Varuven Naan Unakkaga...!
By Jaisakthi
4/5
()
About this ebook
கல்லூரி மாணவியான தேவசேனா தன் நண்பன் முருகவேலுடன் அவன் கிராமத்தை சுற்றிப் பார்க்கச் செல்கிறாள். அங்கு அவள் விவசாயம் செய்யும் முருகவேலின் சகோதரன் கதிர்வேலிடம் பழகுகிறாள். தேவசேனா, அவன் செய்கையால் கவரப்பட்டு அவனை விரும்புகிறாள். அவள் கதிர்வேலிடம் தன் காதலைச் சொல்வாளா? கதிர்வேல் அவள் காதலை ஏற்பானா? முருகவேலின் எதிர்வினை என்னவாக இருக்கும்? வாருங்கள் வாசித்து தெரிந்து கொள்வோம்...
Read more from Jaisakthi
Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Analukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Aruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Nenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Oviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Mouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsPoothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsThottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Ennul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Paattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsMegam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsNee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Naaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsSudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Kanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5
Related to Varuven Naan Unakkaga...!
Related ebooks
Anbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Poo Malarntha Pothu...! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Chedi Rating: 5 out of 5 stars5/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Mozhi Ketuvittal…! Rating: 4 out of 5 stars4/5Kanintha Mana Deepangalai! Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Ezhuthi Vaithai Ennai! Rating: 0 out of 5 stars0 ratingsVaruvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Kaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Ennai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsNatchathirangalin Naduvey...! Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsKuyilosai Kettayo! Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsVaasamalar Theane......! Rating: 0 out of 5 stars0 ratingsMaruva Kaadhal Kondean! Rating: 5 out of 5 stars5/5Ullathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Vizhigalil Ethanai Mozhigal! Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Malarndha Malarchudare! Rating: 0 out of 5 stars0 ratingsPaattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsEnnulle Nirainthai Rating: 0 out of 5 stars0 ratingsSollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Nishaptha Mozhigal Rating: 0 out of 5 stars0 ratingsAvalum Naanum Rating: 5 out of 5 stars5/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5
Reviews for Varuven Naan Unakkaga...!
1 rating0 reviews
Book preview
Varuven Naan Unakkaga...! - Jaisakthi
https://www.pustaka.co.in
வருவேன் நான் உனக்காக...!
Varuven Naan Unakkaga...!
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
வாசகர்களுக்கு...
அன்பு நிறை வாசக நெஞ்சங்களுக்கு,
ஜெய்சக்தியின் வணக்கங்கள், இந்தத் தருணம் எனக்கு மிக மகிழ்ச்சியான தருணம்.
நிதானமான ஆனால், நிலைத்த முன்னேற்றம் என்பதே எனது கொள்கை. படிப்படியாக இந்த இடத்துக்கு நாங்கள் வருவதற்கு உங்களது குறையாத ஆதரவும் தளராத ஊக்குவிப்புமே காரணம்.
இந்தக் கணத்தில் என் படைப்புக்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிற புத்தக விற்பனையாளர்களுக்கும், வாசகர்களுக்கும், என் படைப்புக்களை உருவாக்குவதில் பின்புலமாக இருந்து உதவி செய்கிற உழைப்பாளிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்கு கிறேன்.
இந்தப் படைப்பாக்கத்திற்கான சூழ்நிலையை உருவாக்கித் தருகிற என் குடும்பத்தாருக்கும் இந்தக் கணத்தில் என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
எல்லாம் வல்ல இறையருள் இனி வரும் முயற்சிகளுக்கும் துணையிருக்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன்
ஜெய்சக்தி
‘வருவேன் நான் உனக்காக.
வாழ்க்கை தருவேன்.
அதையே பெறுவேன்.
மனமெல்லாம் நீயாக
கனவெல்லாம் நானாக
மனமெல்லாம் நாமாக!’
அத்தியாயம் - 1
வெற்றிகரமாக வந்துசேர்ந்து விட்டார்கள். கார் அந்தக் கிராமத்துக்குள்ளே நுழைந்தது!
இரண்டு புறமும் பச்சைப் பசேல் என்று வயல்கள்! கரும்பு, வாழை என்று பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது. தென்னந்தோப்புகளும் ஆங்காங்கே தென்பட்டன.
கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையிலே இடது புறத்திலே அந்தப் பாதை திரும்பியது. அந்தப் பாதையிலே ஒரு நான்கு கிலோமீட்டர் தூரம் போனவுடனேயே அந்தக் கிராமம் தட்டுப்பட்டது. கிராமத்தைப் பார்த்தவுடனே தேவசேனாவுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்தக் கிராமங்கள் இப்படியே தான் இருக்குமா என்று அவளுக்குத் தோன்றியது.
மாணிக்கம்பாளையம் என்ற பெயரிலே இருந்தது அந்தக் கிராமம். சிறு கிராமம். நாலு கிலோமீட்டர் தூரத்தில் என்.எச். ரோடு. ஆனால், உள்ளே இந்தக் கிராமம் பழைய குக்கிராமத்துக்குரிய எல்லா சாயல்களோடும் இருந்தது. இவளுக்கு மிகவும் பிடித்தது.
இப்படியான கிராமத்தில் தான் போய் ஒரு நான்கைந்து நாட்கள் தங்கிவிட்டு வரவேண்டும் என்று அவளுக்கு ஒரு ஆசை. அவளுடைய கல்லூரித் தோழன் முருகவேலால் இப்பொழுது அந்த ஆசை நிறைவேறியது.
என்ன தேவசேனா? எப்படி இருக்கு எங்க கிராமம்?
என்றான்.
பக்கா கிராமம். இப்படி ஒரு கிராமத்திலதான் ஹாலிடேஸ் ஸ்பெண்ட் பண்ணனும்னு எனக்கு ரொம்ப ஆசை
தாராளமா ஸ்பெண்ட் பண்ணலாம்!
என்றான் அவன்.
எங்கே, எங்கப்பா கவர்ன்மெண்ட் சர்வீஸ்ல இருந்ததினாலே அப்பப்ப டிரான்ஸ்ஃபர் ஆச்சு. மூணு வருஷத்துக்கு ஒரு தடவை எல்லாரும் மாறணும். அதுக்காகவே என்னையும், என் தம்பியையும் ஹாஸ்ட்டல்லே விட்டிருந்தாரு. இப்பத்தான் காலேஜ் ஸ்டடீஸ்காகத்தான் நான் வீட்ல இருந்து போறேன். அதுவும் இப்ப அவங்க சென்னையில இருக்காங்க. நானும் சென்னையிலே இருக்கறதினாலே கொஞ்ச நாளாவது எங்களோட இரு அப்படின்னு இருத்தி வச்சிருக்காங்க. இப்பத்தான் நான், அம்மா, அப்பா, அனிருத், எல்லாருமா சேர்ந்து இந்த மூணு வருஷமாத்தான் இருக்கோம். அதுவும் இனி எப்ப டிரான்ஸ்ஃபர் வருமோ தெரியலைன்னு அப்பா கொஞ்ச நாளா சொல்லிகிட்டே தான் இருக்காரு!
என்றாள் தேவசேனா.
எங்களுக்கெல்லாம் அந்தக் கவலையே இல்லைப்பா. எங்க அப்பா, அம்மா எப்பவும் இதே ஊருதான். எங்க அப்பா காலையில கலப்பையைப் பிடிச்சுகிட்டுப்போனா சாயந்தரம் வருவாரு. எனக்கு ஒரு அண்ணன் இருக்கான்னு சொன்னேன் இல்லே கந்தவேல் அவனும் இங்கேதான் கிடப்பான். அதனாலே அப்பாவைப் பார்க்கலையே, அம்மாவைப் பார்க்கலையே, அப்படிங்கற பிரச்சினையெல்லாம் நம்பளுக்குக் கிடையாதுப்பா. சொல்லப்போனா இந்த ஊர்லே இருந்து தப்பிச்சுட்டு வந்தாப் போதும்னுதான் நான் கோயம்புத்தூர் காலேஜ்லே கிடைக்கறதுக்கு சான்ஸ் இருந்தும்கூட நான் சென்னை காலேஜ் செலக்ட் பண்ணிக்கிட்டு அங்க வந்துட்டேன்!
என்றான்.
ஏன்யா? அண்ணா யுனிவர்சிட்டி அவ்வளவு கேவலமா இருக்கா?
என்றாள் தேவசேனா.
இல்லல்லே, வேணும்னா இங்கே கோயம்புத்தூர்லே ரெண்டு மூணு காலேஜ் இருக்கே. ஜி.சி.டி., பி.எஸ்.ஜின்னு அப்படிக்கூட போயிருக்கலாம். சரி அண்ணா யுனிவர்சிட்டி கிடைக்கவுமே அங்கே வந்துட்டேன்!
என்றான் முருகவேல்.
சும்மா சொல்லக் கூடாதுய்யா. பொதுவா வில்லேஜ்லே இருந்து வர்றவங்களெல்லாம் இந்த அண்ணா யுனிவர் சிட்டில ஃபோக்கஸ் பண்றதுக்கு ரொம்பக் கஷ்டப்படுவாங்க. ஆனா நீ ஈஸியா சமாளிச்சுட்டே. ஃபர்ஸ்ட் இயர் வந்தவுடனே. உன்கிட்டே அதுதான் எனக்குப் பிடிச்சது!
என்றாள் தேவசேனா.
முருகவேல் பெருமையாக சிரித்துக் கொண்டான். நிறைய புக்ஸ் படிப்போமில்லே? எங்கெங்கே ராகிங் எப்படி நடக்கும், எப்படியெல்லாம் நடந்துக்கணும்? அதெல்லாம் எங்களுக்குத் தெரியுமில்லே?
என்றான்.
ஆமாமா, தெரியும், தெரியும், ஃபர்ஸ்ட் இயர்லே நீ இங்கிலீஷே வராம எப்படித் தட்டுத் தடுமாறினேன்னு எங்களுக்கில்லே தெரியும்?
என்று சிரித்தாள் தேவசேனா.
போதும் தேவசேனா. இங்கிலீஷ் என்ன பெரிய கம்பசூத்திரமா? ஆஃப்டரால் ஒரு லாங்வேஜ். குப்பை கொட்றவனைக் கொண்டு போய் அமெரிக்காவிலே விடு. ரெண்டு வருஷத்திலே அவன் அமெரிக்கன் இங்கிலீஷ் பேசுவான்!
என்றான்.
அது என்னமோ உண்மைதாம்ப்பா!
என்றாள் தேவசேனா.
சரி, வீடு பக்கத்திலே வந்துருச்சு. நீ இங்கே வந்துரு!
என்று அவன் காரை ஓட்ட அவள் மாறி அமர்ந்து கொண்டாள்.
சென்னையிலே இருந்து கார்ல வந்தோம்னு சொல்லிடாதே. திட்டு நிறைய கிடைக்கும்
சரி, இங்கே கோயம்புத்தூர்லே வந்து சொந்தக்காரங்க காரை எடுத்துட்டு வந்தோம்னு சொல்லிரலாம்!
என்றாள் தேவசேனா.
ம்... இதுகூட நல்ல ஐடியாதான்!
என்றான் முருகவேல்.
கார் ஊர் முடிகிற எல்லையிலே போய் நின்றது. வீடு பெரிய வீடுதான். தொட்டுக் கட்டி வீடாக இருந்தது. சுற்றிலும் கொஞ்சம் இடம் இருந்தது. அதுவே ஒரு ஏக்கர் அளவுக்கு இருக்கும் போல இருந்தது. ஆனால் ஓட்டு வீடுதான்.
வா, கிராமத்து வீடு எப்படி இருக்குன்னு பார்ப்பியாம்!
என்றான்.
இவர்கள் இறங்கியவுடனேயே முருகவேலின் தாயும், தந்தையும் ‘வாங்க! வாங்க!’ என்று வரவேற்றார்கள்.
இவருதான் எங்க அப்பா! தி கிரேட் உமையப்பன்
என்றான்.
அவர் வெள்ளந்தியாக சிரித்தார். இதுதான் எங்க அம்மா உலகம்மா
என்று அறிமுகப்படுத்தினான். பின் கொசுவம் வைத்து புடவை கட்டியிருந்தாள் உலகம்மாள்.
வாங்க, அம்மணி. நீங்க வருவீங்கன்னு இவன் ஃபோன் பண்ணியிருந்தான்!
என்றாள்.
எங்கே பெரியவரைக் காணோம்?
என்றான்.
இதோ பெரியவர் வந்துட்டே இருக்கேன்!
என்று வந்தான் இன்னொரு இளைஞன். கிட்டத்தட்ட முருகவேலின் சாயலிலே இருந்தான். இரண்டு பேருக்கும் ஓராண்டு வித்தியாசம்தானாம். முருகவேல் சொல்லியிருக்கிறான்.
நல்ல வெயில்லே வந்து இறங்கறீங்களா? அதான் இளநீர் பறிச்சுட்டு வந்தேன்!
என்று இளநீரைக் கொண்டுவந்து சீவ ஆரம்பித்தான் கந்தவேல்.
அப்படியே ஸ்ட்ரா போட்டுக் குடிச்சுப்பீங்களா? இல்லே டம்ளர்ல ஊத்தித் தரணுமா?
என்று கேட்டான்.
நீங்கெல்லாம் எப்படிக் குடிப்பீங்க?
என்று கேட்டாள்.
முருகவேல்தானே? அப்படியே கமுத்திடுவான். ஸ்ட்ராவே வேண்டியதில்லை. நாங்கெல்லாம் அப்படித்தாம்ப்பா. எப்படின்னு பார்க்கறீங்களா?
என்று துளையிட்ட இளநீர் ஒன்றை வாயிலே வைத்துத் தண்ணீரை அப்படியே விழுங்கிக் குடித்தான் கந்தவேல். தேவசேனா கண்களை அகல விரித்துக் கொண்டு ஆச்சரியமாகப் பார்த்தாள்.
அவனும் குடிப்பான் அதெல்லாம். உங்க ஊருக்கு வந்து ஸ்ட்ரா போட்டு ஷோ காட்டினானாக்கும்?
என்றான் கந்தவேல்.
முருகவேல் அண்ணா, சும்மா இருண்ணா!
என்றான்.
இல்லடா, நீ என்னென்ன டிராமா போட்டிருக்கேன்னு அந்தப் புள்ளையக் கேட்டாத்தானே தெரியும்?
என்றான்.
புள்ளை கிள்ளைன்னெல்லாம் பேசாதே. அதெல்லாம் நம்ம ஊருப் பழக்கம்!
என்றான் முருகவேல்.
ஓ... சாரி மேடம்! நான் இந்த ஊர்ல பேசற மாதிரிப் பேசிட்டேன்!
என்றான்.
பரவாயில்லை. பரவாயில்லை. நீங்க இந்த ஊர் வழக்கப்படியே பேசுங்க. நான் இந்த ஊர் வழக்கப்படி இருந்துட்டுப் போறதுக்குத்தான் வந்திருக்கேன்!
என்றாள்.
ஓ... லீவுங்களாக்கும்!
என்றார் உமையப்பன்.
ஆமாங்க. ரெண்டு வாரம் லீவு. நான் இங்கே பத்து நாள் ஒரு வாரம் இருந்துட்டுக் கிளம்பலாம்னுட்டு வந்திருக்கேன்
அம்மா, அப்பாவெல்லாம் சரின்னு சொல்லிட்டாங்களா?
என்றாள் உலகம்மாள்.
ஏன், சரின்னு சொல்லாம என்ன?
என்றாள் தேவசேனா.
இல்லே, பசங்ககூடவெல்லாம் அனுப்பறாங்கள்ளே? அதான் கேட்டேன்!
என்றாள்.
இல்லே, உங்க ஃபேமிலி பத்தியெல்லாம் முருகவேல் நிறைய எங்க அம்மா, அப்பாகிட்டே சொல்லியிருக்காப்லே. அதனாலே பரவாயில்லைன்னு அனுப்பி வச்சாங்க. கோயம்புத்தூர் வரைக்கும் டிரெயின்லே வந்து அங்கிருந்து சொந்தக்காரங்க காரை எடுத்துட்டு வந்தோம்!
என்றாள்.
அப்படிங்களா அம்மணி சந்தோஷம். வாங்க!
என்று வரவேற்றார்கள். அவள் உள்ளே கால் எடுத்து வைத்தவுடன் ஒரு நிமிஷம் கண்ணு!
என்று உலகம்மாள் ஓடிப்போய் ஒரு ஆரத்தித் தட்டை எடுத்து வந்து அந்தப் பெண்ணுக்கு சுற்றிப் போட்டு உள்ளே வரவழைத்தாள்.
தேவசேனாவிற்கு ஒரே சிரிப்பு. ‘அதென்ன பேருங்க’ தேவசேனா?" என்றான் கந்தவேல்.
உங்களுக்குத் தெரியாதா? முருகனோட மனைவி தேவசேனா தானே? நம்ம ஊரு பக்கமெல்லாம் தெய்வானைன்னு சொல்றாங்க. ஆனா தேவசேனான்னும் பேரு வைப்பாங்க!
என்றாள்.
சரிங்க. சரிங்க. இந்த சேனா கீனாவெல்லாம் வேண்டாங்க. நாங்க தேவின்னே கூப்பிடறோம்!
என்றான் கந்தவேல்.
தாராளமா! ஆஸ் யூ விஷ்!
என்றாள்.
அவன் தாங்க்யூ!
என்றான்.
முருகவேல் குறும்பாகப் பார்த்தான்.
என்ன பார்க்கறீங்க? நானும் ப்ளஸ் டூ படிச்சிருக்கேன். சொல்லப்போனா நானும் ரொம்ப நல்ல மார்க் எடுத்தேனுங்க!
என்றான் கந்தவேல்.
முருகவேல் அமைதியாக நின்றான். அந்தப் பேச்சு அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதுபோலத் தோன்றியது. ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேனுங்க. சரி, தம்பி படிக்கறதுக்கு ரொம்ப ஆசைப்பட்டான். யாராவது ஒருத்தர் கிராமத்திலே இருந்தாகணும். அதனால சரி தம்பி படிக்கட்டும்னு நான் விட்டுட்டேன்!
என்றான்.
முருகவேல் இத்தனை நாள் சொன்னதில்லையே என்று அவனைத் திரும்பிப் பார்த்தாள் தேவசேனா.
ம்ஹூம்... அலட்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை!
என்று முருகவேல் வாய்க்குள் முணுமுணுப்பது அவளுக்கு கேட்டது.
சரி, சரி, வாங்க போகலாம்!
என்று உள்ளே அழைத்துக்கொண்டு போனார்கள்.
கிராமத்து இலக்கணத்தோடு அந்த வீடு அமைந்திருந்தது. இரண்டு பக்கமும் நீளமாகக்கூடம். அந்தக்கூடத்தின் முடிவிலே அறைகள் அப்படிக் கணக்குப் பார்த்தால் நான்கு பெட்ரூம் இருந்தது. பின் பக்கம் சமையலறை இருந்தது.
உங்களுக்குப் பாருங்க. இந்த பெட்ரூம் ரெடி பண்ணி வச்சிருக்கோம்!
என்று அழைத்துக் கொண்டு போய்க் காட்டினார்கள்.
அளவாக ஒரு அறை! பத்துக்குப் பதினொன்று என்று இருக்கும். அவளுக்காக ஒரு கட்டில் போட்டு ஒரு மர பீரோ வைத்திருந்தார்கள்.
இதெல்லாம் நான்தான் ரெடி பண்ணினேன். ஓ.கேவான்னு பாருங்க. இன்னும் என்ன வசதி வேணும்னு கேளுங்க. செஞ்சு தரேன்!
என்றான்.
இதுக்கு மேல என்ன வேணும்? போதும். போதும். ஜன்னலைத் திறந்தா அக்கம் பக்கம் தோப்பெல்லாம் தெரியுது. ஆஹா! என்ன அருமையான காட்சி!
என்று ஜன்னலைத் திறந்து பார்த்து சிலாகித்துக் கொண்டாள் தேவசேனா.
திரும்பிய பொழுது கந்தவேல் அவளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். கிராமம்னா ரொம்பப் புடிக்குங்களாக்கும்?
என்றான்.
ஆமா, நாங்க நகரத்திலேயே வளர்ந்தாச்சு. எங்க அப்பாவுக்கு த்ரி இயர்ஸ் ஒன்ஸ் டிரான்ஸ்ஃபர் ஆகும். அதனாலே மாறிப் போயிட்டே இருப்போம். வடக்கேயெல்லாம் போயிருக்கோம். டெல்லி, பாம்பேயிலயெல்லாம் இருந்திருக்கோம். இப்பத்தான் ஒரு மூணு வருஷமா தமிழ் நாட்டுல சென்னையில இருக்கிறோம்!
என்றாள்.
ஓ சரிங்க!
என்று கேட்டுக் கொண்டான்.
எதுக்காலதான் என்ற ரூமுங்க, இந்தப் பக்கம் அம்மா, அப்பா ரூமு, முருகவேல் அந்த ரூமுல இருந்துப்பானுங்க. ஏதாவது வேண்ணா கூப்பிடுங்க!
என்றான்.
சரி!
என்றாள் அவள்.
ஆனா, உங்க ஊரு மாதிரி அட்டாச்ட் பாத்ரூமெல்லாம் இருக்காதுங்க. பின் கட்டுல சமையல் அறை இருக்குது. அங்க போற வழியிலே டாய்லெட் வசதி இருக்குங்க. இந்தப் பக்கத்திலேயே இருக்கு. இவன் காலேஜ் போயிட்டு வந்தப்பக் கட்டினது. ரொம்பப் பின்னாடி வேண்டாம்னு சொன்னான்னுட்டு ஒரு பாத்ரூம் டாய்லட் அங்கே போட்டிருக்கோங்க
என்றான்.
இட்ஸ் ஓ.கே. நோ ப்ராப்ளம். இங்கே என்ன வசதி இருக்கோ அது படி இருந்துக்கறேன்!
என்றாள்.
சரி, வாங்க நான் காட்டறேனுங்க. பின் கட்டுலே கை, கால் முகம் கழுவுறதுன்னா கழுவிட்டு ட்ரஸை மாத்தறதுன்னா மாத்துங்க!
என்றான்.
முருகவேல் எங்கே என்று பார்த்தாள்.
அவன் சொல்லிட்டுத்தான் போனானுங்க. அவன் போய் ஃப்ரஷ் பண்ணிட்டு டிரஸ் மாத்திட்டு வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்கானுங்க!
என்றான்.
கந்தவேல் அவளை அழைத்துக் கொண்டு பின்கட்டுப் பக்கம் போனான். அங்கே குழாய் வசதிகள் இருந்தது. ஒரு சின்னத் தொட்டி மாதிரி இருந்தது. அதிலே நின்று அவள் முகம் கை கால் கழுவிக் கொண்டாள்.
பாத்ரூம்ல தண்ணியெல்லாம் இருக்கு. சுடுதண்ணியெல்லாம் இருக்கு!
என்று காட்டினான். பாத்ரூமே அவளுடைய படுக்கையறை அளவுக்கு இருந்தது. அதன் ஒரு மூலையிலே ஒரு பெரிய பானை அடுப்பில் வைத்திருந்தார்கள். செம்புப் பானை. அதிலே தண்ணீர் சூடாக இருந்தது. ஒரு குளியல் போட்டுடட்டுமா?
என்றாள்.
தாராளமாக் குளிச்சுட்டு வாங்க. நீங்க துணி மணி எடுத்து குளிச்சுட்டு வாங்க. நான் போய் அம்மாவுக்கு ஏதாவது ஹெல்ப் பண்றேன்!
என்று அவன் பின்கட்டுப் பக்கம் போனான். ‘அம்மாவுக்கு ஹெல்ப்பா?’ என்று இவள் பார்க்க.
என்னங்க பண்றது? நாங்க ரெண்டு பேரும் பசங்க. நாங்கதானே எல்லா வேலையும் செஞ்சாகணும்?
என்று பின்கட்டுப் பக்கம் போனான்.
அவள் குளித்து முடித்துவிட்டு வேற்று உடை மாற்றிக்கொண்டு நேராக சமையல்கட்டுக்குப் போனாள். அங்கே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தோளிலே ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு அடுப்பிலே ஏதோ அவசரமாகக் கிளறிக் கொண்டிருந்தான் கந்தவேல்.
என்னங்க சமையலா?
என்று எட்டிப் பார்த்தாள்.
ஆமாங்க, நீங்க நான் வெஜ் சாப்பிடுவீங்கன்னு சொன்னாங்க. அதனாலே தான் நாட்டுக்கோழி அடிச்சு குழம்பு வச்சு அம்மா எல்லாம் பண்ணியிருக்காங்க. வறுவல் பண்றதிலே நான் ஸ்பெஷலுங்க. அதான் பண்ணிக்கிட்டிருக்கேன்
என்றான். அப்பொழுதுதான் அங்கே வந்தான் முருகவேல்.
அவன் முகம் சற்றே இறுக்கமாக இருந்தது.
அத்தியாயம் - 2
பேசிக்கொண்டே இருந்தாலும் கந்தவேல் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவதை அவள் ஆச்சரியமாகக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். இவள் கவனிப்பதை முருகவேலும் கவனித்தான் போலும்.
இடைவேளை கிடைத்தபொழுது ரொம்பப் பீலா விடறான்னு பார்க்காதே. சும்மா தொணத்தொணன்னு பேசுவான். அவ்வளவுதான்
என்றான்
இருக்கட்டும். இருக்கட்டும். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி!
என்று சிரித்தாள் தேவசேனா.
சமையல் முடிந்தவுடனே ஒரு மடக்கு டேபிளைக் கொண்டு வந்து கூடத்திலேயே போட்டார்கள். அதற்கு ஏற்ப மூன்று நான்கு சேர்களையும் கொண்டு வந்து போட்டான் கந்தவேல்.
நாங்கெல்லாம் கீழ உட்கார்ந்துதாங்க சாப்பிடறது. இவன் வந்தாத்தான் கீழே உட்கார்றது இல்லை. இவனுக்காக இந்த டேபிள் வாங்கிட்டு வந்தோம்!
என்றான்.
இரண்டு பக்கமும் சேரைப் போட்டு முருகவேலையும் அமரச்சொன்னான். உட்காரு தம்பி. நீயும் நைட்டெல்லாம் அலைஞ்சுட்டு வந்திருக்கே!
என்று அமர வைத்தான்.
தோட்டத்திலே இருந்து புத்தம் புதிதாக தலை வாழை இலையைப் பறித்து அதைத் தண்ணீரிலே கழுவிக் கொண்டு வந்து இவர்களுக்கு போட்டான்.
இவன் செய்கிற காரியங்களுக்கெல்லாம் பின்னாலே உலகம்மாள் நின்று கொண்டு உதவி செய்து கொண்டிருந்தாள்.