Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thisai Maariya Paravaigal
Thisai Maariya Paravaigal
Thisai Maariya Paravaigal
Ebook64 pages20 minutes

Thisai Maariya Paravaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"கற்பகம் என்ற பெண்ணிற்கு ஆண்குழந்தை பிறந்தது. ரெஹனா என்ற பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்தது. ரெஹனாவின் தாயார் தனது மருமகன் கூறிய வார்த்தை நினைவுக்குவர குழந்தைகளை மாற்றிவிடுகின்றன. மருமகன் கூறிய வார்த்தை என்ன? இதனால் திசை மாறிய குழந்தைகளின் நிலை என்ன வாசிக்கலாமா..."

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580104906098
Thisai Maariya Paravaigal

Read more from Arunaa Nandhini

Related authors

Related to Thisai Maariya Paravaigal

Related ebooks

Reviews for Thisai Maariya Paravaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thisai Maariya Paravaigal - Arunaa Nandhini

    https://www.pustaka.co.in

    திசை மாறிய பறவைகள்

    Thisai Maariya Paravaigal

    Author:

    அருணா நந்தினி

    Arunaa Nandhini

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். இது எல்லோருக்கும் பொருந்தும். நிகழும் போது சாதாரணமாக நிகழும் நிகழ்வுகள். பின்னாளில் யோசித்துப் பார்க்கும் போது பிரம்மாண்டமாக இருக்கும். மண்புழுவாய்த் துவங்கும் பல சமயங்கள் மலைப் பாம்பாய் வளர்ந்து விடுவதும் உண்டு.

    எப்போதும் நாளைகளை மனதில் வைத்தே இன்று செயல்பட முடியாது தான். ஆனால் நிகழ்காலத்தில் சாதாரணமாக நாம் செய்யும் ஒரு செயல். பின்னாளில் பெரும் சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும்.

    பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் அப்படி ஒரு சம்பவத்தை எடுத்துக் கொண்டு. ஒரு கனமான உணர்ச்சிப் போராட்டத்தை முன் வைத்துள்ளார். அருணா நந்தினி!

    ஒரு விபரீதமான கதைக் கருவை எடுத்துக் கொண்டு. அதை என்ன செய்வது என்று தெரியாமல் சில இடங்களில் கதாசிரியர் தவித்து இருந்தாலும். அந்த தவிப்பை அப்படியே படிப்பவர்கள் மீது வெற்றிகரமாக ஏற்றி விடுகிறார். அருணா நந்தினி!

    புக் ஷெல்ஃபிலிருந்து பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டிருந்த மீனா. தாயின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

    இந்தாம்மா... டிபன் பாக்ஸ். எடுத்து வச்சுக்கோ. அன்னிக்கு மறந்தது மாதிரி வச்சிட்டுப் போயிடாதே! கான்டீன்ல கூட நீ சாப்பிடறதில்லை... முட்டை... ஆம்லெட்டெல்லாம் செய்யறாங்கறே... இன்னிக்கு வியாழக்கிழமை வேறே... ஆமாம்... தலைக்குக் குளிச்சே தானே... கற்பகம் நினைவூட்ட.

    நல்லவேளம்மா... நினைவுபடுத்தினே... இன்னிக்கு ராகவேந்திர மடத்திற்குப் போகணும்... ஏதோ ஞாபகத்தில் செல்விகிட்டே ஷாப்பிங் போகலாம்னு சொல்லிட்டேன். இன்னிக்கு ஷாப்பிங் கான்ஸல்" என்றாள் மகள்.

    மீனா ராகவேந்தரின் பரம பக்தை! வியாழன் தப்பாமல் விரதம்! நூற்றியெட்டு முறை ஸ்ரீ பூஜ்யாய ராகவேந்திராய சத்யதர்ம ரதாயச; பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காம தேனவே என்று ஜெபித்து விட்டு தான் திரும்புவாள்.

    மறந்துட்டேன்கிறே... அப்போ தலைக்கு குளிக்கலை?

    ஷாம்ப்பூ பாத் எடுத்துக் கொண்டேன்மா... இதோ பார் ஈரம்...

    மகளைப் பெருமிதத்துடன் பார்த்தாள் கற்பகம்.

    சின்ன வயதில் தெய்வபக்தி இருப்பது அபூர்வம்... அது இவளுக்கு இருக்கிறது...

    இந்த காலத்துப் பெண்கள் எங்கே பக்தியோடு கோவில் குளம் செல்கிறார்கள்? அவர்களுக்கு டி. வி... சினிமா... அதில் வரும் நடிகைகளின் அலங்காரம்... உடுத்தும் உடை... இனதப் பற்றித்தானே அரட்டை அடிப்பது வழக்கம்...

    மீனா அப்படியில்லை... இந்த விஷயத்தில் என்னைக் கொண்டிருக்கிறாள்!

    நானும் இப்படித்தானே வெகு சிரத்தையாய் விரதம் இருந்து. வெள்ளிக்கிழமை தப்பாமல் கோவிலுக்குச் சென்று... நெய்விளக்கு ஏற்றி... எப்போதும் விநாயகர் அகவல்... கந்த சஷ்டிக் கவசம்... அபிராமி அந்தாதி... லிங்காஷ்டகம் என்று ஏதாவது ஒரு சுலோகத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1