள்விப்பட்டார். முதலில், வெளிநாட்டு மாப்பிள்ளையா? வேண்டவே, வேண்டாம். ஒரே பொண்ணை வெளிநாட்டுல கொடுத்துட்டு நாங்க இங்க என்ன செய்யவாம்?

    அட சுலோ. பையனை முதல்ல பாரு அப்புறம் இப்படிப் பேசவே மாட்ட எங்க அக்கா மகளுக்கு வந்த வரன். பையனோட ஜாதகம் பொருந்தலை இல்லாட்டி இந்நேரம் கல்யாணத்தையே முடிச்சிருப்போம். பையன் அவ்வளவு அழகு. பையன் கனடாவில் கை நிறைய சம்பாதிக்கறான். இங்கே கீழ்பாக்கத்துல ரெண்டு கிரௌண்ட்ல வீடு. கனடாவிலும் பையனுக்கு சொந்த வீடு இருக்காம். எங்க அக்காவுக்கு இந்த வரன் அமையாததில் ரொம்ப வருத்தம், தெரியுமா? என்னைப் பொறுத்த வரை என் அக்கா மக வேற உன் மக வேறயா...? போய்ப் பாரு. ஜாதகம் முதல்ல பொருந்துதா பாரு. பிறகு மேல பேசிக்கயேன்... மக அங்கே செட்டிலாயிட்டா, உன் கணவர் ரிடையரான பிறகு நீங்களும் அங்கயே போய் செட்டிலாயிடுங்க. உன் வீட்டுக்காரர் படிப்புக்கு அங்க நல்ல டிமாண்ட் இருக்கும்...

    அடிக்கப்பட்ட வேப்பிலையில் சுலோசனாவின் மனம் நன்றாகவே ஆட்டம் கண்டது. கணவனிடம் வந்து ஆடினாள். அவர் தயக்கத்தையெல்லாம் தோழி ரமா போல் பதில் பேசியே போக்கினாள்.

    தோழியின் அக்கா மகளுக்கு அமையாத வாழ்வு மஹிதாவுக்கு அமைந்தது...

    வரமா? சாபமா?

    *****

    2

    ஹோட்டல் தமிழ்நாட்டின் முன் கார் சென்று நின்ற போது மணி மாலை ஆறு. சில்லென்ற இதமான காற்று சின்ன ஊசி குத்தலாய் மாறிக் கொண்டிருந்தது. பனிக் காதலி மெல்ல தன் மெல்லிய போர்வையைப் போர்த்தி பூமிகாதலனை தழுவ ஆரம்பித்தாள்.

    மஹிதாவின் அப்பா ஏற்கனவே ஹோட்டலின் பென்ட் ஹவுசை இவர்களுக்காக ரிசர்வ் செய்திருந்தார். இவர்கள் செக்-இன் செய்தவுடன் ஹோட்டல் பையன் இவர்களுக்காக அறைக் கதவைத் திறந்து விட்டு பெட்டிகளை வைத்தான்.

    ஏதாவது வேணுமா, சார்?

    ம், டின்னர்... கொஞ்ச நேரம் கழிச்சு ஆர்டர் பண்ணறேனே... இப்ப... என்றபடி அவனருகே சென்ற கெளதம், மெல்லிய

    Enjoying the preview?
    Page 1 of 1