Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sugamana Puthu Raagam Part - 1
Sugamana Puthu Raagam Part - 1
Sugamana Puthu Raagam Part - 1
Ebook365 pages4 hours

Sugamana Puthu Raagam Part - 1

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Got “Izanthamilaringnar” award from Bharathiyar Manavar Tamil Mandram at 2001. Participating in Children’s Science Congress Conference in 2003. Submit Project in National Children’s Science Congress in 2003 under the title “ FOOD SYSTEMS – Towards Nutrition for all". Got 1st prize in Zone Level Drawing Competition by Temple Jaycees in 2005. District Level 2nd Prize in Tamil Poem Writing in 2006. Medical Transcription Training Academy’s EXCELLENCE AWARD Shield in 2007. District Level Prize in Tamil Short Story Writing in 40th National Library week Function.
Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580110504746
Sugamana Puthu Raagam Part - 1

Read more from Shrijo

Related authors

Related to Sugamana Puthu Raagam Part - 1

Related ebooks

Reviews for Sugamana Puthu Raagam Part - 1

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sugamana Puthu Raagam Part - 1 - Shrijo

    http://www.pustaka.co.in

    சுகமான புது ராகம்!

    பாகம் - 1

    Sugamana Puthu Raagam

    Part - 1

    Author:

    ஸ்ரீஜோ

    Shrijo

    For more books

    http://www.pustaka.co.in/home/author/shrijo-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில்

    குமின் சிரிப்பும்

    பனித்த சடையும் பவளம் போல்மேனியில்

    பால் வெந்நீரும்

    இனித்த உடன் எடுத்த பொற்பாதமும்

    காணப்பெற்றால்

    மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!

    என்று அந்த வீட்டின் பூஜையறையில் மனமுருக பவித்ராவின் குரல் ஒலித்துக்கொண்டு இருந்தது.

    வழக்கம் போல மனைவியின் அழகைக் கண்களில் பருகியபடி பேப்பரைக் கைகளில் வைத்துக்கொண்டு சிவேஸ்வர் ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்திருந்தார்.

    பூஜையை முடித்துக்கொண்டு எழுந்து வந்த பவித்ரா,

    இங்க தான உட்கார்ந்து இருக்கீங்க? பூஜையறைக்கு வந்து நின்னாதான் என்ன? என்று கேட்டுக்கொண்டே அவருக்கு குனிந்து திருநீறு, குங்குமம் வைத்துவிட ஆரம்பித்தார்."

    எனக்கும் சேர்த்து வேண்டிக்க நீ இருக்க, நான் எதுக்கு வந்து வேண்டிக்கிட்டு?

    அப்ப எனக்கு யார் வேண்டிப்பாங்க?

    நான் இருக்கற வரை, உன் மேல சிறு தூசு கூட படாதுடி... என்று அவரது கன்னம் தட்டியவரைப் பார்த்து பதறியவர், சுற்றும் முற்றும் பார்வையை ஓடவிட்டுக்கொண்டே,

    வயசாச்சேன்னு இருக்கா? ஹால்ல உட்கார்ந்துகிட்டு என்ன வேலை பார்க்கறீங்க? என்று கேட்க,

    ஏன்டி, உன் மகளுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து நீ பண்ற அலும்பு தாங்கலைடி

    எது? நான் பண்றது அலும்பா? இருங்க.. ஊர்ல இருந்து உங்க பேத்தி வரட்டும், நீங்க ரெண்டு பேரும் கூத்தடிப்பீங்கல்ல, அப்ப பேசிக்கறேன்

    இதே ஹால்ல உன்னை நான் எப்படி எல்லாம் கொஞ்சி இருக்கேன்... அன்னிக்கெல்லாம் பேசாம சும்மா நின்னுட்டு, இந்த வயசான காலத்துல இப்படி பன்றியேடி?

    இன்னும் அதே நினைப்புல இருக்காதிங்க, நமக்கு அறுபதாம் கல்யாணமே முடிஞ்சுடுச்சு...

    உன்னை கூட்டிக்கிட்டு அடுத்த வாரம் கொடைக்கானல் போலாம்ன்னு நினைச்சேன்

    போவிங்க... போவிங்க... ரெண்டு பேரையும் ஹில் ஸ்டேசன் பக்கம் தலை வைச்சு படுக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க... மறந்துடாதிங்க

    ஒரு காலத்துல... சிவா.. சிவா.. ன்னு சொல்லியே கூட்டிக்கிட்டு போனா... இப்ப நாம கூப்பிட்டா கூட வர மாட்டிங்கறா?

    நக்கலா... அப்புறம் டீச்சர் வேலையை ஆரம்பிச்சேன்னு வைங்க... நீங்க அவ்ளோதான்

    இருவரும் செல்ல சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் போதே, அங்கு அவர்களின் புதல்வன் மான்வித் ஆஜரானான்.

    மார்னிங் ம்மா, மார்னிங் பபா

    என்னப்பா? இன்னிக்கு ஜாகிங் போகலையா?

    இல்லப்பா... நைட் வர ரொம்ப லேட் ஆகிடுச்சு, வந்தும் அந்த புளோரிடா கிளைன்ட் கூட ஒரு வீடியோ கான்பரன்ஸ் இருந்துச்சு

    உங்க அப்பா ஓடி ஓடி சேர்த்து வைச்சது பத்தாதுன்னு, நீயுமா? ஒழுங்கா இருக்கறதை மேனேஜ் பண்ணுங்க, அதுவே இன்னும் பல தலைமுறைக்கு போதும்

    மாம்... தொழில் வட்டாரத்துல, அப்பா நம்பர் 1. இன்னிக்கு நான் நம்பர் 1. அந்த பேரை நான் என்னிக்கும் யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டேன், நாளைக்கு என் பையனும் நம்பர் 1 தான்

    இப்படியே பேசிப்பேசி வாயை அடைச்சிடுங்க, உங்கப்பா ஓடி ஓடி முக்கிய நாள் பண்டிகைக்கு கூட வீடு தங்க மாட்டார், நீயும் அப்படியே இருக்க

    விடுங்கம்மா... மான்வி போன் பண்ணாளாப்பா?

    இல்லைப்பா... இன்னிக்கு ஏன் லேட்ன்னு தெரில?

    ஆறுமணி சங்கு, கரைக்டா ஊதுமே, இன்னிக்கு என்னாச்சுன்னு தெரிலையே?

    டேய் அவ கல்யாணம் ஆகி போனாலும், இன்னும் மறக்காம எனக்கு போன் பண்ணி பேசறா! உனக்கு பொறாமை...

    அப்பா... ஆனாலும் நீங்க அக்காவையும் சரி, அவளையும் சரி விட்டே குடுக்க மாட்டீங்கறிங்க, அம்மா பாருங்கம்மா

    ரெண்டு பேரும் தினமும் இந்த பஞ்சாயத்தை பேசலைன்னா அன்னிக்கு பொழுதே ஓடாதே உங்களுக்கு, அவ கல்யாணம் ஆன பொண்ணு, நேத்து பாப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னா, விடிய விடிய முழிச்சிருந்து இருப்பா, கண்ணசந்து தூங்கி இருப்பா... ரெண்டு பேரும் போயி வேலையைப் பாருங்க

    அம்மா... மானு அக்கா பாப்பா ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு இந்த லீவுக்கு வர்றாளாம். விசா கன்பார்ம் ஆகிடுச்சாம்

    அப்பா... இன்னிக்கு நல்லது சொல்லிருக்கடா... உனக்கு இன்னிக்கு ஸ்பெசல் பாயாசம்

    ம்ம்... நடத்துங்க... நடத்துங்க...

    எங்கடா உன் பொண்டாட்டி? இந்நேரம் கீழ வந்து இருப்பா? ஆளைக் காணோம்

    நேத்து நைட் ஒரு அர்ஜென்ட் கேசுன்னு ஓடுனா... என்னாச்சுன்னு தெரில

    இங்க பாரு, முதல்ல போயி, தனு குட்டியைக் கூட்டிக்கிட்டு வா... பாப்பு இல்லாம வீடே வீடா இல்லை

    நானும் அத்தைய வந்து இங்க இருக்க சொல்றேன், எங்க கேட்கிறாங்க? பாப்பாவை விடவும் அவங்களுக்கு மனசில்ல

    உங்கத்தைகு உங்களை விட்டா யாரு இருக்கா? ஒரே ஊர்ன்னா கூடப் பரவாயில்லை, அடிக்கடி வந்து பார்த்துக்கலாம்.... நீ முதல்ல மனிஷாக்கு போன் பண்ணி எப்ப வர்றான்னு கேளு? இல்ல சாப்பாடு குடுத்துவிடவான்னு கேட்டு சொல்லு

    சரிம்மா... என்றவாறே அவன் எழுந்து செல்ல,

    பவித்ரா சமையலறைக்குள் நுழைந்தார்.

    சரியாக ஒன்பது மணியளவில், மான்வித்தும், சிவாவும் உணவு மேஜையில் ஆஜராகினர்.

    அப்பா... இன்னிக்கு அந்த காண்ட்ராக்ட் நமக்குத்தான் கிடைக்கும், எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன், ஆனாலும் டென்ஷனா இருக்கு

    மானவ் கண்ணா... டென்ஷன் நம்மை யோசிக்கவிடாம பண்ணும், முதல்ல அதைத் தூக்கி தூரப் போடு. ரிலாக்ஸா, கூலா இரு... அப்பத்தான் நம்மளால எல்லாமே, எல்லாத்தையுமே நமக்கு சாதகமா மாத்திக்க முடியும்...

    இந்த குரு, சிஷ்யன் வேலையெல்லாம் இந்த இடத்துல அலவ்ட் இல்லைன்னு சொல்லி இருக்கேன்ல... பேசாம சாப்பிடுங்க என்ற பவியின் அதட்டலில்,

    ஓகே ப்பா... என்று தந்தைக்கு பதிலும், ஓகே ம்மா... என்று தாயின் அதட்டலுக்கும் பதில் சொல்லியவன், உணவில் கவனமாக,

    மனிஷாக்கு போன் பண்ணியா? என்ன சொன்னா?

    எமெர்ஜென்சி கேஸ் முடிய ரொம்ப லேட் ஆகிடுச்சாம், அதான், வழக்கம் போல நம்ம ஹாஸ்பிட்டல்லையே ஸ்டே பண்ணிக்கிட்டா, அங்கேயே பிரேக்பாஸ்ட், லஞ்ச் முடிச்சுக்கிறாளாம். ஈவினிங் சீக்கிரமா ஓ.பி. முடிச்சுட்டு வர்றாளாம்.

    சரிப்பா... முடிஞ்சா நீ போய் பிக்கப் பண்ணிக்கிட்டு வா... நீங்க ரெண்டு பேரும் ஓடினது பத்தாதுன்னு இப்ப அவ ஒரு பக்கம் ஓடறா?

    அம்மா... பீ கூல்... ஈஸ்வர் குரூப் ஆப் கம்பெனிஸ யாராலையும் அசைக்கமுடியாதபடி நாங்க உழைக்கிறோம்... நாளைக்கு உங்க பேரப்பசங்க உழைப்பாங்க... நீங்க எப்படி நம்ம ஸ்கூல் மேனேஜ்மென்ட் பார்த்தீங்க, என்டயர் கம்பெனிஸ்சோட மேனேஜ்மென்ட், வொர்கர்ஸ் வெல்பேர் அசோசியேஷன் பார்த்தீங்க... பார்க்கறிங்க... அப்படித்தான் இதுவும்...

    அன்னிக்கு என் அம்மா சொன்னது என் காதுல விழல... இப்ப நான் சொல்றது உங்க காதுல விழாது... நாளைக்கு முடி நரைச்சு உட்காரும் போது தெரியும்

    அம்மா... நாங்க சாப்பிட்டு முடிச்சுட்டோம்... இன்னிக்கு முக்கியமான கான்டிராக்ட்... அதோட ஒரு டென்டர்.... வழக்கம் போல ரெண்டையும், நாங்க எடுத்துடுவோம்... நீங்க வழக்கம் போல ஒரு ஸ்வீட் செஞ்சு வைங்க... பாய் என்ற மான்வித் கையை கழுவிக்கொண்டு ஹாலுக்கு செல்ல,

    பவி... ஏன் இவ்ளோ கவலைப்படற?

    உங்களுக்கு இன்னும் ரெஸ்ட் கிடைக்கலைன்னு எனக்கு ஒரே கவலையா இருக்கு? பசங்க யாருமே அதை மைன்ட் பண்ண மாட்டீங்கறாங்க

    இங்க பாரு, நம்ம பிஸினஸ் எல்லாரும் பாத்துக்கிட்டோம், இப்ப பொண்ணுங்க மேரேஜ் ஆகி போயிட்டாங்க, அவங்களுக்கு அவங்க வொர்க் பார்க்கவே நேரம் இல்லை, நாமதான் நம்ம கம்பெனிய பார்க்கணும், மனிஷா ஹாஸ்பிட்டல் பார்க்கிறதால எங்களுக்கு அந்த டென்ஷன் இல்லை. போட்டி இல்லாத தொழில் இல்லை, மான்வித் இன்னும் கத்துக்கவேண்டியது நிறையா இருக்கு. கோபக்காரன் வேற, சட்டுன்னு கோபம் வந்துடுது, அதுல டென்ஷன் ஆகிடறான், அதைக் கன்ட்ரோல் பண்ணி பழகிட்டான்னா நான் நிம்மதியா வீட்ல இருப்பேன் என்று கைகழுவிக்கொண்டு இருந்தவரின் அருகில் சென்று நின்றவர்,

    அப்பாவைக் கொண்டு பிறந்த பையன், கோபம் வராம இருக்குமா? போங்க சிவா என்றவரின் புடவை முந்தானையில் கையைத்துடைத்தவர்,

    மனைவியின் தோளில் கையைப் போட்டுக்கொண்டே அவரை ஹாலுக்கு அழைத்து வந்தார்.

    நேரத்துக்கு சாப்பிட்டுட்டு, நிம்மதியா தூங்கு, அடுத்த வாரம் தனு வந்தா உனக்கு நோ ரெஸ்ட்... என்று கையில் போனை எடுத்துக்கொண்டு கிளம்பியவர்,

    போகலாமா மானவ்?

    போகலாம்ப்பா...

    பை மா

    பை மானவ்

    இருவருக்கு கையசைத்து விடை கொடுத்தவர், அன்றைய வீட்டு வேலைகளில் மூழ்கினார்.

    இவர்களின் மூத்த புதல்வி, மானசா ஒரு மூளை மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர், லண்டனில் படிக்கும் போது உடன் படித்த பிரகாசுடன் காதல் கொண்டு, இரு வீட்டு சம்மதத்துடன், மணம் முடித்து, லண்டனிலேயே செட்டில் ஆகிவிட்டாள்.

    இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், இரட்டையர்கள், ஐந்து வயாதாகிறது.

    இருவரும் அங்கிருக்கும் பிரபல மருத்துவமனையில் வேலைக்குச் செல்ல, பிரகாஷின் பெற்றோர் அவர்களுக்கு உதவியாக அவர்களுடனேயே செட்டில் ஆகிவிட்டனர்.

    அடுத்த மகள், மான்வி நிர்வாகம் மற்றும் மேலாண்மை பற்றி படித்தவள், மானவுக்கு சரிசமமாக ஈஸ்வர் குரூப்பைக் கட்டி ஆண்டவள், குணத்திலும், தொழில் திறமை மற்றும் அறிவில் தந்தையையும், உருவத்தில் அன்னையையும் வார்ப்பாகக் கொண்டிருந்தவள்.

    ஒரு பிஸினஸ் மீட்டில் அவளைப் பார்த்த, தர்மானந் ஜெயின் முறைப்படி சிவேஸ்வரை அணுகி, அவரது மகன் அதிவீர் ஜெயின்னுக்கு மணம் பேச, சிவாவும் சம்மதம் தெரிவிக்க, அவர்களது திருமணம் இனிதே முடிந்தது.

    அவர்களது குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம், அன்பான குடும்பம், மூத்த மருமகளாக குடும்பப் பொறுப்புடன் கூடவே, அவர்களது தொழில் பொறுப்பையும், சிவா அவளுக்குத் திருமண பரிசாக, அங்கு உருவாக்கித்தந்த தொழில்களையும் பார்த்துக்கொண்டு மும்பையிலேயே செட்டிலாகிவிட்டாள்.

    மொத்த குடும்பமும் அவளைத் தலைப்பிரசவத்திற்கு கூட திருச்சி அனுப்பவில்லை. அவர்களே பார்த்துக்கொண்டனர், பவி தான் ஒரு மாதம் சென்று அங்கு தங்கிவிட்டு வந்தாள்.

    இவர்களுக்கு ஒரு மகள், பெயர் நிடாலி ஜெயின், மூன்று வயதாகிறது.

    அடுத்தது மானவ், அவன் படித்தது லண்டனில், மானசாவின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவன் படித்தது எல்லாமே அங்குதான். அங்கு சென்று நிர்வாகம் மற்றும் மேலாண்மைப் பற்றி படித்தவன், இங்கு தந்தையுடன் இணைந்து தொழில்களைப் பார்த்துக்கொள்கிறான்.

    மானவ்க்கு பவி அவளது நெருங்கிய தோழியான நித்தியாவின் மகளையே மணமுடித்து வைத்தார். நித்யா மானஷாவின் மீது கொண்ட அன்பின் காரணமாக மகளுக்கு மனிஷா என்று அவளது பெயரை ஒத்தே பெயர் வைத்து இருந்தார்.

    மனிஷா பிறந்த பொழுதே, பவியும், நித்யாவும் மானாவுக்குத் தான் மனிஷா என்று பேசிவைத்து, அதை உறுதி செய்யும் பொருட்டு, இருவரையும் உறவு முறை சொல்லியே அழைத்து வந்தனர்.

    நித்யாவின் கணவர் மனிஷா, பன்னிரெண்டாவது படிக்கும் போது ஒரு விபத்தில் காலமாகிவிட, மனிஷாவின் கல்விப்பொறுப்பை சிவா ஏற்றுக்கொண்டார்.

    படிப்பு முடிந்து வந்ததும் திருமணமும் செய்து வைத்து, அவர்களது மருத்துவமனை நிர்வாகத்தை அவளுக்கு ஒத்துக்கிவிட்டு சிவா ஒதுங்கிக்கொண்டார்.

    இவர்களுக்கு இரண்டு வயதில் தனுஸ்ரீ என்ற மகள்.

    மொத்த குடும்பமும் அன்பான குடும்பமாக, அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

    கார் நேராக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குச் சென்றது.

    திருச்சியின் பெரும் புள்ளிகள், அரசியல் கட்சி பிரபலங்கள் பலர் டெண்டர் முடிவு தெரிவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அறையில் குழுமி இருந்தனர்.

    அவர்களில் அனேகம்பேர் சிவாவைக் கண்டதும் எழுந்து நின்று, மரியாதை செலுத்தினர்.

    பாதிபேர் தங்களுக்கு சலசலக்க ஆரம்பித்தனர்.

    ஈஸ்வர் வந்துருக்கார்

    ஆமாமா... இன்னிக்கு எப்படியும் டென்டர் ஈஸ்வர்க்கு தான்

    இந்த டென்டர் நமக்கு கிடைக்காது

    முன்னாடியே தெரிஞ்சு இருந்தா, நாம டென்டர் அனுப்பியே இருக்க வேண்டாம்

    ஊருக்கே நல்லது பண்ற மனுஷன், இதை மட்டும் விட்டு வைப்பாரா?

    இதுல ஈஸ்வர் குரூப் கலந்துக்கலைன்னு சொன்னாங்களே

    விடுப்பா... நமக்கு எப்படியும் அந்த சிமென்ட், கம்பி டெண்டர் கிடைக்கும்

    இவ்வாறாக அந்த இடமே ஈஸ்வர் உள்ளே நுழைந்த நொடியில் சோபையிழந்து காணப்பட்டது.

    ஒருவாராக டெண்டர் ஆரம்பமானது. திருச்சியில் உள்ள முக்கிய மேம்பாலங்கள் சீரமைப்பு மற்றும் புது மேம்பாலங்கள் கட்டும் பணி, கூட்டம் அதிகமுள்ள பொது இடங்கள், பள்ளிகள் அருகே சாலையைக் கடக்க, சிறு மேம்பாலங்கள் அமைத்தல் மற்றும் அதற்கு தேவையான கட்டுமானப்பொருட்களுக்கான டெண்டர் அது.

    மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஐவர் அடங்கிய குழு ஏற்கனவே டெண்டர்களை பரிசீலித்து முடிவெடுத்திருந்தன.

    திருச்சி மாவட்ட ஆட்சியர் டென்டர் முடிவுகளை வெளியிட்டார்.

    "அனைவருக்கும் வணக்கம்,

    நமது திருச்சி மாவட்டத்தில் உள்ள சாலைகளை புணரமைத்து, மேம்பாலங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் ஆணை பிறப்பித்ததை அடுத்து, புது டென்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தோம்.

    அதன்படி முதலில் தரமான கட்டுமானப்பொருட்களுக்கான டென்டரை இப்பொழுது அறிவிக்கின்றோம்.

    கம்பி, சிமென்ட் ஆகிய இரண்டு பொருட்களுக்கும், நேரடித் தயாரிப்பாளர்கிட்ட டென்டர் கேட்டு இருந்தோம். அதன் படி, அரசாங்கம் நிர்ணயம் செய்த விலையை விட குறைந்த விலைக்கு, தரமான பொருட்கள் உற்பத்தி செய்து தர டென்டர் கோரப்பட்டு இருந்தன. அதில் ஒரு நிறுவனத்திற்கு இந்த இரண்டு பொருட்களுக்குமான டெண்டர் அளிக்கப்படுகிறது.

    அதாவது ஒரு நிறுவனமே இந்த இரண்டு டெண்டர்களையும் எடுத்து செயல்படுத்த இருக்கிறது.

    மேலும், இந்த நிறுவனம், டென்டர் தொகையை நியாயப்படுத்தி, தெளிவான திட்ட அறிக்கையும் சமர்பித்துள்ளது. அதனை ஆராய்ந்து தான், எங்கள் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

    அதன்படி, கம்பி மற்றும் சிமென்ட் இரண்டு பொருட்களுக்குமான, டென்டர் பிரித்வி குரூப் ஆப் கம்பெனிஸ்க்கு அளிக்கப்படுகிறது.

    அடுத்ததாக, சாலை புணரமைப்பு, மற்றும் மேம்பாலங்கள் கட்டும் பணிக்கான டென்டரும் பிரித்வி குரூப் ஆப் கம்பெனிஸ்க்கு அளிக்கப்படுகிறது.

    இது நன்றாக உங்களது திட்ட அறிக்கை மற்றும் நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் அனைத்தையும் ஆராய்ந்து நாங்கள் எடுத்த முடிவு. அனைவரும் பொறுமையாக கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்"

    மாவட்ட ஆட்சியர் நகர்ந்த அடுத்த நொடி, மொத்த கூட்டமும் சிவாவைத்தான் திரும்பிப்பார்த்தது.

    சிவாவோ எவ்வித அலட்டலும் இல்லாமல், அங்கிருந்து வரும்போது இருந்த அதே புன்னகையுடன் எழுந்து செல்ல, மான்வித்தோ ஏமாற்றமும், தோல்வியும் நிறைந்த முகத்தோடு அவர் பின்னே சென்றான்.

    ஈஸ்வர் குரூப் ஆப் கம்பெனிஸ்ல், சிவாவின் அறையில்,

    அப்பா... எப்படிப்பா? எப்படிப்பா நம்ம கையை விட்டு போச்சு?

    மானவ், வெற்றி மட்டுமே நமக்கு கிடைச்சுக்கிட்டு இருந்தா, வாழ்க்கை ஒரே சலிப்பாயிடும், தோல்வியும் அப்ப அப்ப வேணும்

    எப்படிப்பா உங்களால இவ்ளோ ஈசியா எடுத்துக்க முடிஞ்சது?

    நான் தோல்விகளைக் கண்டு என்னை செதுக்கிக்கிட்டு வந்தவன், இந்த ஆறேழு வருசத்துல தான் தோல்விங்கற ஒன்னை நான் சந்திச்சது இல்லை, ஆனா அதுக்கு முன்னாடி நிறையா சறுக்கி இருக்கு

    என்னால ஒத்துக்க முடியலைப்பா... நான் கோட் பண்ணி இருந்தாக் கூட பரவாயில்லை, ஆனா நீங்க பண்ணியும் தப்பாகிடுச்சே

    அதென்ன நீங்க பண்ணி...... நான் பண்ணி.... யார் பண்ணாலும் அதேதான்

    என்னால ஏத்துக்கவே முடியலைப்பா

    மானவ், ஒரு விஷயம் நல்லா நியாபகம் வைச்சுக்கோ, ஏமாற்றமும், தோல்வியும் நம்ம முகத்துல என்னிக்குமே காட்டக்கூடாது. அது தான் நமக்கு பெரிய தோல்வியே

    .........

    இன்னிக்கு நான் சந்தோசமா வந்தேன், எதுக்கு, மறுபடியும் எனக்கு கத்துக்க ஒரு வாய்ப்பு கிடைச்சதுக்கு... ஆனா நீ எப்படி வந்த? முழுக்க முழுக்க ஏமாற்றம் நிறைஞ்ச முகத்தோட... இதுதான் நம்ம எதிரிக்கு வேணும்... நம்ம தொங்கிப்போன முகத்தைப் பார்க்க ஆசையா காத்துக்கிட்டு இருக்கிறவன்கிட்ட போயி நீயே முகத்தைக் காட்டக்கூடாது

    சரிப்பா... எனக்கு நீங்க சொல்ல வர்ற அர்த்தம் புரியுது

    இப்ப நீ இந்த விஷயத்தை பொறுமையா யோசிச்சு பாரு

    சில நிமிடங்கள் சிந்தனை செய்தவனின் முகத்தில் சிறு வெளிச்சம் படர்ந்தது,

    புரிஞ்சுதுப்பா

    என்ன புரிஞ்சுது

    இந்த டென்டர் மட்டுமில்ல, முதல்ல இருந்த ரெண்டு டென்டர், அதாவது, கம்பி, சிமென்ட் டென்டர் எடுத்ததும் அதே கம்பெனி. சோ அவங்க நம்மை விட பெஸ்ட் அவுட்புட் தர்ற மாதிரி கோட் தந்து இருப்பாங்க

    தட்ஸ் இட்... சிம்பிள் மை டியர் பாய்... இது தான் ஆட்டம்...

    புரிஞ்சுதுப்பா... இப்ப நாம ஒரு ஸ்டீல் பாக்டரியோ? இல்லை சிமென்ட் பாக்டரியோ ஆரம்பிக்க முடியாது... அதுக்கு முதலீடு நம்ம கைல இருந்தாலும், நாம அதை ஸ்டடி பண்ணி, ஸ்டார்ட் பண்ணி மெயின்டெயின் பண்ணறது இப்ப இருக்கற சூழல்ல ரொம்ப கஷ்டம். சோ அடுத்த டென்டர் பார்த்துப்போம்

    அவ்ளோதான் மானவ்.. இது தான் பிசினஸ்... பிரித்வி குரூப்ஸ் பத்தி விசாரிச்சு வை, எனக்கு அவங்களைப் பத்தின டாகுமென்ட்ஸ் இன்னிக்கு ஈவ்னிங் என் டேபிள்ல இருக்கனும்.

    பண்ணிடறேன்ப்பா... அவங்க கன்ஸ்ட்ரக்ஷன் நிறையா பிராஜெக்ட்ஸ சென்னை, பெங்களூர், திருநெல்வேலி, கோவை, சேலம், மதுரை, ஈரோடு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்கள்ல சக்சஸ்புல்லா பண்ணிக்கிட்டு இருக்காங்க, நமக்கு மெயின் காம்படீட்டர் இன் சச் சிட்டீஸ்

    எஸ்.. வீ வில் டூ டீப் அனலைஸ் அபவுட் தெம்.

    ஓகே ப்பா

    அதே நேரம் அவர்களது அறைக்கதவு தட்டப்பட்டது,

    மே ஐ கமின் சார்?

    எஸ் ரகு.. உள்ள வா

    மார்னிங் சார்... மார்னிங் தம்பி

    மார்னிங் ரகு

    மார்னிங் அங்கிள்

    உட்கார் ரகு

    தேங்க்ஸ் சார்

    கான்டிராக்ட் ஓகே ஆகிடுச்சா?

    சார்.. அது வந்து? என்று ரகு தயங்க,

    யாருக்கு போச்சு? பிரித்வி குரூப்ஸ்க்கா?

    சார்... என்ற ரகுவின் முகத்தில் ஆச்சர்யம் மின்னியது.

    என்ன ரகு இத்தனை வருஷமா என் கூட இருக்கற, என்னை இன்னும் புரிஞ்சுக்கலியா?

    அதுக்கு இல்லை சார்... பிரித்வி குரூப்ஸ்ன்னு சரியா சொன்னிங்களே அதான் கேட்டேன்

    நமக்கு எதிரிங்க இருக்காங்கதான், பட் இன்னிக்கு லெவலுக்கு என் கூட மோத கொஞ்சம் பயப்படுவாங்க, குறிப்பா இந்த கான்டிராக்ட் எடுக்க நாம மட்டும் தான் முயற்சி செய்தோம், அதே நேரம் நாம இதுல இன்வால்வ் ஆனது தெரிஞ்சதும் மத்தவங்க விலகிட்டாங்க... சோ ஒன் பிளஸ் ஒன்ன்னு கணக்கு பண்ணினா நமக்கு இருக்கற ஒரே ஆப்ஷன் பிரித்வி க்ரூப்ஸ் தான்

    எஸ் சார்... அந்த கம்பெனி பத்தி தரவா விசாரிச்சுட்டேன், சேர்மேன் கம் எம்டி தான் பிரித்விராஜ், அவருக்கு வேர்ல்ட் முழுக்க பிரான்ச் இருக்கு, ஈச் அண்ட் எவ்ரி இம்பார்டேன்ட் டிஸ்ட்ரிக்ட் இன் ஆல் ஓவர் வேர்ல்ட், அவருக்கு பிரான்ச் இருக்கு, ஏஜ் தர்ட்டி டூ, பர்சனல் டீடைல்ஸ் கிடைக்கல, கன்ஸ்ட்ரக்ஷன், ஹோட்டல்ஸ், ஹாஸ்பிட்டல்ஸ், ஸ்கூல்ஸ், டிராவல்ஸ், மானுபாக்ட்சரிங் யூனிட் அப்படின்னு ஏகப்பட்ட பிசினஸ், கூடவே இந்தமுறை ஐ.பி.எல் டீம் வாங்கப் போறதா ஒரு பேச்சு இருக்கு

    .........

    ஒரு ஆர்டிகல் படிச்சேன், அதுல அவர் ஐந்து வயசுல இருந்து தொழில் கத்துக்கிட்டதா இருக்கு, ஒரு விஷயத்துல இறங்கினா, அதைப்பத்தி தெளிவா யோசிச்சு தான் இறங்குவாராம், சோ இதுவரைக்கும் தோல்வி இல்லை

    .........

    ஒரு இடத்துல ஒழுங்கா இருக்கறது இல்ல, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடத்துல இருக்கார், ஈவன் சின்ன பிரான்ச் கூட விட்டு வைக்கிறது இல்லை. இருந்த இடத்துல இருந்தே மொத்த நிர்வாகத்தையும் மெயின்டைன் பண்றார்.

    .........

    அவரோட நிர்வாக அதிகாரிகள் எல்லாருமே நேர்மையானவங்க, நம்பிக்கையானவங்க, அதுக்கு ஏத்த மாதிரி சம்பளம், வீடு, கார், மெடிக்கல் அலவன்ஸ், பசங்க படிப்புச்செலவு, கூடவே அவங்க திறமை மற்றும் அந்த இயர் அவங்க கம்பெனி அவுட் புட் வைச்சு பிராபிட்ல பர்சென்டேஜ் தர்றார். இந்த சலுகை கடைநிலை ஊழியர் வரைக்கும் இருக்கு

    .........

    இதை விட முக்கிய விஷயம், நம்மகிட்ட இருந்து ரீசன்டா விலகின ஸ்டாப்ஸ் இன்குளூடிங் மார்கெட்டிங் ஸ்டாப்ஸ் இப்ப வொர்க் பண்றது அங்கதான்.

    .........

    இன்னொரு சாக்கிங் நியூஸ், இந்த முறை நம்ம கன்ஸ்ட்ரக்ஷன், ஹோட்டல் அசோசியேஷன் ரெண்டோட பிரசிடென்ட் எலக்சன்ல உங்களை எதிர்த்து போட்டியிடப்போறார்.

    அப்பா...

    டென்ஷன் ஆகாத மானவ், இது வரைக்கும் நீ மோதியது சாதாரண ஆட்கள், இப்பத்தான் நீ களத்துல இறங்கி கத்துக்க உண்மையான தொழில் வட்டார எதிரி உனக்கு கிடைச்சு இருக்கான். இனி தான் நீ படிக்கப்போற, பரிட்சை எழுதப்போற அண்ட் இதுல வின் பண்ணவும் போற

    அப்பா... நீங்க இருக்கும் போது எனக்கு என்னப்பா கவலை?

    உனக்கு சொல்லித்தர நான் இருந்தேன், எனக்கு யார் இருந்தா? உன் வயசுல நானே களத்துல இறங்கி போராடுனேன், அதுவும் பல பேரை எதிர்த்து, ஆனா நீ போராடப்போறது ஒருத்தன் கூட, இந்த விசயத்துல உனக்கு எங்கிட்ட இருந்து எப்ப வேணும்னாலும் அட்வைஸ் கிடைக்கும், பட் இந்த முறை களத்துல நின்னு போராடப்போறது நீ மட்டும் தான்

    நிச்சயம் ப்பா

    குட் ரகு... யூ கேரி ஆன்...

    "அப்பா உங்களை

    Enjoying the preview?
    Page 1 of 1