Kaandharva Alaigal
4/5
()
About this ebook
Read more from Kanchana Jeyathilagar
Kanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Ithu Enna Maayam..? Rating: 4 out of 5 stars4/5Aagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Mullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsVazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5En Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Brindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Manasellam Malligai Rating: 0 out of 5 stars0 ratingsKarumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Maaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsTheeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Ninaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Kanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsPaartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Mullai Panthal Rating: 5 out of 5 stars5/5Mannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Pagal Natchathirangal Rating: 5 out of 5 stars5/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Manakadhavai Thiranthu Vidu Rating: 5 out of 5 stars5/5
Related to Kaandharva Alaigal
Related ebooks
Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Idhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Mayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Ennai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsParvai Ondre Podhume! Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Pallakku Payanam Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Chinna Chellamey! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Unthan Ninaive Rating: 1 out of 5 stars1/5Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Kannadi Thirai Rating: 4 out of 5 stars4/5Natchanthirangalin Nadanam! Rating: 4 out of 5 stars4/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Shenbaga Poove Rating: 5 out of 5 stars5/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Antha Chinna Pennin Snegam Rating: 1 out of 5 stars1/5Seettu Kattu Maaligai Rating: 5 out of 5 stars5/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5En Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Ninaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Senbaga Poovum, Saaralum... Rating: 2 out of 5 stars2/5Peiyena Peiyum - Kaadhal! Rating: 2 out of 5 stars2/5Ival Vera Maathiri.. Rating: 5 out of 5 stars5/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5
Reviews for Kaandharva Alaigal
4 ratings0 reviews
Book preview
Kaandharva Alaigal - Kanchana Jeyathilagar
http://www.pustaka.co.in
காந்தர்வ அலைகள்
Kaandharva Alaigal
Author:
காஞ்சனா ஜெயதிலகர்
Kanchana Jeyathilagar
For more books
http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
ஒரு கண்ணில் ரசனையையும் மற்றதில் பொறாமையும் ததும்ப பார்க்க முடியுமா?
சாகித்யா பள்ளியில் நுழைந்ததும், அவளை கண்ட பல சக ஆசிரியைகளின் பார்வைகள் அந்தக் கலவையில்தான் தத்தளித்தன!
அவள் வெளிர் சாம்பல் நிற பாந்தினி உடுத்தியிருந்தாள். அதன் ஆழ் சிகப்பு முந்தானையை ஒத்த ரவிக்கை. மங்கலான வெள்ளி நகைகள் என்றவள் அலங்காரம் உறுத்தாத உன்னதம்!
அளந்து அமைத்தது போன்ற உயரம், வடிவம், தெளிவான சருமம், முத்தாய்ப்பாய் அம்சமான முகம்.
உதடுகளோடு இணைந்து சிரிக்கும் அவள் விழிகளின் சிநேக பிரகாசம் அலாதி. அடர்ந்த கூந்தல் அலட்டலாய் பறக்காமல் பிடரியில் பளபளப்பாய் முடியப்பட்டிருக்கும்.
இத்தனைக்கும் மேலாய் சாகித்யாவின் குணம்.
உள்ளிருக்கும் நேர்மையை பிரதிபலிக்கும் கம்பீர தோரணை. அனைத்தையும் அனுதினம் பார்க்கும் அவள் தந்தை பெருமிதத்துடன் புலம்புவார்.
நீ வேலை பார்க்கும் இன்டர்நேஷனல் ஸ்கூலின் பெயர் பிரமாதந்தான். ஆனா உன் தகுதிக்கு நீ அங்கே பிரைமரி டீச்சராய்போறது சரியில்லடா. உன் அக்கா ஐ.டி.யில் மாசம் ஏறக்குறைய அரைலட்சம் சம்பாதிக்கிறா. சங்கீதா வீட்டுக்காரருக்கும் நிறைஞ்ச சம்பளம். இ.எம்.ஐ.கட்டினாலும் தடுமாறாமல் சமாளிக்கலாம்.
நம்ப ரெண்டு பேருக்கும் போதுமான பணமிருக்கேப்பா... தவிர நான் உங்களோடு இருக்க முடியுது.
இருந்தாலும் 15,000-க்காக நீ தினம் இப்படி ஓடறது எனக்கு சம்மதமில்லை.
வளரும் பிள்ளைகளை உருவாக்கும் வேலைப்பா என்னுது. யுனீக் ஜாப். வெளிநாடுகளில் ஆசிரிய வேலைக்குதான் பெரும் சம்பளம். ஆனா இப்ப நான் ரொம்ப திருப்தியாய் இருக்கேன்ப்பா.
ஆனாலும் வேலை உன்னைப் பிழிஞ்சு எடுக்குதேடா?
பிழிஞ்சு சக்கையான ஆரஞ்ச் போலவா இருக்கேன். ஜம்முனு தோன்றதாய் என் கொலீக்ஸ் அலுத்துக்கறாங்களே?
அது உன் அம்மா வழி ஜீன். உடம்புக்கு முடியாமல் போன பிறகுமே உங்கம்மா வாடாமல்தான் தெரிஞ்சா!
அது உங்க அன்பாலப்பா. குழந்தைகளின் அன்பில், ஆர்வத்தில், நனைய, எனக்கும் களைப்பே தோன்றவில்லை. தினம் எத்தனை சுவாரஸ்யங்கள் தவிர வீட்டில் நீங்க எனக்கே எனக்கு மட்டுமாய்! நாம சேர்ந்து சமைச்சு, சாப்பிட்டு, பேசின்னு திருப்தியாய் இருக்கோமே?
காலேஜ் டீச்சராய் போனால் கெளரவம், சம்பளம் ரெண்டும் அதிகமாயிருக்கும்.
தன் ஆற்றாமையை கேலிபோல சொல்லுவார் சுந்தரம்.
வேண்டாதவற்றுக்கு நாம முக்கியத்துவம் கொடுத்துடறோம்.
சற்று சீறலாகவே அவரை அடக்கமுயலுவாள் மகள்.
ஒரு துணுக்கு சொல்றேன். ரூபாய் நோட்டிடம் ஒருத்தன் சொன்னானாம் - 'நீ ஒரு துண்டு காகிதம்தான்' என்று. நோட்டின் பதிலென்ன தெரியுமா? 'இருக்கலாம். ஆனால் என் வாழ்நாளில் குப்பைத் தொட்டியைப் பார்த்ததேயில்லை நான்'ன்னு?
அந்த அல்டாப்பை காசிற்கு தந்தது நாமதான்.
காசிற்கு அதன் மதிப்பு புரிஞ்சிடுச்சு இல்லையா? உன்மதிப்பு அறிஞ்சுகேட்டு வரும் வீட்டிற்கு உன்னை மருமகளாக்கிடனும். பிறகு எனக்கென்ன குறை?
பேச்சை எப்படியாவது திருமணத்தை நோக்கி நகர்த்துவது சுந்தரத்திற்கு இப்போது பழக்கமாகி இருந்தது.
ப்பா... கல்யாணத்திற்கு வசதி, வயசெல்லாம் தேவையில்லை, சரியான நபரை சந்திப்பதுதான் முக்கியம்!
நீ சாதாரணப் பெண் இல்லையே சாஹி செல்லம்? உனக்கேற்ற ஜோடியாய் ஒருத்தனை நான் எங்கேனுபோய் தேடி எடுப்பேன்? நேத்து எதிர்வீட்டு ஜனா, ஒரு வரனைப் பற்றி பேசினார். ஆனா பையன் அரை லட்சம் சம்பாதிக்கும் பெண்ணாய் எதிர்பார்க்கிறான் போல...
இப்போது மகளுக்கு தகப்பனின் ஆற்றாமைக்கான காரணம் புரிந்தது.
'செல்வங்களை நம் வீட்டினுள் அனுமதிக்கலாம்.
இதயங்களுக்குள் அல்ல' எனும் பொன்மொழியை அந்த வரனிடம் யாரேனும் சொன்னால் தேவலை.
அப்பாவிடம் சொல்லி, மறுபடி அவர் பெருமூச்செறிவது சகியாமல், வெறுமே கண்களை உருட்டினாள்.
போம்மா, இந்த மிரட்டலெல்லாம் உன் ஸ்கூல் குட்டிங்ககிட்ட வச்சுக்க.
உங்க கல்யாண வசதிக்காய் நான் வேற வேலை தேடிக்கணும், அப்படித்தானே? புதுசா ஆரம்பிச்சிருக்கும் ஸ்டார் ஹோட்டலில், ரிஸப்ஷனிஸ்ட் தேவையாம். முக்கியமான தகுதி அழகும் அலங்காரமும் சம்பளம் கூட ஐயாயிரம் வரும். பெரிய இடத்து கெஸ்ட்டுகளிடம் தன்மையாய் பேசி, உதவினல் டிப்ஸ் நிச்சயமாம்...
சுந்தரத்தின் முகம் வாடியது.
ஆசிரியப்பணி உயர்ந்ததுதான், அதற்கு அருமையான டீச்சர்ஸ் தேவைதான். உன் ஸ்கூல் பிரின்ஸிபல் மிஸ் மேத்யூஸ் உன்னை ராணி போல வச்சுக்கறாங்க. நீயும் என்னை ராஜா போல கவனிச்சுக்கற.
சாயங்காலம் நேரத்தோடு வீடு திரும்பிடறேன். வேண்டியளவு விடுமுறைகள்...
ஆக நாம் இப்படியே இருந்துக்குவோம்
சற்று சோகையான முறுவலுடன் ஒத்துக்கொண்டார் பெற்றவர்!
ரைட் ஆட்டிட்டியூட்ப்பா
கட்டைவிரல் தூக்கினாள் மகள்.
***
ஆசிரியர் அறைக்குள் சிலர் தங்களுக்குள் பொறுமிக் கொண்டிருந்தனர், என்னா ஒரு ஆட்டிட்டியூட், நான் நாலைஞ்சு பவுன் நெக்லஸ் போட்டாலும் அவளின் தோரணை வரமாட்டேங்குதே?
சாஹித்யாவைத் தானே சொல்ற? இளசா, சைஸாய் இருக்கறால்ல...? இன்னும் பத்து வருஷத்துல அதெல்லாம் போக, தோரணையும் கரைஞ்சிடும்.
நோ, அவ ஸ்மார்ட். அது மாதிரிப் பொண்ணுங்க வயசு கூடகூட, கம்பீரம் ஏறி அசத்துவாங்க.
மஹா சாதூர்யக்காரிதான், இங்க வேலை பார்த்த ரெண்டு வருஷத்துல, பிரின்ஸி மேத்யூஸிடம் ஒரு திட்டு, ஏன் முறைப்புகூட அவ வாங்கினதில்லைல்ல?
வேலைல கவனமும் கருத்தும் ஜாஸ்தி.
சும்மாயிரு ஃப்ளோரா, அவளுக்கு அப்படி ஒரு ராசி! சாகித்யா வேலையில் சேர்ந்து அப்போ ஒரு மாசம் இருந்திருக்கும். 15 நிமிஷம் லேட்டாய் வந்தா, ரெஜிஸ்டரில் கையெழுத்திட ஆபிஸிற்கு அவள் வந்த சமயம், நானும் அங்க இருந்தேன்.
நீயும் லேட்டா?
அந்தக் கேள்வியைப் பசப்பலாய் ஒதுக்கிவிட்டு, கதை தொடர்ந்தது. டான்னு பிரின்ஸி மேஜையின் முன் போய் நின்னு, 'வெரிஸாரி மேம் - இனி இந்தத் தாமதம் நேராமல் பார்த்துக்கறேன்'னு சாகித்யா சொல்ல, பெருசின் முகம் மலர்ந்திடுச்சு!
ஓ!
தாங்க்ஸ் ஃபார் நாட் கிவ்விங் எக்ஸ்க்யூஸஸ், டியர் - வரும் சால்ஜாப்புக்களைக் கொண்டு, நான் ஒரு பெரிய புத்தகமே உருவாக்கிடலாம். எனக்கவை சலிச்சிடுச்சுன்னு மேத்யூஸ் சொல்ல, இவ மிடுக்காய் கையெழுத்து போட்டுட்டு கிளம்பினா.
நாம குழைவாய் பேசி, கும்பிடு போடறதுக்கு மரியாதையில்லை, ம்ம்?
இவர்களிருந்த அறையை பார்வையால் அலசிய அலுவலக சிப்பந்தி, சாகித்யாம்மா இங்க இல்ல போல...
என்றான் பாதி தனக்குள்ளாக.
வந்துட்டா...
சற்று தள்ளியிருந்தவளைக் கண்டு கொண்ட சிப்பந்தி உற்சாகமாய், மேடம் உங்களை வரச் சொன்னாங்கம்மா
என்றதும் மற்ற ஆசிரியர்களில் சிலர் ஒருவரை மற்றவரை மருட்டலாய் பார்த்துக் கொண்டனர்.
புத்தகம், பையை அலுவலகத்தில் வைத்தபடி, அங்கிருந்தவர்களுக்கு காலை வணக்கம் சொன்ன சாகித்யா, தலைமை ஆசிரியரிடம் போய் நின்று வணங்க, அதே உற்சாகத்துடன் பதில் வணக்கம் வரவில்லை!
என்ன மேம்... ஏதும் பிரச்சனையா?
இங்கே நீ வேலையில் தொடரப்போவதில்லைன்னு படுது சாகித்யா
என்றார் மிஸ்மேத்யூஸ் யோசனையாய்.
2
மிஸ் மேத்யூஸ், தன் முப்பது வருஷ அனுபவத்தில் பல முகங்களைக் கவனித்ததுண்டு. அகத்திலிருப்பதை அவை அப்படியே பிரதிபலித்துவிடும்!
எத்தனை கவனமாய் இருப்பவர்களிடமும் அவ்வப்போது சுயம் வெளிப்பட்டுவிடும்.
ஆனால் சாகித்யாவின் முகம் அசராமல், தெளிவாய் இருந்தது.
மடியில் கனமில்லாத சௌகர்யத்துடன் நின்றவளைப் பார்த்தவரின் மனம் கனிந்தது.
இதே அலுவலகத்தில் சாகித்யா சம்பந்தப்பட்ட வேறு சில சம்பவங்களும் நினைவிற்கு வந்தன.
அடிக்கடி பெற்றவர்கள் இங்கு சூடான மனநிலையுடன் வந்து நிற்பார்கள்!
பெரும்பாலான வீடுகளில் ஒற்றைப் பிள்ளைகள் என்பதால் அதீத பாதுகாப்பு உணர்வுடன் வரும் பெற்றோரை, சாகித்யா சுலபமாய் சமாளிப்பாள்.
'என் பையன் நேற்று சாயங்காலம் ஸ்கூலிலிருந்து வரும்போதே அடுக்கடுக்காய் தும்மினான். அவன் டெஸ்க் மேட் கிஷோர் நாலு நாள் லீவிற்குப்பிறகு நேற்றுதான் கிளாஸ் வந்திருந்தானாம். ஸ்வைன் - ஃப்ளுவாய் இருந்து, முழுக்க சரியாகும் முன் ஸ்கூலுக்கு அனுப்பிட்டாங்களோ அவனை? நீங்க கவனிச்சு அவனைத் தனியே உட்கார வைக்க வேணாமா?'
டாக்டர், இது ஸ்வைன் - ஃப்ளு என்றாரா மேம்?
கரிசனையுடன் கேட்கும் சாகித்யா, எட்டு வயதுப் பையனின் தலை கோதி விட்டு, "கிஷோர் கீழே விழுந்து முழங்காலில் தையல் போட்டிருந்தான். அவனுக்கு வசதியாய் இருக்கட்டும்னு, நான் அவனை முன் வரிசை ஓரமாய் உட்கார வைத்தேன். இது