Manathodu Mazhai Vaasam!
By Shrijo
3.5/5
()
About this ebook
Read more from Shrijo
Santhana Thendral Rating: 4 out of 5 stars4/5Nenjirukkum Varaikkum! Rating: 1 out of 5 stars1/5Azhagiya Vizhigaliley! Rating: 5 out of 5 stars5/5Pani Vizhum Malarvanam! Rating: 4 out of 5 stars4/5Aayiram Nilavey Vaa! Rating: 4 out of 5 stars4/5Andhi Nera Thendral Kaatru! Rating: 4 out of 5 stars4/5Vaigai Nadhi Orathiley! Rating: 4 out of 5 stars4/5Nenjaankoottil Neeye Nirkkirai Rating: 0 out of 5 stars0 ratingsThen Pothigai Santhana Kaatrey! Rating: 3 out of 5 stars3/5Putham Puthu Malare! Rating: 3 out of 5 stars3/5Sugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Shrijovin Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsNenjirukkum Varai!!! Rating: 4 out of 5 stars4/5
Related to Manathodu Mazhai Vaasam!
Related ebooks
Sugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Nenjirukkum Varai!!! Rating: 4 out of 5 stars4/5Then Pothigai Santhana Kaatrey! Rating: 3 out of 5 stars3/5Sakiye Sagiye Rating: 5 out of 5 stars5/5Thoduvaanam Thodum Dhooram Rating: 4 out of 5 stars4/5Uyiril Un Peyar Ezhuthugiren Rating: 5 out of 5 stars5/5Santhithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5Maayamenna... Ponmaane..! Rating: 4 out of 5 stars4/5Uyiraaga Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Uyiriley Ninaivugal Thalumbuthey! Rating: 4 out of 5 stars4/5Vaana'madhu' Nee Enakku Rating: 5 out of 5 stars5/5Kaadhalum Kutrame... Rating: 4 out of 5 stars4/5Maalai Idum Sontham Rating: 0 out of 5 stars0 ratingsVaruven Naan Unakkaga...! Rating: 4 out of 5 stars4/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Theekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Kanniley Anbirunthal Rating: 4 out of 5 stars4/5Vaigai Nadhi Orathiley! Rating: 4 out of 5 stars4/5Vaarayo Vennilave! Rating: 5 out of 5 stars5/5Kaadhal Kolla Vaarayo Rating: 4 out of 5 stars4/5Aval Mugam Kaana Rating: 4 out of 5 stars4/5Nalai Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Thunaiyaga Varuvaya Thozhaney...! Rating: 5 out of 5 stars5/5Thaaiyin Mugamingu Nizhaladuthu... Rating: 5 out of 5 stars5/5Mannikka Mattaya? Rating: 4 out of 5 stars4/5Andhi Nera Thendral Kaatru! Rating: 4 out of 5 stars4/5En Uyiril Kalantha Uyire Rating: 5 out of 5 stars5/5Sippi Vantha Muthu... Rating: 4 out of 5 stars4/5Sindhum Pani Vaadai Kaatru Rating: 4 out of 5 stars4/5Rajanodu Rani Vanthu Serum! Rating: 4 out of 5 stars4/5
Reviews for Manathodu Mazhai Vaasam!
18 ratings0 reviews
Book preview
Manathodu Mazhai Vaasam! - Shrijo
http://www.pustaka.co.in
மனதோடு மழை வாசம்!
Manathodu Mazhai Vaasam
Author :
ஸ்ரீஜோ
Shrijo
For more books
http://www.pustaka.co.in/home/author/shrijo
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
மனதோடு மழை வாசம்!
- ஸ்ரீஜோ
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் – 1
புத்தம் புது காலை
பொன் நிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்!
என்று எங்கிருந்தோ பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது.
அந்த அதிகாலை வேளையில் சேலத்தில் இருந்து திருச்செங்கோட்டிற்க்கு அந்த நீல நிற ஆடி கார் புறப்பட்டது!
நம் கதையின் நாயகி வர்ஷா பின் சீட்டில் அமைதியாக அமர்ந்து அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி தன்னுடைய மடிக்கணினியில் குறித்துக்கொண்டிருந்தாள்.
செம்மண் நிற சில்க் காட்டன் புடவை அவளுடைய பால் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது. மெல்லிய செயின், சாதாரண ஜிமிக்கி தோடுகள், மெல்லிய தங்கவளையல்கள் இரண்டு ஒரு கையில், மற்றொன்றில் ஒரு மெல்லிய கைச்சங்கிலி, நீள விரல்களுக்கு ஒத்த மோதிரங்கள், மெல்லிய வெள்ளி கொலுசு என அவளது தோற்றம் அவளை ஒரு நடுத்தர வர்க்க பெண்ணாகவே காட்டியது.
அவளை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய பர்சனல் செக்கரட்டரி மணி அவளிடம் எதுவோ சொல்ல வருவது அவருடைய பார்வையில் தெரிந்தது! அவளைத் தொந்தரவு செய்தால் அவளுடைய கோபத்திற்கு ஆளாகவேண்டும் என்பதும் அவர் அனுபவத்தில் அறிந்த ஒன்று! எனவே அமைதியாக வந்தார்.
அவர் திரும்பி திரும்பி பார்ப்பதை பார்த்தும் தன் வேலையை முடிக்கும் வரையில் அவள் அவரைப் பார்க்கவில்லை.
சிறிது நேர மவுனத்திற்குப் பின், வர்ஷா மணியிடம் என்ன அங்கிள்? எதாவது முக்கியமான விஷயமா?
என்றுகேட்டாள்.
ஆமாம்மா. இன்று திருச்செங்கோட்டில் நிலப்பதிவு முடித்து நாம் உடனடியாக சேலம் திரும்பவேண்டும். நமதுஆடிட்டர் நாளை முக்கிய வேலையாக சென்னை செல்வதால் இன்றே உன்னை சந்திக்க வேண்டி உள்ளது.
அப்படியாஅங்கிள்! சரி அவருக்கு இன்று மாலை என்னுடைய அப்பாயிண்ட்மெண்ட் பட்டியலைப் பார்த்து ஒதுக்கிவிடுங்கள்
சரிமா. இப்போது நாம் மலைக் கோவிலுக்குப் போனால் பூஜை முடித்து கீழே வர சரியாக இருக்கும்.
சரி அங்கிள். பாலன்(டிரைவர்) பூஜைக்குரிய பொருட்கள் எல்லாம் தயாரா?
பாலன்,எடுத்து வைத்துவிட்டேன் மேடம். எதுவும் வாங்க வேண்டியது இல்லை!
வர்ஷா, சரி.
சில நிமிடங்களில் வர்ஷாவுக்கு செல்லில் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது!
கார் ஒரு வழியாக மலை அடிவாரத்தை நோக்கி சென்றது. கார்த்திகை மாதம் என்பதாலும். மாதத்தின் கடைசி முகூர்த்தநாள் என்பதாலும் கூட்டம் அலைமோதியது.
உமையொருபாகன் அந்த அதிகாலை வேளையிலும் அனைவருக்கும் சிறப்பாக அருள்பாலித்துக்கொண்டு இருந்தார். அவர்களது வாகனம் மலைப் பாதையில் மெதுவாக ஏற ஆரம்பித்தது.
வாகனத்தை நிறுத்திவிட்டு, பாலன், மணி மற்றும் வர்ஷா கோவில் பிரகாரத்தினுள் நுழைந்தனர்.
முன்கூட்டியே சிறப்பு பதிவு செய்திருந்தபடியால், சிறப்பு தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்படவில்லை.
தரிசனம் முடிந்து சற்று நேரம் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்க்க அரம்பித்தனர்.
மணியோ மனதில், இந்த பெண் எப்பொழுதும் புரியாத புதிர். எவ்வளவு நகைகள் உள்ளது. நம் பெண்கள் அணியும் நகை அளவைக்கூட இவள் அணிவதில்லை. இந்த சிறு வயதில் எத்தனை திறமை?
என்று எண்ணிக்கொண்டு இருந்தார்.
அவர்கள் புறப்படத் தயாராகும் போது அங்கே ஒரு கல்யாண மேடையில் சத்தம் கேட்டது.
வர்ஷா தன்னையும் அறியாமல் அங்கே சென்றாள். மற்ற இருவரும் அவளைப்பின் தொடர்ந்தனர்.
கூட்டத்தில் நடுநாயகமாக நின்றவர்களைப் பார்த்து வர்ஷா அதிர்ந்தாள்.
அத்தியாயம் – 2
ஏதோ சண்டை போல உள்ளதே என்று வர்ஷா எண்ணினாள். எதற்கும் சென்று பார்ப்போம் என்று தான் அங்கு சென்றாள். அங்கு கூட்டத்தின் நடுவில் நின்றவர்களைப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்.
யாரைத் தன வாழ் நாள் முழுவதும் பார்க்கக் கூடாது என்று நினைத்தாலோ அவர்களை அங்கு கண்டது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ பிரச்சனைப் போல என்று எண்ணி அவ்விடத்தை விட்டு நகர முற்பட்டாள்.
மணிக்கும் அவர்களைக் கண்டது அதிர்ச்சியே!
அவள் நகர முற்பட்ட நொடியில் அங்கு இருந்த பெண்மணி ஒருவர் பாய்ந்து சென்று அவளைத் தடுத்து நிறுத்தினார்.
என்னம்மா மகராணி! இதற்கு எல்லாம் நீ தான் காரணமா? எத்தனை நாட்களாகத் திட்டம் போட்டு இருந்தாய், இப்படி செய்ய! ஐயோ! கடவுளே! நீ நல்லா இருப்பியா? எங்கள் பொண்ணை என்ன செய்தாய்? எங்கே எங்கள் பெண்?
என்று சத்தமிட்டு அழத் தொடங்கினாள்.
அவளது அருகே வந்த அவளது கணவர் மாதவன், அம்பிகா! அழாதே மா! உனக்கு உடம்பு சரி இல்லை ஏற்கனவே. இப்போது இந்த கலாட்டா வேறே. அழுகாதே மா
என்றார்.
வர்ஷவோ இங்கு நடப்பது என்ன? அபிராமி தன்னை ஏன் குற்றம் சாட்டுகிறார்? என்று குழம்பி இருந்தவள் மாதவன் அவளை சமாதானப்படுத்தவும் அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மணியோ நடப்பது என்னவென்று புரியாமல் குழம்பினார்!
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த நெடியவன் வர்ஷாவுக்கு அருகில் வந்தான்.
அவள் அருகில் நின்றவன் அபிராமியைப் பார்த்தான், என்ன டிராமா இதெல்லாம்?
என்று கர்ஜித்தான்.
உடனே அபிராமி, தம்பி, இவள் தான் என் மகளை எதோ செய்து விட்டாள். இந்த கல்யாணத்தை நிறுத்த இவள் போடும் நாடகம் இதெல்லாம்
என்று கூறியவள், வர்ஷாவை நோக்கி, பணத்துக்காக என் மகள் வாழ்வில் மண்ணள்ளிப் போட்டுவிட்டாயே! பாவி. நீ பணக்காரியாக வாழ முடியாமல் என் மகள் வாழ்வதையும் பார்க்க பொறுக்காமல் இப்படி செய்து விட்டாயே! எங்கேடி எங்கள் மகள்? என்ன செய்தாய் அவளை?
என்று கூறிக் கொண்டே வர்ஷாவை உலுக்கினாள்.
வர்ஷா குழம்பி என்ன நடந்திருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தாள். அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நெடியவனுக்கோ கோபம் எல்லை மீறியது. அவனைப் பொறுத்தவரையில் இவள்தான் எதோ செய்துவிட்டாள் என்று எண்ணினான்.
அவனது முகத்தில் படிந்த கோபத்தைப் பார்த்த அபிராமி அதனை மேலும் தூண்டி விட்டார்.
மாதவனை நோக்கி, இவள் வயிற்றெரிச்சல் பிடித்தவள். நம் மகள் வாழ்வை அழிக்கப்பார்க்கிறாள். காவ்யா! எங்கே அம்மா போனாய்! பணத்துக்காக இப்படி ஒரு பெண் கடத்தும் அளவுக்கு போவாளா?
என்று ஓங்கி அழ ஆரம்பித்தார்.
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த நெடியவனுக்கோ கோபம் தலைக்கு ஏறியது. அதனைப் பார்த்த அபிராமி, இந்த கல்யாணம் இப்போது நின்று போச்சே! தம்பி எவ்ளோ பெரிய ஆள். இனி எப்படி எல்லார் முகத்திலும் விழிக்கும். கடவுளே!
என்று எரிகிற தீயில் எண்ணையை ஊற்றினார்.
வர்ஷாவுக்கோ பணத்திற்காக நான் இப்படி பண்ணினேனாம்! கடவுளே கடவுளே! என்று மனதிற்குள்ளே சிரித்துக் கொண்டாள். அது சமயம் மணியின் செல் அடித்தது. அவர் அதனைப் பார்த்து சைலென்ட் மோடில் போட்டார். அதனைப் பார்த்த வர்ஷாவுக்கு அது யாருடைய அழைப்பு என்று சொல்லாமலே புரிந்தது.
வர்ஷா அமைதியாக திரும்பி, உங்களுடைய டிராமவைப் பார்க்க எனக்கு நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை.
என்று கூறியவள், மணியை நோக்கி, அங்கிள் போலாமா?
என்று கேட்டாள்.
மாதவன் உடனே, அடிப்பாவி, என் மகள் வாழ்க்கையை அழித்துவிட்டு பார்த்து சந்தோசித்துவிட்டுப் போறியா? என் செல்ல மகள் எங்கு என்ன பாடுபடுகிறாளோ? உனக்கு சொத்து வேண்டும் என்றால் என்னை அல்லவா கேட்க வேண்டும். ஏதோ போனால் போகுது என்று என்னிடம் வேலை செய்பவன் எவனையாவது பார்த்து உனக்குத் திருமணம் செய்து எதாவது பிச்சையாக போட்டிருப்பேனே! இப்பொழுது என் சொத்து முழுவதும் தருகிறேன். என் மகள் காவ்யாவைத் தந்துவிடு!
என்று அழ ஆரம்பித்தார்.
வர்ஷாவுக்கும் மணிக்கும் கேட்டதும் கோபம் கட்டுக்கடங்காமல் சென்றது. மணி, மாதவன்!
என்று கோபத்தில் குரலெழுப்ப, வர்ஷா அவரைப் பார்வையாலே அடக்கினாள்.
மாதவனை நோக்கி, சோ, நான் தான் உங்கள் சொத்துக்கு ஆசை பட்டு, உங்கள் மகளைக் கடத்தினேன் இல்லையா? நல்லது! அப்படியே இருக்கட்டும். நீங்கள் என் மீது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்துவிடுங்கள். நான் அங்கு பேசிக்கொள்கின்றேன். உங்களுடன் பேச நான் விரும்பவில்லை.
என்றவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
அவளது கரம் பற்றி தடுத்த அந்த நெடியவன், அவனது கரத்தில் இருந்த மாங்கல்யம் கோர்க்கப்பட்ட செயினை அவள் கழுத்தில் சற்றும் தாமதிக்காதுப் போட்டான்.
அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
நீ நிறுத்த முயற்சி செய்தது, காவ்யாவின் கல்யாணம் மட்டுமில்லை, என்னதும் தான். அதுக்கு உனக்கு தண்டனை, நீ காலம் முழுவதும் Mrs. ஆதித்தியன் தான்.
என்றவன் விடுவிடுவென்று அவளை இழுத்துக்கொண்டு சென்றான்.
அத்தியாயம் – 3
நீ நிறுத்த முயற்சி செய்தது, காவ்யாவின் கல்யாணம் மட்டுமில்லை, என்னதும் தான். அதுக்கு உனக்கு தண்டனை, நீ காலம் முழுவதும் Mrs. ஆதித்தியன் தான்.
என்றவன் விடுவிடுவென்று அவளை இழுத்துக்கொண்டு சென்றான்.
அங்கு இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியில் பேச முடியவில்லை. மணியும், பாலனும் திகைத்துப்போய் நின்றனர். வர்ஷாவின் மூளையோ வேலை நிறுத்தம் செய்தது.
அவளை இழுத்துச் சென்ற ஆதித்யன், அவன் பெற்றோர் முன்பு நிறுத்தினான். அவன் தாய், ராஜேஸ்வரியை நோக்கி, அம்மா வீட்டு வேலைக்கு ஆள் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தீர்களே. இவள் இனி காலம் முழுவதும் நம் வீட்டு வேலைக்காரி. கூடவே நம் வீட்டு மருமகள் மற்றும் என் மனைவி என்ற பொறுப்பும். பார்த்துக்கொள்ளுங்கள்.
என்றவன் வர்ஷாவை நோக்கி,லிசன் என் வீட்டில் போலீஸ் வந்து விசாரிப்பது எனக்குப் பிடிக்காது! நீ ஆசைப்பட்ட பணக்கார வாழ்க்கையும் உனக்கு கிடைத்துவிட்டது. சோ காவ்யாவை அவர்களிடம் ஒப்படைத்துவிடு.
என்றான்.
வர்ஷாவுக்கோ, அவன் சொன்ன நீ ஆசைப்பட்ட பணக்கார வாழ்க்கையும் உனக்கு கிடைத்துவிட்டது
என்ற வரிகள் அவளுக்கு புன்னகையை வரவைத்தது. அதனைக்கண்ட மாதவன் அவளிடம் வந்து, இப்போ உனக்கு திருப்தியா? நினைத்ததை முடித்து விட்டாயா?
என்று கேட்க, அபிராமியோ, உங்க அம்மா புத்தி உனக்கும் உள்ளது. அவள் என் வாழ்க்கையை கெடுத்தாள். நீ என் மகள் வாழ்க்கைக்கு உலை வைத்து விட்டாய். உன் உடம்பில் நல்ல ரத்தம் ஓடினால் இப்படி செய்வாயா? எவன் இரத்தம் ஓடுகிறதோ! அதான் இப்படி செய்கிறாய்!
என்று பேசிக்கொண்டே போகையில், வர்ஷாவின் கோபம் எல்லையை மீறியது.
அவள் கோபத்தில், நிறுத்து. யாரைப்பற்றி என்ன வார்த்தை பேசுகிறாய்? என் அம்மாவையும், என் பிறப்பையும் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது? இவ்ளோ நேரம் நீ பேசியதெல்லாம் நான் கேட்டும் அமைதியாக இருந்தது, சாக்கடையில் கல் எறிய விரும்பாமல் தான். அதற்காக நான் பொறுத்து போவேன் என்று நினைத்தியா? யார் யார் வாழ்க்கையைக் கெடுத்தது?
என்றவள், கூட்டத்தில் இருந்தவர்களை அலசி, முத்துசாமி தாத்தா, நீங்கள் நம் வெண்ணந்தூரின் பெரிய தலைக்கட்டு தானே
என்றாள்.
ஆமாம் வரு மா.
நம் தலைக்கட்டில் பெரிய தனக்காரர் என்று அழைக்கப்பட்டவரின் மருமகள் யார் தாத்தா?
பெரிய தனக்காரர் குடும்பமே உன்னுடையுதுதானம்மா. உன் தாத்தா சிவலிங்கம் மற்றும் உன் பாட்டி கிருஷ்ணவேணி இருவரையும் இந்த ஊர் நன்கு அறியுமே. அவர்கள் மருமகள் உன் அம்மா மகாலக்ஷ்மி தானம்மா! இதோ இங்கு நிற்கும் மாதவனின் மனைவி அம்மா.
இதனைக் கேட்ட ஆதித்யனின் குடும்பம் அதிர்ந்து நின்றனர். ஆதியோ, பேச்சற்று நின்றான்.
வர்ஷா அபிராமியிடம், இப்போ தெரிகிறதா? என் அம்மா யார் என்று? சரி என் அம்மாவிற்கு இறக்கும் வரையில் ஒரே கணவன். உங்களுக்கு எப்படி?
என்றாள்.
அபிராமி பேச்சற்று நின்றார். மாதவன் வெகுண்டு எழுந்து, வர்ஷா! நீ பேசுவது அதிகம். வார்த்தையை அளந்து பேசு
என்றார்.
வாய்யா. நான் வார்த்தையை அளந்து பேசணுமா? இவ்ளோ நேரம் உன் வப்பாட்டி பேசியது நீ முறைப்படி தாலி கட்டி குடும்பம் நடத்திய உன் மனைவியைப் பற்றி. அப்ப எங்கையா நீ போன? என் மகள் என் மகள்னு உருகறியே, அது உன் மகள் தான்னு உனக்கு நிச்சயமா? அத விடு அது எனக்கு தேவையில்லாதது. நான் உனக்கு பிறக்கலைன்னு இவ சொல்றாளே, நீ என்ன சொல்ற? உண்மையா அது?
என்று வர்ஷா பொரிந்தாள்.
மாதவன் தலை குனிந்தார்.
"இங்க இருக்கற எல்லாரும் நம் சொந்தக்காரங்கள்