Thoduvaanam
3/5
()
About this ebook
தொடுவானம் தன் அத்தை மகனை காதலிக்கும் இளமதி தாயாரின் கட்டாயத்தினால் மளிகை கடைக்காரன் ஒருவனை மணக்க நேர்கிறது.
கடமைக்காக வாழ்ந்து இரு குழந்தைகளுக்கு தாய் ஆகிறாள்.
அவளது தங்கை சுவாதிக்கும் அதுபோல கட்டாய திருமணத்தை அவளது தாய் செய்து வைக்க நினைக்கும் போது அதை தடுக்க அவளைக் காதலித்த அத்தை மகனிடமே அவளது தங்கையை அழைத்துக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்ளும்படி யாசகம் கேட்கிறாள்.
வாழ்க்கை யாரையும் வஞ்சித்ததே இல்லை தொடுவானம் என்பதை தொட்டு விடும் தூரம் தான் என்பதை வலியுறுத்தும் கதை இது.
அவளது வேண்டுகோளுக்காக அவளது தங்கையை அழைத்துக்கொண்டு போய் திருமணம் செய்துகொள்ளும் அவளது அத்தை மகனின் மனது அவளது தந்கையின் வசம் திரும்புகிறது. தொடுவானமாக இளமதிக்கும் அவளது அத்தை மகனுக்கும் இருந்த வாழ்க்கை வசப்படுகிறது. இளமதி காலம் கடந்து தன் கணவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்
Read more from Muthulakshmi Raghavan
Puram Solla Virumbu Rating: 4 out of 5 stars4/5En Manathu Ondruthaan..! Rating: 4 out of 5 stars4/5Kandalum Pothum Kangal Rating: 5 out of 5 stars5/5Uzhavan Magal..! Rating: 5 out of 5 stars5/5Kothikkum Panithuli..! Rating: 4 out of 5 stars4/5Nilavodu Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsNee Engey... Rating: 5 out of 5 stars5/5Unnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5Markazhi Paniyil..! Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Maatham Kanavugal Pookkum Rating: 4 out of 5 stars4/5Sollathan Ninaikkirean Rating: 3 out of 5 stars3/5Manam Thiruda Vandhaya..? Rating: 5 out of 5 stars5/5Rhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Mounamana Neram... Rating: 4 out of 5 stars4/5Kuyil Paattu...! Rating: 5 out of 5 stars5/5Malai Nerathu Mayakkam... Rating: 0 out of 5 stars0 ratingsThanjamena Vanthavaley Rating: 1 out of 5 stars1/5Nenjathiley Nee Netru Vandhai Rating: 4 out of 5 stars4/5Mellisaiyaai Oru Kaadhal... Rating: 0 out of 5 stars0 ratingsMugil Maraitha Nilavu... Rating: 0 out of 5 stars0 ratingsPoove Mayangathey Rating: 4 out of 5 stars4/5Unmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsNila Veliyil Rating: 4 out of 5 stars4/5Kaatrodu Thoothu Vittean Rating: 4 out of 5 stars4/5Kalvanai Kaadhali Rating: 4 out of 5 stars4/5Nee Enthan Vennilavu Rating: 0 out of 5 stars0 ratingsMannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Nizhalodu Nizhalaga Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Poopoothathey Rating: 0 out of 5 stars0 ratingsNeethaney Enathu Nizhal... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thoduvaanam
Related ebooks
Nila Soru Rating: 0 out of 5 stars0 ratingsUyire Unaithedi Rating: 4 out of 5 stars4/5Iru Kannilum Un Gnabagam… Rating: 4 out of 5 stars4/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsRajanodu Rani Vanthu Serum! Rating: 4 out of 5 stars4/5Manjam Vantha Thendral Rating: 5 out of 5 stars5/5Ottraiyadi.. Paathaiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsNizhalodu Nizhalaga Rating: 0 out of 5 stars0 ratingsKanni Rasi Rating: 0 out of 5 stars0 ratingsMugil Maraitha Nilavu... Rating: 0 out of 5 stars0 ratingsUnnaivida Oru Urava..? Rating: 0 out of 5 stars0 ratingsMalai Nerathu Mayakkam... Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Poopoothathey Rating: 0 out of 5 stars0 ratingsNilavodu Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsMellisaiyaai Oru Kaadhal... Rating: 0 out of 5 stars0 ratingsUnmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsNenjathiley Nee Netru Vandhai Rating: 4 out of 5 stars4/5Arathanai Rating: 0 out of 5 stars0 ratingsMounamana Neram... Rating: 4 out of 5 stars4/5Markazhi Paniyil..! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagi Kasinthurugi... Rating: 0 out of 5 stars0 ratingsVandhal Mahalakshmiye... Rating: 2 out of 5 stars2/5Neerada Nathiyaa Illai? Rating: 0 out of 5 stars0 ratingsAgni Paravai... Rating: 0 out of 5 stars0 ratingsAnicha Malar...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Nee Enthan Vennilavu Rating: 0 out of 5 stars0 ratingsVanam Vasapadum... Rating: 4 out of 5 stars4/5Nila Veliyil Rating: 4 out of 5 stars4/5Manjal Veyil Maalai Neram... Rating: 4 out of 5 stars4/5
Reviews for Thoduvaanam
1 rating0 reviews
Book preview
Thoduvaanam - Muthulakshmi Raghavan
http://www.pustaka.co.in
தொடுவானம்
Thoduvaanam
Author:
முத்துலட்சுமி ராகவன்
Muthulakshmi Raghavan
For more books
https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
தொடுவான நிழலொன்றும்
தொட்டுவிடும் தூரமில்லை – அதை
எட்டி விரல் தொட்டு விட்டால்
என் மனதில் பாரமில்லை.
மெதுவாக திரும்பி பக்கவாட்டில் பார்த்தான் ராஜேந்திரன். சுவாதி மும்முரமாய் நோட் எழுதிக் கொண்டிருந்தாள். வட்டமான முகமும், நீள் வடிவக் கண்களும், செதுக்கிய நாசியும், காலையில் வாரிய தலை கலையாமலிருந்த போதும் ஒரு நீண்ட முடி மட்டும் விலகி அவள் கண்களை மறைக்க அதை ஒரு கையால் ஒதுக்கி விட்டுக் கொண்டே பாடத்தில் கவனமாயிருந்த அவளது பக்க வாட்டுத் தோற்றம் ஓர் ஓவியம் போலிருக்க ரசனையாக நோக்கினாள். வகுப்பு முடிய அனைவரும் கலைந்தனர். நோட்டுப் புத்தகங்களை அடுக்கி கைப்பையில் வைத்துக் கொண்ட சுவாதி எழுந்தாள். அவளுக்காக காத்துக் கொண்டு நின்றிருந்த மகேஸ்வரியின் புன்சிரிப்பைக் கவனித்தபடி சிரிக்காமல் உடன் நடந்தாள். இருபக்கமும் மரங்களடர்ந்த நீண்ட சிமெண்ட் பாதையில் நடந்தவர்களை ராஜேந்திரன் பின் தொடர்ந்தான். முகம் இறுகிப் போய் ஏதோ சிந்தனையுடன் நடந்த சுவாதியைப் பார்த்த மகேஸ்வரி 'களுக்'கென்று நகைத்தாள். சுவாதி முறைத்தாள்.
என்னடி சிரிப்பு.
கடைசி வகுப்பு ரொம்ப போர்டி சுவாதி. எனக்கானால் தூக்கம் தூக்கமா வருது. சாமியாடிக் கொண்டே உன்னைப் பார்த்தால் நீ அவ்வளவு இன்ட்ரெஸ்ட்டா நோட் எடுத்துக்கிட்டு கவனிச்சுக்கிட்டு இருக்கே. அறுவையை பொறுமையாய் கேட்கிற வித்தையை எங்கு கத்துக்கிட்ட? உனக்கு 'சக்கிப்புத் திலகம்'ன்னு பட்டம் கொடுக்கலாம்ன்னு நினைச்சேன். சிரிச்சேன்.
ச்சு. இப்படிப் பேசாதேன்னு எத்தனை ஆயிரம் முறை சொன்னாலும் திருந்தாத ஜென்மம்டி நீ. நாம் படிக்க வந்திருக்கிறோம் மகே. தூங்க இல்லை. நாம தூங்கினா யாருக்கு நஷ்டம்? நமக்குத்தான். நமக்கு பாடம் எடுக்கிறவங்களுக்கு இல்லை.
சரி சுவாதிப்பாட்டி.
உன்னை... உனக்கு எல்லாமே விளையாட்டுத் தாண்டி. உன்னை சொல்லிக் குற்றமில்லை. நீ வளரும் விதம் அப்படி. கவலை இல்லாத பிறவி. கொடுத்து வைத்தவள்.
உன்னை விடவா கொடுத்து வைத்திருக்கிறேன்... ஊரையே ஆளும் அகிலாண்டேஸ்வரியின் வாரிசு... உனக்கென்னடி கவலை வந்துவிட்டது?
இன்னொருமுறை அகிலாண்டேஸ்வரியின் வாரிசுன்னு சொல்லாதே. நான் அவங்க மகளில்லை...
அதனாலென்ன? நீ அகிலாண்டேஸ்வரியின் தங்கை ரெங்கநாயகியின் மகள்தான். ஆனால் உன் பெரியம்மா சின்ன வயதிலேயே விதவையாயிட்டாங்க. அவங்களுக்கு குழந்தையில்லை. அவங்களோட கை கொள்ளாத சொத்து அனைத்திற்கும் நீயும், உன் அக்காவும் தான் வாரிசுன்னு ஊருக்கேத் தெரியுமே.
ஊருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். தெரியாதது நிறைய இருக்கிறது.
என்னவோ போ... நீ போட்டு வரும் சுடிதார் ஒவ்வொன்றும் இரண்டாயிரத்திற்கு குறையாது. தினம் ஒரு மாடலில் செயின், வளையல்ன்னு போட்டு வருகிறாய். பாக்கெட் மணி ஆயிரக் கணக்கில் தருகிறார்கள். எனக்கு மட்டும் உன்னைப் போல் கணக்குப் பார்க்காத வீடு கிடைத்தால்...
மகேஸ்வரியை முடிக்க விடாமல் சுவாதி குறுக்கிட்டாள். அப்படி மட்டும் யாராவது என் இடத்தில் இருந்து கொண்டு என்னை வெளியேற்றி விட்டால் எவ்வளவு சந்தோஷப்படுவேன் தெரியுமா?
பதிலுக்கு உனக்குக் கிடைப்பது குடிசையாக இருந்தால்?
ஆனந்தமாய் அனுபவிப்பேன்
கண்கள் மலரச் சொன்னவளை விசித்திரமாய் பார்த்தாள் மகேஸ்வரி.
சுவாதி. இந்த சினிமாக்களில் வருவது போல் 'பணமே பிடிக்கவில்லை ஏழையாய் வாழ ஆசை'யென்பது போல் பித்தேதும் பிடித்து விடவில்லையே?
இல்லை மகே. உனக்குப் புரியாது. நீ நினைப்பது போல் கணக்குப் பார்க்காமல் எனக்கு இந்த உடை, நகை, பணமெல்லாம் கிடைத்து விடவில்லை. அதன் ஒவ்வொன்றின் பின்னாலும் கணக்கு இருக்கிறது. விலை கொடுத்துக் கொண்டு இருக்கிறேன்.
உன் சொந்தப் பெரியம்மாவிடம் விலை கொடுக்கிறாயா? என்ன விலை கொடுக்கிறாய்? அதையும்தான் சொல்லேன்.
என் தன்மானம்தான் நான் கொடுக்கும் விலை
என்று மனதில் கசந்த சுவாதி,
மகே. நான் இந்த கோர்ஸை ரொம்ப நம்பியிருக்கிறேன். இதை முடித்தால் வேலை நிச்சயம். டிகிரி முடித்தாலும் இந்த கோர்சை முடித்தால்தான் வேலை கிடைக்குமென்பதாலேயே இதில் சேர்ந்தேன். இதை நல்லபடி முடித்து உடனே வேலை கிடைத்து விட்டால் என் கஷ்டத்திற்கு விடிவு கிடைத்து விடும்.
என்ன கஷ்டம் சாப்பாட்டுக்கு இல்லாத கஷ்டமா?
மீண்டும் மகேஸ்வரி குலுங்கிச் சிரிக்க அமைதியாய் அதை வெறித்த சுவாதி மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
'சாப்பாட்டிற்குக் கஷ்டம்தான் மகேஸ்வரி. சுயமரியாதையுடன் ஒரு வாய் சோறு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. அது வேண்டும்.'
மனதை அமைதிப்படுத்த சாலையோரச் செடிகளை லேசாய் தொட்டுக் கொண்டே நடந்த சுவாதி.
ஒன்மினிட் சுவாதி
என்று பின்னால் நடந்து வந்த ராஜேந்திரனின் குரல் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தாள்.
அருகில் வந்தவன், உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் சுவாதி
எனறான்.
பேசுங்கள்
தனியாகப் பேச வேண்டும்.
நான் பஸ் ஸ்டாப்பில் வெயிட் பண்ணுகிறேன்
மகேஸ்வரி நகர முற்பட அவளைக் கைப்பிடித்து நிறுத்தியவள் ரஜேந்திரன் பக்கம் திரும்பி,
இதோ பாருங்கள் ராஜேந்திரன். எதுவாக இருந்தாலும் என் தோழி முன்னாலேயே சொல்லுங்கள்
என்றாள் கறாராக. ராஜேந்திரன் திணறிப் போனான். தயக்கத்துடன் புத்தகத்தில் மடித்து வைத்திருந்த ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுக்கப் போனான். அதை முறைத்துப் பார்த்த சுவாதி.
என்ன இது...?
என்று கேட்டாள்.
கடிதம்...
காதல் கடிதமா...?
கடுமையாய் சுவாதி கேட்ட விதத்தில் ராஜேந்திரன் சங்கடப்பட்டுப் போனான்.
எனக்கு இந்தக் காதலில் எல்லாம் விருப்பமில்லை ராஜேந்திரன். நீங்கள் வேறு பெண்ணைத் தேடுங்கள். இது முதல் முறை என்பதால் விட்டு விடுகிறேன். திரும்பவும் இதே போல் நீங்கள் தொந்தரவு செய்தால் இந்த டிரெயினிங் நடத்தும் நிர்வாகியிடம் புகார் செய்வேன். நினைவிருக்கட்டும்
வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசி சுவாதி அதுவரை நடந்த நிகழ்ச்சிகளைத் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த மகேஸ்வரியை இழுத்துக் கொண்டு நடந்தாள்.
ஏண்டி சுவாதி இப்படிப் பட்டென்று பேசிட்டே. அவன் முகத்தைப் பார்க்கச் சகிக்கலை.
சகிக்காத மூஞ்சிதானே அவனுக்கு?
அபாண்டமாய் பேசாதே. உன்கிட்ட ஒருத்தன் ஐ லவ்யூன்னு சொன்னா கண்டபடி திட்டணுமா? நம் வகுப்பிலேயே அவன்தாண்டி பார்க்க நல்லாயிருக்கிறவன். ஹேண்ட்சம் ஹீரோ. அவனைப் போய் வேண்டாம்னுட்டியே.
அவன் காதலிச்சா நானும் காதலிக்கணுமா? அப்படி ஏதும் சட்டமிருக்கா?
காதல் ஒரு அற்புத உணர்வு சுவாதி. அழகாய் தங்கப் பதுமை போல் இருக்கே. உன்னைப் பார்த்தா யாருக்குமே காதலிக்கத் தோணத்தான் செய்யும். நீ என்ன சந்நியாசினியா? நானும் இந்த ஒரு வருடமா உன்னை கவனிச்சுக்கிட்டுத்தான் வரேன். ஆண்களைக் கண்டாலே உனக்குப் பிடிக்கலை. ஏன்?
அதுக்குக் காரணம் சொல்லணும்கிற அளவுக்கு முக்கியமான விஷயமில்லை மகே. அதைவிட முக்கியமானது நிறைய என் வாழ்வில் இருக்கு. நீ சொல்வது போல் காதல் ஓர் அற்புத உணர்வாகவே இருக்கட்டும். நான் இல்லைன்னு சொல்லவில்லை. அது தானாவே ஓர் ஆண் மேல் எனக்கு வரணும். எனக்கு ராஜேந்திரன் மேல் அந்தவித உணர்வோ ஈர்ப்போ வரவில்லை.
சரி நீ சொல்வது போல் தானாய் வரும் அந்த உணர்வு ஈர்ப்பு யார் மேலும் உனக்கு வந்ததே கிடையாதா?
பொறியில் அடித்தது போன்ற அந்த கேள்வியில் சடக்கென்று தலை நிமிர்ந்தாள் சுவாதி. பதில் சொல்லாமல் மகேஸ்வரியையே பார்த்தாள். அந்தக் கேள்வி அவள் இதயத்தைத் தட்டியது. திறந்த இதயத்தில் கிரீம் கலர் கோட், சூட், டையுடன் வசீகரமாய் நின்ற அந்த உருவம் சிரித்தது. சிரித்ததுடன் நில்லாமல்,
என் இளமதியின் தங்கையா நீ? அவள் ஜாடை அப்படியே இருக்கிறதே
என்றது.
சொல்ல இயலாத வேதனையுடன் கண்களை இறுக மூடிக்