Ninaikka Therindha Manamey!
3/5
()
About this ebook
Read more from Arunaa Nandhini
Kavitha Oru Kavidhai Rating: 5 out of 5 stars5/5Malarey Ennidam Mayangathey Rating: 4 out of 5 stars4/5Kaadhal Nilavey! Rating: 5 out of 5 stars5/5En Uyiril Kalantha Uyire Rating: 5 out of 5 stars5/5Nalai Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Poomanamey Thazh Thiravai Rating: 5 out of 5 stars5/5Mannikka Mattaya? Rating: 4 out of 5 stars4/5En Vasam Naanillai Rating: 3 out of 5 stars3/5Ithayathil Nee Rating: 2 out of 5 stars2/5Endhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Sonna Sollai Marandhidalamo… Rating: 4 out of 5 stars4/5Partha Mudhal Naaley Rating: 4 out of 5 stars4/5Kanniley Anbirunthal Rating: 4 out of 5 stars4/5Neeyedhaan En Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsSonthamadi Nee Enakku! Rating: 4 out of 5 stars4/5Veesum Thendraley Veesu Rating: 5 out of 5 stars5/5Endhan Uyirallavo Kanmani... Rating: 5 out of 5 stars5/5Thisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsRadha Kaadhal Varatha Rating: 4 out of 5 stars4/5Sollathaan Ninaikiren Rating: 5 out of 5 stars5/5
Related to Ninaikka Therindha Manamey!
Related ebooks
Uyir Thotta Urave! Rating: 2 out of 5 stars2/5Endhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Poomanamey Thazh Thiravai Rating: 5 out of 5 stars5/5Kanavugal Manathiley Malaruthey... Rating: 5 out of 5 stars5/5Manjal Veyil Maalai Nee Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Uyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 2 Rating: 5 out of 5 stars5/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsInbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Devathai Nee Ena Kandean! Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Mattaya? Rating: 4 out of 5 stars4/5Thoduvaanam Rating: 3 out of 5 stars3/5Veesum Thendraley Veesu Rating: 5 out of 5 stars5/5En Ullam Kavarndha Devadhai Rating: 5 out of 5 stars5/5Poo Malarntha Pothu...! Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Manakadhavai Thiranthu Vidu Rating: 5 out of 5 stars5/5Unakkena Thavamirunthen Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnai Neenga Maatten! Rating: 5 out of 5 stars5/5Swasamai Kalandhavale! Rating: 4 out of 5 stars4/5Mullai Panthal Rating: 5 out of 5 stars5/5Devathai Vamsam Neeyo! Rating: 1 out of 5 stars1/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Idhayam Theetiya Oviyame! Rating: 4 out of 5 stars4/5Parvai Ondre Podhume! Rating: 0 out of 5 stars0 ratingsSagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagavey Naan Rating: 2 out of 5 stars2/5Nenjil Unthan Ninaive Rating: 1 out of 5 stars1/5
Reviews for Ninaikka Therindha Manamey!
2 ratings0 reviews
Book preview
Ninaikka Therindha Manamey! - Arunaa Nandhini
http://www.pustaka.co.in
நினைக்கத் தெரிந்த மனமே!
Ninaikka Therindha Manamey!
Author:
அருணா நந்தினி
Aruna Nandhini
For more books
http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
நினைக்கத் தெரிந்த மனமே!
1
மார்கழி மாதக் குளிரில் பெங்களுர் நகரம், இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆழ்ந்த துயிலில் இருந்தது. வித்யாவின் மேனி சிலிர்த்தது. சாம்பிராணிப் புகை மூட்டம் போல எங்கும் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது.
பனிப்படலத்தில் 'மினுக்’கிய சோடியம் விளக்குகள், ஆலயத்தில் ஏற்றிவைத்த அகல்விளக்கு களாய் சுடர்விட்டன.
இதமான குளிர், உடலை மென்மையாய் வருடியது சுகமாக இருந்தது.
லண்டனில் இருந்தவளுக்கு இந்த குளிர் ஒன்றுமில்லை தான். அங்கு பனி, மழையாக அல்லவா பொழியும்! பாறையாய் அல்லவா உறையும்!
நகரின் இதயப் பகுதியில் இருந்த அந்த நட்சத்திர ஒட்டலின் மூன்றாவது தளத்தில் இருந்து பார்த்தபோது வெளிப்புறக் காட்சி, மனதுக்கும் கண்களுக்கும் வெகு ரம்மியமாக இருந்தது. எங்கோ ஒரு கோவிலில் சுப்ரபாதம்! சுப்புலட்சுமியின் தேன் குரல் குழைந்து, பக்தர்களை ஈர்த்தது.
'இந்த பெங்களுர் அவளுக்கு புதிதல்ல. பழகிய ஊர்தான். நான்கு ஆண்டு கழித்து... எத்தனை மாற்றங்கள்!’
கட்டிடங்கள் பூதங்களாய் எழும்பி நின்று பயமுறுத்துகின்றன... எங்கும் மனிதத் தலைகள்... பசுமைகூட கொஞ்சம் குறைந்துவிட்டது போல தோற்றம்... வாகனங்கள் பெருகி, இரைச்சல், சுற்றுச்சூழலில் மாசு பெருகிவிட்டதே!’ பெருமூச்சு விட்டாள்.
உலகமே மாறிக்கொண்டு வருகையில் இந்த நகரமும் மாறிப்போனதில் வியப்பு என்ன..? திரைச்சீலையை விலக்கிக் கொண்டு, கூடுதலாய் குளிர்காற்று உள்ளே நுழைய... அந்தப் பனிக்காற்றின் இதத்தில் மெய்மறந்தாள், வித்யா.
'மாற்றங்கள் சுற்றுப்புறத்தில் மட்டுமா? வாழ்விலும்தான். ஏன், என் வாழ்க்கையிலும்தான்! ஆனால், மனம்...?’ அந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் மனசுக்குள் அவள் தவித்தாள்.
இரவு - படுத்தவுடன் உறங்கிப் போனான், கவுதம்.
வித்யா, தன் பார்வையைத் திருப்பினாள். கட்டிலில் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த கணவனை ஆழமாகப் பார்த்தாள். அவனது உறக்கத்தை நினைத்துப் பொறாமைப் பட்டாள்.
தூக்கமும் வரப்பிரசாதம்தான். அதிலும் கவலையை மறந்த தூக்கம், பெரிய பாக்கியம்! படுத்தவுடன் அவளுக்கு உறக்கம் வந்ததில்லை. புரண்டு படுத்து, எதையாவது நினைத்து தூக்கம் வராமல் தவிப்பது வழக்கம்.
தூக்கம், எப்படிப்பட்ட மனஇறுக்கத்தையும் தளர்த்தி விடுகிறது. கவுதம், இறுக்கம் தளர்ந்து, நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தான். தலைமுடி கலைந்து... நெற்றியின் மீது கேசம் புரள... சீரான மூச்சுடன் தூங்கும் கணவனை தொடர்ந்து சிலகணங்கள் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
ஆண்மையும், அழகுமாய் இருக்கும் கவுதமின் மனைவி என்ற நினைப்பே அவளுக்குப் பெருமைதான்.
இருந்தும்... மனசுக்குள் ஒரு உறுத்தல்!
'கவுதமை கணவன் என்று உறவு பாராட்ட எனக்கு என்ன உரிமை இருக்கிறது.. இன்னும் நான் நல்ல மனைவியாய் நடந்துகொள்ளவில்லையே?
'பாவம்.. இவரும்தான் பொறுமையுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்.. இவரைக் கணவனாக அடைய எந்தப் பெண்ணும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. ஆனால், நான் ஏன் இப்படி தொட்டாற்சிணுங்கியாய் சுருண்டு கொள்ளுகிறேன்...
'என் மனம் ஏன் பழசை நினைத்துத் தவிக்க வேண்டும்.. இன்னும் என் மனம் மாறவில்லையா... இல்லை! மனதில் பட்ட காயம் ஆறாப் புண்ணாக இருந்து தடுக்கிறதா?’
தடுமாறி நின்றாள், வித்யா. கணவன் அசைவது கண்டு பார்வையை விலக்கினாள். கணவனைப் பார்த்துக்கொண்டு இருந்ததை அவன் அறியக்கூடாதே என்ற பதைபதைப்பு.
காலையில் கண்விழித்த கவுதம், மனைவியைப் பார்த்தான். வணக்கம்
என்றான்.
பதிலுக்கு வணக்கம் சொன்னாள், வித்யா. குளிரில் கைகள் மரத்துப்போயிருந்தன. உள்ளங்கைகளைத் தேய்த்து, சூடேற்றி, கன்னத்தில் வைத்தாள்.
கல்யாணமாகி இரண்டு ஆண்டு முழுசாய் ஒடியும் ஏனோ இன்னும் அவனுடன் இயல்பாய் அவளால் உரையாட முடியவில்லை.
என்ன வித்யா.. குளிரா? நீதான் லண்டனில் இருந்தவள் ஆயிற்றே? அந்தக் குளிரைவிட இங்கு அதிகமா என்ன?
குளிர், எங்கிருந்தாலும் குளிர்தானே!
ஆமாம்... எங்கிருந்தாலும் குளிர் குளிர்தான்.. பெண் எங்கிருந்தாலும் பெண்தான்.. மாற்றம் ஏது?
சிரித்துக் கொண்டே எழுந்து, அமர்ந்தான், கவுதம்.
தொலைபேசியில் இரண்டு காபிக்கு 'ஆர்டர்’ கொடுத் தான். கட்டிலைவிட்டு இறங்கினான். குளியல் அறைக்குள் நுழைந்தான்.
இனி கவுதம் சோம்பலாய்ப் படுக்கமாட்டான். அது அவனுடைய சுபாவம். முழிப்பு வந்த பின்பு தூக்கம் கிடையாது.
அழைப்பு மணி ஓசை கேட்க, கதவைத் திறந்தாள். காபி வந்துவிட்டது.
முகத்தைக் கழுவி, துண்டால் துடைத்துக்கொண்டு வெளிவந்தான், கவுதம், தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த தேயிலை நீரையும், பாலையும் அளவுடன் கலந்து, கொஞ்சமாய் சர்க்கரையும் சேர்த்து வைத்தாள், வித்யா.
கணவனுக்கு எந்த விகிதத்தில் சேர்த்தால் பிடிக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருந்தாள். அவனுடைய விருப்பு - வெறுப்புகளை நன்கு புரிந்துகொண்டிருந்தாள்.
அவனுக்கு கோபம் வருவது அத்தி பூத்தாற்போலத்தான் பெண்மையைப் போற்றுபவன், பெண் இனத்தை மதிப்பவன் கவுதம். அதனால்தான் இத்தனை காலமும் அவளிடம் முகம் சுளிக்காமல் இனிமையாய்ப் பழகுகிறான்.
அவர்கள் இருவரையும் பார்ப்பவர்கள் மனம் ஒன்றிய, மயக்கும் ஜோடிப் புறாக்கள் என்றுதான் நினைப்பார்கள்... ஆனால், இருவருக்கும் இடையே நூல் இழை விரிசல் இருப்பதை யாரும் அறியமாட்டார்கள்.
இதோ... இப்பவும்தான், காபியை அவனது சுவைக்கு தக்கவாறு கலந்து தருவது, ஆசை மனைவி தன் அன்புக் கணவனைக் காதலுடன் கவனித்துக்கொள்வது போலத் தோன்றுகிறது.
ஆனால், அவர்களின் நடுவே இருக்கும் சிறு பள்ளம், தொடர் கதையாகி வரும் சங்கதி. அது அவளே ஏற்படுத்திக்கொண்டது.
விசாலமான நோக்கு... விட்டுக் கொடுக்கும் தன்மை.. எல்லாமே கவுதமிடம் இருந்தது. அதனால்தான் தன் மனைவியின் விருப்பத்துக்குத் தலையசைத்து, பெங்களுர் வந்திருப்பது! வேறொரு சராசரி ஆண்மகனாய் இருந்திருந்தால் நிச்சயம் மறுத்திருப்பான்... தன் வெறுப்பைக் காட்டி இருப்பான்.
தேனிலவைக் கொண்டாடவோ, இயற்கை அழகை ரசித்திடவோ அவர்கள் இங்கு வரவில்லை. இங்கிலாந்தில் இல்லாத இயற்கை அழகுமிக்க இடமா?
அப்படியானால் இவர்கள் ஏன் பெங்களுர் வந்தார்கள்?
இது, இதயத்தினுள் ஆழ்ந்து புதைந்து கிடக்கும், பழைய நினைவுக் குவியல்களின்