Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanna Sudar Oliye...!
Vanna Sudar Oliye...!
Vanna Sudar Oliye...!
Ebook102 pages53 minutes

Vanna Sudar Oliye...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கீர்த்தி தன் தந்தையை இழந்த பின், ஒரு பெரிய நிறுவனத்தில் பி.ஏ.வாக வேலை கிடைக்கிறது. தன் குடும்பத்தையும் பொறுப்பாக பார்த்துக் கொள்கிறாள். தன்னை மெழுகாய் உருகி குடும்பத்திற்கு ஒளியாக இருக்கிறாள்.

நிறுவனத்தில் ஏற்படும் திடீர் திருப்பங்கள் அதனால் உண்டான சிக்கல்கள் அனைத்தையும் அவள் எவ்வாறு எதிர்க்கொள்கிறாள். இந்நிலையில் குகன் என்பவரின் சந்திப்பால் கீர்த்தியின் வாழ்வில் வரப்போகும் மாற்றங்கள் என்ன?

குகனின் வாழ்க்கையில் வண்ண சுடர் ஒளியாய் ஒளிர்வாளா? வாசியுங்கள் ஜெய்சக்தியின் காதல் நடையில்…

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580106007181
Vanna Sudar Oliye...!

Read more from Jaisakthi

Related to Vanna Sudar Oliye...!

Related ebooks

Reviews for Vanna Sudar Oliye...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanna Sudar Oliye...! - Jaisakthi

    https://www.pustaka.co.in

    வண்ண சுடர் ஒளியே...!

    Vanna Sudar Oliye...!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அது ஒரு உதய காலம்!

    இளம்சூரியன் தகதகவென்று தங்கப் பந்து போல மெதுவாக மேலெழும்பிக் கொண்டிருந்தான். கண்ணை உறுத்தாமல், கண்களுக்கு இதமாக சூரியனை அப்படிப் பார்க்க முடியுமா என்ன? அன்று பார்க்க முடிந்தது.

    குகன் வழக்கம் போல பார்க்கிலே காலையில் ஓட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தான். வழக்கமாகத் தன் வீட்டுக்கு அருகிலே இருக்கிற பார்க்கிலேயே நடைப்பயிற்சியை முடித்து விடுவான். இன்றைக்கு நண்பர் ஒருவரை முக்கியமான ஒரு பிஸினஸ் விஷயமாக சந்திக்க வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருந்தான்.

    ஜாகிங்கை முடித்துவிட்டு அங்கே ஒரு பக்கமாக அமர்ந்து பேசிக் கொள்ளலாம் என்று முடிவு. ஏனென்றால் அலுவலகத்தில் வைத்துப் பேசவேண்டாம் என்கிற அளவிற்கு முக்கியமான பேச்சு. அரை மணி நேரம் ஜாகிங் முடித்துவிட்டுக் கடைசியில் இரண்டு சுற்று அவன் மெதுவான நடையிலே நடப்பது வழக்கம். அப்படி நடந்து கொண்டிருந்தான்.

    அவனுக்கு முன்னாலே இரண்டு பெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.

    அதிலே ஒரு பெண் சாதாரண கைத்தறி புடவை உடுத்தி இடுப்புக்குக் கீழே தொங்குகின்ற பின்னலோடு நடந்து கொண்டிருந்தாள். பக்கத்திலே ஒருத்தி சுடிதார் போட்டுக்கொண்டு அவளோடு போய்க் கொண்டிருந்தாள்.

    நடந்து செல்லும் பாதையில் சரியாக அவர்கள் நடந்து சென்றதால் அவனும் போகட்டும் மெதுவாகவே நடந்து கொள்ளலாம் என்று மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.

    சுடிதார் போட்ட பெண் இன்னொரு பெண்ணிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். ஏண்டி கீர்த்தி? எப்பவுமே காலையில கலகலப்பா இருப்பியே? நல்லாச் சிரிப்பியே? இன்னைக்கு என்ன? என்றாள்.

    நல்லாத்தானே இருக்கேன்! என்றாள் அந்தக் கீர்த்தி.

    இல்லை, இல்லை தெரியுது வித்தியாசம். என்ன சுதா வந்து மண்டகப்படி கொடுத்தாளா? என்று கேட்டாள்.

    உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா? என்று கேட்டாள் அந்தக் கீர்த்தி.

    ஆமா, நீ எப்பத்தான் இந்த மாதிரி வெகுளித் தனத்தையெல்லாம் விட்டுத் தொலைப்பியோ தெரியலை! என்றாள்.

    நான் என்னக்கா பண்ணினேன்? என்றாள் கீர்த்தி.

    ஏய் கீர்த்தி, அந்த சுதா என்ன பண்ணினா? அவ வந்து தன்னோட மாமியாரைப் பத்தி உங்க வீட்ல உங்க அம்மாகிட்ட புகார் சொல்லியிருக்கா.

    ஆமாக்கா, புகார்னா புகார். லேசுப்பட்ட புகார் இல்லை. பட்டியலே வாசிச்சாங்க! என்றாள் கீர்த்தி.

    நீ எதுக்கு அதைக் காதிலே வாங்கினே? என்றாள் மாலா.

    நான் ஒண்ணும் காதிலே வாங்கலை. அது தானா காதிலே விழுந்தது. அடுப்படியிலே சமையல் பண்ணிட்டு இருந்தா காதில விழாம என்ன பண்ணும்? எங்க வீட்ல இருக்கறதே மூணுரூம்! என்றாள் கீர்த்தி.

    மாலா தலையில் அடித்துக் கொண்டாள். சரி, கேட்டதுதான் கேட்டே. பேசாம இருக்க வேண்டியதுதானே? அவங்க வீட்டுக்குப் போனியா இல்லையா? நேத்து. போனப்ப என்ன செஞ்சே? என்றாள்.

    என்ன செஞ்சேன்? என்றாள் கீர்த்தி.

    அவங்க மாமியார்கிட்ட சுதா நேர்ல உங்களை மாதிரி நல்லவங்க இருப்பாங்களா அப்படின்னு சொல்லிகிட்டிருந்தாளாம். நீ குறுக்கே போய் ‘சுதாக்கா, என்ன இப்படி சொல்றீங்க? நேத்து எங்க அம்மாகிட்டே வந்து எங்க மாமியார் இப்படிப் பண்றாங்க அப்படிப் பண்றாங்கன்னு பெரிய லிஸ்டே வாசிச்சீங்க’ அப்படின்னு அவ சொன்னதையெல்லாம் வேற சொல்லி அந்த மாமியார் அம்மாவைக் கடுப்பேத்தி நேத்து அவங்க ரெண்டு பேருக்கும் பெரிய தகராறாம்! என்றாள் மாலா.

    அக்கா நான் கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க. சுதா அக்கா எங்க வீட்ல சொன்னது நிஜம்தானே? உண்மையைத்தானே நான் போய் சொன்னேன்! என்றாள் கீர்த்தி.

    மாலா மறுபடியும் தலையில் அடித்துக் கொண்டாள்.

    அடி பொண்ணே, இப்படி வெகுளியா இருக்கியே? அவ சொன்னதை ஒரு பக்கம் பேசாம வச்சுக்க வேண்டியதுதானே. இப்ப அவங்களுக்குள்ளே பிரச்சினை ஆயிடுச்சில்லே?

    நடந்ததுக்கு அவங்கதான் பொறுப்பு… மாத்தி மாத்திப் பேசினது அவங்கதான். அப்ப இனிமே அப்படியெல்லாம் வந்து எங்ககிட்டே சொல்ல வேண்டாம்னு சொல்லுங்க என்றாள் கீர்த்தி.

    இனிமேக்கொண்டு உங்கிட்டே யாராவது வந்து பேசுவாங்களா? பேசினா அவங்களுக்கு மேல் மாடி காலின்னு அர்த்தம்! என்றாள் மாலா.

    இந்தப் பேச்சு வார்த்தை குகன் காதில் விழுந்தது. அந்தக் கீர்த்திப் பெண்ணைப் பற்றி நினைக்க அவனுக்குச் சிரிப்பாக வந்தது. இப்படி யதார்த்தமாக யாராவது இருப்பார்களா என்று நினைத்துக்கொண்டே அவனும் மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.

    சரி வா! இந்தக் கடைக்கு போய்ட்டுப் போகலாம்! என்று இரண்டு பேரும் பக்கவாட்டிலே இருந்த வழியிலே போய் விட்டார்கள்.

    அதற்கு மேல் குகன் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ‘இப்படிப் பொண்ணுங்களும் இந்தக் காலத்தில் இருக்காங்க’ என்று நினைத்துக் கொண்டு சிரித்தவனாக அவன் அந்த வட்டத்தை முடித்தான்.

    முடித்து விட்டுத் திரும்ப அதே இடத்துக்கு வரும்பொழுது எதிரிலே தெரிந்த சூரியனை தன்னை மறந்து ரசித்துக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.

    அப்போதுதான் அது நிகழ்ந்தது! பக்கவாட்டு வழியிலே வந்த பெண் ஒருத்தி சட்டென்று அவன் மேல் மோதி விட்டாள். ஏதோ ஒரு பஞ்சு மெத்தை தன் மேல் வந்து விழுந்ததைப்

    Enjoying the preview?
    Page 1 of 1