Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sorgathin Nizhal
Sorgathin Nizhal
Sorgathin Nizhal
Ebook150 pages1 hour

Sorgathin Nizhal

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580109902210
Sorgathin Nizhal

Read more from Kanchana Jeyathilagar

Related to Sorgathin Nizhal

Related ebooks

Reviews for Sorgathin Nizhal

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sorgathin Nizhal - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    சொர்க்கத்தின் நிழல்

    Sorgathin Nizhal

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சொர்க்கத்தின் நிழல்

    காஞ்சனா ஜெயதிலகர்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    '''சாம்பவி, இப்படி வந்து உட்காரேன்... உங்கிட்ட கொஞ்சம் பேசனும்டா...''

    சொன்ன தன் தந்தையை சிறு அச்சத்துடன் பார்த்தாள் மகள். அப்பா இப்படி தன்னை அமர வைத்து பேசியபோதெல்லாம் இவளது வாழ்வு எழுந்து திசை மாறிப் போனது!

    அவை மகிழ்வான மாற்றங்களும் அல்ல.

    இவளை மருக வைத்தவை... இயல்பாய் நகர்ந்த சாம்பவியின் நாட்களை குதறி விட்டவை...!

    ஒன்பது வருஷங்களுக்கு முன்புதான் அப்பா தன்னிடம் இப்படி சொன்ன முதல் முறை...

    அப்போது இவளுக்கு வயது பதினான்கு.

    தோழிகளோடு விளையாடிவிட்டு இவள் வியர்த்து வீடு திரும்பிய ஒரு சாயங்காகலப் பொழுது அது...

    ஆச்சரியமாய் அப்பாவைப் பார்த்தவளை, அம்மாதான்,

    வந்தவ கை, கால் கழுவட்டுமே என்று அனுப்பி, குடிக்கப் பாலும் தந்தார்கள்.

    ஆனாலும் சாம்பவி அதைப் பரபரப்பாகத்தான் குடித்தாள். அப்பா தன்னிடம் என்ன பேசப் போகிறார் என்ற ஆர்வத்தின் கூடவே தன்னிடம் அப்பா ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசப் போகிறாரே என்ற பெருமிதமும்.

    அப்பாவின் அருகில் போய் உட்காரவும்தான் சூழலிலிருந்த இறுக்கத்தை அவளால் உணர முடிந்தது. தவிர, நான்கு பேரே உள்ள அவர்களின் குடும்பத்தின் ஒரு உறுப்பினர் அங்கே இல்லாத உறுத்தல்... அக்கா சாவித்ரி எங்கே போனாள்?

    அவர்களது வீடு விஸ்தாரமானதல்ல.

    கூடம், சமையலறை போக இரு சிறு அறைககளும் பின்புற தாழ்வாரமும்தான்.

    'நான் சொல்றதை கவனி நீ' என்று அப்பா அடங்கிய தொனியில் பேச்சை ஆரம்பிக்க, கூடப்பிறந்தவளுக்காய் அலைபாய்ந்த கண்களை, மனதை அடக்கி வைத்தாள்.

    ‘உன் அக்கா, கல்யாணம் செய்துக்க விருப்பப்படறா' என்ற அப்பாவின் தொனியில், சாம்பவிக்குத் தான் சந்தோஷப்படவா அல்லது வெறுமே சங்கட மெளனத்தோடு இருப்பதா என்று தெரியவில்லை.

    அக்கா சாவித்ரி தன்னை விட எட்டு வயதிற்கு மூத்தவள் - ஆக 22 வயது - அது கல்யாணத்திற்கு ஏற்ற வயதுதானே?

    பிறகேன் பெற்றவர்கள் முகத்தில் கல்யாண பேச்சிற்கான களையில்லை?

    அம்மா கூடத்து மின்விளக்கின் அடியில் சுவரில் ஒரு ஓவியம் போல சாய்ந்திருந்தார்கள். அரக்கு நிற பருத்திப் புடவையும், சந்தன மஞ்சள் ரவிக்கையுமாய் இருந்தவர்களின் மகத்தில் மெல்லிய சஞ்சலப் பூச்சு...

    பிறகு அத்தனை அம்சமாய் சாம்பவி தன் தாயைப் பார்த்ததில்லை.

    வருத்தங்கள் உடலின் வனப்பை உரித்தெடுத்து விடுகிறன.

    கல்யாணத்தின் ஒரு முக்கிய விஷயம் இவளுக்கு திடும்மென ஞாபகத்தில் எழ, கேட்டாள்...

    'மாப்பிள்ளை யாருப்பா?'

    'குமரப்பா. அடுத்த தெருவில் ஃபான்சி ஸ்டோர் வச்சிருக்கிற பையன்?'

    வந்த பதிலில் இவளுக்குத் திடுக்கென்றது.

    தன் அக்காவின் கணவனாய் அவனை நினைக்கவும் தோணவில்லை. இந்த குடும்பத்தின் ஐந்தாவது நபராய் ஏற்க மனம் கோணியது... அந்த வயதில் பார்க்க ரொம்ப சுமாரான ஆளு என்பதுதான் அவளில் எழுந்த முதல் எண்ணம்.

    இவர்கள் வீட்டில் எல்லாரும் பொலிவானவர்கள். தவிர படிப்பு தரும் கண்ணிய பாவனையும் உண்டு.

    அந்தத் தோரணையும் கூட இல்லாத குமரப்பா மீது அக்காவிற்கு என்ன ஈர்ப்பு?

    எப்படி வந்தது?

    பிறகு தன் சகோதரியை சாம்பவி தனியே பார்த்துப் பேச நேர்ந்த பொழுது மெள்ள கேட்டாள்...

    உனக்கு அவ... அவரைப் பிடிச்சிருக்காக்கா?

    அக்கா முகம் திருப்பிக் கொண்டு விசும்பினாள்.

    பிறகு இளையவள் மறுபடி அதேக் கேள்வியைக் கேட்கத் துணியவில்லை. அதற்கான பதிலும் கிடைக்கவில்லை.

    ஆனால் திருமணம் அமரிக்கையாய் நடந்தது.

    பழக பழக, குமரப்பாவிற்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்தப் பொருத்தமும் இருப்பதாய் தெரியவில்லை.

    காலை சதா ஆட்டியபடி உரக்கப் பேசுபவனின் முன்பு சாம்பவி உட்காருவதே இல்லை.

    அம்மாவும் ஒதுங்கி நிற்க, மாப்பிள்ளையை அப்பா தனியேதான் சமாளிக்க வேண்டியிருந்தது.

    ஆச்சரியம் என்னவெனில் அக்கா சாவித்ரி கூட தன் கணவனை நெருங்கி இழையவில்லை... நேசமாய் பார்த்து புன்னகைப்பதில்லை.

    பதினாறு வயதை எட்டிய சாம்பவியின் உயரமும் மெருகும் கூடியபோது, அக்கா, தங்கையை இழுத்து உட்கார வைத்து அடிக்கடி ஒதுவாள்...

    ஆம்பிளைங்களிடம் கவனமாய்... ஏன் ஒதுங்கியே நில்லு சாம்பவி. நெருங்க மாட்டாய்-ஆனா சும்மாவேனும் கூட ஏதும் பேச்சு தர வேண்டாம் என்ன?

    புரியாமல் நிற்கும் தங்கையின் தோளைப் பிடித்து சற்று குலுக்கி அதட்டுவாள்.. என்ன?

    'இல்லக்கா...'

    'அப்படியே ஏதும் இக்கட்டில் மாட்டிகிட்டா, பெரியவங்களிடம் எப்படி சொல்றதுன்னு திகைக்காதே. அக்காட்ட வந்து சொல்லிடு - சரியா?'

    அப்போது குழந்தை பவித்ரா பிறந்து அக்கா, பிறந்தகத்தில் இருந்த சமயம். ஓரளவு விவரமான வயது என்பதால் சாம்பவிக்கும் அக்கா அப்படி ஏதோ இக்கட்டில் சிக்கிதான் குமரப்பாவின் சம்சாரமானாள் என்ற சந்தேகம் அழுத்த விழுந்தது. பெற்றவர்களுக்கு அதிக விவரம் தெரிந்திருக்கக் கூடும்... அந்தக் கவலை அவர்களை அரித்திருந்தது.

    இதற்கெல்லாம் தன் முட்டாள்தனம்தான் காரணம் என்ற குற்ற உணர்வு சாவித்ரியின் ஆரோக்கியத்தையும் உருவ, சின்ன பவித்ராவிற்கு மூன்று வயது நிறைவதற்கு முன்பே அக்கா இல்லாமல் போய் விட்டாள்.

    அதிர்ச்சியில் ஆரம்பமான அல்சர், அவள் அதை கவனிக்காமல் விட்டதில் மேலும் புண்ணாகி அவளைச் சுருட்டி விழுங்கி விட்டது.

    அருமை மகளின் படத்திற்கு மாலை போட்டு விட்டு அதை தினம் தினம் பார்த்தபடி பெற்றவர்கள் நிம்மதியாய் சிரித்து வாழ்ந்துவிட முடியுமா?

    சாவித்ரிக்கு தலை நிரம்ப பூச்சூட்டிக் கொள்ள பிடிக்கும். அலங்காரங்கள் அவசியம். ஆக அடிக்கடி அருகிலிருந்த பேன்ஸி ஸ்டோர்ஸிற்கு போவாள். அங்கேதான் - அப்படித்தான் குமரப்பாவோடு பழக்கமாகியிருக்க வேண்டும்.

    அலங்கரித்து வந்தவளைப் பாராட்டினானோ... அல்லது விதவிதமாய் பரிசளித்தானோ... எப்படியோ அவள் வாழ்வில் பங்கு போட்டு பிறகு அதைப் பாழாக்கியும் விட்டான்.

    அதன் பிறகு இவர்கள் வீட்டில் யாரும் பூ வாங்கிச் சூடிக் கொள்வதில்லை.

    அக்கா இறந்தபின் குமரப்பா, தன் சின்ன மகளைத் தன்னோடு அழைத்துப் போவதைப் பற்றி பேச்செடுக்கவில்லை. மூன்றாம் மாதம் வந்தவன் தன் கடையை கர்நாட்டகாவிலிருக்கும் தன் ஊருக்கும் மாற்றுவதாயும் அங்கே தன் பெற்றவள் தனக்காய் குறித்து வைத்தப் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் தந்ததோடு சரி.

    அப்போதும் அப்பா பவித்ராவின் எதிர்காலம் பற்றிப் பேச, சாம்பவியை இப்படித்தான் அழைத்தார்.

    'இப்படி வந்து உட்காரேன் சாம்பவி... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்’ என்று!

    அம்மாவிற்கு அது கடும் அதிர்ச்சி.

    ‘என்னங்க சொந்த மகளைப் பற்றி கூட ஒரு கரிசனை இல்லாம இருக்கான்? இவனை நம்பி நம்ப சாவித்ரியைத் தந்தது பெரிய முட்டாள்தனம். ஏதோ புத்தி கெட்டு அவனோட சேர்ந்து சாவி, ரெண்டு படம் எடுத்ததும் நாலு கடிதாசி எழுதினதும், ஊர் உலகம் பார்க்காத தப்பா? நாம நம்ப பொண்ணுக்கு தைரியம் சொல்லி மீட்டிருக்கணும். அவன் அம்மா இவனுக்கு பொண்ணைக் குறிச்சு வைச்சதை கொஞ்ச முன்னமே செய்திருக்கக் கூடாதா? நம்ப பொண்ணு தப்பியிருப்பால்ல?’ என்று பொறுமினாள்.

    'நல்லவேளை ‘எம்மகளைத் தா'ன்னு குட்டி பவித்ராவை நம்மிடமிருந்து பிரிச்சுக் கொண்டு போகலையே? தப்பிச்சோம்னு இருப்போம்மா’ சாம்பவிதான் ஆறுதல் படுத்தினாள்.

    வாழ்வு மறுபடி சற்று சுமூகமாய் நகர ஆரம்பித்தது.

    ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்பு அப்பா மறுபடி இவளைப் பேச அழைத்தார்.

    இதயம் பதறத்தான் சாம்பவி தந்தையின் அருகே போய் அமர்ந்தது - அப்போது அம்மாவும் பவியும் வெளியே போயிருந்தார்கள். ஆக விஷயம் அவர்களில் ஒருவரைப் பற்றியா...?

    ‘என்னப்பா?'

    'அம்மாவை டாக்டரிடம் கூட்டிட்டுப் போனேண்டா...?’ அப்பா தயங்க

    Enjoying the preview?
    Page 1 of 1