Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Then Pothigai Santhana Kaatrey!
Then Pothigai Santhana Kaatrey!
Then Pothigai Santhana Kaatrey!
Ebook105 pages52 minutes

Then Pothigai Santhana Kaatrey!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Got “Izanthamilaringnar” award from Bharathiyar Manavar Tamil Mandram at 2001. Participating in Children’s Science Congress Conference in 2003. Submit Project in National Children’s Science Congress in 2003 under the title “ FOOD SYSTEMS – Towards Nutrition for all". Got 1st prize in Zone Level Drawing Competition by Temple Jaycees in 2005. District Level 2nd Prize in Tamil Poem Writing in 2006. Medical Transcription Training Academy’s EXCELLENCE AWARD Shield in 2007. District Level Prize in Tamil Short Story Writing in 40th National Library week Function.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110501535
Then Pothigai Santhana Kaatrey!

Read more from Shrijo

Related authors

Related to Then Pothigai Santhana Kaatrey!

Related ebooks

Reviews for Then Pothigai Santhana Kaatrey!

Rating: 3 out of 5 stars
3/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Then Pothigai Santhana Kaatrey! - Shrijo

    http://www.pustaka.co.in

    தென் பொதிகைச் சந்தனக் காற்றே!

    Then Pothigai Santhana Kaatrey!

    Author :

    ஸ்ரீஜோ

    Shrijo

    For more books

    http://www.pustaka.co.in/home/author/shrijo

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    தென் பொதிகைச் சந்தனக் காற்றே!

    அத்தியாயம் – 1

    இ்து ஒரு பொன் மாலைப் பொழுது!

    வான மகள் நாணுகிறாள்!

    வேறு உடை பூணுகிறாள்!

    இ்து ஒரு பொன் மாலைப் பொழுது!

    ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் !

    ராத்திரி வாசலில் கோலமிடும்!

    வானம் இரவுக்குப் பாலமிடும்!

    பாடும் பறவைகள் தாளமிடும்!

    பூமரங்கள், சாமரங்கள் வீசாதோ!

    இ்து ஒரு பொன் மாலைப் பொழுது!

    வான மகள் நாணுகிறாள்!

    வேறு உடை பூணுகிறாள்!

    வானம் எனக்கொரு போதி மரம்!

    நாளும் எனக்கது சேதி தரும்!

    ஒரு நாள் உலகம் நீதி பெறும்!

    திருனாள் நிகழும் தேதி வரும்!

    கேள்விகளால், வேள்விகளை நான் செய்வேன்!

    இ்து ஒரு பொன் மாலைப் பொழுது!

    வான மகள் நாணுகிறாள்!

    வேறு உடை பூணுகிறாள்!

    இதமான குளிர் காற்று உடலை வருட, போர்த்தி இருந்த சால்வையை இன்னும் இறுக்கமாக அணிந்துகொண்டு வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு, இளைய ராஜாவின் இசையில், கவிஞர். வைரமுத்துவின் வரிகளை, பாடகர் SPB பாட, அவருடன் சேர்ந்து பாடிக்கொண்டு வந்தாள் ஆதர்ஷிகா.

    அழகு தேவதையான ஆதர்ஷிகா அவளுடைய பெற்றோரின் ஊரான பாபநாசத்திற்கு, பெற்றோர் இருவருடன் பயணித்துக்கொண்டு இருக்கின்றாள்.

    பாதையின் இருமருங்கிலும் இருந்த அழகிய வயல் பரப்பு அவளை பச்சைக் கம்பளம் நீட்டி வரவேற்பது போல அவள் உணர்ந்தாள்.

    ஆதர்ஷிகா என்ற தர்ஷி இருபத்திரண்டு வயது இளம்பெண். பெற்றோர் கிருஷ்ணன் மற்றும் சாந்தி. கிருஷ்ணனின் அத்தை மகள் தான் சாந்தி. சாந்தி மற்றும் கிருஷ்ணனின் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் விரிசல் விட, கிருஷ்ணன் சாந்தியுடன் வெளியூர் சென்றுவிட்டார்.

    இடையில் பல்வேறு குழப்பங்கள் நிகழ, கடைசியில் அவர்களுடைய பெற்றோர் இருவரும் பிரிந்து விட, இருவரும் ஊருக்கு வந்தால் இருவீட்டாரின் சண்டையே பிரதானமாக இருக்க, இருபக்கமும் மத்தளம் போல அடிவாங்க விரும்பாமல் ஊருக்கே வராமல் இருந்தனர்.

    இப்போது சாந்தியின் அப்பாவின் இறப்பிற்கு குடும்பத்துடன் வந்துகொண்டு இருகின்றனர்.

    பாட்டையும் மீறி, சாந்தியின் அழுகை முன் சீட்டில் இருந்த ஆதர்ஷிகாவை எட்ட,

    அம்மா. புறப்பட்டதில இருந்து இன்னும் அழுதுக்கிட்டு வரீங்க. பிளீஸ்ம்மா அழாதிங்க என்றாள் திரும்பி.

    என்னால முடிஞ்சது அவ்ளோதான, எங்கப்பாக்கு நான்னா உயிர். என்னை பாசமா வளர்த்தார். கடைசியா அவர் உயிர் பிரியும் போது, அவர் பக்கத்துல இருக்க என்னால முடிலையே

    சாந்தி. நாம என்ன பண்ண? நம்ம நிலைமை அப்படி. நீ கவலைப் பட்டு உடம்பை கெடுத்துக்காத

    இல்லைங்க இன்னும் ஊர்ல என்ன பிரச்சனை இருக்கோ தெரில

    ஏன்ம்மா அப்படி சொல்லறிங்க. எது நடந்தாலும் சமாளிப்போம். கவலைப்பாடாம வாங்க

    சரியா சொன்ன செல்லம். சாந்தி, நாம இங்க வந்தா ரெண்டு குடும்பத்துக்கும் பகை பெரிசாகும்னு நாம இவ்ளோ நாளா அங்க இருந்தோம். கண்டிப்பா ஏதாவது நடக்கும். இப்ப இது நாம கலந்துக்க வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்ச்சி. முடிஞ்சதும், நம்ம வீட்ல போயி இருக்கப்போறோம். அவ்ளோதான

    ம்ம். அப்பா சொல்றது கரக்ட். நீங்க தாத்தா முகத்தை பார்த்தா போதும்மா

    எந்த பதிலும் மனதில் பதியாமல் சாந்தி அழுதுகொண்டே வந்தார்.

    அந்த மாலை நேரத்தில் கார் அந்த பெரிய வீட்டின் முன் நின்றது. பழமையின் சுவடே இல்லாமல் புதிதாக ஒரு மாளிகை. கம்பீரமாக எழுந்து நின்று பணத்தின் பெருமையை பறைசாற்றிக்கொண்டு இருந்தது.

    கிருஷ்ணன் பழைய வீட்டினையும் இதனையும் மனதில் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டார், அவரையும் அறியாமல் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது, வருத்தத்தின் சுவடோடு.

    காரில் இருந்து இறங்கிய சாந்தி அப்பா என்ற அழுகுரலுடன் உள்ளே ஓட, அவரைப் பின்பற்றி தர்ஷி வேகமாகச் சென்றாள்.

    கிருஷ்ணன் வாங்கி வந்து இருந்த மாலையை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

    உள்ளே நுழைந்தவர், அவருடைய மாமாவின் சடலத்திற்கு மாலை அணிவித்து வெளியே வந்து, அவருடைய மச்சானிற்கு கை கொடுத்தார்.

    வேண்டா வெறுப்பாக கை நீட்டிய அவருடைய மச்சானும், சாந்தியின் அண்ணனுமான மணிவண்ணன் அடுத்த நொடி கையை இழுத்துக்கொண்டு நகர்ந்தார்.

    காரியம் முடியும்

    Enjoying the preview?
    Page 1 of 1