Ninaitha Manam Marakkaathu!
1.5/5
()
About this ebook
Read more from Kanchana Jeyathilagar
Kanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Ithu Enna Maayam..? Rating: 4 out of 5 stars4/5Aagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Manasellam Malligai Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Mullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsEn Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Kanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Maaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsBrindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Kaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Pagal Natchathirangal Rating: 5 out of 5 stars5/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Mullai Panthal Rating: 5 out of 5 stars5/5Mannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Adhisaya Raagam... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ninaitha Manam Marakkaathu!
Related ebooks
Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Kanne Undhan Nizhalavean Rating: 0 out of 5 stars0 ratingsMayakkum Penney...! Manthaara Poovey...!! Rating: 2 out of 5 stars2/5Kannadi Vaasal Rating: 0 out of 5 stars0 ratingsPon Maalai Mayakkam Rating: 4 out of 5 stars4/5Parvai Ondre Podhume! Rating: 0 out of 5 stars0 ratingsNooru Jenmam Nee Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsNeeyenge Ninaivugalange Rating: 2 out of 5 stars2/5Neethane En Vasantham...! Rating: 4 out of 5 stars4/5Idhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Kaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Natchanthirangalin Nadanam! Rating: 4 out of 5 stars4/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Shenbaga Poove Rating: 5 out of 5 stars5/5Antha Chinna Pennin Snegam Rating: 1 out of 5 stars1/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Kannadi Thirai Rating: 4 out of 5 stars4/5Seettu Kattu Maaligai Rating: 5 out of 5 stars5/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Vanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Azhage Aaryuire! Rating: 3 out of 5 stars3/5En Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Ival Vera Maathiri.. Rating: 5 out of 5 stars5/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5
Reviews for Ninaitha Manam Marakkaathu!
2 ratings0 reviews
Book preview
Ninaitha Manam Marakkaathu! - Kanchana Jeyathilagar
http://www.pustaka.co.in
நினைத்த மனம் மறக்குது!
Ninaitha Manam Marakkuthu!
Author:
காஞ்சனா ஜெயதிலகர்
Kanchana Jeyathilagar
For more books
http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
1
பின் மதிய வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வெக்கையான சிறு காற்றில் மரத்தின் இலைகள் நடுங்கின. புழுதி பறக்க வந்து போன பேருந்துகளைப் பார்த்தபடி, அவற்றுக்கான நிறுத்தத்தில் நின்றாள் அமராவதி. அவளுக்கும் உடல் நடுங்குவது போலிருந்தது - இது உள்ளத்தின் தகிப்பினால்...
தான் செய்வது தவறா, சரியா என்ற போராட்டம் கிளப்பிய வெப்பம் அது. வெளியே பரவிக் கிடந்த சூடும் சேர்ந்து தன்னை உருக்கி விடுமோ என்றொரு அச்சம்.
நேற்று வாட்ஸ் அப்பில் குளிரூட்டப்பட்ட நம் நகர் ஒன்றில் பஸ் - ஸ்டாப் பற்றி ஒரு செய்தி - அது நிஜமோ அல்லவோ, நம் நாட்டிற்கு சரி வராது. வெப்பம் தாளாது வெகு ஜனம் அக்கண்ணாடி பெட்டிக்குள் சதா அடைந்து கொள்ளும் - பயணத்திற்குக் காத்திருப்பவர்கள் கருவாடாய் வெளியே காய வேண்டியதுதான்!
இப்போது தன் நிலையும் அப்படித்தான் எனப்பட்டது அவளுக்கு பாசம், பிரியமெல்லாம் அமையுமென்று காத்திருக்க, முடியாது - அதற்கான கொடுப்பினை இல்லாமல், ‘இது போதும்' என்று திருமணத்தை முடித்துக் கொள்ள வேண்டியதுதான்.
மூன்று மாதங்கள் முன்பு வரை அதிக அலுங்கல் இன்றி நகர்ந்த வாழ்வு அவர்களது -
அவர்கள் என்பது அமராவதியும், அவளது அம்மாவும் தான்... சற்று ஒதுங்கிய சிறு வீட்டில், ஆரவாரமற்று நகர்ந்த நாட்கள், அம்மாவின் இடுப்பு எலும்பு முறிந்ததில், பிசகின. அதுவரை இப்படி அவசரமாய் முடிவெடுக்கும் இக்கட்டு வரும் என்று இவள் நினைக்கவில்லை.
தாய் துவங்கும் கல்யாணப் பேச்சை கேலியும் கிண்டலுமாய் நகர்த்தி விடுவாள்.
'எனக்குக் கீழே தங்கச்சி, தம்பினு யாருமில்லயேம்மா, லைன் க்ளியர் ஆகக் காத்துக் கொண்டு - பிறகென்ன அவசரம்? இன்னும் கொஞ்சம் நாளு நாம ரெண்டு பேரும் ஜாலியா இருப்போமே?'
'நம்ம வீட்டு நிலவரம் வேறடா, அமரா. அப்பா இருந்தா இப்படி பதறமாட்டேன். உன்னை நல்லபடி 'ஸெட்டில் பண்ணிட்டா எனக்கு நிம்மதி' எனும் அம்மாவின் குரல் கமறும்.’
இவளுக்கு மூத்தவன் குடிக்கு அடிமையாகி, பைக் விபத்தில் இறந்து போன ஞாபகம் அது.
இந்த நிலையிலும் அம்மா விசாரித்து, சேகரித்து வரும் 'மாப்பிள்ளை - தகவல்'களை மகள் நிர்தாட்சண்யமாய் புறக்கணித்து விடுவாள்.
'ஏடீ... உனக்கு வயசு இருவத்தெட்டு ஆகுது...'.
'நாற்பது, அம்பது கூடத்தான் ஆகும்மா.'
'பிறகு உன்னை யாரும் தேடி வரப் போறதில்லை.'
'போகட்டும்மா...'
'உம்மனசுல யாரேனும் இருந்தாச் செல்லிடு, அமரா...’
‘……’
'அப்படித்தானா?'
'வச்சிக்கோங்கம்மா...'
'சரியா சொல்லுடி, அமரா...'
அம்மாவின் பரிதவிப்பு இவளைப் பொய் சொல்ல வைக்கும்.
‘அதெல்லாம் ஏதுமில்லம்மா - நாம நிம்மதியா இருப்போமே?'
ஆனால் அம்மா நெருப்பின் மீது காட்டிய மெழுகாய் உருகிக் கொண்டிருந்தார்.
கவனமான உணவு, சத்து மாத்திரை என்று மூத்தவர் தன்னைப் பேணியதின் காரணம் கூட அந்த பய உருக்கம்தான்.
காய்ச்சல் இரண்டாம் நாள் தொடர்ந்தாலே மருத்துவரிடம், ஓடுவார் - அப்படியிருந்தும் அந்த விபத்திலிருந்து தன்னை கமலத்தால் காத்துக் கொள்ள முடியவில்லை.
அவை எதிர்பாராத நேரத்தில் வந்து மோதி சாய்ப்பவை அல்லவா?
எம்பிப் பறந்து சுற்றிய பாச்சையிடமிருந்து ஒதுங்கிய கமலத்தின் பாதம் பிசகி, அவர்களைக் கீழே தள்ளி விட்டது.
'ஐயோ... இடுப்புல வலி தாங்கல அமரா...' அம்மா அலறலூடே அழுதது வலியால் மட்டுமல்ல, இனி தங்கள் நிலைமை என்ன' என்ற அச்சத்தால்!
அசைய முயாதவர்களை ஆம்புலன்ஸ் வந்து கொண்டு போனது. அமராவதிக்கு மருத்துவமனையைச் சார்ந்த ஒரு ஹோட்டெலில் வேலை -ஆக ஏற்பாடுகளை சுலபமாய் செய்ய முடிந்தது.
ஸ்கேன் ரிப்போர்ட், 'பெல்விக் ஃப்ராக்ச்சர்' என்றதில் தாயும் மகளும் மனமொடிந்து போனார்கள்.
***
நீரில் முழுக்க ஊறிய கடற்பஞ்சு மேலும் நீரை உறிஞ்சாது என்பதைப் போல, வறண்டு கிடந்த தான் கிடப்பதை உறிஞ்சி கொள்ளத் தவிக்கிறோமோ?
அம்மா படுத்த படுக்கையாய் ஆனபின், மாறிய வாழ்வில் சமீபமாய் அறிமுகமானவன்தான் ஜவஹர்... தவித்த சமயம் வந்த அவனை தவிப்புடன் வாய்க்குள் ஊற்றிக், கொண்டாயிற்று - இனி அதை விழுங்கவதா அல்லது துப்புவதா என்ற சஞ்சலத்துடன் இப்போது இவள்!
ஏனெனில் இப்போது எடுக்கும் முடிவுதான் இவளது வாழ்வு. அம்மாவிற்கு அமராவின் வேலையே கூட திருப்தியில்லை.
‘ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட்ங்கறது, கௌரவமாய் சொல்லிக்கறது போல வேலையில்லடா.... டீச்சர்னா பரவால்ல...'
'அப்படி ஏதும் ஸ்கூல் பக்கத்துல இல்லையேம்மா? டாக்டர் கௌரவமானவர்... ஆக பாதுகாப்பான வேலை இது.'
'ம்ம்... பொது ஜனத்தை விட ஆஸ்பத்திரியிலுள்ள நோயாளிங்க உறவுக்காரங்கதான் அங்க தங்குவாங்கன்ர?'
'ஆமம்மா - ஹோஸ்பிடலின் அனெக்ஸ் எனலாம். ஆக பயமில்லை...’
'ஊரிலேருந்து கொஞ்சம் தள்ளி இருக்கே? நம்ப வீட்டையே உங்கப்பா ஒதுக்கமாய் கட்டினார்னா, இது இன்னுந் தள்ளி...'
‘அது பாதுகாப்பு தானேம்மா? கச்சடா கூட்டம் வராது.'
'உன் அழகு பாதுகாப்பில்லையே... அதுதான் என் வேதனை.'
கேட்கும் அமரா சோகமாய் முறுவலிப்பாள்.
பலர் அழகு நிலையத்தில் தங்களை மெருகேற்ற, காசை நேரத்தை இறைக்க, தனக்கு இயல்பாய் அமைந்த பொலிவை நினைத்து வருத்தப்படும் நிலைக்கு வேறென்ன செய்ய?
ஆனால் அந்த 'பளிச்' தோற்றம்தான் அவளை இந்த வேலைக்குத் தகுதி படுத்தியதுமல்லாமல், ஆறாவது ஆண்டாக இதிலேயே தக்கவும் வைத்திருக்கிறது.
வருஷந்தோறும் நிர்வாகம், ஆறு பாலிகாட் புடவைகளை இவளுக்குத் தந்து விடும்.
பழுப்பில் அரக்குக் கரையிட்டவை.
ஒன்றேகால் மீட்டரில் தைக்கப்பட்ட ரவிக்கை மேலுடம்பை பெரும்பாலும் மூடியிருக்க, உயர்த்தியிட்ட கொண்டையில் வெகு கௌரவமான தோற்றத்தில்தான் இவள் நிற்பாள்.
ஒடுங்கிய மூன்று மாடிகளில் பதினெட்டு அறைகள் கொண்ட தங்குமிடம் மட்டுமே ஆரம்பத்தில் இவள் பொறுப்பு.
அவற்றின் புக்கிங் போக, சுத்தம் செய்வதையும் மேற்பார்வை செய்தவளின் திறமையில், மேலும் பொறுப்புகள் அமராவதியின் மேல் ஏறின. அதை அவள் மகிழ்வுடன்தான் நிறைவேற்றினாள்.
இவளிடம் தலைமை மருத்துவர் குணசேகர் நேரிடையாய் தந்தவை அவை.
‘இந்த ஹோட்டலை நான் நடத்தறது, நோயாளிகளின் வசதிக்காய் முக்கியமாய் அவர்களின் உணவிற்காய். வெறும் சுவைக்கென்று இல்லாமல் சுகாதாரம் முதன்மைத் தேவை. அதே சமயம் நான் உட்பட பிற டாக்டர்ஸ், நர்ஸ்ஸும் இங்கே சாப்பிட நேரும். நமக்கு, அதாவது உனக்கும் சேர்த்து, உணவு இலவசம். காலை ஷிஃப்ட் வருபவங்களுக் லஞ்ச், இரவு நேர ட்யூட்டி உள்ளவங்களுக்கு, டின்னர், அந்த டோக்கன்ள் உன் பொறுப்பில் விட நினைக்கிறேன் மிஸ் அமராவதி.’
‘அதை முதலில் ஒழுங்குபடுத்திட்டால், பிறகு சுலபமாயிடும் ஈவ்னிங் டோக்கன்ஸை அடுத்த ஷிப்ட் விக்ரமிடம் தந்திடு' என்றவ அதற்கென்று ஒரு தொகையையும் இவள் சம்பளத்தில் ஏற்றினார்.
ஆரம்பத்தில் பணியாளர் பட்டியலுடன் திணறியவளுக்கு உதவியது தலைமை நர்ஸ் லீலா. எல்லாரையும் முறைத்த சமையல்கார சாமண்ணா இவளிடம்