Iruvizhi Paarvaiyile...!
By Jaisakthi
()
About this ebook
Read more from Jaisakthi
Poothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsEnakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Analukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Aruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Naaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsUllathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Mouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsOviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Kaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Paattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Megam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Kanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsAahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Sudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Paattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratings
Related to Iruvizhi Paarvaiyile...!
Related ebooks
Vanna Sudar Oliye...! Rating: 0 out of 5 stars0 ratingsUllathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Aahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Anbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5Nenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Oviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Megam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Malarkanai Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Natchathirangalin Naduvey...! Rating: 0 out of 5 stars0 ratingsNee Matrum Naan Rating: 0 out of 5 stars0 ratingsPaattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsThen Pothigai Santhana Kaatrey! Rating: 3 out of 5 stars3/5Sembavala Kodi Neeye Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsIthu Varai Sollatha Kavithai Rating: 3 out of 5 stars3/5Pesi Vidu Maname Pesividu…! Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 3 Rating: 5 out of 5 stars5/5Anbu Mozhi Ketuvittal…! Rating: 4 out of 5 stars4/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsVaana Mazhai Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Vanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Paalodu Thean Kalanthu...! Rating: 5 out of 5 stars5/5Kanintha Mana Deepangalai! Part - 3 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Iruvizhi Paarvaiyile...!
0 ratings0 reviews
Book preview
Iruvizhi Paarvaiyile...! - Jaisakthi
http://www.pustaka.co.in
இருவிழிப் பார்வையிலே...!
Iruvizhi Paarvaiyile...!
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 1
அது ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டிடம்! நூற்றுக்கணக்கான அப்பார்ட்மெண்ட்டுகள் அந்த பிராஜக்டிலே கட்டப்பட்டிருந்தன. நல்ல பெயர் பெற்ற கம்பெனி! அதிலே நடுத்தரக் குடும்பங்களும் இருந்தார்கள். வசதியான வர்களும் இருந்தார்கள். உள்ளேயே எல்லா வசதிகளும் இருக்கிற மாதிரி ஒரு அபார்ட்மெண்ட்.
சென்னைக்கு அருகிலேயே அந்த பிராஜக்ட் இருந்தது. இரண்டு மூன்று அபார்ட்மெண்ட் கட்டிடங்களில் ஒரு அபார்ட்மெண்ட் சற்று பரபரப்பாக இருந்தது.
என்னடா நல்லபடியா வந்து சேர்ந்துட்டானா?
என்று விசாரித்தார் சுந்தரராஜின் அப்பா.
வந்துட்டானாம் அப்பா! ஃபோன் வந்துச்சு. நான் கூட ஏர்போர்ட் வரட்டுமான்னேன். வேண்டாம் வேண்டாம். நான் என்ன பச்சைக் குழந்தையா? லக்கேஜ் எல்லாம் இப்ப எதுவும் கொண்டு வரலை. பின்னாடி கார்ல வருது. அப்படின்னு சொல்லிட்டாம்ப்பா!
என்றான் சுந்தரராஜன்.
நல்ல பையன் தானே?
என்றார் சுந்தரராஜன் தந்தை மறுபடியும்.
அப்பா! அருமையான பையன்!
இல்லடா, நம்ம வீட்ல ரெண்டு பொண்ணுக இருக்கு!
என்றார்.
போப்பா நீ! இந்த ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தியை அவன் கல்யாணம் பண்ணிக்கறேன்னா! நீ குதி போட்டுக்கிட்டுக் கொடுத்தர்லாம்
என்றான் சுந்தரம்.
டேய், டேய், வாயை மூடுடா!
என்றபடி உள்ளே இருந்து அவசரமாக வந்தாள் அம்மா காயத்ரி. ஏண்டா, அவங்க காதில் விழுந்தா!
என்றாள்.
ரெண்டு பேரும் இல்லம்மா! அந்த அப்பார்ட்மெண்டை க்ளீன் பண்ணி வைக்கிறேன்னு போயிருக்காங்க. அதான் நான் தைரியமா பேசினேன்!
என்றான்
இத பார்றா
அந்த மாதிரியெல்லாம் எந்த நோக்கமும் வச்சுக்கக் கூடாது. அதெல்லாம் நல்லாயிருக்காது!" என்றாள் காயத்ரி.
சும்மா விளையாட்டுக்குச் சொனனேன்ம்மா. அந்த அளவுக்கு அவன் நல்ல பையன்கறதுக்காக சொன்னேன்.
பெயரென்னடா சொன்னே?
என்றார் தந்தை ராமலிங்கம்.
எத்தனை தடவைப்பா சொல்றது? பார்த்தசாரதி. சாரதி சாரதின்னு நான் சொல்லுவேன்ல
என்றான்.
அட ஆமா. அவனா வர்றான் இங்கே?
என்று கேட்டாள் காயத்ரி.
ஆமாம்மா! அவனுக்கு இங்கே சென்னையில் முக்கிய வேலையாம். ஏதோ பிசினஸ் டெவலப் பண்றானாம். அதனால வந்து வந்து லாட்ஜ்ல தங்கிட்டு இருக்கணுமா என்ன? இனிமே மாசத்துல பத்து நாள் இங்க வரணும் போல இருக்கு. அதனால பேசாமே ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கிடலாம்னு பார்க்கறேன்னான். இன்னும் இந்த பக்கத்து அப்பார்ட்மெண்ட் போகலையில்லே. அதனால நான் தான் இங்கயே வாங்கிக்கயேன்டான்னு சொன்னேன். நாங்க கூட மெயின்டெய்ன் பண்ணிக்குவோம்னு சொன்னேன். அவனுக்கு அந்த ஐடியா உடனே புடிச்சிருச்சு. போன வாரம் தான் சொன்னேன். இந்த வாரத்துக்குள்ளே வாங்கிட்டான்!
என்றான்.
முடியுள்ள சீமாட்டி எப்படி வேண்ணாலும் முடிவாங்க!
என்றாள் காயத்ரி. குரலில் லேசான பொறாமை தொனித்தது.
அவர் கணவர் என்னதான் அரசாங்க வேலையிலே இருந்தாலும் இந்த அப்பார்ட்மெண்டை வாங்கி முடிப்பதற்குள்ளாகவே உன்னைப்பிடி என்னைப்பிடி என்றாகிவிட்டது. ஏதோ இப்பொழுது சுந்தரராஜும் வேலைக்குப் போகிறான். அதனாலே குடும்பம் நிம்மதியாக ஓடுகிறது. இருந்தாலும் வாங்கிய முதல் வருஷத்திலே அவர்கள் பில்டிங்கை முடித்துக் கையிலே கொடுக்கிற வரைக்கும் இவர்கள் படு சிக்கனமாக இருக்க வேண்டி வந்தது. ‘ஆனால் ஒரு பக்கம் கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. பரவாயில்லையே! நம்ம பையன் இப்படி பெரிய இடத்துப் பசங்களோடவெல்லாம் பழகறானே!’ என்று.
அவள் வாய் விட்டுக் கூட கணவரிடம் சொன்னாள். பெரிய இடத்துப் பசங்களை நம்பவே முடியாதுடி!
என்றார் ராமலிங்கம்.
இல்லைங்க. நம்ம சுந்தர் அப்படியெல்லாம் ஏனோ தானோன்னெல்லாம் பார்த்துப் பழக மாட்டான். வீட்டுக்குப் பக்கத்திலயே கூட்டிட்டு வரான்னா ஓரளவுக்கு நல்ல பையனாத்தான் இருக்கும்
என்றாள்.
பார்த்தசாரதியின் வருகைக்காக குடும்பமே ஒரு எதிர்பார்ப்போடு இருந்தது. ஏண்டா, அவன் ஊருக்குப் போயிருக்கிற நேரத்திலே நமக்கு கூட ஏதாவது தண்ணி கிண்ணி வேணும்னா யூஸ் பண்ணிக்கலாம். இங்கே தண்ணிப் பிரச்சினை வரும் போல இருக்கு!
என்றாள் காயத்ரி.
அம்மா, வர்றதுக்கு முன்னாடியே இதெல்லாம் பேசாதம்மா. அவன் சிங்கிள். அவன் ஒருத்தனுக்கு அந்த பெரிய அப்பார்ட்மெண்ட்ல என்ன வேலை? அப்படி யெல்லாம் பத்தாக் குறை வந்தா நான் போய் அங்கே குளிச்சர்றேன். அந்த நிலையிலே அவன் ஹெல்ப் பண்ணிக்குவாம்மா!
என்றான்.
சரி, சரி, நல்ல பையன்னு சொல்றே? நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்!
என்று ஒரு விதமாகத் தேறிக்கொண்டாள் காயத்ரி. ஆனால் சட்டென்று இரண்டு பெண்களில் ஒருத்தியைக் கொடுத்தால் கூட தப்பில்லை என்று மகன் சொன்னது அவளுக்கு ஒரு விதமாக இருந்தது.
‘பார்த்து எச்சரிக்கையா வச்சுக்கணும்!’ என்று எண்ணிக் கொண்டாள்.
இரண்டு பெண்கள் ஜெயமதி, சுபமதி என்று, ஜெயமதி முதலிலேயே பட்ட மேல்படிப்பை முடித்துவிட்டாள்.
சுபமதி பட்ட மேற்படிப்பு இறுதியாண்டுத் தேர்வை முடித்திருந்தாள்.
ஜெயமதி மேலே எம்.ஃபில். படித்து விட்டு லெக்சரராக போகப் போகிறாளாம். சின்னவள் என்ன கருத்தில் இருக்கிறாள் என்று தெரியவில்லை. ஏதோ இரண்டு பேரும் படித்து முடித்தவுடனே வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தாய் மனது பலதையும் யோசனை செய்து கொண்டிருந்தது. வரப் போகிற அந்த இளைஞனுக்காக கொஞ்சமாக பால் அல்வா கிண்டிக் கொண்டிருந்தாள்.
மொத மொதல்லே, நம்ம வீட்டுக்கு வர்றான்ம்மா. ஏதாவது ஸ்வீட் செய்!
என்று சொல்லியிருந்தான் சந்தரராஜன். காயத்ரி சிக்கனமான அம்மா! எல்லாப் பலகாரங்களையும் வீட்டிலேயே செய்து விடுவாள். மைசூர் பாகைக் கூட வண்ணமாகக் கிண்டி எடுத்து விடுவாள். பெரும்பாலும் மைசூர் பாகுதான் பக்குவம் வராது என்பார்கள். அதைக் கூட லாவகமாக செய்து விடுவாள்.
முறுக்கு சுட்டால் அப்படியே வாயிலே கரையும். பெரும்பாலும் வெளியிலே வாங்கவே மாட்டார்கள். ‘வயித்துக்குக் கேடு’ என்பாள். அளவான எண்ணெயில் வாரம் ஒரு பலகாரம் செய்து கொடுப்பாள். ஒரு வாரம் ஓட்டுப் பக்கோடா, ஒரு வாரம் முறுக்கு, ஒரு வாரம் தட்டை இது போக இனிப்பு வகையறா என்று எதையாவது செய்து வைத்து விடுவாள்.
அந்த சீசனில் என்னென்ன காய்கறி கிடைக்கிறதோ அதையெல்லாம் வாங்கித் தொக்கு, ஊறுகாய் என்றெல்லாம் தயாரித்து விடுவாள். வத்தல், வடகம், என்று வீட்டுக்கு தேவையானதெல்லாம் திறமையாகத் தயாரித்து விடுவாள்.
ஜெயமதியும், சுபமதியும் கூட ஓரளவுக்கு இந்த வித்தைகளையெல்லாம் பழகிக்கொண்டிருந்தார்கள். அவர்களும் இரண்டு பேரும் கொஞ்சம் எதிர்பார்ப்போடு தான் இருந்தார்கள். சுந்தரராஜன் அப்படி பார்த்தசாரதியைப் பற்றி புகழ்ந்து வைத்திருந்தான்.
கெட்டிக்காரன்டி! அவங்க அப்பாவோட பிஸினசை இவன்தான் பார்த்துக்கறான். இப்ப சென்னையிலும் ஏதோ எக்ஸ்பேண்ட் பண்றாங்களாம். இங்கேயும் வந்து ஏதோ பார்ட்டியெல்லாம் பிடிக்கணுங்கறான். ரொம்ப டீசன்டானவன். நீங்க நல்லா இம்ப்ரஸ் பண்ணினீங்கன்னா உங்களுக்கு வேலை கூட வாங்கிக் கொடுத்துருவான்!
என்றுதான் சொல்லியிருந்தான். ஆதலால் சுபமதியை விட ஜெயமதி மிகவும் எதிர்பார்ப்போடு இருந்தாள்.
பார்க்கணும்! நல்ல வேலையா வாங்கித் தருவார்னா எம்.ஃபில்லை விட்டுட்டு வேற ஏதாவது கூட செய்யலாம்!
என்று யோசனையில் இருந்தாள்.
அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்திருந்த அந்தப் பார்த்தசாரதி என்கிற சாரதி அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக வந்து சேர்ந்தான்.
இவர்களைத் தாண்டித்தான் அவனுடைய அப்பார்ட்மெண்டிற்குப் போக வேண்டும். நடுவிலே படி இந்தப் பக்கம் இரண்டு அப்பார்ட்மெண்ட். அந்தப் பக்கம் இரண்டு அப்பார்ட்மெண்ட். எதிரிலே பால்கனி என்று அமைந்திருந்தது அந்த அப்பார்ட்மெண்ட்.
இவர்கள் மூன்றாவது மாடியிலே இருந்தார்கள். லிஃப்ட் வசதி இருந்தது. அங்கிருந்து பார்த்தால் கொஞ்சம் கடற்கரையும் கூட தெரியும். அதனாலேயே அவனுக்கு அந்த அப்பார்ட்மெண்ட் பிடித்தது. எப்பொழுது வந்து பார்த்தான் என்று கூடத் தெரியவில்லை. அவன் வந்து அப்பார்ட்மெண்டை முதல்முதலாகப் பார்த்தபொழுது சுந்தரராஜனிடம், நான் இன்னொரு நாளைக்கு உங்க வீட்டுக்கு வரேன்
என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.
அதனால் அன்றைக்கு அவனைப் பார்க்க முடியவில்லை. இன்றைக்கு அவன் வந்தவுடனே அவனை நன்றாக கவனிக்க வேண்டும் என்று அந்தக் குடும்பமே முனைப்பாக இருந்தது.
அவனும் வந்து சேர்ந்தான். ஐந்தரை அடிக்கும் மேலே தான் இருந்தான். ஆறுக்கு கிட்டத்தட்ட இருக்கலாம். எடுப்பாக உடை அணிந்திருந்தான். அளவான நிறம். ஆனால் மூக்கு முழியெல்லாம் திருத்தமாக இருந்தது.
சிரித்தால் பல் வரிசை பளிச்சென்று இருந்தது. அம்மா, சாரதி வந்துட்டான்!
என்று குரல் கொடுத்தபடியே சுந்தரராஜன் உள்ளே வந்தான்.
அம்மா அடுக்களையில் இருந்து, அப்பா அவருடைய படுக்கையறையில் இருந்து ஜெயமதியும், சுபமதியும் அவர்களுடைய அறையில் இருந்து வெளியிலே வந்தார்கள்.
வாப்பா வா!
என்று இராமலிங்கமும், வாங்க தம்பி, வாங்க!
என்று காயத்ரியும் வரவேற்றார்கள். இரண்டு பேரும் ஹாலுக்கு வந்தவுடனே, வணக்கம். வணக்கம் மாமா, வணக்கம் ஆன்ட்டி
என்று சொன்னபடியே அவர்கள் சற்றும் எதிர்பாராதவிதமாக வேகமாக இரண்டு பேருடைய காலையும் வலக்கையால் தொட்டு தலையிலே ஒற்றிக்கொண்டான்.
இராமலிங்கமும் காயத்ரியும் குளிர்ந்து போனார்கள். ‘பரவாயில்லையே! பையன் நல்ல பாங்கான பையனா இருக்கான்!’ என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
சுந்தரராஜனும் பெருமையாகப் பார்த்துக்கொண்டு நின்றான். சாரதி, இது என்னோட சிஸ்டர்ஸ் இவ ஜெயமதி, இவ சுபமதி!
என்றாள்.
ஹலோ, ஹாய்!
என்று இரண்டு பேருக்கும் தலையசைத்து விட்டு, நல்ல பேருப்பா!
என்றான்.
ஜெயமதியும், சுபமதியும் அவனுடைய ஆகுருதியையும் ஆளுமையையும் பார்த்து சற்றே மலைத்துப் போய்த்தான் நின்றார்கள்.
ஹலோ! பேச மாட்டீங்களா?
என்றான் அவன்.
வாங்க, வாங்க, வெல்கம்!
என்று இருவரும் ஒரே குரலில் வரவேற்றார்கள்.
தாங்க் யூ!
என்று திரும்பினான். அவன் தொடர்ந்து ஆர்வமாகப் பேசுவான் என்று காத்துக்கொண்டு நிற்க, அதற்குப் பிறகு அவன் அவர்கள் பக்கம் திரும்பவே இல்லை.
*****
அத்தியாயம் 2
உபசரிப்புக்களை ஏற்றுக்கொண்டான் பார்த்தசாரதி. பிறகு சுந்தர், அந்த அப்பார்ட்மெண்டுக்குப் போகலாமா?
என்று கேட்டான்.
ம்… நானே அதான் சொல்லணும்னு நினைச்சேன்!
என்று எழுந்தார்கள்.
சின்னதா பால் காய்ச்சறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கு!
என்றான்.
ஓ! நான் அதைப் பத்தியெல்லாம் யோசனை பண்ணலை. அம்மாவும் அப்பாவும் இப்ப வரலைன்னாங்களா? அதனாலே அவங்க வரும் போது பண்ணிக்கலாம்னு நினைச்சேன்!
என்றான்.
இல்லல்லே, நீ புழங்கப் போறயில்லே! ஒரு வீடுன்னு இருந்தா சின்னதா ஒரு ஃபங்ஷன் பண்ணிட்டுத்தான் நுழையணும். சடங்கு, ஹோமம் அந்த மாதிரி வேண்ணா அம்மா, அப்பா வரும் போது செஞ்சுக்கலாம்!
என்றான் சுந்தரராஜன்.
ஓ.கே!
என்பதுபோல் அவன் தோளைக் குலுக்கிக்கொண்டு தான் கொண்டு வந்திருந்த ஒரே ஒரு ஹேர் பேக்கை எடுத்துத் தோளிலே மாட்டிக்கொண்டு அந்த அப்பார்ட்மெண்டுக்குக் கிளம்பினான்.
அது என்ன? அடுத்த வாசல்தானே? அடுத்த வாசலுக்குப் போனவன் சற்றே ஆச்சரியத்துடன் நின்றுவிட்டான். ஏனென்றால் முன்னாலே அழகான கோலம் போடப்பட்டிருந்தது.
கதவுக்குப் பூச்சரங்களெல்லாம் தொங்க விட்டிருந்தார்கள். உள்ளே நுழைந்தார்கள். வீடே அலங்காரத்தில் கண்ணை கவர்ந்தது. அலங்காரம் என்றால் பெரிதாக இல்லை. இங்கே ஒரு மல்லிகைச் சரம் அங்கே ஒரு மல்லிகைச் சரம் இடையிலே கொஞ்சம் கனகாம்பரம் என்று இந்தப் பெண்கள் கை வித்தையைக் காட்டியிருந்தார்கள்.
சமையல் அறைக்குப் போனான். அங்கேயும் கோலமிட்டு அவர்கள் வீட்டிலே இருந்த எலக்ட்ரிக் ஸ்டவ், புதிதாக வாங்கியிருந்ததைக் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். காயத்ரியும், ராமலிங்கமும் வந்தார்கள்.
பால் காய்ச்சிடலாமா?
என்றார்கள்.
ம்… இவ்வளவு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கீங்க. அதையும் ஆன்ட்டி, நீங்களே செஞ்சுருங்க!
என்றான்.
காயத்ரி ஒன்றும் பெரிதாக மறுக்கவெல்லாம் இல்லை. பாலைக் காய்ச்சினாள். அங்கேயே மறுபடியும் கொஞ்சமாக காஃபி தயாரித்தார்கள்.
பூஜை அறையிலே தேங்காய் பழமெல்லாம் வாங்கி வைத்திருந்தார்கள். காய்ச்சிய பாலைக் கொண்டுபோய் அங்கே வைத்து சின்னதாக ஒரு பூஜை செய்தார்கள். ஒரே ஒரு படம் மட்டும் வாங்கி வைத்திருந்தார்கள். அப்புறம் உங்களுக்கு எப்படி வேண்டுமோ டெகரேட் பண்ணிக்கோங்க தம்பி!
என்றார்கள்.
அவன் தலையை ஆட்டிக்கொண்டான். அந்தப் பாலை எல்லாருக்கும் தம்ளரிலே ஊற்றிக் கொடுத்தார்கள்.
அதற்குப் பின்னாலேயே கொஞ்சம் மறுபடியும் ஸ்நாக்ஸும் வந்தது. பரவாயில்லையே, ரொம்ப ஹோம்லியா இருக்கு. ஒரு சின்ன பங்ஷனாவே பண்ணிட்டீங்க!
என்று மகிழ்ந்துகொண்டான் பார்த்தசாரதி.
பின்னே? நாங்க இருக்கும் போது உன்னை ஜஸ்ட் லைக் தட்னு விட்ருவோமா?
என்றான்.
தாங்க்ஸ்டா!
என்றான்.
சாயங்காலமா கட்டில் பீரோவெல்லாம் வருது. நாங்கூட எல்லாம் இங்கே வாங்கிக்கலாமேன்னேன். இல்லடா, கெஸ்ட் ரூமுக்கே ரெண்டு மூணு எக்ஸ்ட்ரா இருக்குது. அதையே போட்டு அனுப்பறேன். எதுக்கு வேஸ்டா வாங்கறேன்னாரு அப்பா!
என்றான் பார்த்தசாரதி.
அப்புறம் தம்பி அம்மா, அப்பாவெல்லாம் நல்லாயிருக்காங்களா?
என்றார் ராமலிங்கம்.
நல்லாயிருக்காங்க.
அப்புறம் தம்பி?
என்றார்.
தம்பியும் நல்லாயிருக்கான். அவன் அடுத்த வருஷம் காலேஜ் ஸ்டடீஸ் முடிக்கறான்!
என்றான் பார்த்தசாரதி.
அப்புறம் தம்பி, இன்னைக்கு நம்ம வீட்லே சாப்பாடு. இன்னைக்கு உங்க புரோகிராம் என்ன?
என்று கேட்டார் காயத்ரி.
இல்லம்மா. எந்த நேரத்திலே வேண்ணாலும் திங்ஸ் வரும். அதனாலே இன்னைக்கு வெளியிலே எங்கேயும் புரோகிராம் வச்சுக்கலை. சாப்பிட்டுட்டுக் குட்டியா ஒரு தூக்கம் போட வேண்டியதுதான். ஐ ஆம் வெயிட்டிங் பார் திங்ஸ்!
காலையிலே நேரத்திலேயே ஏத்தியாச்சு. அதுக்கு அப்புறம் நான் பதினோரு மணி ஃபிளைட்ல தான் வந்தேன்!
என்றான்.
அப்படின்னா சாயங்காலம் ஒரு அஞ்சு ஆறு மணிக்குள்ளேயெல்லாம் வந்துடும். அதுவரைக்கும் வேண்ணா நீங்க ரெஸ்ட் எடுங்களேம்ப்பா!
என்றார் ராமலிங்கம்.
ஆமாங்க, அங்கிள் அப்படித்தான் செய்யணும்!
என்றான்.
சுந்தரராஜனும் நீயும் பேசிகிட்டிருங்க. ரிலாக்ஸ் பண்ணுங்க!
என்று அவர்கள் வீட்டில் இருந்து ரெண்டு மூணு சேர்களை கொண்டு வந்து போட்டார்கள்.
படுக்கணும்னா கூட இப்போதைக்குக் கட்டில் கொண்டு வந்து போட்டுடறோம்ப்பா!
என்று ஒரு ஒற்றைக் கட்டிலையும், அதிலே ஒரு படுக்கையையும் எடுத்துக்கொண்டு வந்து போட்டுக் கொடுத்தார்கள்.
பரவாயில்லை! பரவாயில்லை! நான் கீழே கூட படுப்பேன்!
என்றான் அவன்.
இல்லே, இருக்கட்டும்!
அவனுக்கு வேண்டும் வசதியெல்லாம் அந்தக் குடும்பம் செய்து கொடுத்து விட்டது. பிற்பகல் உணவை காயத்ரி ஒரு விருந்து போலவே தயாரித்து இருந்தாள். ஆனால், அவன் எல்லாவற்றையும் அளவாகத்தான் எடுத்துக் கொண்டான். ஏன் தம்பி? ஏதாவது டயட்டா?
என்றாள் காயத்ரி.
டயட்னு இல்லை ஆன்ட்டி. அளவா இருந்துட்டா நல்லதுதானே?
என்றான்.
அதோடு பேச்சு வாக்கிலே, லைட்டா கொஞ்சம் அசிடிட்டி ப்ராப்ளம் இருக்கு. அங்கே இங்கே அலைஞ்சுகிட்டிருக்கோம். அதனாலே முடிஞ்சவரைக்கும் வெளியிலே சாப்பிட வேண்டாங்கறாங்க. ஆனா, நாம பிஸினஸ் பீப்பிள். நாம அப்படி இருக்க முடியுமா? அதனால நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிட்டுக்கறது.
சுந்தரராஜனும் காயத்ரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். பிற்பகல் உணவுக்குப் பிறகு மறுபடியும் கொஞ்ச நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.
சரி, நான் வேண்ணா போய்க் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்!
என்றான்.
தன்னுடைய படுக்கையைத்தான் படுக்கையறை அல்லாத