Mayakkum Penney...! Manthaara Poovey...!!
By Hansika Suga
2/5
()
About this ebook
Read more from Hansika Suga
Paarvai Karpoora Deepamaa..! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkena Vaazhum Idhayamadi... Rating: 4 out of 5 stars4/5Pookkalin Ithayam Rating: 5 out of 5 stars5/5Idhayam Idam Maarum Rating: 3 out of 5 stars3/5Mannan Nee...! Ilanenjin Kalvan Nee...! Rating: 4 out of 5 stars4/5Maayamenna... Ponmaane..! Rating: 4 out of 5 stars4/5Verenna... Verenna... Vendum Rating: 5 out of 5 stars5/5Minminigal Kann Simittum!! Rating: 5 out of 5 stars5/5Kannal Pesa Vaa... Rating: 5 out of 5 stars5/5Kaadhaladum Manathu Rating: 3 out of 5 stars3/5Unnale... Unnale… Rating: 5 out of 5 stars5/5Vizhiye Unakku Uyiranean..! Rating: 4 out of 5 stars4/5Anthapurathu Maharani Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vaseegaram Rating: 4 out of 5 stars4/5Hello... Mister Yethirkatchi! Rating: 5 out of 5 stars5/5Kaadhal Mattum! Rating: 4 out of 5 stars4/5Rajanodu Rani Vanthu Serum! Rating: 4 out of 5 stars4/5Thiruttu Payale Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaadugale..! Rating: 4 out of 5 stars4/5Poomalaigal Konjum... Rating: 5 out of 5 stars5/5Kavithai Nee... Nerungi Vaa... Rating: 5 out of 5 stars5/5Sakkarai Nilave...! Rating: 4 out of 5 stars4/5Yaaro Manathile... Yetho Ninaivile... Rating: 5 out of 5 stars5/5Neeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Kal Vadiyum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsRoja Ondru Mutham Ketkum Neram... Rating: 3 out of 5 stars3/5Manaththai Mayakkum Mandhiramey! Rating: 4 out of 5 stars4/5Kaathirunthean Kaadhalane... Rating: 4 out of 5 stars4/5Azhagai Manathai Parithuvittai... Rating: 4 out of 5 stars4/5
Related to Mayakkum Penney...! Manthaara Poovey...!!
Related ebooks
Uyire... Uyire... Urugathey... Rating: 1 out of 5 stars1/5Unnale... Unnale… Rating: 5 out of 5 stars5/5Kaadhal Raasi..! Rating: 0 out of 5 stars0 ratingsMaayamenna... Ponmaane..! Rating: 4 out of 5 stars4/5Azhagai Pookkuthe... Rating: 5 out of 5 stars5/5Manathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsSakkarai Nilave...! Rating: 4 out of 5 stars4/5Kaadhale...! Kaadhale...!! Rating: 0 out of 5 stars0 ratingsTholai Thoora Velicham Nee! Rating: 4 out of 5 stars4/5Roja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5Urave.. Unai Thedi.. Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vaseegaram Rating: 4 out of 5 stars4/5Ithu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Malargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsAgni Paravai... Rating: 0 out of 5 stars0 ratingsMinsara Poove... Rating: 1 out of 5 stars1/5Minminigal Kann Simittum!! Rating: 5 out of 5 stars5/5Swasamadi Nee Enakku Rating: 4 out of 5 stars4/5Kaathirunthean Kaadhalane... Rating: 4 out of 5 stars4/5Nakshatra Rating: 0 out of 5 stars0 ratingsNishakanthi Rating: 5 out of 5 stars5/5Kaadhal Ennai Kaadhal Seiya... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Aasai Yaarai Vittatho...! Rating: 5 out of 5 stars5/5Idhayathil Yetho Ondru... Rating: 0 out of 5 stars0 ratingsPoi Solla Koodathu Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalum Kutrame... Rating: 4 out of 5 stars4/5Moongil Kaadugale..! Rating: 4 out of 5 stars4/5Roja Ondru Mutham Ketkum Neram... Rating: 3 out of 5 stars3/5Rajanodu Rani Vanthu Serum! Rating: 4 out of 5 stars4/5Vaanile... Theanila... Rating: 2 out of 5 stars2/5
Reviews for Mayakkum Penney...! Manthaara Poovey...!!
1 rating0 reviews
Book preview
Mayakkum Penney...! Manthaara Poovey...!! - Hansika Suga
https://www.pustaka.co.in
மயக்கும் பெண்ணே...! மந்தாரைப்பூவே...!!
Mayakkum Penney...! Manthaara Poovey...!!
Author:
ஹன்சிகா சுகா
Hansika Suga
For more books
https://www.pustaka.co.in/home/author/hansika-suga
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
1
டி…சாருமதி… சீக்கிரமா புறப்பட்டு வாயேன்… என்னால இங்கே எதுவும் சமாளிக்க முடியல…
பதட்டத்துடன் பேசினார் காமாட்சி.
ம்மா… நீங்க ஃபோன் பண்ணதும் மேனேஜர்கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டேன். கொஞ்சநேரம் சமாளிங்க… இதோ வந்துடறேன்…
அதே அவசரதொனியில் பதிலுரைத்தாள் சாருமதி.
ஏற்கனவே இருந்த பதட்டம் போதாது என்று தெருக்களில் இருந்த குண்டும்குழியும் மேலும் அவள் வாகனத்தைச் சோதித்தது. அடிக்கடி பழுதாகும் வண்டிக்கு பன்க்சர் ஒட்டியே பாதிச்சம்பளம் காலியாகிறது.
என்ன சமாளிக்கச் சொல்றே? இந்தமுறை பெரிய கும்பலா வந்திருக்கானுங்க… பொருளெல்லாம் விசிறியடிக்கறாங்க… என்ன சொன்னாலும் அடங்கமாட்டான் போல…! பார்க்கவே பிசாசு மாதிரியிருக்கான்… நீ சீக்கிரம் வாயேன்.
காமாட்சி அழுதுவிடும் நிலையில் இருந்தார்.
கடவுளே…
என்று முணுமுணுத்துக் கொண்டே அலைபேசியை அணைத்தாள் சாருமதி.
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று யாருக்காக சொன்னார்களோ… இல்லையோ… சாருவுக்காக நிச்சயம் சொல்லியிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட அந்த தனியார் நிறுவனத்தில் கடனையும் வாங்கிவிட்டு, அதைத் திருப்பிக் கட்டமுடியாமல் லோல்படும் அவளுக்குத்தான் அசிங்கம், அவமானம் ஆகிய வார்த்தைகளுக்கான அர்த்தம் முழுமையாகப் புரியும்.
இதைப் பாருங்கம்மா… அப்பா திடீர்னு ஹார்ட்-அட்டாக்ல தவறிட்டாருன்னு சொன்னதையே சொல்றீங்களே ஒழிய, வாங்குன கடனைத் திருப்பிக் கட்ட வழியைக் காணோம். எங்களுக்கு உங்க சென்டிமன்ட்ஸ், காரணம், மரணம் எதுவும் தேவையில்லை. கஸ்டமராச்சேன்னு மரியாதை கொடுத்து, ஓரிரு முறை எச்சரிக்கை செய்வோம்… அப்புறமும் கொடுத்த தொகை திருப்பி வரலேன்னா, நாங்க அதை வசூலிக்கக் கையாளும் முறை வேறவிதமா இருக்கும். எங்கமேல வருத்தப்படாதீங்க…
போனமுறையே அந்த நிறுவனத்தில் அவளைப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள்.
பொறுப்பான குடும்பத் தலைவராக இருந்து எல்லாவற்றையும் அப்பா பார்த்துக் கொள்வார் என்று அவள் கவலையற்று இருந்த நேரம், திடீரென்று அவர் மாரடைப்பால் காலமாவார் என்று யார்தான் கணித்திருப்பார்கள்?
அவர் காலமான பிறகுதான் அந்தக் குடும்பத்துக்கு என்னென்ன நெருக்கடிகளை விட்டுச் சென்றிருக்கிறார் என்று சாருவுக்குப் புரிந்தது.
வீட்டை மராமத்துப் பார்க்கணும்-ன்னு என்கிட்ட ஐம்பதாயிரம் கடன் வாங்கிட்டாரே சாரும்மா… அவசரமில்ல… உன்னால முடிஞ்சபோது திருப்பிக்கொடு…
கையெழுத்திட்ட கடன் பத்திரத்தோடு வந்து நின்றார் உறவினர் சண்முகவேல்.
அப்பா உங்ககிட்ட கடன் வாங்குனதே எனக்குத் தெரியாது… கொஞ்சம் டைம் கொடுங்க மாமா… எப்படியாவது அடைச்சுடறேன்…
நடுங்கும் குரலில் சொல்லி அனுப்பினாள் சாருமதி.
டி… நாம எப்ப வீட்டை மராமத்துப் பணி பார்த்தோம்? உங்கப்பா எதுக்கு இப்படியொரு பொய்யைச் சொல்லி, அந்த வேலுகிட்ட கடன் வாங்கணும்?
அதிர்ச்சியுடன் கேட்டார் காமாட்சி.
எனக்கு மட்டும் என்னம்மா தெரியும்? சண்முகம் மாமா தெளிவா இது அப்பாவோட கையெழுத்துன்னு சொல்றாரே…
பொலபொலவென்று அழுதாள் சாருமதி. ஏதோ மிகப்பெரிய கெடுதல் மென்மேலும் வரப்போவது போல் உள்ளுணர்வு அச்சுறுத்தியது.
கண்ணீரின் ஈரம் காய்வதற்குள் வாங்கியிருந்த கடனுக்கான விளக்கம் கேட்டு தனியார் நிறுவனத்தினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள்.
மாசத்தவணை ஒழுங்கா கட்டிட்டு தானே இருந்தாரு… இன்னும் எவ்வளவு தொகை கட்டவேண்டி இருக்கறதா நோட்டீஸ் அனுப்பியிருக்கான்? இப்ப என்னடி செய்யப்போறோம்?
அடுத்த ஹார்ட்-அட்டாக் காமாட்சிக்கு வரும்போல இருந்தது.
ஒண்ணுமே புரியலம்மா… எல்லாம் அப்பா பார்த்துக்குவாருன்னு அவர் பொறுப்புல விட்டதுல, எவ்வளவு கட்டியிருக்கு… எவ்வளவு பாக்கி ஒண்ணும் புரியல… இந்த லோன் சம்பந்தமான பேப்பர்ஸ் எல்லாம் அப்பாவோட ஃபைல்ல தானே இருக்கு… நான் அடுத்த தெருவுல இருக்கற வக்கீல் நாராயணனைப் பார்த்துட்டு வரட்டுமா? எனக்கு சுயமா எதுவும் முடிவெடுக்கத் தெரியல…
சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல் திணறினாள் சாருமதி.
அடுத்து வந்த சில நாட்களில் நாராயணன் உதவியோடு அந்த நிறுவன அதிகாரிகளுடன் நீண்டநேரம் பேசி, ஒருவழியாக தன் தந்தை வாங்கிய கடனை, தான் மெல்ல அடைப்பதாக ஒப்புக்கொண்டாள்.
இந்த மனுஷன் ஒரு கடனை அடைக்கறதுக்காக இன்னொரு பக்கம் கடன் வாங்கி வெச்சிட்டுப் போயிருக்காரே… இப்ப எந்தக் கடனை முதல்ல அடைக்கறது சாரு?
கேள்வியின் பாரத்தை அவள்மீது போட்டுவிட்டு அவள் முகத்தையே பார்த்தார் காமாட்சி.
தனக்கும், அன்னைக்கும் நடந்த உரையாடலைக் கவலையுடன் நினைத்துக்கொண்டே சாருமதி டூவீலரில் வந்து இறங்குவதற்குள், வீட்டுவாசலை அடைத்து சாமான்கள் விசிறியடிக்கப்பட்டு இருந்தன.
அக்கம்பக்கத்தினரின் பார்வையைப் பொருட்படுத்தாமல் அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தாள். நடக்கும் அலங்கோலங்களைப் பார்த்துச் செய்வதறியாமல் மதிலோரம் நின்று கண்ணீர் வடித்தவராகக் காமாட்சி.
ம்ம்… சீக்கிரம் ஆகட்டும்… அந்த வால்-கிளாக் கூட மிச்சம் வைக்கக்கூடாது… எல்லாத்தையும் தூக்கு…
அதிகாரத் தோரணையில் தனது ஆட்களை மிரட்டிக் கொண்டிருந்தான் ஒருவன்.
அவனது அகண்ட முதுகும், தோள்வரை தொங்கிய முடியும், கட்டைக்குரலும் முகத்தை அடையாளம் காட்டாமலே பயத்தை ஏற்படுத்தியது.
ரௌடியாக இருந்தாலும் இந்த சிச்சுவேஷனில் ‘சார்’ போட்டுத்தான் பேசியாக வேண்டும். தன் தலைவிதியை நொந்துகொண்டு வாய் திறந்தாள் சாருமதி.
சார்… ப்ளீஸ்… இங்கே இருக்கற பொருள் எதையும் தொடவேண்டாம்-ன்னு சொல்லுங்க… நான் உங்க நிறுவனத்துல மறுபடியும் வந்து பேசறேன்.
கெஞ்சும் குரலில் சாருமதி கேட்டது அவன் காதில் விழவில்லையோ?
இறைந்து கிடந்த பொருட்களைத் தாண்டி அவசரமாக அவன் முன்னே வந்து நின்றாள். பெண் என்றால் பேயும் இறங்கும் அல்லவா? இந்தச் சாத்தான் இறங்குகிறதா என்று பார்ப்போம்…!
சார்… ப்ளீஸ்… கொஞ்சம் டைம் கொடுங்க…
என்று கேட்டுக்கொண்டே அவள் கைகூப்ப, அதற்குமேல் பேச்சுவராமல் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.
இவன்… இவன்…!!
டேய்… இங்கே என்ன வேடிக்கை… ம்ம்… ஆகட்டும்…
என்று உறுமியவனின் விழிகள், தன் முன் கைகூப்பி நின்றவளை அலட்சியமாகப் பார்த்து, விழி நகர்த்தி, மீண்டும் அவள் முகத்திலேயே ஆச்சரியமாக நிலைகுத்தி நின்றது.
நீ…நீ…சாருமதி…
விழிகளின் திகைப்பு மாறாமல் கேட்டான். அவன் முகத்தின் கொடூரத்திற்கும், அவன் பார்வையின் திகைப்புக்கும் சற்றும் சம்மந்தம் இல்லாமல் இருந்தது.
நீ…நீங்க… ஆராவமுதன் தானே?
தன் கேள்வி சரிதானா என்ற ஐயத்துடன் கேட்டாள் சாருமதி.
தன் முன்னே நிற்பவன் ‘ஆராவமுதன்’ என்று அறிவு அறுதியிட்டுச் சொல்கிறது. ஆனால், அவன் எப்படி இப்படியொரு குடிகெடுக்கும் வேலையில் இருக்கிறான்? இந்தக் கடன் வசூலிக்கும் கும்பலுக்கு இவன்தான் தலைவனா?
டேய்… போதும்… எதுவும் எடுக்கவேண்டாம்… எல்லாம் அப்படியே வைங்க…
என்று அவன் சத்தமாகச் சொல்ல, சுற்றியிருந்தவர்கள் அவன் உத்தரவுக்குக் கட்டுப்பட்டார்கள்.
அண்ணே… முதலாளி கேட்டா என்ன சொல்ல?
கும்பலில் ஒருவன் இழுக்க,
நான் பதில் சொல்லிக்கறேன்… வாசல்ல கிடக்கறதெல்லாம் கொண்டு வந்து உள்ளே வெச்சுடு சுகு…
என்று பதிலுரைத்தான்.
சாருமதி இன்னும் திகைப்பு மாறாமல் நின்ற கோலத்திலேயே நின்றிருந்தாள்.
ஸாரி… இது உன் வீடுன்னு எனக்குத் தெரியாது.
என்றவன் அவளை ஓரமாக வரச்சொல்லி பணித்தான்.
பார்க்கறதெல்லாம் நிஜமான்னு சந்தேகமா இருக்கு. இப்படி அராஜகமா கடன் வசூல் பண்றதுதான் உன்னுடைய வேலையா அமுதா? நீ படிச்ச படிப்பு என்னன்னு உனக்கு ஞாபகமிருக்கா? இப்படியொரு வேலையைத் தேடிக்கொள்ள உனக்கு எப்படி மனசு வந்தது?
கவலையுடன் கேட்டாள் சாருமதி.
"ஆரான்னு கூப்பிடு… எல்லோருக்கும்