Perazhagithaan Nee
5/5
()
About this ebook
Read more from Parimala Rajendran
Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Kaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Kaalamellam Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Nee Rating: 5 out of 5 stars5/5Kangalin Jalangal Rating: 5 out of 5 stars5/5Thaalaattum Poongattru Rating: 0 out of 5 stars0 ratingsAvalukkendru Oru Manam Rating: 4 out of 5 stars4/5Manathodu Paadum Raagam Rating: 3 out of 5 stars3/5Poojaikku Vantha Malare Rating: 4 out of 5 stars4/5Thunai Thedum Vergal - 2 Rating: 4 out of 5 stars4/5
Related to Perazhagithaan Nee
Related ebooks
Kaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsUyiraaga Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Pirai Thedum Iravu Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Nee Ena Kandean! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kodoyil Iru Malargal Rating: 5 out of 5 stars5/5Vasantha Kaala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Maayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Vanthal Varalakshmi!!! Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Malarntha Nesapoove! Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Enthanuyir Kaadhaliye..! Rating: 4 out of 5 stars4/5Thalli Ponal Theipirai Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Raagam lm Rating: 5 out of 5 stars5/5Anbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Unakkenna Venum Sollu! Rating: 0 out of 5 stars0 ratingsManamagale Marumagale Vaaa Rating: 0 out of 5 stars0 ratingsKarpanaiyo… Kaivanthatho… Rating: 3 out of 5 stars3/5Marakkumo Kaadhal Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsSollathaan Ninaikiren Rating: 5 out of 5 stars5/5Vandhuvidu Ennavane... Rating: 5 out of 5 stars5/5Nesam Marakkumo Nenjam Rating: 5 out of 5 stars5/5Aayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Perazhagithaan Nee
3 ratings0 reviews
Book preview
Perazhagithaan Nee - Parimala Rajendran
40
1
பரத் ஆபிசிற்கு புறப்பட்டு செல்ல, கதவை சாத்திவிட்டு பக்கத்து வீட்டில் நுழைந்தாள் யாமினி.
மாமி, என்ன செய்யறீங்க
வாடியம்மா, உன் ஆத்துக்காரர் ஆபிஸ் கிளம்பியாச்சா. என்ன விஷயம். இன்னைக்கு சமையலில் என்ன சந்தேகம் கேட்க வந்திருக்கே.
சிரித்தபடியே யாமினியை பார்த்தாள்.
மாநிறம் என்று சொல்ல முடியாது. கருப்பு நிறம். லேசாக வெளியே துருத்தியபடி இருக்கும் பற்கள். மேடிட்ட நெற்றி, மூக்கும் நேராக இல்லாமல், சற்று வளைந்து, பார்பவர்களின் பார்வையில் யாமினி சராசரிக்கும் கீழானவள் என்பதை பறைசாற்றினாலும், அவளுடைய கல்லும் கபடமற்ற சிரிப்பும், வெகுளிதனமாக, பழகும் அவள் குணமும் யாரையும் சட்டென்று ஈர்த்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
மாமி, அவருக்கு குளோப்ஜான் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி கடையிலிருந்து வாங்கிட்டு வர்றாரு. எப்படி செய்யறதுன்னு சொன்னா... நானே செய்து தரலாமுன்னு பார்த்தேன்.
குளோப்ஜான் மிக்ஸ் கடையிலேயே விற்குதே யாமினி, அதை வாங்கி சுலபமா செய்யலாமே.
இல்லை மாமி. போன முறை எங்க கிராமத்துக்கு போனப்ப, எங்க சமையல்காரி அஞ்சலை பாலை அடுப்பில் சுண்டக் காய்ச்சி, ரவை, மைதா போட்டு கிளறி, எண்ணெயில் பொரித்து, ஜீராவில் போட்டு ஊறவச்சு கொடுத்தா. பிரியமா சாப்பிட்டாரு. அதை மாதிரி செய்து தரணும்னு எனக்கு ஆசையா இருக்கு மாமி.
கல்யாணமாகி, நாலுமாசம் ஆகலை அதற்குள் புருஷன் மேலே இவ்வளவு பிரியமா, பாசமா இருக்கே. அந்த பரத் தம்பி ரொம்ப கொடுத்து வச்சுருக்கு. அழகிலே ஒரு படி மட்டம்னாலும், குணத்திலே நீதான் மேலே இருக்கே யாமினி.
என்னதான் இருந்தாலும், என் மாமாவோட அழகு யாருக்கும் வராது. அந்த சுருளான முடி, சிவந்த நிறம், அழகா ஆரடி உயரத்தில் சினிமா ஹீரோ மாதிரி இருக்கிறாரு இல்லையா மாமி.
உன் புருஷனோட அழகை நீயே புகழ்ந்துக்கிறே. சரி உள்ளே வா, அடுப்பில் சாம்பார் கொதிக்குது. காய்கறி நறுக்கணும், உனக்கு குளோப்ஜான் எப்படி செய்யறதுன்னு சொல்லிக்கிட்டே என் வேலையை பார்க்கிறேன்.
அவளுடன் யாமினி உள்ளே சென்றாள்.
உன் அப்பா போன் பண்ணினாரா யாமினி
ஒரு நாளைக்கு இரண்டு தடவை என்கிட்டே பேசாட்டி அவருக்கு தூக்கம் வராது மாமி. ரொம்பதான் என்னை நினைச்சு கவலைப்படறாரு.
இருக்காத பின்னே. தாயில்லாமல் வளர்ந்த பொண்ணு. கிராமத்திலே பாதி இடம் உங்கப்பாவுக்கு சொந்தம். உன்னை செல்லமாக கால் தரையிலே படாம வளர்த்துட்டாரு. கல்யாணம் பண்ணி வந்தாலும் அவர் கண்ணுக்கு நீ குழந்தையாதான் தெரியறே. அதான் சதா உன்னை நினைச்சு கவலை படறாரு.
மாமாதான் என்னை நல்லபடியா பார்த்துக்கிறாரே அப்புறம் என்ன? இன்னைக்கு கூட ஆபிசுக்கு கிளம்பும்போது, ராத்திரி நான் வர லேட்டாகும் நீ எனக்காக காத்திருக்க வேண்டாம். சாப்பிடுன்னு சொல்லிட்டு போனாரு.
விகல்பமில்லாமல் பேசும் யாமினினை புன்னகை மாறாமல் பார்த்தாள்.
‘உலகம் தெரியாமல் இருக்கிறாளே இந்த யாமினி’ என்று நினைத்தாள் மாமி.
கணக்குபிள்ளை தன்னருகில் பவ்யமாக வந்து நிற்க, ஏழுமலை நாளைக்கு சென்னைக்கு போய்ட்டு வந்துடுங்க.
பாப்பாவுக்கு ஏதும் கொடுக்கணுங்களா
ஆமாம். தோப்புல மாங்காய் பறிச்சது இருக்கு. நல்ல சப்படை மாம்பழம், ரூமானி எல்லாம் ஒரு கூடை தனியா எடுத்து வைக்க சொல்லியிருக்கேன். கொடுத்துட்டு, அப்படியே பாம்பே-ஸ்வீட் ஸ்டாலில் பால்கோவா ஒரு கிலோ வாங்கி கொடுத்துட்டு வாங்க. யாமினிக்கு ரொம்ப பிடிக்கும்.
ஐயா... நீங்களும் வந்தா... பாப்பாவை பார்த்துட்டு வந்த திருப்தி உங்களுக்கு இருக்குமே. சதா, தங்கச்சியைதானே நினைச்சுட்டிருக்கீங்க
என்ன செய்ய சொல்றே. என் கண்ணுலே வச்சு வளர்த்துட்டேன் வெளி ஆளுக்கு கட்டிதரலை. கடைசிவரை நல்லபடியா வச்சு காப்பதணும்னு என் தங்கச்சி மக்னுக்கே கட்டி கொடுத்திருக்கேன். அவனும் யாமினிமேலே பாசமா, பிரியமா இருக்கான். இரண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்க. அடிக்கடி நான் போனா மாப்பிள்ளை தம்பி தப்பா நினைச்சுக்க போவுது. போனவாரம்தான் போய் பார்த்துட்டு வந்தேன். நீங்க போய்ட்டு வாங்க.
வயிறு பசித்தாலும், மாமா வந்தவுடனே சாப்பிடலாம் என கதவை திறந்து வைத்து, கணவன் வரவை எதிர்பார்த்து தெருவையே பார்த்தபடி அமாந்திருந்தாள் யாமினி.
அந்த திரி ஸ்டார் ஹோட்டலில் மங்கிய விளக்கொளியில், அழகு தேவதையாக தன்னருகில் ரஞ்சினி அமர்ந்திருக்க. அவள் அழகை ரசித்தபடி, எதிரிலிருந்த குளோப்ஜாமை சாப்பிட்டு கொண்டிருந்தான் பரத்.
2
"பரத், எனக்கென்னவோ பயமா இருக்கு. இது எப்படி சாத்தியம்னு தோணலை."
ரஞ்சனி, உனக்கு என் மேலே நம்பிக்கை இல்லையா. நிச்சயம் உன் கழுத்தில் நான் தாலி கட்டுவேன். நீதான் என் மனைவி. என்னை நம்பு.
எப்படிங்க. உங்க மாமாவோட சொத்துக்கு ஏக போக வாரிசு உங்க மனைவி. சொத்தோடு, மகளையும் உங்களுக்கு கொடுத்திருக்காரு. அதையெல்லாம் வேண்டாம்னு ஒதுக்கிட்டு வர உங்களால முடியுமா? இல்லை அவங்கதான் விட்டுடுவாங்களா.
வாழ்க்கைங்கறது, நம்ப விருப்பத்துக்கு வாழறதுக்காக கடவுள் கொடுத்தது ரஞ்சனி. இப்படி அவலட்சணமான ஒருத்தியோடதான் என் வாழ்க்கையை நான் வாழணும்னு நினைச்சாலே குமட்டிக்கிட்டு வருது. என்னவோ என் போதாத காலம். என் அப்பா, அம்மா ஆக்சிடெண்டில் போய் சேர, பணம், காசு எதுவும் இல்லாத நிலையில், என் பணக்கார மாமா தயவில் படிச்சேன். அதுக்கு பிரதிபலனா அவர் மகளைக் கட்டச் சொல்லுவாருன்னு கனவிலும் நினைக்கலை. என்னால மறுக்கவும் முடியலை. தாலி கட்டிட்டேன். ஆனா உன்னை பார்த்த பிறகு, உன்னோட பழகின பிறகுதான் என் தவறு புரியுது. இந்த ஒரு மாசமாதான் என் வாழ்க்கையிலே வசந்தம் வீசுது. எப்படியாவது அவளைவிட்டு பிரிஞ்சு வந்துடுவேன். இது உறுதி. உன்னோடுதான் என் வாழ்க்கை. நீ தான் என் மனைவி. இதில் நான் உறுதியா இருக்கேன்.
நீங்க சொல்றதை கேட்க நல்லாதான் இருக்கு. ஆனா, நான் பெத்தவங்கன்னு யாருமில்லாத அனாதை. எங்கண்ணன், அண்ணி தயவிலே என் வாழ்க்கை போகுது. ஏதோ உங்களுக்கு பி.ஏ.வாக இருக்கிறேன். அதில் வர்ற வருமானம் மட்டும்தான் எனக்கு சொந்தம். இவ்வளவு சொத்துக்களோடு வர்ற உங்க மனைவியை ஒதுக்கிவச்சுட்டு, இந்த அன்ன காவடியை கல்யாணம் பண்ணிப்பீங்களா.
"ஏன் இப்படி பேசற ரஞ்சனி. உன் அழகுக்கு