Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Vizhikal Velicham Tharum
Un Vizhikal Velicham Tharum
Un Vizhikal Velicham Tharum
Ebook114 pages1 hour

Un Vizhikal Velicham Tharum

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465896
Un Vizhikal Velicham Tharum

Read more from Parimala Rajendran

Related to Un Vizhikal Velicham Tharum

Related ebooks

Reviews for Un Vizhikal Velicham Tharum

Rating: 3.75 out of 5 stars
4/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Vizhikal Velicham Tharum - Parimala Rajendran

    18

    1

    உள்ளிருந்து வரும் சாம்பிராணி, ஊதுவத்தியின் சுகந்தமான நறுமணம் சிவகாமி சாமி கும்பிடுகிறாள் என்பதை தேவராஜனுக்கு தெரியப்படுத்துகிறது.

    காலில் அணிந்திருக்கும் சலங்கை ஓசை சப்தமிட வாசலுக்கு வருகிறாள் சுபா.

    கண்மூடி ஈஸி சேரில் சாய்ந்திருந்தவர், காபியின் வாசனையை உணர்ந்து,

    அப்படி வச்சுட்டு போம்மா...

    சூடு ஆறிடப் போகுது மாமா. எடுத்துக்குங்க...

    இதழ்களில் புன்னகை விரிய கண் திறக்கிறார்.

    காலையில் எழுந்து குளித்து நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் மங்களகரமாக காட்சித்தரும் மருமகளை அன்புடன் பார்த்தவர்.

    நீ காபி குடிச்சியாம்மா ...

    இல்லே மாமா. அத்தை பூஜை ரூமில் இருக்காங்க. அவங்களும் வரட்டும். நான் போய் அவரை எழுப்பறேன். மணி ஏழாகப் போகுது.

    அரை இனிப்புடன் டிகாஷன் தூக்கலாக அவருக்கு பிடித்த மாதிரி கலந்து கொண்டு வந்து தரும் மருமகளை மனதில் மெச்சியவராக ரசித்து குடிக்கிறார். அக்கா... காபி...,

    சின்ன மருமகள் லதாவின் குரல்,

    அண்ணி அப்படியே எனக்கும்... பேப்பர் எங்கே லதா...

    இதோ கொண்டு வரேன்...

    சுபாவின் பதிலை தொடர்ந்து...

    பேப்பர் இன்னும் உள்ளே வரலை… மாமாகிட்டே இருக்கும். இருங்க... போய் எடுத்துட்டு வரேன்...

    நைட்டியின் மேல் ஷாலை போட்டபடி வந்து நிற்கும் லதாவை பார்த்தவர்.

    அருகிலிருந்த டீபாயில் வைத்திருந்த நீயூஸ் பேப்பரை அவளிடம் தருகிறார். தாங்க்ஸ் மாமா... நீங்க படிச்சாச்சா...

    இருக்கட்டும்மா... நான் அப்புறம் பார்க்கிறேன். மாதவன்கிட்டே கொண்டு போய் கொடு....

    புன்சிரிப்புடன் உள்ளே போகிறாள்.

    மாதவனுக்கும், லதாவுக்கும் திருமணமாகி ஆறு மாதம்தான் ஆகிறது. பெற்றவர்கள் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம். தன்னுடன் வேலை பார்க்கும் லதாவை... இரண்டு வருடமாக காதலிப்பதாக தயங்கி, தயங்கி மாதவன் சொன்னபோது...

    தமிழ் ஆசிரியராக இருந்தவருக்கு செம்புலப் பெய் நீராரின் பாடல் வரிகள் ஞாபகம் வந்தது.

    என் தந்தை யார், உன் தந்தை யார் தெரியாது. நம் இருவர் உள்ளமும் ஒன்றானது முன்பிறப்பின் பந்தம்... செம்மண் நிலத்தில் நீர் வார்த்தால் எப்படி ஒன்றாக கலந்து விடுமோ அதுபோல் அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் ஒன்று கலந்துவிட்டது.

    உன் மனசுக்கு பிடிச்சிருக்கா மாதவா?

    ஆமாம்பா. லதா ரொம்ப நல்லவப்பா... ஆனா அவங்க வேறு ஜாதி.

    மனசு ஒன்றுபட்ட பிறகு அதெல்லாம் சாதாரண விஷயங்கள் தான்பா ...

    கண்களில் ஒளி வெள்ளம் பாய, அப்பாவை பார்க்கிறான்.

    அப்பா ... உங்களுக்கு....

    பூரண சம்மதம் மாதவா. நீ சின்னக் குழந்தை இல்லப்பா. கல்யாண வயசு வந்தவன், படித்தவன், பொறுப்பா ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறே... உன் வாழ்க்கையை உன்னால் முடிவு பண்ண முடிஞ்சா எனக்கு சந்தோஷம் தான்பா ...

    ஒண்ணு மட்டும் சொல்றேன் ஞாபகம் வச்சுக்க... உன் மனசுக்குப் பிடிச்ச அந்தப் பெண் உன் மேல் அன்பு கொண்டிருக்கிறாள். உனக்கும் அவள் மேல் அளவிட முடியாத அன்பு, அழகும், இளமையும் மனதில் அன்பை வரவழைக்கும். இளமை எவ்வளவு காலம், முதுமையும் விரைவில் வரும். இளமையுடன் அழகும் போய்விடும். அந்த முதுமைவரை... இந்த அன்பும், பாசமும் தொடரணும்பா... அதுதான் காதல். உன் காதல் வாழ்க்கைக்கு இதுதான்பா அப்பாவின் வாழ்த்து... பெருமிதமும், மரியாதையும் தோன்ற கண் இமைக்காமல் அப்பாவை பார்க்கிறான்..

    வா சிவகாமி... சாமி கும்பிட்டாச்சா...

    மஞ்சள் பூசி குளித்த முகம். நடு நெற்றியில் பளிச்சென்று தெரியும் குங்குமப் பொட்டு. வயதின் தளர்வு முகத்தில் தெரியாத வண்ணம் நிரந்தரமாக குடியிருக்கும் புன்னகை. இதுதான் சிவகாமி. கைப்பிடித்த நாளிலிருந்து இவர் மனதை புரிந்து நடப்பவள், தனக்கென்று பெரிதாக எதையும் ஆசைப்பட்டதில்லை. ராம, லட்சுமணன் போல் இரண்டு பிள்ளைகள்... அன்பும், பாசமுமாக வளர்த்தாள். பிறந்த வீட்டு சீதனமாக வந்த இடத்தில் கட்டுசெட்டாக குடும்பம் நடத்தி வீடு கட்டினார்கள்.

    சிவகாமி நம்ப தேவைக்கு வீட்டை கட்டிக்கிட்டு, பக்கத்து போர்ஷனை வாடகைக்கு விடற மாதிரி கட்டலாம். நாளைக்கு பிள்ளைகள் படிப்பு செலவுக்கு உதவியாக இருக்கும்.

    தேவராஜன் சொன்னது போல், இரண்டு பகுதிகளாக வீட்டைக் கட்டி, ஒரு பகுதியில் இருந்துகொண்டு, இன்னொன்றை வாடகைக்கு விட்டார்கள். தேவைக்கு மேல் எதற்கும் ஆசைப்படாமல் வாழ்ந்ததால், குடும்ப வண்டி எந்த இடையூறும் இல்லாமல் ஓடியது. மகேஸ்வரனும், மாதவனும் படிப்பை முடித்து, மகேஸ்வரன் பஞ்சாயத்து யூனியனில் இஞ்சினியராக வேலையில் சேர, மாதவன் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான். நடுத்தர குடும்பத்திலேயே மகேஸ்வரனுக்கு பெண் எடுத்தார் கள். சுபா அந்த வீட்டு மருமகளாக இல்லாமல் மகளாகவே வந்து சேர்ந்தாள்.

    தனிமையில் இளம் மனைவியிடம் மகேஸ்வரன் முதன்முதலாக பேசியது தன் குடும்ப உறவுகளைப் பற்றிதான்...

    "சுபா... எங்க அம்மா, அப்பாகிட்டே நான் அளவு கடந்த மரியாதையும், பாசமும் வச்சிருக்கேன். நான் நேசிக்கிறவங்களை நீயும் நேசிக்கணும். எனக்குப் பிரியமானவங்களுக்கு உன் மனசிலும் இடம் இருக்கணும். அப்பதான் என் மனைவியாக, என் அன்புக்குரியவளாக என் மனசில் நெருங்கி வருவே. மத்தவங்க எப்படியோ எனக்கு தெரியாது. என்னை பொறுத்தவரை என் அப்பா, அம்மா எனக்கு கட்டிலுக்கு சமம். இதை நீ புரிஞ்சுக்கணும் சுபா."

    கணவனை புரிந்து கொண்டாள் சுபா. இயல்பிலேயே அமைதியான குணம் படைத்த சுபா, ஒரு மகளை போல் பிரியம் காட்டும் மாமியாருடன் எல்லாவிதத்திலும் ஒத்துப் போனாள். திருமணமாகி இரண்டு வருடங்களில் அவளும் அந்த குடும்பத்தில் ஒருத்தியாக மாறினாள்.

    மாதவன் லதாவை காதலித்து மணந்தபோது, இரண்டாவது முறையாக சுபாவிடம் பேசினான் மகேஸ்வரன்.

    சுபா... இதுவரைக்கும் நீ மட்டும்தான் இந்த வீட்டு மருமகளாக இருந்தே... இப்ப உன் இடத்தில் உனக்கு சமமாக இன்னொருத்தியும் வந்திருக்கா.

    "அம்மா, அப்பாகிட்டே ஒரு மகள் ஸ்தானத்தில் பிரியம் காட்டும் நீ, என் தம்பியின் மனைவியை உன் தங்கையாக ஏத்துக்கணும். அவள் குணம் எப்படி, என்னன்னு எனக்குத் தெரியாது. ஆனா உன்னைப் பத்தி தெரியும். நீதான் எதுவாக இருந்தாலும் விட்டுக்கொடுத்து போகணும் சுபா. உண்மையான பிரியம், பாசம் இருக்கும் இடத்தில் குறைகள் பெரிசாக தெரியாது. உன் அன்பான குணம் எனக்கு தெரியும் சுபா. இருந்தாலும் நான் இந்த குடும்பத்துக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1