Anbai Thedi Vaa!
By Jaisakthi
2/5
()
About this ebook
பூங்கொடி, தன் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் திருமணம் என்னும் பந்தத்தில் இணைகிறாள். தன் கணவன் முரளியோடு இன்பமாய் ஒரு மாதகாலம் வாழ்க்கை நடத்தினாள். இன்பமாய் கழிந்த அவளது வாழ்க்கை நாளடைவில் துன்பமாய் மாறியது. அதற்கான காரணம் என்ன? பிறகு பூங்கொடியின் வாழ்க்கை என்ன ஆனது? இறுதியில் தன் கணவனோடு சேர்ந்து இன்பமாய் வாழ்ந்தாளா? வாசிப்போம் அன்பைத் தேடி வா.
Read more from Jaisakthi
Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Aruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Poothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Nenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Analukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Paattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsOviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Ennul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Megam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Naaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Kanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Sudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Aahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5
Related to Anbai Thedi Vaa!
Related ebooks
Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Ilankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Vanna Sudar Oliye...! Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Paattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsNesa Kavithai Solladi Rating: 4 out of 5 stars4/5Santhithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5Kanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Uyiraaga Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Ennulle Nirainthai Rating: 0 out of 5 stars0 ratingsVanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Nesathin Thottililey! Rating: 0 out of 5 stars0 ratingsSudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Kannukkul Paaintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Varuven Naan Unakkaga...! Rating: 4 out of 5 stars4/5Mouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyirin Urave Rating: 3 out of 5 stars3/5Analukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Oviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Ullathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5Priyangaludan Mukilan Rating: 5 out of 5 stars5/5Ezhuthi Vaithai Ennai! Rating: 0 out of 5 stars0 ratingsNizhalil Oru Nilavu Rating: 5 out of 5 stars5/5Naan Nila! Nee Kathir! Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Ullam Unvasamanathadi Rating: 3 out of 5 stars3/5
Reviews for Anbai Thedi Vaa!
1 rating0 reviews
Book preview
Anbai Thedi Vaa! - Jaisakthi
https://www.pustaka.co.in
அன்பைத் தேடி வா!
Anbai Thedi Vaa!
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 1
நல்ல பெரிய ஆர்டர்ப்பா!
என்றாள் பூங்கொடி.
அப்படியாம்மா!
என்று அந்தப் பக்கம் மோகனரங்கம் மகிழ்ந்து போனார்.
நாளைக்கே டெலிவரி கொடுத்தாகணும்ப்பா. கொஞ்சம் பிஸியா இருக்கேம்ப்பா. கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுங்கப்பா!
என்றாள் பூங்கொடி.
சரிம்மா, எந்த டைம் கூப்பிடறதுன்னு சொல்லும்மா!
என்றார்.
லஞ்ச் டைமுக்குக் கூப்பிடறீங்களா?
என்றாள் பூங்கொடி.
சரிம்மா!
என்று அவர் போனை வைத்து விட்டார். அவளுக்கு மனசு கேட்கவில்லை. திரும்பவும் ஃபோன் அடித்து ஏதாவது அவசரமான விஷயமாப்பா? முக்கியமான விஷயமாப்பா?
என்றாள்.
முக்கியமான விஷயம் தான். ஆனா அவசர விஷயம் எதுவும் இல்லை. சரி நான் லஞ்ச் டைம்லயே கூப்பிடறேன்!
என்று அவர் அந்தப் பக்கம் ஃபோனை வைத்து விட்டார்.
இவளுக்கு அப்பாவின் ஃபோன் ஒரு பக்கம் குடைய ஆரம்பித்தது. அவசியம் இல்லாமல் அப்பா ஃபோன் பேசமாட்டார். முன்பெல்லாம் கடைக்கு வருவார். இப்போது அவள் தான் எதுக்குப்பா நீங்க கடையில வந்து உட்கார்ந்துக்கறீங்க? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. முடிஞ்சப்ப இங்கயே வேலை செய்ங்க!
என்று அவரை வீட்டிலேயே உட்கார வைத்து விடுகிறாள்.
வீடென்றால் இங்கிருந்து அரை கிலோ மீட்டர் ஒரு கிலோ மீட்டர் போக வேண்டுமென்றெல்லாம் இல்லை. அவளுடைய கடைக்கு நேர் பின்னாலே தான் வீடு. முற்பகுதியில் கடை. இடைப் பகுதியில் கொஞ்சம் இடம். பிற்பகுதியில் வீடு. ஆனாலும், அவள் அவரை கடையிலே வந்து அமர்வதற்கு விடவில்லை. வந்தால் சும்மா இருக்க மாட்டார். இவள் ஏழெட்டுப் பேரை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருக்கிறாள். அவர்கள் ஒவ்வொருவரையும் மேற்பார்வை பார்க்க ஆரம்பித்து விடுவார். அவர் எதிர்பார்க்கிற வேலை சுத்தம் இந்தக் காலத்திலே இருக்குமா என்ன? கோபம் வந்து விடும். டென்ஷன் ஆகிவிடுவார். இதையெல்லாம் உத்தேசித்துதான் அவருக்கு என்று சில வேலைகளை ஒதுக்கிக் கொடுத்து விடுவாள் பூங்கொடி
அப்பா, இந்த ரெண்டு பிளவுஸ் மூணு பிளவுஸ் மட்டும் ஹெம் பண்ணி கொடுத்தீங்கன்னா போதும். இன்னைக்குக் கோட்டா முடிஞ்சது!
என்று வீட்டுக்கே அனுப்பி விடுவாள்.
ஐந்து பெண்கள் தைப்பதற்காகவென்றே அவளுக்கு கீழே வேலை செய்தார்கள். இரண்டு மூன்று பேர் காஜா எடுப்பதற்கு. அதோடு பேங்குக்குப் போய் வருகிற வேலை, மற்ற வேலைகளையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதுவும் பெண்களாகத்தான் வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தாள்.
இப்பொழுதுதான் எல்லாப் பெண்களும் வண்டி ஓட்டுகிறார்களே? ஏதாவது தேவை என்றால் அவர்களே போய்விட்டு வந்து விடுவார்கள். பூங்கொடியின் கடை பெரிய டிஸைனர் ஷாப் என்றெல்லாம் இருக்கவில்லை. ஆனால், அவளுடைய கற்பனை வளத்துக்கு இந்த ஊரிலே பெரிய மதிப்பும் உள்ளது.
இப்பொழுது கூட ஒரு கல்யாண ஆர்டர் வந்திருந்தது. பெரிய குடும்பம். ஐம்பது பிளவுஸ்கள், டிசைனர் பிளவுஸ்கள் கேட்டிருந்தார்கள். ஐம்பது ஜாக்கெட் துணிகளையும் கொண்டு வந்து கொடுத்து விட்டார்கள். இருபத்தைந்து நாளுக்கு முன்பாகவே கொடுத்து விட்டார்கள். ஏனென்றால் எக்ஸ்க்ளூஸிவ் அதாவது தனிப்பட்ட டிசைன் வேண்டும் என்று விரும்பினார்கள்.
ஒவ்வொன்றுக்காகவும் பூங்கொடி அமர்ந்து அதற்கான தனி டிசைனைத் திட்டமிட்டுத் தன் கீழே வேலை செய்கிற பெண்களுக்கு தைப்பதற்குக் கொடுத்து விட்டாள்.
அவள் எவ்வளவு கேட்டாலும் கொடுப்பார்கள். கல்யாணப் பெண்ணுடைய பிளவுஸுக்கு மட்டும் ஐந்தாயிரம் ரூபாய் கேட்டிருந்தாள். மொத்தமாக ஐம்பது பிளவுஸ் மட்டுமே மூவாயிரம் நான்காயிரம் ஐந்தாயிரம் என்று அந்த டிசைனைப் பொறுத்து அவள் சொல்லிக் கொண்டே இருந்தாள். அந்தப் பெரிய குடும்பத்துக்காரர்கள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. ஒத்துக் கொண்டார்கள். அவர்கள் போனதற்குப் பிறகு அவர்கள் கடையிலே வேலை செய்கிற பத்மா கூட கேட்டாள். அக்கா, என்னக்கா? ஒரு லட்ச ரூபாய்க்கு மேலே சொல்லியிருக்கீங்க. கொசு கடிக்கிற மாதிரி அலட்டிக்காம சரின்னுட்டுப் போறாங்க
என்றாள்.
இத பாரு பத்மா, நீ என்ன அக்கான்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நான்தான் உன்னை அக்கான்னு கூப்பிடணும். ஆனா அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்கறே?
அதெப்படி உங்களைப் போய் பேர் சொல்லி கூப்பிட முடியுமா? நீங்க முதலாளி.
அது சரி, அதுக்காக எனக்கு அக்கா பட்டம் கட்டி என்னை கிழவியாக்கிடாதே!
என்று சிரித்தாள் பூங்கொடி.
சரி, இனிமே பூங்கொடின்னே கூப்பிடறேன்
என்றாள். சொல்லிவிட்டு நான் சொன்ன மேட்டருக்கு வாங்க பூங்கொடி.
ம்... இது கொஞ்சம் பரவாயில்லை!
என்றாள் பூங்கொடி.
நமக்கென்ன? கோடிக்கணக்கிலே செலவு பண்ணி கல்யாணம் பண்றாங்க. நாமளும் இதுக்கு இருபத்தைந்து நாள் உழைப்பு கொடுத்திருக்கிறோம். பெரிய கடைகளில் போய் இதுக்கு பத்தாயிரம் சார்ஜ் பண்ணினாலும் கொடுப்பாங்க. நாம கம்பேரட்டிவா அவங்களுக்கு சீப்தான். பெரிய பணக்காரங்கன்னாலும் தேடிப் பார்த்து எங்கெங்கே செலவு குறைக்கலாமோ அங்கங்கே குறைப்பாங்க தெரியுமா?
என்றாள் பூங்கொடி.
ம்ஹும்... அது என்னமோ நிஜம்தான்!
என்று வேலையைப் பார்க்கப் போனாள் பத்மா.
இப்பொழுது கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு ஜாக்கெட்டுகள் தயாராகிவிட்டன. அதையெல்லாம் பத்திரமாக எடுத்து பூட்டி வைத்தாள் பூங்கொடி இன்னும் இரண்டே இரண்டு ஜாக்கெட்டுகள் தயார் ஆக வேண்டும் அதையெல்லாம் இன்றைக்கு முடித்து வைத்து விட்டால் நல்லது. இன்று மாலை அவர்கள் வருவார்கள். வந்து பார்த்து ஏதாவது சின்னச் சின்ன திருத்தம் இருந்தால் அதை செய்து கொடுக்க வேண்டும்.
முதலிலேயே பூங்கொடி சொல்லி விட்டாள். வரைந்தும் காட்டி விட்டாள். இப்படித்தான் இருக்கும் கடைசி நேரத்தில் வந்து மாத்தச் சொல்லாதீங்க! என்று. அதனால் அவர்களும் இடையிடையே வந்து பார்த்து விட்டுப்போய் இருந்தார்கள்.
இங்கே ஒரு மணி, அங்கே ஒரு குந்தன் கல், இங்கே குஞ்சரம் தொங்க விடுங்கள் என்றெல்லாம் ஐடியா கொடுத்து விட்டுப் போயிருந்தார்கள்.
பூங்கொடி அதையெல்லாம் ஓரளவுக்குத் தயார் செய்து முடித்திருந்தாள். இது தவிர மற்ற வேலைகளும் வந்து கொண்டிருந்தன. அவள் முன்னூறு ரூபாய் ஒரு ஜாக்கெட்டுக்குத் தையற்கூலி கேட்டாலும் கூட அவளிடத்திலே தைப்பதற்கு விரும்பினார்கள். அவளும் அதற்காகக் கொள்ளை அடிக்கக் கூடாது என்று நியாயமான தொகைதான் வாங்குவாள். ஆனால், அவசர வேலை எல்லாம் பூங்கொடி இடத்திலே முடியவே முடியாது. வருகிறவர்களுக்கு ஒரு பில் போட்டு அதிலேயே அந்த ஜாக்கெட் பிட்டினுடைய