Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sollathaan Ninaikiren
Sollathaan Ninaikiren
Sollathaan Ninaikiren
Ebook481 pages4 hours

Sollathaan Ninaikiren

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Arunaa Nandhini is a Tamil novelist. Her 1st short story Madhumati was published in the magazine Devi and her 1st novel was Nazhai Vaanilla published in Rani Muthu. She has written nearly 50 short stories that have been published in Amuthasurabi, Mangai Malar, Rani, Devi, Savi and Nandhini. She has been awarded the Kurunovel Award by 'Kalai Magal and the Mini Thodar Award by the publisher Devi. One of her short stories was accepted and included in the Singapore Syllabus during the 1990s. Arunaa Nandhini's novels are published by Arunodhayam and Arivalayam Publications. Her novels cover family subjects, romance, reality, with some humor added for the readers to enjoy at their leisure. Most of her novels convey good messages for her readers.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352853304
Sollathaan Ninaikiren

Read more from Arunaa Nandhini

Related authors

Related to Sollathaan Ninaikiren

Related ebooks

Reviews for Sollathaan Ninaikiren

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sollathaan Ninaikiren - Arunaa Nandhini

    http://www.pustaka.co.in

    சொல்லத்தான் நினைக்கிறேன்

    Sollathaan Ninaikiren

    Author:

    அருணா நந்தினி

    Arunaa Nandhini

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    1

    கறுத்த மேகத்துடன் பயமுறுத்துவது போல இருந்த வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள் இந்துஜா.

    ஆகாச கங்கையாய்க் கொட்டும் மழை எப்போது நின்று. எப்போது வீட்டிற்குப் போவது... இப்போதைக்கு இந்த மழை நிற்காது போல் இருக்கிறதே...

    அன்னபூரணி அம்மா எத்தனை நேரம்தான் நவீனைச் சமாளிப்பார்... பாவம். குழந்தையும் "அம்மா என்று அரற்ற ஆரம்பிப்பானே. அப்புறம். அவனைச் சுதாரிப்பது என்பது கஷ்டம்தான்.

    மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.

    சே.. ஏன்தான் இப்படிச் சொல்லிக் கொள்ளாமல் திடீர் என்று வந்து தொலைக்கிறதோ இந்தப் பாழாய்ப் போன மழை... குடையும் கொண்டு வரவில்லையே... என்று எரிச்சலுடன் நினைத்துவிட்டு. அடுத்த கணமே உள் ளுக்குள் சிரித்துக் கொண்டாள்... மழை எப்படி வரு கிறேன் என்று தந்தி கொடுத்துவிட்டு வருமா.. என்ன.. சொல்லாமல் கொள்ளாமல் வருவதுதான் மழை... அதுவும் எதிர்பார்க்கும்போது பொய்க்கும்... எதிர்பாராத வேளையில் கொட்டும்...

    அது என் இஷ்டம் என்பதுபோல வானத்தில் இடி யின் உறுமல்...

    நிழற்குடையின் கீழ் ஒதுங்க ஜனங்கள் ஓடிவந்து நின்றனர். அப்படியும் மழைநீர் தெறித்துப் புடவை நனை யத்தான் செய்தது... ப்ச்சு... எதுவும் செய்ய முடியாது... வீடு சேர்வதற்குள் தெப்பலாய் நனைவது நிச்சயம்.

    இந்த பஸ்ஸும் வந்து தொலைக்கக் கூடாதா.. இந்த அடைமழையில் அதுவும் வரட்டுமா... வேண்டாமா என்று யோசித்து ஊர்ந்து வருகிறது போலும். அவளது தவிப்பை உணர்ந்து கொண்டதுபோல பஸ்ஸும் வந்து சேர்ந்தது. உள்ளே ஜன நெரிசல்...

    கூட்டம் பிதுங்கி வழிந்தது. இதைத் தவற விட் டால்... அடுத்த வண்டி எப்போதோ.. அதை நினைத்துப் பரபரப்புடன் பஸ்ஸில் ஏறினாள்.

    இருக்கை ஏதும் காலியாக இருக்கப் போவதும் இல்லை. ஆகவே அந்த யோசனையின்றி மகளிர் கும்பலின் நடுவே சேர்ந்து கொண்டாள்.

    ஏறக்குறைய பாதி தூரம் வந்த பின்புதான் அவளுக்கு இருக்கை கிடைத்தது. அம்மாடி என்று அதில் அமர்ந்து கொண்டாள். அப்போதுதான் உடம்பின் அலுப்பு தெரிந்தது. இருக்கையில் முதுகைச் சாய்த்தபோது வெகு சுகமாக இருந்தது. ஒரு வழியாய் அவள் இறங்கும் நிறுத்தமும் வர... பரபரப்புடன் இறங்கினாள். மழையின் வேகம் நின்று. சாரலைத் தெளித்துக் கொண்டிருந்தது.

    சேலைத் தலைப்பை இழுத்துத் தலைமேல் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்தாள் இந்துஜா.

    வீட்டினுள் சென்றதும். நாய்ப் பொம்மையுடன் விளை யாடிக் கொண்டிருந்த மகனைப் பாசத்துடன் அழைத்தாள்.

    நவீன் குட்டி. அம்மா வந்தாச்சு செல்லம்.

    அவளது குரலைக் கேட்டதும் விரைந்து வந்தாள் அன்னபூரணி...

    வந்துட்டியாம்மா. நல்லவேளை... இப்போத்தான் எனக்கு நிம்மதியாச்சு... எங்கே மழையில் நீ சிக்கித் தவிக் கிறாயோன்னு விசாரமா இருந்தது. மழையில் நனைஞ் சிருக்கே... முதலில் தலையைத் துவட்டிக்கோ... என்று ஒடிப்போய்த் துண்டு ஒன்றைக் கொண்டு வந்து அவ ளிடம் தந்தார்...

    அம்மா... தூக்கு... என்று இரு கைகளை நீட்டிய மகனைக் குனிந்து முத்தமிட்டாள் இந்துஜா.

    ஈரத்தோடு அவனை எடுத்துக்காதே இந்து... அவனுக்குச் சளி பிடிக்கப் போகிறது... என்று தடுத்தார் அன்னபூரணி.

    இருடா கண்ணா. அம்மா போய் உடையை மாற்றிக் கொண்டு வந்து விடுகிறேன். அப்புறம் வந்து உன்னைத் துக்கிக்கிறேன். பாட்டிகிட்டே சமர்த்தா இருப்பாயாம். அம்மா... மேலே போய்ப் புடவையை மாற்றிக் கொண்டு வருகிறேன்... என்றாள் அவள்.

    அப்போ கொஞ்சம் இரும்மா... சூடா காபி தரு கிறேன். குடித்து விட்டுப் போ! என்று சொல்லிவிட்டு... உடனே சென்று காபியைக் கலந்து வந்து நீட்டினாள்.

    இந்து. நீ எதுவும் செய்ய வேண்டாம். இந்த மழைக்குச் சரியா சீரக ரசம் வைத்திருக்கேன். குழந்தைக்கு ஊட்டி விடுகிறேன். நீயும் அதைச் சாப்பிட்டு விடு. நீயும் வேலையிலிருந்து அலுப்பா வந்திருப்பே பாவம்... என்று தாயுள்ளம் கொண்டவளாய் அன்னபூரணி சொன் னதும் உள்ளம் பாகாய்க் கரைந்தது. தன்னிடம் இவர்கள் அன்பில் மறைந்து போனது உண்மை. இருந்தாலும் ஒருவித சங்கோஜம் அவளை ஆட்டுவிக்க... மறுத்தாள் அவள்.

    எதுக்கும்மா.. எத்தனை நேரம் ஆகப் போகிறது. ஏதாவது செய்து கொள்கிறேனே.

    அது சரி... இனிமேல் போய் செய்கிறாயாக்கும். உன் ஒருத்திக்காக நீ ஏன் அல்லாட்றே. ஏதோ நான் சமைச்சதில் கொஞ்சம் உனக்குத் தரப் போகிறேன். அவ் வளவுதான். கூச்சப் படாதேம்மா... நான்தான் சொல்லி யிருக்கிறேனே... நீ என் பொண்ணு மாதிரின்னு... என்று வற்புறுத்தலாய்ச் சொன்னதும் அதற்கு மேல் மறுக்க முடி யாமல் தலையசைத்து வைத்தாள்.

    ஈரச்சேலை உடம்புடன் ஒட்டிக் கொண்டு... நடக் கவும் கஷ்டப்பட்டு மாடி ஏறினாள் இந்துஜா.

    மாடியில் தனி போர்ஷன். சின்னதாய்ப் படுக்கை அறை... ஹால்... சமையலறை. குளியல் அறை... டாய்லட் வசதி யுடன்... சித்தடக்கமான வீடு... அது அவளுக்குப் போது மானதாய் இருந்தது. அவளுடைய நிலைமையை உணர்ந்து குறைவாகவே வாடகை வாங்கினார்கள்.

    சேலையை மாற்றி. நைட்டியை அணிந்து கொண்டாள் இந்துஜா. தலைக் கூந்தலைத் துவட்டிக் கொண்டிருக்கும் போது சாமிநாதன் வந்தார்.

    அம்மா... இந்து... இதை வாங்கிக்கோ... சூடா இருக்கும் போதே சாப்பிட்டு விடணுமாம். இது அவ ளோட கட்டளை. குழந்தைக்கு இப்போ சாதம் ஊட்டிக் கொண்டிருக்கா... அவன் சாப்பிட்டதும் மேலே அழைத்து வர்றேன். முதல்லே இதைச் சாப்பிட்டு முடி.. என்று சாப்பாட்டுத் தட்டைக் கொடுத்தார்.

    அதில் மல்லிகைப் பூவாய் அன்னமும். ஒரு கிண் ணத்தில் ரசமும். கூடவே இரண்டு சுட்ட அப்பளமும் இருந்தது. பார்த்ததும் நாவில் எச்சில் ஊறியது. வயிறோ... சீக்கிரம் எனக்குக் கொடேன் என்று அலறியது. பசியிலும் சோர்விலும் காய்ந்து போயிருந்த நாக்கிற்கு அந்த ரசம் சாதம் அமுதமாய் இருந்தது.

    அன்னபூரணி அம்மாவின் கைமணம் அப்படி...

    அவள் தன்னந்தனியாய் அல்லாடுவதை உணர்ந்தவ ளாய் அடிக்கடி எதையாவது செய்து வந்து கொடுப்பது வழக்கம். 

    வாழைப் பூ வடை. சிலநாள் பொன்னிறமாய் அடை யும் அவியலும். அல்லது மல்லிகைப் பூ இட்லி. தொட் டுக் கொள்ளக் கொத்தமல்லி சட்னி... ஓரிரு நாட்களில் குழிப் பணியாரம். இப்படித் தினுசு தினுசாய் அவளுக்கு வரும்... 

    ஒரு வழிப்பாதை மாதிரி தானே வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பது இந்துஜாவிற்கும் ஒரு மாதிரியாக இருக்கும். பதிலுக்கு அவளும் விடுமுறை நாட்களில் பஜ்ஜி... சாம்பார்வடை. கட்லட்... பக்கோடா என்று தனக்குத் தெரிந்ததைச் செய்து தருவாள்.

    பதிலுக்குப் பதில் என்பதைவிட. பாச உணர்வுதான் அதில் இருக்கும்.

    பெற்றவர்களைப் போல அன்பும் பாசமும் காட்டும் அவர்களை நன்றியுடன் நினைப்பாள் அவள்.

    என்றைக்குக் கையில் சின்னக் குழந்தையை ஏந்தி... தன்னந் தனியாளாய் வந்தாளோ அன்றிலிருந்து அவ ளுக்கு உற்ற துணையாய்... பாதுகாப்பாய்... உதவியாய் இருந்தார்கள் அந்தத் தம்பதியினர்.

    அவளுடைய பரிதாபக் கதை முழுவதும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அவள் மீது பரிவும் நவீன் மீது பாசமும் பெருகியது.

    உறவுகள் இருந்தும் யாரும் இல்லாத அனாதை போல் இருந்த அந்த அபலைப் பெண்ணிற்கு உதவிக்கரம் நீட்டி அரவணைத்தது மட்டுமின்றி. அவளையும் குழந்தையை யும் கண்ணின் இமையாய் வைத்துக் காத்தனர். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால்... வாழ்க்கையே போராட்ட மாகி யிருக்கும் அவளுக்கு.

    சிறிது நேரத்தில் நவீனை ஏந்திக் கொண்டு மேலே வந்தார் சாமிநாதன்.

    அவளிடம் தாவினான் குழந்தை. அவன் கையில் புதுப் பொம்மை இருந்தது.

    அம்மா... தாத்தா... இந்த தாத்தா... பூச்சா தந்தார். என்று தன் பொம்மையைக் காட்டினான்.

    அப்படியா செல்லம்... எங்கே... காட்டு. அட... ரொம்ப அழகா இருக்கே... ஆமாம்... என்ன பேரு வைக்கலாம்? என்று கேட்டாள் அவள்.

    நவீன்…

    அதைக் கேட்டு விட்டுச் சிரித்தாள் இந்துஜா "

    அது உன் பேர் செல்லம். நாய்க்கு. ம்ம்... விக்கின்னு வைக்கலாமா... 

    என்று தலையாட்டினான் பிள்ளை.

    சரி... நீ போய் விக்கியோட விளையாடிக்கொண் டிரு. நான் தாத்தாகிட்டே பேசிவிட்டு வருகிறேன்..." என்று அவனை இறக்கி விட்டாள்.

    அவனும் சமர்த்துப் பிள்ளையாய்க் கட்டில் மேல் ஏறித் தன் பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடத் தொடங்கினான். 

    என்னப்பா... அவனுக்குத்தான் நிறையப் பொம்மை கள் இருக்கே... இன்னும் எதற்கு...? என்று கேட்டாள் சாமிநாதனிடம். 

    இருக்கட்டும்மா... பாரு... குழந்தை முகத்தில் எத் தனை சந்தோஷம்னு. அது அப்படி ஒன்றும் உசத்தி விலை இல்லேம்மா... சரி... நீ போய்க் குழந்தையைத் தூங்க வை. நான் போறேன், என்று சொல்லிவிட்டுக் கீழே சென்றார்.

    குழந்தையுடன் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு. அவனுக்குப் பாலைக் காய்ச்சிக் குடிக்க வைத்து விட்டு... படுக்க வைத்தாள். 

    அம்மா... நரிக்கதை சொல்லு... என்று நவீன் கேட்டதும், அவனது நெற்றியில் முத்தமிட்டு விட்டுக் கதை சொன்னாள். அதைக் கேட்டவாறே தூங்கிப் போனான் குழந்தை... அவனுக்குப் போர்த்தி விட்டு. தான் கொண்டு வந்த விடைத் தாள்களைத் திருத்த அமர்ந்தாள்.

    அவற்றைத் திருத்தி முடிக்க அரை மணி நேரம் ஆனது. திருத்தி முடித்ததும் மறக்காமல் தன் தோள் பைக்குள் வைத்துவிட்டு நவீன் அருகே வந்து படுத்தாள். எப் போதுமே வராமல் பிகு செய்யும் உறக்கம் இன்றைக்கு வந்து விடுமா என்ன... ஊகூம்... வருவேனா என்று ஒளிந்து விளையாடியது.

    ஏதேதோ நினைவுகள்... கடந்த கால இடர்கள். நிகழ் காலப் போராட்டங்கள்... எதிர்காலம் பற்றிய கவலை.. எல்லாம் ஒன்று கலந்து அவளைத் தூக்கமின்றித் தவிக்க வைத்தது. 

    அதே சமயம். பெற்றெடுத்த மகளைப்போலத் தன் மீது அன்பையும் பாசத்தையும் பொழியும் அன்னபூரணி சாமிநாதன் தம்பதியினர் இருக்கும்போது கலங்குவது வீண் என்றும் தோன்றியது... அவர்களது நிழலில் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பது நிச்சயம் என்று மனசில் பட்டாலும் அது நீடிக்க வேண்டும் என்று நெஞ்சம் அடித்துக் கொண்டது. 

    இத்தனைக்கும் இரத்த சம்பந்தமில்லாதவர்கள்... குழந்தையிடம் உயிருக்குயிராய் இருந்தது வியப்பிற் குரிய விஷயம்தான்.

    எங்கேயோ தொலைதூரத்தில் இருக்கும் பேரனைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம்தான். நவீனிடம் பாசமாய் மாறியது என்று சொல்ல வேண்டும்.

    அவர்கள் மட்டும் உறுதுணையாய் இல்லையென் றால்... வாழ்க்கையே முடமாகிப் போயிருக்கும்.

    கஷ்டத்திலும் கடவுள் கொஞ்சம் கருணை காட்டு கிறார் என்பதும் உண்மைதான்.

    உறவுகள் எல்லாம் கைகட்டிக் கொண்டு விலகி நின்ற போது... கை கொடுத்த தெய்வங்களாய் இருவரும் இருந்ததை நன்றியுடன் நினைத்துப் பார்த்தாள்.

    உறவுகள் மட்டுமில்லையே... காதலாய்க் கசிந்துருகின வனும் அப்படித்தானே...

    குழந்தையை அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு வந்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்ற நிபந்தனை. அதை நினைக்கையில் இப்போதும் வயிற்றில் தகிப்பு...

    என்ன வார்த்தை அது. குழந்தையை விட்டுவிட வேண்டும் என்று வெகு சுலபமாய்ச் சொல்லிவிட்டானே... தாயுள்ளம் தாங்குமா என்ற சிந்தனை இல்லாமல்...

    நவீன் இல்லாமல்... அய்யோ... அதை நினைத்துப் பார்க்கவும் முடியவில்லையே... அது எப்படிச் ஆகும்...

    அவனை இழந்து வரும் வாழ்க்கை... அது சுவர்க்க வாழ்க்கையாக இருந்தாலும் வேண்டவே வேண்டாம்.

    என் வாழ்க்கையின் ஜீவநாடி அவன்... அவனைச் சுற்றித்தான் என் உலகமே.

    ஆக... நவீனா... முரளியா என்ற கேள்விக்குக் கண் களை மூடிக் கொண்டு என் பிள்ளைதான்...

    என் பிள்ளை மட்டும்தான் என்று நெஞ்சு உறுதியுடன் நினைத்தது.

    அவன் முன் எல்லாமே துச்சம் என்பதை நன்கு உணர்ந்த தால். முரளியிடம் தன் மறுப்பைச் சொல்லி விட்டாள். அது முரளிக்கும் ஏமாற்றம்தான்.

    ஒரு வருடமாய் வேரூன்றி வளர்ந்த காதலை எப்படி அவளால் இப்படிச் சுலபமாய்த் துறக்க முடிந்தது. மனசுக் குள் குமைந்தாள் அவள்.

    அவர்களிடையே உதித்த காதல். கண்டதும் காதல் ரகம் இல்லை. இருவரும் ஒரே பள்ளியில் வேலை செய்வதால்... பாட சம்பந்தமாகவோ அல்லது படிக்கும் மாணவர்களைப் பற்றியோ பேச வேண்டி வந்தது சகஜம்... 

    ஆரம்பத்தில் தானுண்டு. தன் வேலை உண்டு என்று இறுகி இருந்த முரளி. மெல்ல மெல்லத் தன் இறுக்கத் தைத் தளர்த்திக் கொண்டு மனம் விட்டுப் பேச ஆரம் பித்தான். தனது எதிர்காலக் கனவு பெரிய கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்க வேண்டும்... அதற்கான முயற்சியாய் அஞ்சல் வழியில் பிஎச்.டி. பண்ண ஆரம் பித்திருப்பதையும் அவளிடம் சொன்னான்.

    இப்போதைக்குக் கல்யாண நினைப்பெல்லாம் இல்லை... வரும் பெண் தனக்கு அனுசரணையாய்... உறுதுணை யாய் இருப்பாள் என்று உறுதியில்லையே... தனது லட்சியம் ஈடேறிய பின்புதான் திருமணத்தைப் பற்றிய சிந்தனையெல்லாம் என்றவன்... சில மாதங்களிலேயே அவளிடம் வந்து தயக்கத்துடன் கேட்டான்.

    உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது இந்துஜா... என்னை மணக்க உனக்குச் சம்மதமா...?

    அதைக் கேட்டதும் திகைப்படைந்தாள் அவள். முரளியா அப்படிக் கேட்பது... இப்போதைக்குக் கல் யாணம் பற்றிய சிந்தனை இல்லை என்றவனா இப்போது என் சம்மதம் கேட்கிறான். என்னவாயிற்று. அவனது லட்சியக் கனவு... 

    அதை அவனிடமே கேட்டு விட்டாள்.

    அது அப்படியே இருக்கு... இந்து. எனக்கு ஒரு நல்ல மனைவி அமைந்து... என் லட்சியம் ஈடேறப் பக்க பலமாய் இருக்கலாம் இல்லையா... அது ஏன் நீயாக இருக்கக் கூடாது என்று நினைத்தேன். என்ன, அப்படிப் பார்க்கிறாய்... இந்தக் கொஞ்ச நாள் பழக்கத்தில் உன் குணம் எனக்குப் பிடித்து விட்டது. உன் அமைதியான சுபாவம்... நிதானமான பேச்சு... யோசித்துச் செயல்படும் திறன் எல்லாவற்றையும் விட உன் மென்ட்டல் மெச்சூரிட்டி எல்லாம் எனக்குப் பிடித்திருக்கிறது இந்து. இந்த மாதிரி ஒரு பெண்தான் எனக்கு வாழ்க்கைத் துணையா வானும் என்று ஆசைப்பட்டேன்... என்னைப் புரிந்து கொண்டு... என் வெற்றிக்குத் துணையாய் இருப் பாய் என்று என் மனசு சொல்கிறது. உன் பதிலில் தான் என் எதிர்காலம் இருக்கு இந்து... என்று அவன் சொல்லவும். அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் தத்தளித்தாள்.

    உடனே முடிவு எடுக்க முடியாத விஷயம் இது... ஆழ்ந்து யோசித்து முடிவுக்கு வர வேண்டும்...

    தவிர... அண்ணன். அண்ணி என்று பெரியவர்களிடம் கலந்து பேசி. அவர்களது ஒப்புதலையும் பெற வேண்டும் அல்லவா? 

    என்னதான் அவர்கள் அக்கறையில்லாமல் விலகிப் போனாலும். அவர்களை விலக்கி வைத்து விட்டு எதை பும் செய்ய முடியாதே.

    அவளது தயக்கத்தைக் கண்டு முரளி சொன்னான். புரிகிறது இந்து... இது சட்டென்று முடிவெடுக்கும் விஷயம் அல்லதான். நீயும் நன்றாக யோசித்து உன் விருப்பத்தைச் சொன்னால் போதும்... ஆனால். நீண்ட அவகாசம் வேண்டாம்... ப்ளீஸ்.

    அவளும் நன்றாக யோசித்தாள்.

    அவனுக்கு என்ன குறை... நல்ல படிப்பு... திறமை இருக்கிறது. உத்தமனாகவும் இருக்கிறான்... எந்த விதக் கெட்ட பழக்கங்களும் இல்லைதான்... நிச்சயம் முன் னுக்கு வருவான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

    பார்ப்பதற்கும். களையாகவும் இருக்கிறான்... என்ன... கனவு நாயகன் தோற்றம் என்று சொல்ல முடியாவிட் டாலும் கண்ணுக்கு லட்சணமாகத்தான் இருக்கிறான் என்று மனம் நினைத்தது.

    அவளுக்கும் அவனது அமைதியும்... பெண்களிடம் கண்ணியமாய்ப் பழகும் தன்மையும் பிடித்திருந்தது. தவிர அவனது விடாமுயற்சியும். உயர்ந்த இலக்கை அடையப் போராடும் மன உறுதியும் நிரம்பவே அவளை ஈர்த் திருந்தது.

    இந்த விஷயத்தைத் தன் வீட்டினருக்குச் சொல்லி. அவர்களது அனுமதியையும் விருப்பத்தையும் கேட்க வீட்டுக்கு போன் செய்தபோது அண்ணன் வீட்டில் இல்லை.

    அண்ணியிடம் விஷயத்தைச் சொன்னபோது பதிலும் விட்டேற்றியாய் வந்தது... ஏன் எங்களைக் கேட் கிறாய்... இது உன் சொந்த விஷயம்... நாங்க தலையிட மாட்டோம். உன் விருப்பப்படி செய்து கொள்... எங் களிடம் எதையும் எதிர்பார்க்காதே! என்று நறுக்குத் தெறித்த மாதிரிச் சொன்ன பின்பு என்ன செய்ய முடியும்..?

    தன் கல்யாணத்தை எடுத்து நடத்த அண்ணன்கள் தயாராக இல்லாதபோது அவர்களிடம் சம்மதம் கேட்பது அர்த்தமற்ற செயலாகப் பட்டது அவளுக்கு.

    எனவே... முழு மனதுடன் தன் சம்மதத்தைச் சொல்லி விட்டாள்... அந்த நேரத்தில்... முரளியின் முகத்தில் தெரிந்த ஆனந்தம்... அது அவளுக்கு சந்தோஷத்தைத் தந்தது. நிச்சயம் அவன் நல்ல கணவனாய் இருப்பான் என்ற நம்பிக்கையும் துளிர்த்தது. உங்கள் வீட்டிற்கு வந்து முறைப்படி பேச வேண்டும் என்றால்... என்றவனை இடைமறித்தாள் இந்து.

    தேவையில்லை! என்றவள் தன் குடும்பத்தின் நில வரத்தை எடுத்துச் சொன்னாள்... அத்தனை உறவுகள் இருந்தும் தான் யாருமில்லாத அனாதை... இந்த அனா தையை அவன் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்றும் கேட்டாள்.

    நாங்க இருக்கிறபோது நீ அனாதை இல்லை இந்து.. இனி என் உறவுகள் எல்லாம் உன் சொந்தம் என்று நினைத்துக் கொள்... என்றான் பரிவுடன்...

    அந்தப் பதிலில் நெகிழ்ந்து போனாள் இந்துஜா...

    இதோ பார் இந்து. கஷ்டம் என்பது அனைவருக்கும் சகஜம்தான்... ஆனால் வரும் விதம்தான் வேறே... இதுவும் கடந்து போகும் என்று நினைத்துக் கொண் டால். அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி வந்துவிடும். இது என் அனுபவத்தில் உணர்ந்தது! என்றவன்... அவளிடம் முதன் முதலாய் வாழ்க்கையில் தான் கண்ட வேதனைகளை வெளியிட்டான். அவனும் வாழ்க்கை பில் அடிபட்டு முன்னுக்கு வந்தவன் தான். ஏழைக் குடும்பம். அவன் தலை தூக்கியதும்தான் கொஞ்சம் வசதிகளைப் பார்த்தது வீடு. தந்தை இல்லை. தாய்தான் கஷ்டப்பட்டு வளர்த்தது. அண்ணன் இருக்கிறான். பைசா பிரயோசனம் இன்றி... படிப்பு தலைக்கு ஏறாமல்... பள்ளி இறுதி வகுப்பில் தோல்வி கண்டு... எங்கேயோ ஒரு ஆபீஸில் எடுபிடியாய் வேலைக்குச் சேர்ந்து... வரும் சம்பளத்தில் பெரும் பகுதியை மதுவில் கரைத்து... வீட்டுக்குப் பாரமாய் இருந்தவனை. எவ்வளவு முயன்றும் திருத்த முடியவில்லை...

    அவனைப் பார்த்து மனம் நொந்துபோன தாயின் கண்ணிரைத் துடைக்கத்தான் அவன் கஷ்டப்பட்டுப் படித்து முன்னுக்கு வந்தது. ஒரு பிள்ளையினால் குனிந்த பெற்றவளின் தலை... இளைய மகனால் நிமிர்ந்தது.

    இந்த லட்சணத்தில். பெரியவனுக்குத் திருமணமும் நடந்தது. இங்கே என்ன வாழ்கிறது என்பது போல... பெண்ணும் ஒரு குடிகாரனின் மகள். ஏதோ ஒரு மது பானக் கடையில் ஏற்பட்ட சந்திப்பு... "மாமா... மாப் பிள்ளை என்ற பந்தமாகிப் போனது.

    அந்தப் பெண்ணும் கெட்டிக்காரிதான். வந்ததும் தன் கணவனைக் கைக்குள் போட்டுக் கொண்டு. அப்படியே தந்தை வீட்டிற்குக் கடத்திச் சென்று விட்டாள் என்பதை வருத்தத்துடன் சொன்னான் அவன்.

    முரளிக்கு ஒரு தங்கையிருக்கிறாள். கல்லூரியில் படிக்கும் அவள்தான் அம்மாவுக்கும் தனக்கும் செல்லம். படிப்பில் சூட்டிகை என்று சொன்னவனின் முகத்தில் பெருமிதம் ஒளிர்ந்தது.

    என் வீட்டிற்கு ஏற்ற மருமகள் நீ இந்து... என் அம்மா வின் பொறுமை உன்னிடம் இருக்கிறது. நிச்சயம் என் அம்மாவை நன்றாய்க் கவனித்துக் கொள்வாய். எனக்கு அதுதான் வேண்டும். அம்மா வாழ்க்கையில் எந்த சுகத் தையும் காணாதவள்... அவளை நாம்தான் சந்தோஷ மாய் வைத்துக் கொள்ள வேண்டும் இந்து. நம் திரு. மணத்திற்குப் பின் குடும்பப் பொறுப்பெல்லாம் உன் ம் னுடையது! என்றவன். நவீனின் பொறுப்பை ஏற்றுக் ... கொள்ள விரும்பாமல் பின் வாங்கி விட்டதுதான் ம் அவளுக்குச் சிரிப்பூட்டியது.

    சாரி இந்து... எனக்குப் பரந்த மனம் இல்லை என்று ன் நினைத்தாலும் சரி... எனக்கு நீதான் வேண்டும்... நீ ப் மட்டுமே... அந்த வார்த்தைகளில் அவள் மனமொடிந்து த போனது உண்மைதான்... இதைத்தான் ஆண் மனம் என்கிறார்கள் போலும்... இப்போதும்... அதைப்பற்றி ம் நினைக்கும்போது துக்கம் தொண்டைக்குள் அடைத்தது போல் இருந்தது. நவீன் புரண்டு படுத்தவன். தன் குட்டிக் கரத்தை அவளது கழுத்தில் போட்டான். அந்தப் பிஞ்சுக் கரத்தின் ஸ்பரிசம் அவளை நெகிழ வைத்தது…

    என்ன ஆனாலும் சரி... உன்னைப் பிரிந்து இருக்கன் மாட்டேன் கண்ணா... எனக்கு நீ இருந்தால் போதும்..." என்று உள்ளுக்குள் எண்ணியவள் குழந்தையை இறுக அனைத்துக் கொண்டாள்.

    2

    அன்று ஞாயிற்றுக்கிழமை.

    நவினை அழைத்துக் கொண்டு வெளியே சுற்றி வரவாமே என்று தோன்றியதால்... அவனைக் குளிப்பாட்டி விட்டு. உடையணிவித்துத் தயார்ப்படுத்தினாள்.

    அவனுக்கு இட்லி ஊட்டிவிட்டு அவளும் சாப்பிட்டான் வழியில் அவனுக்குப் பசிக்குமே என்று பிரெட் சாண்ட் விச். பிஸ்கட்... ஆப்பிள்... கூடவே ஒரு நீர் பாட்டில் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். வெளியே போகும் குஷியில் நவீனும் கன்றாய்த் துள்ளிக் கொண்டு புறப்பட்டான்.

    அம்மா... அம்மா... ஜூய்னு ஆத்தாலோ போலாமா...? கண்களை உருட்டி... தலையை ஆட்டிக் கேட்ட மகனை முத்தமிட்டு விட்டு, போகலாம்டா செல்லம்! என்றாள் இந்துஜா

    தாத்தா... பாத்தியையும் கூத்தித்து போலாமாம்மா...

    இல்லேடா... கண்ணா... அவர்களுக்கு வேலை இருக்காம்... நாம் மட்டும்தான் போகிறோம்...

    விக்கி...

    ஒ... விக்கியும் வரட்டுமே... எங்கே உன் விக்கி... கூட்டிக் கொண்டு வா... ஒடு... என்றதும் குதித்து ஓடினான் நவீன்.

    ஆட்டோவில் அமர்ந்தவாறு உற்சாகத்துடன் இரு பக்க! மும் பார்த்துக் கொண்டு. அவ்வப்போது அம்மாவிடம் கேள்வி கேட்டபடி வந்தான் அவன்.

    ஒரு பெரிய ‘பார்’க்கின் முன் ஆட்டோவை நிறுத்தச் சொன்னாள். பூங்காவினுள் பிள்ளைகள் விளையாடு வதற்கென்றே ஊஞ்சல்... சறுக்கல்... ஸி. ஸா... மினி மெரிகோ என்று விதவிதமாய் இருந்தன. நவீனின் வயசொத்த குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த "ஸி.லா.. மினிமெரிகோவில் பெரிய பிள்ளைகளும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடியதால்... நவீனை உட்கார வைக்கக் கொஞ்சம் காக்க வேண்டியதாயிற்று.

    நடமாடும் பொம்மைகள் போல் இருந்த பெண் குழந் தைகள் கையில் பிளாஸ்டிக் பக்கெட்டையும். பிளாஸ்டிக் கரண்டியையும் வைத்துக் கொண்டு... ഥങ്ങ് ിക്കണ யாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். பொறுமை யாய் மண்ணை அள்ளி பக்கெட்டில் நிரப்பிக் கொண்டு... சற்றுத் தள்ளியிருந்த பள்ளத்தில் போய்க் கொட்டிவிட்டு. மறுபடியும் மண்ணை அள்ளி... சலிக்காமல் விளை யாடும் அந்தக் குட்டித் தேவதைகளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இந்துஜா.

    சிறிது நேரம் விளையாடியபின் அவளிடம் ஓடி வந் தான் நவீன்.

    அவனது கைகளைக் கழுவிவிட்டு சாண்ட்விச்சையும் பிஸ்கட்டையும் தந்தாள் இந்துஜா.

    அவன் சாப்பிட்டதும் நீரைக் குடிக்க வைத்துவிட்டு...

    போகலாமா கண்ணா? என்றாள்.

    வேணாம்... நான் விக்கியோத ஆதப் போறேன்... அதோ... அதிலே... என்றான் மினி மெரிகோவைக் காட்டி.

    அவளும் சிரித்துவிட்டு, அது பேரு என்னன்னு சொல்லட்டுமா... மெரிகோ... எங்கே... திருப்பிச் சொல் பார்க்கலாம்... என்றாள் மகனிடம்.

    மெரிகோ...

    ஆங். கரெக்ட். வா... அதில் உன்னை உட்கார வைக்கிறேன்! என்று சொல்லி அழைத்துச் சென்றவள் நவீனை மெரிகோவில் அமர வைத்தாள். 

    மூன்று ரவுண்டுக்கு மேல் அதுவும் அலுத்துவிட, போதும்மா.." என்று எழுந்து விட்டான்.

    பின்பு அங்கிருந்து ஆட்டோ பிடித்துக் கொண்டு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்க்கு வந்தார்கள். நவீனுக்காக போர்ன்விட்டா... சீஸ்... ஸ்ட்ராபெர்ரி... டேட்ஸ் என்று வாங்கிக் கொண்டாள். மேலும் வீட்டிற்குத் தேவை யானதை வாங்கிக் கொண்டு வெளிவந்தபோது...

    ‘காம்ப்ளெக்ஸ் வெளியே ‘கம்’ மென்று கார்ன் வாசனை மூக்கைத் துளைத்தது.

    அம்மா.. அது வேணும்! என்று அதைச் சுட்டிக் காட்டினான் குழந்தை. பட்டர் கார்ன் ஒரு கப் வாங்கி அதை நவீனுக்கு ஊட்டினாள்... அருகில் விற்ற தக்காளி சூப்பை வாங்கி நவீனுக்கு இரண்டு வாய் ஊட்டிவிட்டு அவளும் குடித்தாள்.

    வீடு வந்து சேர்ந்தபோது மணி ஆறு ஆகிவிட்டது. நவீனைக் கையில் வாங்கிக் கொண்ட சாமிநாதன், என் னம்மா... குழந்தை என்ஜாய் பண்ணினானா... ஏதாவது சாப்பிட்டானா... அவனுக்காகப் பாட்டி சுடச்சுட அதிரசம் செய்து வச்சிருந்தா... அடைத் தோசையும் இருக்கு. குழந் தைக்குக் கொடு... என்றார் கரிசனமாய்.

    அவரது மோவாயைத் திருப்பி, தாத்தா... தாத்தா... நான்... நான் கீசா விளையாடினேன்... தெரியுமா... அப் புறம்... நானும் விக்கியும். கேளுங்க தாத்தா... கோகோ சுத்தினோம். இல்லையாம்மா... என்றான் குஷியுடன்.

    இந்துஜாவைக் கேள்வியாய்ப் பார்த்தார் அவர். அது என்னம்மா புது விளையாட்டு. கீசா. கோ கோன்னு நான் கேள்விப்பட்டதில்லையே!" என்றார் வியப்புடன்.

    அதான்ப்பா. ஸோன்னு மேலும் கீழுமாய் ஆடுவார் களே, அது. நவீன்... அது கோகோ இல்லை கண்ணா. மெரிகோ... என்று திருத்தினாள் அவள்.

    ஒ. அதானா. சரி... போம்மா... நவீனும் நீயும் கைகால் கழுவிக் கொண்டு வாங்க... என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அன்னபூரணி அங்கு வந்தார்.

    வந்தாச்சா. இந்து... சரி... சீக்கிரம் போய் கை கால் அலம்பிக் கொண்டு வா... சுடச்சுட அடைத் தோசை வார்த்துத் தருகிறேன்! என்றார் வாஞ்சையுடன்.

    எதுக்கும்மா உங்களுக்கு வீண் சிரமம். தினமும் எங் களுக்காகச் செய்து தரணுமா... வேண்டாம்மா... என்று மறுத்தாள் இந்துஜா.

    இதோ பார் இந்து. ஒண்னு சொல்றேன். கேட்டுக்கோ. நீயும் என் மகள்தான்... நவீன் என் பேரன்... உங்களுக்குச் செய்யறதில் மனசுக்கு நிறைவா இருக்கு. இப்படி நீ மறுத்தால்தான் கஷ்டமா இருக்கு... உன்னை வேற்று மனுஷியாவே நாங்க பார்க்கறதில்லைம்மா... இந்த வீட்டில் நீயும் ஒருத்தியாதான் நாங்க நினைக்கிறோம். அதைப் புரிஞ்சுக்கோ... என்றதும் நெகிழ்ந்து போனாள் இந்து. அவர்களது அன்பு அவளைத் திக்குமுக் காட வைத்தது. தெய்வமே. எனக்கு யாரும் இல்லை என்று ஏங்கினதுக்கு இவர்களைத் தந்தாயா. சொந்தமோ... பந்தமோ இல்லை. இருந்தும் பாசத்தைப் பொழிகிறார்கள்...

    ஆனால் இரத்த சம்பந்த உறவுகள் இருந்தும் இல்லாத வகளாய் ஒதுங்கி நிற்கிறார்கள். விநோதம்தான். வேறு வழியின்றி அன்னபூரணியின் அன்புக்குக் கட்டுப்பட்டாய் அடைத்தோசையைச் சாப்பிடச் சம்மதித்தாள். அன்னபூரணி குழந்தைக்கு ஊட்டிவிட. அவனும் பார்க் கில் ஆடியதை ஏதோ கதை மாதிரி சொல்லிக் கொண்டு சாப்பிட்டான்.

    அவர்களுடன் கொஞ்ச நேரம் பொழுதைக் கழித்து விட்டுக் குழந்தையுடன் மாடியேறினாள்.

    குதித்து விளையாடிய அலுப்பில் நவீனும் சீக்கிரம் தூங்ககிவிட துவைத்து வைத்திருந்த துணிகளை இஸ்திரி போட்டு எடுத்து வைத்தாள்.

    மறுநாள் எடுக்க வேண்டிய பாடத்திற்கான குறிப்பு களை எழுதி வைத்துவிட்டு. பின் உறங்கச் சென்றாள்.

    மறுநாள் வேலைக்குப் புறப்பட்டவள், அன்னபூரணி யிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு...

    அம்மா... இன்னிக்கு நான் வரத் தாமதமாகும்... பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுக்க வேண்டும்... என்றாள் அன்னபூரணியிடம்.

    சரிம்மா... நவீனைப் பற்றி கவலையே வேண்டாம். என்கிட்டே அவன் சமர்த்தா இருப்பான். அவன் தங்க மான குழந்தை... நீபாட்டுக்கு உன் வேலையைப் பார்த்து விட்டு வாம்மா... என்று கூறி அவளை அனுப்பி வைத் தார் அன்னபூரணி. 

    தொடர்ந்து வகுப்பில் பாடம் எடுத்ததாலும். கூடுத லாய் ஸ்பெஷல் கிளாஸ் இருந்ததாலும் உடம்பு துவண்டு போனது. அதனால் உள்ளத்திலும் சோர்வு வேறு.

    எப்போது வீட்டுக்குப் போய் ஒய்வெடுப்போம் என்று இருந்தது அவளுக்கு. 

    அன்றாடம் ஒரு பாடம் என்பதால்... பத்தாம் வகுப் புக்கான மூன்று செக்ஷனுக்கும் மூன்று ஆசிரியர்கள் மட்டுமே பாடம் எடுக்க வேண்டியிருந்ததால்... மற்ற வர்கள் வீட்டிற்குச் சென்று விட்டனர்.

    இந்துஜா... செல்வராணி... முரளி மூவரும் பாடம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

    வகுப்பு முடிந்ததும் தனது தோள்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் இந்துஜா.

    அவர்கள் பின்னால் வந்த முரளி, இந்து. ஒரு நிமிஷம்! என்று அழைத்ததும் தயங்கி நின்றாள் அவள்.

    என்ன முடிவு எடுத்தே... இந்து... என்று கேட்டான்.

    அதைத்தான் சொல்லி விட்டேனே முரளி. எனக்கு நவீன்தான் முக்கியம். அவனைப் பிரிய மாட்டேன். இனிமே இதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம்... ப்ளீஸ்... முரளி... என்றாள் உறுதியான குரலில்.

    அவளைக் கூர்ந்து நோக்கிய முரளி... நீ தப்பு செய்யறே இந்து... உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்கப் பார்க்கிறே. இதுக்காக... இந்த முடிவுக்காக நீ பின்னால் வருத்தப்படுவே பார். ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்தும் கெடுத்துக் கொண்டேனேன்னு. நிச்சயம் ஏங்கத்தான் போறே... என்றான் எரிச்சலுடன்.

    நெவர்... என் நவீனுக்காக நான் எடுத்த இந்த முடிவு சரியானதுதான் என்று நன்றாக எனக்குத் தெரிகிறது. இதில் எந்த வருத்தமும் எனக்கு இல்லை. அது வரவே வராது முரளி... உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய என் வாழ்த்துக்கள்... என்றாள் அழுத்தத்துடன்.

    இந்தப் பிடிவாதத்தினால் நஷ்டப்படப் போவது நீதான் இந்துஜா... குட்பை ! என்றவன் "விர்ரென்று கோபத் துடன் சென்றான்.

    அவளுக்குக் கோபமும் ஆத்திரமும் அடங்கக் கொஞ்ச நோம் பிடித்தது.

    உள்ளம் பதறியது. நவீனை விட்டு வர வேண்டுமா.

    Enjoying the preview?
    Page 1 of 1