En Yavana Rani
4.5/5
()
About this ebook
Read more from Kanchana Jeyathilagar
Kanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Ithu Enna Maayam..? Rating: 4 out of 5 stars4/5Aagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Manasellam Malligai Rating: 0 out of 5 stars0 ratingsMullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsVazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Ninaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Maaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsAdhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Brindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Kanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsKaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Mullai Panthal Rating: 5 out of 5 stars5/5Mannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Pagal Natchathirangal Rating: 5 out of 5 stars5/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Manakadhavai Thiranthu Vidu Rating: 5 out of 5 stars5/5
Related to En Yavana Rani
Related ebooks
Seettu Kattu Maaligai Rating: 5 out of 5 stars5/5Sugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Kanintha Mana Deepangalai! Part - 2 Rating: 5 out of 5 stars5/5Thaaiyin Mugamingu Nizhaladuthu... Rating: 5 out of 5 stars5/5Verenna... Verenna... Vendum Rating: 5 out of 5 stars5/5Nila Veliyil Rating: 4 out of 5 stars4/5Poo Malarntha Pothu...! Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Thirai Rating: 4 out of 5 stars4/5Kaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Shenbaga Poove Rating: 5 out of 5 stars5/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Natchanthirangalin Nadanam! Rating: 4 out of 5 stars4/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Kavitha Oru Kavidhai Rating: 5 out of 5 stars5/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Senbaga Poovum, Saaralum... Rating: 2 out of 5 stars2/5Idhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Thiruttu Payale Rating: 0 out of 5 stars0 ratingsAntha Chinna Pennin Snegam Rating: 1 out of 5 stars1/5Ninaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Ival Vera Maathiri.. Rating: 5 out of 5 stars5/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Kaaviyam Paadavaa Thendraley... Rating: 4 out of 5 stars4/5
Reviews for En Yavana Rani
6 ratings0 reviews
Book preview
En Yavana Rani - Kanchana Jeyathilagar
http://www.pustaka.co.in
என் யவன ராணி
En Yavana Rani
Author:
காஞ்சனா ஜெயதிலகர்
Kanchana Jayathilakar
For more books
http://www.pustaka.co.in/home/author/kanchana-jayathilakar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
என் யவன ராணி
1
அது வெகு சின்ன சமையலறை. ஆக கைக்கு எட்டிய தூரத்தில் இருந்தவற்றை வெகு சுலபமாய் எடுத்து, மசால் வடைக்கான மாவை திரட்டியவளை, வாசல்மணி அழைத்தது.
பாத்திரத்தின் விளிம்பில் கையில் ஒட்டியிருந்த மாவை வழித்தெடுத்த யவனா, கைகளை அரைகுறையாய் கழுவிக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.
அந்த அவசரத்திலும் பாதி விரிந்திருந்த தங்கையின் அறைக் கதவை மூடிவிட அவள் மறக்க வில்லை.
தங்கைதான் அதற்குள் வந்து விட்டாளோ?
'என் பிரண்ட்ஸோடு வருவேன்', என்று அறிவித்து விட்டுப் போன ஜீவனா இத்தனை சீக்கிரம் வீடு திரும்பும் வழக்கமில்லை. இருட்டிய பிறகுதான் அவளுக்குள் வீட்டின் ஞாபகம் எழும்!
யோசனையுடன் வாசல் கதவை கால்வாசி திறந்து பார்த்தவளின் உதடுகள் புன்னகைத்தன. பாதுகாப்பு சங்கிலியை விலக்கிக் கதவைத் திறந்தவள் வாயார வரவேற்றாள் -
சவிக்கா, வாங்க.
கையில் மூடியிட்ட சிறு பாத்திரத்துடன் நின்றிருந்த எதிர் வீட்டு சவீதாவின் முகம் யவனாவுடையதைப் போல மலரவில்லை. மாறாகக் கடுத்தது!
என்ன செய்திட்டிருக்கே யவா? ஞாயிற்றுக்கிழமையேனும் நிம்மதியாய் ஒரு குளியல், தூக்கம் இல்லாமல் என்ன வேலை? முகம் களைச்சுத் தெரியறது?
லீவ் நாளில்தானே ஏதேனும் ஸ்பெஷலாய் செய்யலாம்? அதான் வடை போடலாம்னு...
நா வெண் பொங்கல் சட்னி கொண்டாந்தேன். சூடாய் இருக்கறப்பவே சாப்பிடு.
"ஆக நீங்களும் சமையலறையில்தான் இருந்திருக்கீங்க சவீக்கா -
'நாளும் கிழமையும் நலிந்தோற் கில்லை.
ஞாயிற்றுக் கிழமையும் நங்கையருக் கில்லை'ம்ம்...? எனிவே தாங்க்ஸ்."
சிரிப்புடன் வந்தவளின் கையிலிருந்த பாத்திரத்தை வாங்கிய யவனா, அவளை உட்கார வைத்து ஃபேனை சுழல விட்டாள்.
அது இருக்கட்டும்... வடையெல்லாம் யாருக்கு?
நாங்க இருக்கறது ரெண்டே பேர்தானே? ஜீவனா தன் பிரண்ட்ஸைக் கூட்டிட்டு வர்ரேன்னா...
வாரத்தில் உனக்குன்னு கிடைக்கறது இந்த ஒரு நாள்தான். அதிலேயும் அவளுக்காய் ஓடாதே யவனா. ஜீவனா உன் தங்கைன்னாலும், மேஜர். கை நிரம்ப சம்பாதிக்கிறவளுங்கூட, வீட்டில் ஒரு துரும்பை அசைக்கிறதில்ல அவ...
என்ற சவீதாவின் கண்கள் ஜீவனாவின் அறைக் கதவைச் சற்று எச்சரிக்கையுடன் நோக்க, மற்றவள் சிரித்தாள்!
ஜீவா வீட்டில் இல்லை...
"
வழக்கம் போலத்தான்
- என்ற சவீதா மேலும் செளகர்யமாய் உட்கார்ந்து கொண்டாள்!
இருந்திருந்தால் இப்ப ஒரு பெரிய சண்டை ஆரம்பமாகி இருக்கும்...
குறும்பாய்ச் சிரித்த யவனாவை மற்றவள் சற்று பிரமிப்புடன் பார்த்தாள்.
உங்கிட்ட பலமுறை சொல்லியிருக்கேன்தான் - ஆனா எனக்குச் சொல்லி அலுக்கலை. உன் தங்கையை விட நீதான் 'மாடல்'லாய் இருக்கத் தோது. வெண்ணையாட்டம் குழையற உம்முகத்தில் நவரசமும் சொட்டுது. ஜீவனா உன்னில் பாதி அழகை வச்சிட்டு விளம்பரத் துறையில் துள்ளறா... மற்றபடி பெரிய திரையில் நாம பார்க்கும் அதே முகம், அசைவு, சிரிப்பை விளம்பரத்திலும் காண சலிப்பாயிடுது. உன் அசாதாரண அழகோடு நீ நின்னு... எதை வாங்கச் சொல்றியோ அதை எல்லாரும் மறுக்காம வாங்கிடுவாங்க...
ம்ம்... பலமுறை கேட்டுட்டேன் சவீக்கா இதை.
என்றவள், பேச்சைக் கேட்டபடியே போட்டு எடுத்த வடைகளை ஒரு தட்டில் வைத்து வந்தவளுக்கு நீட்டினாள்.
சவீதா கொண்டு வந்ததைத் தனக்கு ஒரு தட்டில் பரிமாறிக் கொண்டாள்.
என்னா மொறமொறப்பு - உப்பு காரமெல்லாம் கச்சிதம் - உன்னைப் போலவே! வெளியே போற இடத்துல அசைந்தபடி இருக்கச் சொல்லியிருக்கேன் உன்னை... ஞாபகம் இருக்குல்ல?
பின்னே? இல்லைன்னா என்னைப் பளிங்கு சிலைன்னு எண்ணி தூக்கிட்டுப் போயிடுவாங்க - போதுங்க்கா...
சிரிக்க முயன்றவளின் முகத்தில் நிறைய சோர்வு.
நிஜமாடி...
எல்லாரும் பிஸி சவீக்கா. யார் சும்மா நிக்கறா? அப்படி நிக்கறவங்களை யாரு பார்த்துக் கடத்தறது? எதற்கும் யாருக்கும் நேரமில்லை...
நீ சொல்றபடின்னால் உலகத்தில் கிசுகிசு, கேளிக்கை எல்லாம் இருக்குமா? சுவாரஸ்யமாய் பொழுது போக்கத்தான் எல்லாருக்கும் ஆசை. 'மால்'களில் இருக்கற கூட்டமெல்லாம் பொருட்களை வாங்கிக் குவிக்கறதுக்கா? ஒருத்தரை மத்தவர் 'ஆ'ன்னு பார்த்துக்கறதுக்குத் தானே - எம் பொங்கல் எப்படியிருக்குது?
உங்க மனசு போலவே குழைவாய்! என் சமையலைச் சாப்பிட்டு அலுத்திருச்சுக்கா. நெய்யிலே மிளகும் கூட மொறு மொறுப்பாய்... வறுபட்டது, அலாதி ருசி.
இருவரும் பேசியபடியே காபியும் கலந்து குடித்ததும் சவீதா எண்ணை பாட்டிலை எடுத்தபடி யவனாவை இழுத்து அமர்த்த, இளையவள் மறுத்தாள் -
இப்ப தலைக்கு எண்ணை தேய்ச்சு விட்டீங்கன்னா, குளிக்க நேரமில்லையே? ஜீவனா வந்திடுவா...
மாவைத் தயார் பண்ணிட்டீல்ல ? அவ வடை தட்டிப் போட்டு எடுக்கட்டும்.
அவளுக்கு அதெல்லாம் தெரியாதுக்கா...
சித்திரம் போல சமையலும் கைப்பழக்கந் தானேடி? நம்ப எல்லாரின் மூளையிலும் குக்கிங் - சிப் பொருத்தியா கடவுள் அனுப்பறார்? தாளிச்சு, கருக்கி, கிளறிக் கத்துக்கறதுதானே?
பேசியபடி சவீதா இவளது தலையில் தேய்த்து விட்ட எண்ணை சுகமாய் உள்ளிறங்கியது. அந்தக் குடியிருப்பின் சகக் குடித்தனங்களைப் பற்றி சில விஷயங்களைப் பேசியபடி, எண்ணெயூறி பளபளத்தக் கூந்தலை சுருட்டி வைத்தாள் சவீதா.
குளிச்சிடவாக்கா...?
- சிறு பெண் போல யவனா கேட்க, மூத்தவள் அதட்டினாள்.
சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது. இன்னும் அரை மணி நேரம் செல்லட்டும். அதுக்குள்ளே ஒரு முக்கியமான விஷயத்தை உங்காதுல போட்டுடறேன் நான்...
சவிதா செருமிக் கொள்ள, யவனாவிற்கு அது என்ன என்பதை சுலபமாகவே யூகிக்க முடிந்தது.
2
அவளது யூகம் தப்பவில்லை.
ஒரு நல்ல வரன் இருக்கறதாய் என் சித்தி சொன்னாங்க. உனக்கு ஓரளவு பொருந்தும்னு தோணுது, யவனா. சென்னைப் பையன்தான் - பார்ப்போமா? நீங்க பார்த்து பேசின பிறகு ஒரு முடிவுக்கு வரலாம்.
ஆரம்பிக்கவே வேணாம் சவீக்கா...
தீர்மானமாய் சொன்னாள் யவனா. இதுவரை அவள் குரலிலிருந்த தணிவும் குழைவும் இப்போதில்லை.
ஏதோ சினிமாவில உச்சத்தில் இருக்கற நட்சத்திரமாட்டம் பேசற? தங்கைக்காக தேய்ந்து தியாகம் செய்ற கதையெல்லாம் இப்ப சினிமால கூட எடு படறதில்லை. ஜீவனா இப்பவே தன் காலில் நிக்கறா... தோணினா வீடு வர்றா... இல்லை ஷூட்டிங்னு சொல்லி மாயமாயிடறா அவளுக்காக நீ...
"எங்களுக்கு வேற யாரிருக்கா சவீக்கா? பெத்தவங்களும் இல்லாத நிலையில் நாங்க ஒருவருக்கொருத்தர் ஆதரவாய் நிக்கணுமில்லையா?