Endhan Uyirallavo Kanmani...
5/5
()
About this ebook
Read more from Arunaa Nandhini
Poomanamey Thazh Thiravai Rating: 5 out of 5 stars5/5Kaadhal Nilavey! Rating: 5 out of 5 stars5/5Kavitha Oru Kavidhai Rating: 5 out of 5 stars5/5En Uyiril Kalantha Uyire Rating: 5 out of 5 stars5/5Malarey Ennidam Mayangathey Rating: 4 out of 5 stars4/5Nalai Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Ninaikka Therindha Manamey! Rating: 3 out of 5 stars3/5Kanniley Anbirunthal Rating: 4 out of 5 stars4/5Mannikka Mattaya? Rating: 4 out of 5 stars4/5Partha Mudhal Naaley Rating: 4 out of 5 stars4/5Ithayathil Nee Rating: 2 out of 5 stars2/5Endhan Uyirallavo Kanmani... Rating: 5 out of 5 stars5/5Sonna Sollai Marandhidalamo… Rating: 4 out of 5 stars4/5Endhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Veesum Thendraley Veesu Rating: 5 out of 5 stars5/5En Vasam Naanillai Rating: 3 out of 5 stars3/5Neeyedhaan En Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsSonthamadi Nee Enakku! Rating: 4 out of 5 stars4/5Radha Kaadhal Varatha Rating: 4 out of 5 stars4/5Vaarayo Vennilave! Rating: 5 out of 5 stars5/5Sollathaan Ninaikiren Rating: 5 out of 5 stars5/5
Related to Endhan Uyirallavo Kanmani...
Related ebooks
Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Vasanthame Varuga Rating: 5 out of 5 stars5/5Kandharva Veenaigal Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Mazhaithuligal Rating: 3 out of 5 stars3/5Puthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Yaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Guna Thaanam! Rating: 0 out of 5 stars0 ratingsOsaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Thirumagal Thedi Vandhaal… Rating: 5 out of 5 stars5/5Oru Poo Uthirum Rating: 5 out of 5 stars5/5Arunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsVelli Kanavu Rating: 5 out of 5 stars5/5Mangai Enthan Nenjukkul! Rating: 0 out of 5 stars0 ratingsNee En Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsEnnalum Un Pon Vaanam Naan... Rating: 5 out of 5 stars5/5Ragasiya Raagamondru… Rating: 5 out of 5 stars5/5Manathai Varudiya Mayilirake...! Rating: 5 out of 5 stars5/5Ippadiyum Ivargal Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Koovum Solai! Rating: 0 out of 5 stars0 ratingsThanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Paattu Kalanthidavey Part 3 Rating: 5 out of 5 stars5/5Sollathaan Ninaikiren Rating: 5 out of 5 stars5/5Nee En Nila Rating: 0 out of 5 stars0 ratingsKanavil Vandha Kavithai! Rating: 0 out of 5 stars0 ratingsMangai Necklace Rating: 5 out of 5 stars5/5Thisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsDinam Dinam Valarpirai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Endhan Uyirallavo Kanmani...
1 rating0 reviews
Book preview
Endhan Uyirallavo Kanmani... - Arunaa Nandhini
http://www.pustaka.co.in
எந்தன் உயிரல்லவோ கண்மணி!
Endhan Uyirallavo Kanmani!
Author:
அருணா நந்தினி
Arunaa Nandhini
For more books
http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
கல்லூரி மணி அடித்ததும் வண்ணத்துப் பூச்சிகளாய் மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளிவந்தனர். அனைவரது முகத்திலும் மலர்ச்சி. அப்பாடா… அன்றைய வகுப்பு எல்லாம் ஒரு வழியாய் முடிந்துவிட்டது. இனி வீட்டுக்குப் பறக்கலாம்…
சிறகுகள் இல்லாத குறையாய் பரபரத்தனர்….
சௌம்யா தன் தோழிகளை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.
அனைவரும் ஒரே வகுப்புதான்.. ஆனால் சௌம்யா தான் கடைசி வகுப்புக்கு ‘டிமிக்கி’ தந்துவிட்டாள்… அதற்குக் காரணமும் இருந்தது.
மறுநாள் அவளது அண்ணன் பிரதாப் அமெரிக்காவிலிருந்து வருகிறான்.
அவனை வரவேற்க வேண்டாமா…. அதுதான் நாளைக்கு விடுப்பு… நாளைக்கு மட்டுமா…. கூட இரண்டு நாட்கள்.
அருமை அண்ணன்.. அதுவும் அன்பைப் பொழியும் அண்ணன்… இத்தனை நாள் கழித்து வந்திருக்கிறான். அவனுடன் ஜாலியாய் பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற துடிப்பு….
கூடவே அவனுடைய வருங்கால மனைவியைப் பற்றிப் பேசி முடிவு எடுக்க வேண்டும். அந்தப் பெரும் பொறுப்பு அவளுடையதாயிற்றே…
‘செய்வனத் திருந்தச் செய்’ என்பது போல…. அவசரப்படாமல் ஆர…அமர… இருந்து முடிவு எடுக்க வேண்டும்… என்ன… மூன்று நாட்களில் பாடங்கள் போய்விடும்… பரவாயில்லை… தோழிகள் இருக்கிறார்கள்… சமாளித்து விடலாம்…
அண்ணாவுக்கு அப்புறம்தான் எல்லாமே…. குல்மொஹர் மரத்தின் அசைவில் காற்று இனிமையாக வீச… நெற்றியில் விளையாடிய முடிக்கற்றைகளை ஒதுக்கிய வண்ணம் கண்களை அலையவிட்டாள்.
அதோ தோழிகள்… ஊகூம்… உயிர்த்தோழிகள்!
கவிதா!
ஹேமா!
மதுரா…!
இதில் யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ…. என் அருமை அண்ணன் பிரதாப் சந்திரன் மனைவியாக.. என் அன்பு அண்ணியாக வர….
நிச்சயம் மதுராவிற்கு இல்லை…. அவளது வீட்டு நிலைமை அப்படி.. ம்ம்… அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை… பெருமூச்சு விட்டாள் சௌம்யா.
அருகில் வந்ததும் கவிதா கேட்டாள்.
ஏண்டி…. கடைசி வகுப்புக்கு வராமல் போனே…. அப்படி என்ன தலை போற ‘மேட்டர்.
நாளைக்கு என் அண்ணா அமெரிக்காவிலிருந்து வருகிறான்… தெரியும் இல்லே…
சரி… அதுக்கு… எங்கேயோ அமர்ந்து தோரணம் கட்டிக் கொண்டு இருந்தாயா…. இல்லே…. ஏதாவது நந்தவனத்தில்… மலர்களைப் பறித்து மாலை தொடுத்துக் கொண்டிருந்தாயா…
கிண்டலாய் கேட்டாள் ஹேமா.
நிறுத்துடீ… உன் ‘டயலாக்’கை…. நாளைக்கு நான் காலேஜ்க்கு வரமாட்டேன்…
ஏன்… சிவப்புக் கம்பளம் விரித்து… வெண்கொற்றக்குடை விரித்து… ‘ராஜாதி ராஜா…. ராஜமார்த்தாண்டன்னு ‘பராக்’ சொல்றதுக்காகவா…
இது கவிதாவின் கேலிப் பேச்சு.
சொன்னாலும் தப்பில்லைடீ…. என் அண்ணா எங்க வீட்டின் ‘பிரின்ஸ்’… மகாராஜாதான்… தெரிந்து கொள்….
சௌம்யா கர்வத்துடன் சொல்ல….
ஓகோ….. பிரின்ஸ் சார்மிங்காக்கும்… இளவரசி எங்கே… தயாரா…
ஏய் சும்மா இருங்கடீ…. அவள் சந்தோஷமா விஷயத்தை சொல்ல வந்தா…. அதைக் கேட்காமல்… நீ சொல்லு சௌம்யா…
மதுரா தோழிக்கு பரிந்து வந்தாள்.
என்னடீ….. அவளோட அண்ணனுக்கு தூண்டில் போடலாம்னு சிபாரிசுக்கு வருகிறாயா… இருக்கும்… இருக்கும். அவளோட அண்ணன் மன்மதனாமே…. ‘டிரை’ பண்ணு மதுரா….
கவிதா பரிகாசம் செய்ய….
முகம் கன்றிப் போனது மதுராவிற்கு.
சே…. என்னபேச்சு இது… அதுவும் என்கிட்டே…
என்றாள் மனத்தாங்கலாய்…
சாரிடீ…. இவளே… ஏதோ ஒரு தமாஷுக்கு சொன்னேன் ‘சீரியஸா’ எடுத்துக்காதேடீ…
ஏண்டீ…. அவளுக்குத்தான் நிச்சயம் ஆகியிருக்கிறதே… மாமா பிள்ளை தான் மாப்பிள்ளைன்னு…. அவளிடம் பேசுகிற பேச்சா இது…. உங்களைச் சொன்னாலும் பொருந்தும்…
சௌம்யா குறும்பாய் சொன்னாள்.
யாரு… நாங்களா… நெவர்… உன் கண்களுக்கு உன் அண்ணா அழகு சுந்தரமா தெரிந்தால்… எல்லோருக்கும் அப்படித்தான்னு நினைப்பாக்கும்… உன் பீத்தல் எனக்குத் தெரியாதாடீ…. சௌமி…. ஆகா… ஓகோன்னு சொல்வே…. அங்கே பார்த்தா… தோலுரித்த கோழி மாதிரி… ஆள் சொங்கியாத் தெரிவான்…. அய்யோ…. உன் அண்ணனைச் சொல்லலைடீ… முறைக்காதே….
கரெக்டா சொன்னே கவிதா… ஏதோ ஒரு புதுக்கதாநாயகன் அறிமுகமாயிருக்கிறான்… சூப்பர் பர்சனாலிட்டி… இனிமே அவன்தான் எல்லாப் பெண்களுக்கும் கனவு நாயகன்னு சொன்னாளேன்னு ஒரு புதுப்படத்துக்குப் போய் பார்த்தோமே… ஞாபகம் இருக்கா… பார்த்தா அம்மாஞ்சி மாதிரி இருந்தான்…. ஒரு கம்பீரம் வேண்டாம் பார்த்ததும் சுண்டி இழுக்கற மாதிரி வசீகரம் வேண்டாம்…
அய்யே… நான் விமர்சனத்தைப் படித்துவிட்டு உங்களுக்கு சொன்னேன்… எனக்கு என்ன தெரியும்…. அவன் அப்படி இருப்பான்னு…
ஆங்… அதுமாதிரித் தான் உங்கண்ணா கதையும்… அமெரிக்காவில் இருந்திருக்கிறார்… குண்டாகி இருக்கலாம்…. தொப்பை போட்டிருக்கலாம்…. கன்னம் இரண்டும் ‘பன்’ மாதிரி வீங்கியிருக்கலாம்… டபுள் ‘சின்’ கூட வந்திருக்கலாம்…. யாருக்குத் தெரியும்… பார்க்காமல் ‘பிரின்ஸ்’ அது இதுன்னு சொல்லாதே சௌமி…
எதுக்கு இந்த வீண்பேச்சு…. விடுங்களேன்…. அப்போ… நாளைக்கு நீ வரமாட்டாயா சௌமி….
என்று பேச்சை மாற்றினாள் மதுரா…
நாளைக்கு மட்டுமல்ல… அதற்கு அடுத்த இரண்டு நாளும்… தான் பிரின்ஸியிடம் போய் அனுமதியும் வாங்கியாச்சு. அதுக்கு தான் கடைசி வகுப்புக்கு வரவில்லை…
சரிடீ… நான் புறப்படுகிறேன்…. லேட்டானா… பாட்டி திட்டுவாங்க…வரட்டுமா.
என்று புறப்பட்டாள் மதுரா.
அவள் சென்ற பத்து நிமிடங்களில் சௌம்யாவை அழைத்துச் செல்ல கார் வந்தது.
தோழிகள் மூவரும் ஏறிக் கொள்ள கார் புறப்பட்டது.
பறங்கிப் பழமாய் சிவந்து போய் வந்திருக்கும் அண்ணனைப் பிரமிப்புடன் பார்த்தாள் சௌம்யா…
என்ன அழகாய் இருக்கிறான்… இந்திப் படத்தில் வரும் கதாநாயகன் மாதிரி….
ஏதோ தோழிகள் கிண்டலாய் சொன்னார்களே… அவர்களுக்கு என் அண்ணாவைக் காட்டணும்…. அவர்களது மலைப்பை ரசிக்க வேண்டும்…. அதை எண்ணி உள்ளூர சிரித்துக் கொண்டாள் அவள்.
எப்படா தனிமையில் அண்ணனிடம் பேசுவோம் என்று தவித்தாள்.
அத்தையும் அப்பாவும் மாறி மாறி பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துச் சலிப்பு வந்தது.
ஒருவழியாய் இரவு உணவு முடிந்ததும் அண்ணனும் தங்கையும் உரையாடினார்கள்.
என்ன சௌமி.. உன் படிப்பு எப்படிப் போகிறது… நன்றாகப் படிக்கிறாய் தானே… குட்…
தங்கையின் கேசத்தை கோதியவாறு கேட்டான் பிரதாப்.
சரி, அண்ணா…. உன் விஷயம் என்ன… அடுத்தது கல்யாணம் தானே…. பெண் பார்க்கத் தயாரா…
விழித்தான் அவன்.
கல்யாணமா… அதற்குள்ளா… அய்யோ…
ஏன்… கல்யாணமே வேண்டாமா… அது முடியாது… உனக்கு மனைவியா… என் அண்ணியா வரப்போகும் ஒருத்தி… என் தோழியாக இருப்பான்னு அன்னிக்கே உறுதியா சொல்லியிருந்தேன்…. மறந்து விட்டாயாக்கும்…
அடடா…. அப்படி ஒரு எண்ணம் உனக்கு இருக்கிறதா… சாரி சௌமி…. எதுக்கு இந்த விஷப்பரிட்சை… என்னை விட்டு விடேன்…
பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான் பிரதாப் சந்திரன்.
என் அருமை அண்ணா… நான் சொன்னது சொன்னது தான்… அதில் மாற்றமே இல்லை… என் முடிவுக்கு நீ ஒப்புக் கொண்டேயாகணும்… நீ எனக்கு ‘பிராமிஸ்’ பண்ணியிருக்கிறாய்… தெரியுமா…
அண்ணனை மிரட்டினாள் தங்கை.
நானா…. ‘பிராமிஸ்’ பண்ணினேனா… எப்போடா…
அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டுக் கேட்டான்.
ஓகோ! இரண்டு வருட அமெரிக்க வாசத்தில் அய்யாவுக்கு எல்லாமே மறந்துவிட்டதோ…. இல்லை… இப்படி ஒன்றும் தெரியாத மாதிரி பாசாங்கு செய்வது மேல் நாட்டு நாகரீகமா…
குத்தலாய் சௌம்யா கேட்க…. சிரித்தான் அவன்.
நீண்ட நாளைக்குப் பிறகு இப்படி அன்புத் தங்கையுடன் வாதம் புரிவதை ரசித்தான்.
சௌம்யாவும் தன் முடிவில் உறுதியாக இருந்தாள்.
பின்னே…. பிரதாப் அமெரிக்காவிற்கு செல்லும் முன் எடுத்த முடிவாயிற்றே… இரண்டு வருட தொழிற்பயிற்சியை முடித்து இந்தியா திரும்பியதும்… அதற்காகவே காத்திருந்தது போல… தன் தோழிகளை அண்ணனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள்.
அவளது இரு தோழிகளில் ஒருத்திதான் தனக்கு அண்ணி. அது யார் என்று ‘செலக்ட்’ செய்தால் போதும் என்று தீர்மானமாய் சொல்ல வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தவள் இப்போது அதை நழுவ விடுவாளா என்ன…
அதுவும் தானாக எடுத்த முடிவல்ல…. பிரதாப் தான் அதற்கு பிள்ளையார் சுழி போட்டது.
அமெரிக்கா புறப்படும் முன் பிரதாப் தங்கையிடம் சொன்னான்.
சௌமி…. உன் வருங்காலக் கணவனை நான்தான் தேர்ந்தெடுப்பேன்… எடுப்பேன் என்ன…. எடுத்தேவிட்டேன்… யார் தெரியுமா… நம் அரவிந்த் தான்…
யாருண்ணா…. ‘ரோஜா’ ஹீரோ அரவிந்த்சாமியா…. அடடா… அவருக்கு திருமணமாகிவிட்டதே…
குறும்புடன் அவள் சொல்ல…
ஏய்… வாயாடி…. தெரியாத மாதிரி நடிக்காதே… என் ஃப்ரெண்ட் அரவிந்த்… என்ன பார்க்கறே சௌமி… ஆள் அழகா இருக்கான்… நல்ல எதிர்காலம்… ‘ஸ்டேட்ஸ்’லிருந்து வரட்டும்… பார்…. எப்படி சம்பாதிக்கிறான் என்று… என்ன… சௌமி… உனக்கு ஓகேதானே…!
என்றான் அவன்.
கிளுகிளுப்புடன் நினைத்தாள் சௌம்யா… என் மனம் கவர்ந்தவனை மணக்க கசக்குமா என்ன….
அரவிந்த் பிரதாப்பின் உயிர்த்தோழன்….
இருவரும் ஒன்றாகவே படித்தவர்கள்…
இருவரும் சேர்ந்தே அமெரிக்கா சென்றார்கள். ஆனால் அரவிந்த் வருவது இரண்டு மாதங்களுக்குத் தள்ளிப்போய் விட்டது.
அண்ணனின் நண்பனாக வந்தவனுக்கு தன் இதயத்தில் இடம் தந்துவிட்டாள் தங்கை. தன் காதலை அண்ணனுக்குத் தெரியாமல் பொத்தி வைத்தவளுக்கு அண்ணனே பச்சைக் கொடிக் காட்டியதும் திகைப்பு…. மகிழ்ச்சியும் கூட….
எப்படி இதை அண்ணனிடம் சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தவளுக்கு… பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல இருந்தது.
அரவிந்தனின் கலகலப்பான சுபாவமும்…. எதையும் நிதானமாய் யோசித்து செயல்படும் விதமும்…. இன்னும் அவனுடைய வினயம்…. அறிவு…. திறமை…. லட்சியநோக்கு எல்லாமே அவளை ஈர்த்தன… அவனது கன்னத்தில் சுழித்து விழுந்த அழகான ‘டிம்ப்பிள்’… அதை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று ஆசைதான்.
அவன் கன்னம் குழிய சிரிக்கும் போது… ஆகா…. என்ன அழகு!
தன் உள்ளத்தைக் கொள்கை கொண்டவனையே தனக்கு மணாளனாய் தேர்ந்திருக்கிறான் தன் அண்ணன்… இதுவல்லவோ அதிர்ஷ்டம்… இதயம் துள்ளியது… இருந்தும்… அண்ணனிடம் கொஞ்சம் ‘பிகு’ செய்து கொண்டாள்.
உன் கண்ணுக்கு உன் ஃப்ரெண்ட் அழகாகத் தெரியலாம். ஆனால் அவரை எனக்குப் பிடித்திருக்க வேண்டுமேண்ணா….
தன் கூந்தலின் நுனியைப் பின்னிக் கொண்டே… அவனைப் பார்க்காமல் சொன்னாள்….
"சரி விட்டுத்தள்ளு சௌமி…. வேறு ஒருத்தன்