Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayangukiraal Oru Maathu
Mayangukiraal Oru Maathu
Mayangukiraal Oru Maathu
Ebook113 pages1 hour

Mayangukiraal Oru Maathu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateFeb 1, 2018
ISBN9781043466374
Mayangukiraal Oru Maathu

Read more from Parimala Rajendran

Related to Mayangukiraal Oru Maathu

Related ebooks

Reviews for Mayangukiraal Oru Maathu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayangukiraal Oru Maathu - Parimala Rajendran

    27

    1

    "வாங்க" அழைத்தபடி தூயவெண்ணிற வேஷ்டி, கதர் சட்டை அணிந்து, பார்க்கவே பெரிய மனிதர் என்ற தோற்றத்தில் தன் முன் வந்து நின்ற குருநாதனை பார்த்ததும், சோபாவில் இருந்து எழுந்து கொண்டான்.

    உட்காருங்க தம்பி சொன்னவர், அவன் எதிரில் அமர்ந்தார்.

    கல்பனா உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கா. என் மகளை பத்தி பெருமையா சொல்றேன்னு நினைக்காதீங்க. அவ ஒருத்தர் மேல் நல்ல அபிப்பிராயம் சொன்னா, அவங்க நிச்சயம் நல்லவங்களாகதான் இருப்பாங்க சொன்னவர் புன்னகைக்க,

    உங்க மகளும் உங்களை பத்தி என்கிட்ட நிறையவே சொல்லியிருக்காங்க

    எங்க அப்பாவை மாதிரி ஒருத்தரை இந்த உலகத்தில் பார்க்கிறதே அபூர்வம்

    அடுத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அன்பா பேசற எங்கப்பாவை யாருக்குமே பிடிக்காம இருக்காது. சின்ன வயசிலேயே அம்மாவை பறி கொடுத்த எங்களுக்கு எல்லாமே எங்கப்பாதான்னு சொல்வா"

    அதற்குள் காபியுடன் உள்ளிருந்து வந்த கல்பனா, இருவருக்கும் கொடுத்து விட்டு அப்பாவின் அருகில் உட்கார்ந்துக் கொள்கிறாள்.

    பரஸ்பர அறிமுகம் முடிஞ்சாச்சா முன் நெற்றியில் கற்றையாக வந்து விடும் முடியை, கைகளால் பின்னுக்கு தள்ளியபடி, ரவிவர்மன் ஓவியம் போல, அழகோவியமாக காட்சி தருமம் கல்பனா, தன் வெண்பற்கள் தெரிய சிரித்தாள்.

    உன்னுடைய செலக்ஷன் பிரமாதம் கல்பனா. பார்த்த முதல் பார்வையிலேயே விக்ரம் தம்பியை எனக்கு பிடிச்சிருச்சு. ரொம்ப மரியாதை தெரிஞ்ச பையனா இருக்காரு. பெரிய தொழிலதிபருக்கு உரிய மிடுக்கு இல்லாம, எளிமையா இருக்காரு

    இந்த காலத்தில் இப்படியொரு பிள்ளை இருக்கிறது ஆச்சரியமான விஷயம்தான்

    தன் எதிரிலேயே தன்னை பற்றி புகழ்ந்து பேச, சற்று கூச்சத்துடன் தலைகுனிந்தான் விக்ரம்.

    ‘விக்ரம் மார்பிள்ஸ்’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம். தன் சொந்த உழைப்பு, திறமையினால் இளம் வயதிலேயே சிறந்த தொழிலபதிபராக பெயரெடுத்தவன்.

    சிறு அளவில் இருந்த வியாபாரத்தை அப்பாவின் காலத்திற்கு பிறகு, விரிவுபடுத்தினான் விக்ரம்.

    தொழில் தரம், நாணயம், அவனை. உயர்வான இடத்திற்கு கொண்டு வந்திருந்தது..

    அவனுடைய பர்சனல் பி.ஏ.வாக இரண்டு வருடம் முன்பு வேலைக்கு சேர்ந்த கல்பனா, அவன் மனதில் இடம்பிடித்து, இன்று அவனை கைபிடிக்கும் நிலைக்கு வந்திருந்தாள்.

    என்ன அப்பா, விக்ரமை பார்த்து பேசணும்னு சொன்னீங்க. பேசாமல் இருக்கீங்க

    தம்பி, கல்பனா எல்லா விபரமும் சொல்லியிருக்கா. உங்கப்பா சமீபத்தில் இறந்தது, உங்க நெருங்கிய உறவுன்னு, இப்ப உங்க அத்தையும், மாமாவும்தான் இருக்காங்கன்னு சொன்னா

    கல்பனாவை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க எனக்கு பூரண சம்மதம்

    என் பொண்ணுங்க கல்பனாவும், அருணாவும் கடைசி வரை சந்தோஷமா இருக்கணும்

    "நான் அந்த காலத்தில் காட்டன் மில் வச்சு, நல்லபடியா தொழில் பண்ணினவன் தான், கூட இருந்த பார்ட்னரே எனக்கு எதிரியா மாற, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, பிரிஞ்சிட்டோம்.

    அதுக்கு பிறகு என் மனைவி இறக்க, நாலு வயசிலும், இரண்டு வயசிலும் பெண்களை வச்சுட்டு, தொழிலும் முடங்கி நான் பட்ட சிரமங்கள் அதிகம்

    என் அக்கா, இப்ப கிராமத்தில் இருக்காங்க. அவங்கதான் எனக்கு ஆறுதலாக இருந்து, இவங்களை வளர்த்தாங்க. நானும் ஒரு கம்பெனியில் சூப்பர்வைசரா சேர்ந்தேன். கடவுளின் கருணையினால் இப்ப என் பெண்களுடன் சந்தோஷமா இருக்கேன்"

    சார் உங்க குடும்ப விபரம் ஏற்கனவே கல்பனா மூலம் எனக்கு தெரியும்

    "இந்த அன்பான குடும்பத்தில் நானும் ஒருத்தனாக மாறணும். என் அத்தை, அவங்க மகள் டெலிவரிக்காக அமெரிக்கா போயிருக்காங்க.

    கல்யாணத்தை ஆறு மாசம் கழிச்சு அவங்க வந்ததும் வச்சுக்கலாம்"

    "ரொம்ப சந்தோஷம் தம்பி. என் கல்பனாவுக்கு இப்படியொரு அருமையான பிள்ளை, கணவனாக கிடைக்க அந்த கடவுளின் கருணைதான் காரணம்.

    என் இளைய மகள் அருணாவுக்கு இதேபோல ஒரு வரன் அமைஞ்சா, என் கவலை தீர்ந்திடும்."

    என்னப்பா என்னை பத்தி பேசிட்டிருக்கீங்க.

    வாம்மா, காலேஜ் விட்டு வந்திட்டியா, விக்ரம் தம்பி வந்திருக்காரு

    வாங்க சார், என்ன உங்களை நேத்து பீச்சில் பார்த்தேன். எங்கே வீட்டில் போட்டு கொடுத்துடுவேன்னு, நல்ல பிள்ளையாக பெண் கேட்க அப்பாவை பார்க்க வந்திட்டிங்களா.

    ஏய்... என்னடி இ, அவரை கிண்டல் பண்ணிக்கிட்டு.

    கல்பனா பொய்யாக கோபிக்க,

    சரி, சரி... உன் வருங்கால கணவரை நான் ஒண்ணும் சொல்லலை போதுமா. அதுல வந்துப்பா நேத்து என் ப்ரெண்சோடு பீச்சுக்கு போனேன்னு சொன்னேன் இல்லையா. அப்ப அக்காவும், இவரும் ரொம்ப சுவாரஸ்யமா நான் வந்ததை கூட கவனிக்காம பேசிட்டிருந்தாங்க. அதைதான் சொன்னேன் -

    கல்பனா எழுந்து அவள் தலையில் குட்டு வைக்க

    அருணா எப்போதும் இப்படிதான் தம்பி. அவ இருக்கிற இடம் கலகலப்பா இருக்கும்

    உட்காருங்க மேடம். நீங்க ஒருநாள் எங்ககிட்ட மாட்டமவா போயிடுவீங்க

    விக்ரம் சொல்ல, கலகலவென சிரித்தாள் அருணா

    சார், நீங்க ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கிற இரண்டு பிள்ளைகளுக்கு ஸ்பான்சர் பண்ணி படிப்பு செலவு, பராமரிப்பு செலவை ஏத்துக்கிட்டு, நாலு வருஷமா செய்திட்டிருக்கிறதா கல்பனா சொன்னா. இதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும் சார். இதுக்காகவே உங்களை நேரில் பார்க்கணும்னு நினைச்சேன்

    இங்க பாருங்க மிஸ்டர் விக்ரம். அப்பாவை சார் போடறதை நிறுத்துங்க. அழகா நீங்க மாமான்னு கூப்பிடலாம். உங்க காதலுக்குதான் பச்சை சிக்னல் காண்பிச்சாச்சே, அப்புறம் என்ன?

    அருணா இடையில் புகுந்து சொல்ல,

    "ஆமாம் தம்பி, நீங்க சார்ன்னு சொல்லும்போது, நமக்குள் ஒரு சின்ன இடைவெளி

    Enjoying the preview?
    Page 1 of 1