Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Inbangal Ilavasam
Inbangal Ilavasam
Inbangal Ilavasam
Ebook116 pages1 hour

Inbangal Ilavasam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580109902464
Inbangal Ilavasam

Read more from Kanchana Jeyathilagar

Related to Inbangal Ilavasam

Related ebooks

Reviews for Inbangal Ilavasam

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Inbangal Ilavasam - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    இன்பங்கள் இலவசம்

    Inbangal Ilavasam

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    அற்புதமாயிருந்தது இரவு.

    கருப்பு என்றாலும் களையான கிராமப்புற பெண்ணின் முகம் போன்ற வானம். மல்லாந்து தன் மீதே ஒற்றை வைரங்களைத் துரவி அழகு பார்ப்பவளைப் போன்று கரும்பட்டு பின்னணியில் நட்சத்திர ஜொலிப்பு.

    கீழே நீரோடையின் சிணுங்கல் சிரிப்பு.

    சிறு வளைவான பாலத்தின் மீது நடந்தவள் வானத்தைப் போல, நீரையும் குனிந்து ரசித்தாள். பாலத்தின் அடிப்புறம் சக்திமிகு விளக்குகள். அவை பாய்ச்சிய ஒளியில் அச்செயற்கை நீரோடை சல்லாத் துணி போல் இருத்தது. தன் இரகசியங்கள் அனைத்தும் வெளிச்சம் போடப்பட, தண்ணீர் வெட்கத்துடன் சிணுங்கியது குமிழ் குமிழாய்…

    எதிர்புதிராய் துழாவின மீன்கள்.

    முட்டை விழிகளுடன் பருத்த தங்க மீன்கள் சோம்பலாய் நகர்ந்தன.

    ஏவலாளர்களின் சுறுசுறுப்புடன் கப்பீஸ்.

    குதிரையின் லாவக வேகத்துடன் வெள்ளிக் கெண்டைகள்.

    மேலும் குனிந்து அவற்றோடு பேசினாள்-

    'என்னை நினைவிருக்கா? இல்லை இந்த ஆறு மாதப் பிரிவில் மறத்தாச்சா?' குழந்தை போல உதடு பிதுக்கிக் கேட்டுவிட்டு, பதில் எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

    மீன்கள் வளைத்து திசைமாறி வாலாட்டி நகர்த்தன.

    நான் போயிருக்கும் புது ஓட்டலிலும்கூட அழகிய நீர்தேக்கங்கள், விதவிதமான மீன்கள்-உங்களுக்கு தந்தது போல் அதுக்கும் தினம் தீனி போடுவேன். இங்கே நாலு வருடம் இருந்திருக்கேன் இல்லையா? அதில் கொடைக்கானல் எனக்கு தாய் வீடு போலாச்சுது… தங்கைகளை விட்டுப் போனதுபோல் தவிச்சுப் போயிட்டேன். கேரளாவும் அழகுதான்… அங்கு போன ஒரு மாதம்வரை இராத்திரி அழுதிருக்கேன்…

    பேசும் போதே அவள் இளவிழிகள் தளும்பி பளபளத்தன.

    அருகே சீராய் வெட்டப்பட்டு மதில் போல நின்ற செடிப் புதர் அசைந்தது. திரும்பிப் பார்த்து பின் பேச்சைத் தொடர்ந்தாள்.

    நீங்க என்னைத் தேடினீங்களா? கூடப்பிறந்த அக்காக்கூட என்னை விசாரிச்சு ஒரு கடிதம் போடறதில்லை. நீங்களாவது யோசிச்சிங்களா?

    மீன்கள் ஒசையின்றி வாய்திறந்து மூடின.

    சிநேகிதியின் அழைப்பு வந்தது- ஏம்மா மீனலோசினி… வந்து படு சீக்கிரம். காலை ஏழுக்கே கல்யாணம். நாலுக்கே எழுந்திரிக்கணும். இப்படி தண்ணிக்குள்ளே பார்த்து பேசிட்டிருந்தா… காலையில் எழும்போது உன் கண் மீனாய் துள்ளாது. கருவாடு போலாயிடும். வா…

    அதுசரி. கல்யாணப் பெண் நீ ஏன் இன்னும் படுக்கலை? மீனலோசினி கேள்வியுடன் விடுதியை நோக்கி நடந்தாள்.

    வழக்கமான திருமணம் இல்லையே மீனு இது. பெரியவங்க நடத்துவதாக இருந்தால் என்னை அதட்டி எட்டு மணிக்கே படுக்கச் செய்திருப்பாங்க. வயசான பாட்டி வந்ததே எனக்குச் சந்தோசம். நானும் முரளியும் இன்னும் சில ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது. எங்களுக்காக ஊர்விட்டு ஊர் வந்திருக்கும் சிநேகிதங்களையும் கவனிக்கணும் இல்லையா?

    என்ன வேலை? சொன்னா நான் செய்ய மாட்டேனா புவனா? பிறகெதுக்கு முந்நூறு மைல் ஓடிவந்தேன்? நம்ப ரெண்டு பேருக்குமே பெத்தவங்க இப்போ உயிரோடில்லை. ஒருத்தருக்கொருத்தர்தான் ஆதரவு. 

    சொல்லணும்னு நினைச்சேன் மீனு, நாங்க இங்கே வாடகைக்கு ஒரு தனி வீடு பார்த்தாச்சு இனி தோணும்போது விடுப்பு போட்டுட்டு நீ எங்களோடு வந்து தங்கியிருக்கலாம்.

    பூஜை நேரத்துக் கரடியாய்…!

    பூஜைக்குன்னு நேரங் காலம் உண்டு. அது இந்தக் கரடிக்கும் தெரியும்.

    புவனா இவள் கன்னத்தைக் கிள்ள சேர்ந்து சிரித்தனர்.

    உன் புது ரவிக்கை ரெடி. போட்டுப் பார்த்திடு. அதுக்குத்தான் கூப்பிட்டேன்.

    நீ எனக்காக இத்தனை சிரமம்?

    நானா தைச்சேன்? நம் ஹோட்டல் டெய்லர்கிட்ட சொன்னேன். நம்ப மீனு பாப்பாக்கான்னு இரண்டே மணி நேரத்தில் தைச்சு அனுப்பிட்டார்.

    சிறு பெண்ணின் குதூகலத்துடன் ரவிக்கையைப் பிரித்து தன் மீது வைத்துப் பார்த்தவள், ஹோ! என்று மூச்சிழுத்தாள்.

    என்ன மீன் மாதிரி வாய் திறக்கறே?

    இதென்ன கழுத்து ரொம்ப இறங்கியிருக்கே? உன் கல்யாணத்துக்குன்னே வரும் வழியில் கோட்டயத்தில் இறங்கி வாங்கினேன். இப்படிப் பண்ணிட்டாரே டெய்லர்…

    நான்தான் இறக்கச் சொன்னேன் உதடு சுழித்தாள் புவனா.

    அச்சோ.!

    பின்னே என்ன? சதா சாமியாரிணி போல மூடி மறைக்கிற ரவிக்கை நாளை காலை கவர்ச்சியாய் உலா வருவாய் தோழி ஆசி கூறுவது போல புவனா அபிநயித்தாள்.

    செடிகளின் பின்னால் அரவம்... அசைவு… 'சட்'டென்று கூர்ந்து பார்த்தாள் மீனு, இலைகளின் அசைவு தவிர அங்கு யாருமில்லை.

    2

    பணியாளர் விடுதிக்குள் பேச்சும் சிரிப்புமாய் ஏக கலாட்டா. வண்ண பலூன்களும், வாசனைமிக்க லில்லி மலர் கொத்துக்களும் சூழலை மங்கலாக்கின.

    ஆறு மாதம் முன்பு வரை இந்த நட்சத்திர ஹோட்டலின் ஊழியர்களுள் மீனுவும் ஒருத்தி.

    18 வயது இளம் பெண்ணாய் நுழைந்து, வேலை பழகியது இங்குதான். ஓரளவு உலகம் புரிந்ததும்கூட அந்நான்கு ஆண்டுகளில்தான்.

    வயதுக்கு வரும் முன்பே தாயை இழந்தவள் மீனு. அரும்பும் வயதில் அக்கா ஒரளவு ஒத்தாசையாய் இருந்தாள் என்றாலும், ஆஸ்துமா அவதியுள்ள அப்பாவும் தன்னையே தாயாகக் கருதி அண்டி நின்ற தங்கையும் அவளுக்கு எரிச்சலூட்டின

    Enjoying the preview?
    Page 1 of 1