Paalodu Thean Kalanthu...!
By Jaisakthi
5/5
()
About this ebook
Read more from Jaisakthi
Aruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Poothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Analukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Nenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Kaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsPaattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsThottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Ilankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsOviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Enna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Naaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsMegam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Kanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Ennul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Sudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Aahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsIlankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5
Related to Paalodu Thean Kalanthu...!
Related ebooks
Nin Vasamaathal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Koovum Solai! Rating: 0 out of 5 stars0 ratingsEnnulle Nirainthai Rating: 0 out of 5 stars0 ratingsVilagatha Nilai Vendum... Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsMalarndha Malarchudare! Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsSanthana Marathu Kuyil Rating: 5 out of 5 stars5/5Thaabamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsVannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Sonna Vilai Rating: 0 out of 5 stars0 ratingsIthu Varai Sollatha Kavithai Rating: 3 out of 5 stars3/5Enna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsPirivu Ini Illai Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Iruvizhi Paarvaiyile...! Rating: 0 out of 5 stars0 ratingsSollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Anbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5Naanendrum Neeyendrum...! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Kannukkul Paaintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Aahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5Poo Malarntha Pothu...! Rating: 0 out of 5 stars0 ratingsThalli Ponal Theipirai Rating: 0 out of 5 stars0 ratingsNee Matrum Naan Rating: 0 out of 5 stars0 ratingsNishaptha Mozhigal Rating: 0 out of 5 stars0 ratingsNee Andha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsThenaruvi Nathiyagi! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Paalodu Thean Kalanthu...!
1 rating0 reviews
Book preview
Paalodu Thean Kalanthu...! - Jaisakthi
http://www.pustaka.co.in
பாலோடு தேன் கலந்து...!
Paalodu Thean Kalanthu…!
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 1
நல்ல அம்மா தானே? செல்ல அம்மா
என்று கொஞ்சினான் இளைய பாரதி.
நான் நல்ல அம்மாதான்டா. உனக்கு மட்டும் இல்லை. உங்க அண்ணனுக்கும் நல்ல அம்மா தான்!
என்றாள் அழகம்மாள்.
அம்மா பேருக்குத் தகுந்த மாதிரியே நீ ரொம்ப அழகா இருக்கேம்மா
என்று மகன் தாயைக் குளிர வைக்க முயன்றான்.
அம்மா குறும்பாகச் சிரித்தாள். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரைக்கும் நிறைய பேரு சொல்லியாச்சுடா. இதுல நீ புதுசா சொல்றதுக்கு என்னடா இருக்கு?
என்றாள்.
ஆனாலும் இப்படித் தலைக்கனம் ஆகாது!
என்றான் இளைய பாரதி.
ஆமாம்! நீங்க எல்லாம் பில்டப், பில்டப் என்று என்னென்னமோ சொல்லிக்கிறீங்களே அது மாதிரி நானும் பண்ணக்கூடாதா?
என்று சிரித்தாள்.
அம்மா! ப்ளீஸ்! அண்ணன் கிட்டே சொல்லும்மா
என்றான்.
அழகம்மாள் இப்பொழுது அவனை பரிவோடு பார்த்தாள். என்னன்னு சொல்லச் சொல்றே. இந்த மாசத் தொடக்கத்துல தான் இரண்டாயிரம் கேட்டே. வாங்கிக் கொடுத்தேன். அந்த இரண்டாயிரத்துக்கு ஒழுங்கா கணக்கு கொடுத்தே. இப்ப திடீர்னு வந்து மூவாயிரம் வேணும்னா நான் எப்படி அவன் கிட்ட கேட்கறது? அவனுக்கு மட்டும் என்ன செடியில முளைக்குதா?
என்றாள் அம்மா.
தெரியும்மா. நான் ஒண்ணும் செடியில முளைக்குதுன்னெல்லாம் சொல்லலை. ஆனா எனக்கு காலேஜுக்குக் கட்டியாகணும்?
என்றான் இளைய பாரதி.
அதுதான் கேட்கிறேன். எதுக்குன்னு சொல்லு?
என்றாள் அழகம்மாள்.
இளையபாரதிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அம்மா அண்ணன் கஷ்டப்பட்டு படிக்க வைக்கறார்ன்னு எனக்குத் தெரியும்மா. ஆனா அதுக்காக காலேஜ்ல சில நடைமுறைகளெல்லாம் இருக்கத்தான் செய்யுது. காலேஜ் சேரும்பொழுதே எக்ஸ்கர்ஷன் போறதுக்குன்னு சேர்த்து பணம் கட்டியாச்சு. ஆனா, அடுத்த வாரத்துல எக்ஸ்கர்ஷன் கூட்டிட்டுப் போறாங்க
என்றான்.
அழகம்மாள் முறைத்தாள். ஏண்டா இதுல உனக்கு எக்ஸ்கர்ஷன் வேறயா?
என்றாள்.
அம்மா இதெல்லாம் தவிர்க்க முடியாதும்மா. போய்த்தான் ஆகணும். இப்ப நம்ம வீட்ல கஷ்டம் இருக்குங்கறதுக்காக நீ கல்யாணத்துக்கு போகாம இருக்கியா? மொய் முறை செய்யாம இருக்கியா?
என்றான்.
தங்கள் குடும்பத்துக்கு ஒன்றும் பெரிய பணக் கஷ்டம் இல்லை என்பது அழகம்மாளுக்கு தெரியும். ஆனால் பெரிய மகனின் கட்டளை. எப்போ பணம் கேட்டாலும் கிடைக்கும் அப்படிங்கற ஒரு ஐடியாவ நீங்க அவனுக்குக் கொடுக்கக் கூடாது
என்று அவளிடம் திட்டமாக சொல்லியிருந்தான். அதனால்தான் மகனோடு சேர்ந்து அவளும் இந்த நாடகத்தை நடத்த வேண்டி இருந்தது.
அம்மா, இந்த நடைமுறையெல்லாம் மாத்த முடியாதும்மா. கைச்செலவுக்குப் பணம் வேணும்மா
என்றான் இளையபாரதி.
என்னது, கைச்செலவுக்கு மூவாயிரமா?
என்றாள் அம்மா.
ஆமாம்மா, ஒரு வாரம் டூர். எங்கே போனாலும் சாப்பிடறதுக்குப் பணம் வேணும். ஏதாவது வாங்கணும்னா தேவை இருக்கும்
என்று புலம்புவது போல சொன்னான் இளைய மகன்.
என்னமோடா, நீ என்னமோ சொல்றே. எனக்கு ஒவ்வொரு தடவையும் அவன் கிட்டே பணம் கேட்டு நிக்கறது கஷ்டமா இருக்கு
என்றாள் அழகம்மா.
ஏம்மா, அவரு கொடுத்தா கூட நீ விடமாட்டே போல இருக்கு!
என்று கோபித்துக் கொண்டான் மகன். பிறகு ஏம்மா, அண்ணன் எப்ப வருவாரு?
தெரியலேப்பா, இனிமே வருவான் நீயே கேளு
என்றார் அம்மா.
நான் கேட்கறதா இருந்தா கேட்டிருப்பேனே? நான் போய் நின்னு கேட்கறதுக்கு பயமா இருக்குன்னுதானே உங்கிட்ட பேசச் சொல்றேன்
என்றான் இளைய பாரதி.
அம்மா ஒன்றும் பேசவில்லை. தான் போட்டு எடுத்து வந்த காபியை நீட்டினாள்.
இளைய பாரதி வாங்கிக் கொண்டு போய் ஒரு புறமாக போய் அமர்ந்தான். காஃபி சூப்பர்!
என்று ஐஸ் வைத்தான். அம்மா எதற்கும் அசைகிற மாதிரி தெரியவில்லை.
இதோ பாருடா, நீ என்ன ஐஸ் வச்சாலும் சரி நான் எந்த உறுதி மொழியும் கொடுக்க முடியாது. உங்க அண்ணன்கிட்ட கேட்கறேன். கொடுத்தா வாங்கிக்க இல்லைன்னா நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது
என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோவா? மூவாயிரத்துக்கு நான் எங்கே போறது?
என்ன பெரிய கொடுங்கோல் ராஜ்ஜியமா இருக்குது. ஒவ்வொரு முறையும் கையேந்தி கையேந்தி நிற்க வேண்டி இருக்கு!
என்று கடுப்பானான் மகன்.
பாருடா, திடீர்னு வந்து நின்னாலும் நிற்பான்
என்றாள் அம்மா.
சொல்லிக் கொண்டே அம்மா திரும்பவும் தன்னுடைய கம்பீர நடையோடு உள்ளே நுழைந்தான் மூத்த மகன் உதய பாரதி.
வா, வா, இப்பத்தான் உன்னைப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன்
என்றாள். அம்மா.
ம் காதிலே விழுந்துச்சு!
என்றபடி வந்தான்.
சோபாவில் வந்து அமர்ந்தான். ஒரு கால் மேல் இன்னொரு காலை போட்டுக் கொண்டு தலையை அழுந்தக் கோதிக் கொண்டான். முகத்தில் ஏதோ ஆழ்ந்த யோசனை இருந்தது.
அழகம்மாளுக்கு மகனைப் பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. ‘இந்த இளம் வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்கிறான் பாவம். இந்த வயதுக்காரர்கள் எல்லாம் அவரவர்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று காலம் தள்ளுகிறார்கள். ஆனால் இவன் ஒரு தங்கையைக் கரை ஏற்றி விட்டுத் தம்பியை படிக்க வைத்து விட்டு தம்பி செட்டில் ஆகட்டும் கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று அவளிடத்திலே சொல்லிக் கொண்டிருக்கிறான்.
நான்கு நாட்களுக்கு முன்னால் கூட அம்மா அவனிடத்திலே கேட்டாள். தம்பி அவன் இப்ப எம்.எஸ்.சி. ஃபைனல் இயர் வந்துட்டான். இன்னும் நீ எதுக்கு உட்கார்ந்துட்டு இருக்கே?
என்றாள் அம்மா.
அம்மா அவனுக்கு ஏதோ ஒரு வேலை கிடைக்கட்டும்மா. அதுக்கப்புறம் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம்
என்றான் அவன்.
அதுக்குள்ளே உனக்கு வயசாயிடும்
என்று அம்மா கோபிக்க.
என்ன வயசு? இப்பதான் இருபத்து ஏழு ரன்னிங்
என்றான் உதய பாரதி.
போடா எங்க அண்ணன் மகனுக்கெல்லாம் கல்யாணம் ஆகி அவனுக்கு ஒரு குழந்தையே ஆயாச்சு
என்று சலித்துக் கொண்டாள் அம்மா.
அம்மா, அவனுக்கு ஃபேமிலி பிசினஸ் இருக்கு. அதை ரன் பண்ணிகிட்டிருக்கான். பெரிய கமிட்மெண்ட் இல்லை
என்று இழுத்தான் உதய பாரதி.
உனக்கு மட்டும் என்ன பேமிலி பிசினஸ் இல்லையா? உனக்கு மட்டும் என்ன பெரிய கமிட்மெண்ட் இருக்கா?
என்றாள் அம்மா.
அவன் வருத்தத்துடன் அம்மாவைப் பார்ததான். "அம்மா அவங்க நிலைமை வேற நம்ம நிலைமை வேற. நம்ம ஒண்ணும் மோசமா இல்லைதான் ஆனாலும் நாம ஒண்ணும் பெரிய அளவில் இல்லை தான்.
தங்கைக்கும் தம்பிக்கும் செய்ய வேண்டியதை செஞ்சு செட்டில் பண்ணிட்டு நான் மேரேஜ் பண்ணிக்கிறேன்" என்றான் கோபமாக.
அதெல்லாம் இப்போது நினைவுக்கு வர பிசினசில் என்ன பிரச்சனையோ என்று அம்மாவுக்கு வருத்தமாக இருந்தது. என்ன தம்பி ரொம்ப டயர்டா இருக்கே. காஃபி குடிக்கறியா, ஜுஸ் போட்டுத் தரட்டுமா?
என்று கேட்டாள்.
ஜுஸே போடுங்க!
என்றான்.
அம்மா அவனுக்கு ஆப்பிள் ஜுஸ் கலந்து கொண்டு வந்து கொடுத்தாள். அவன் அமைதியாக அதை அருந்தினான். அருந்திக் கொண்டே அம்மாவுக்குப் பின்னால் அடுக்களையில் நின்று கொண்டிருக்கிற சகோதரனை ஓரக் கண்ணால் பார்த்தான். பார்த்து விட்டு பார்க்காதவன் போல ஆப்பிள் ஜூஸை எடுத்துப் பருகினான்.
அவன் அங்கிருந்து அம்மாவிடம் கேளும்மா, கேளும்மா!
என்று வலது கையையும் இடது கையையும் ஆட்டி ஆட்டி சைகை செய்வதைப் பார்த்தான். திரும்பி அம்மாவிடம் என்ன? இளையவர் என்ன கேட்கறாரு?
என்றான்.
அம்மா மகனைப் பார்த்தார். பெரிய மகனையும் சின்ன மகனையும் மாறி மாறி பார்த்தாள். பிறகு தயங்கிக் கொண்டு இல்லை அவங்க காலேஜ்ல எங்கேயோ எக்ஸ்கர்ஷன்...
என்று இழுக்க, மகன் சட்டென்று உள்ளே வந்து ஸ்டடி டூர்!
என்றான்.
ம், ஸ்டடி டூர் போறாங்களாம். அதுக்கு இவனுக்குக் கொஞ்சம் பணம் வேணுமாம்
என்றாள்.
எவ்வளவு?
என்றான் உதய பாரதி.
த்ரீ தவுஸண்ட் ருபீஸ்
என்றான் இளைய பாரதி.
எதுக்கு அவ்வளவு?
என்றான்.
ஸ்டடி டூருக்கு காலேஜ் ஃபீஸ் கட்றப்பவே கட்டியாச்சுண்ணா. அது வந்து கம்பல்சரி. நாம விரும்பினாலும் விரும்பாட்டியும் போய்த்தான் ஆகணும். இல்லைன்னா பணம் வேஸ்ட். ஒரு வாரம் டூர். முக்கியமான ப்ளேஸஸுக்கு கூட்டிட்டுப் போறாங்க!
என்றான்.
ம்ஹும்...!
அங்கே போய் நிறைய டேட்டா கலெக்ட் பண்ண வேண்டி இருக்கு.
என்றான்.
ம்ஹும்... நீங்களெல்லாம் போய் டேட்டா கலெக்ட் பண்ணப் போறீங்க,
என்று ஒரு மாதிரி இகழ்ச்சியாகச் சிரித்தான்.
தம்பியின் முகம் வாடியது. ஓகே, ஓகே, நோ அஃபென்ஸ்! சொல்லு
என்றான்.
ஃபுட்டெல்லாம் நம்மதான் பார்த்துக்கணும். எங்கேயாவது ஸ்டே பண்றதுக்கு பணம் கட்ட வேண்டியது இருந்தா கட்டணும். எதுக்கும் மினிமம் த்ரி தவுஸண்ட் கொண்டு வாங்க அப்படின்னு சொன்னாங்க
என்றான்.
எப்ப வேணும்?
என்றான் மூத்தவன்.
இன்னைக்கே கிடைச்சா கூட பரவாயில்லை
என்றான்.
எப்ப கிளம்பப் போறீங்க. முன்னாலேயே சொல்ல வேண்டாமா? துணி மணி எல்லாம் தயார் பண்ணிக்கிட்டியா?
என்றான்.
அதெல்லாம் ரெடி பண்ணிக்கிட்டேன். ஒரு நாலஞ்சு நாளாவே எல்லாம் அப்பப்ப எடுத்து பேக் பண்ணிட்டேன்
என்றான்.
அதான் அந்த டிராவல் பேக் கூட ஓசி கேட்கலாம்ன்னு நினைக்கிறேன்
என்றான்.
அது எடுத்துக்கோ. பரவாயில்லை
என்றான் உதயபாரதி. சரி!
என்றவன் உள்ளே போய் தன்னுடைய பீரோவைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.
பணத்தை எண்ணிப் பார்த்த இளையபாரதி வாயைப் பிளந்தான். அண்ணா. ஃபைவ் தவுசண்ட் இருக்கு!
என்றான்.
உதயபாரதி இறுக்கமான முகத்துடன் அவனைப் பார்த்தான். ஸ்டடி டூர்னா என்னன்னு எனக்கும் தெரியும்டா. நானும் காலேஜ்ல படிச்சவன் தான். எதுக்கும் கையில வச்சுக்கோ. தேவையானதை வாங்கிக்கோ. புடிச்சது எதாவது இருந்தாலும் வாங்கிக்கோ
என்றான் உதயபாரதி.
இளைய பாரதி உண்மையாகவே இதை எதிர் பார்க்கவில்லை. போகும் போது சொல்லு. டெபிட் கார்டு தரேன். கையில வச்சுக்கோ ஏதாவது எதிர்பாராத தேவைன்னா பார்த்துக்கலாம்
என்றான்.
காஃபியை எடுத்துக் குடித்து விட்டு மாடியில் உள்ள தன் அறைக்குப் போய் விட்டான்.
இளைய பாரதி மயக்கம் போடாத குறையாக அழகம்மாளைப் பார்த்தான். அம்மா இது அண்ணன் தானா?
என்றான். அழகம்மாளுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
இளையபாரதி ஹைய்யா டன்டனக்கு டனக்குனக்கு!
என்று கீழ் ஹாலிலே ஆடியதை மேலே தன்னுடைய அறையில் இருந்து பார்த்தான் உதயபாரதி.
மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.
இளையபாரதி தன்னுடைய தோழன் ஒருவனை செல்ஃபோனில் அழைத்து டேய் உலக அதிசயம்டா. எங்கண்ணன் ஐந்தாயிரம் தந்தார்றா. டெபிட் கார்டு வேற தர்றாராம்
என்று சத்தம் போட்டு சொல்லிக் கொண்டு ஹாலை விட்டு வெளியேறுவதை அவன் எந்த விதமான உணர்ச்சியும் காட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
சற்றுக் கழித்து எங்கோ வெளியில் போகிற தோரணையில் இறங்கி வந்தான். அம்மா, முக்கியமான ஒருத்தரைப் பார்க்கவேண்டி இருக்கு. நான் கொஞ்சம் வெளியிலே கிளம்பறேன்
என்றான்.
அம்மா அவனை ஒரு நிமிடம் நிறுத்தி ஏம்ப்பா, அஞ்சாயிரம் ரூபாய் கொடுத்திருக்கியே?
என்றாள்.
அம்மா, காலேஜ் லைஃப்லதான் இதெல்லாம் என்ஜாய் பண்ண முடியும். அதுக்கு அப்புறம் இருக்கவே இருக்கு பொறுப்பு வாழ்க்கைன்னு. அவன் ரொம்ப அநாவசியமா செலவு பண்றது இல்லை. புடிச்சதை வாங்கிக்கட்டும்மா.
இல்லை... நம்ம பட்ஜெட்ல...!
என்று அம்மா தயங்க மெல்லத் திரும்பி அம்மாவைப் பார்த்து சிரித்தான்.
உங்களுக்கு மாசச் செலவுக்கு வர வேண்டிய பணம் வந்துடும். கவலைப்படாதீங்க!
என்றான்.
இல்லைப்பா, இந்த மாசம் புவனா வீட்ல வேற ஏதோ விசேஷம்னு தாமரை சொன்னாளே?
என்றாள்.
அதுக்கென்ன? குழந்தைக்கு மூணு பவுன் செயின் போடணும். அவ்வளவு தானே? எல்லாம் ரெடியா இருக்கு கவலைப்படாதீங்க
என்று சொன்னான். ஆனால் இதை மட்டுமல்ல எதைச் சொல்லும் போதும் அவன் மலர்ச்சியாக சொல்லுவதே இல்லை. முகத்தில் அதே இறுக்கம்தான். சொல்லிவிட்டு வெளியே போகிற மகனை அம்மா புரியாமல் பார்த்தாள்.
இவனை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்றே அவளுக்கு புரியவில்லை. ‘நீ எந்தக் கணக்கில் வேணுமானாலும் வைத்துக்கொள்’ என்பது போல அவன் அலட்சியமாகத் தோளைக் குலுக்கி விட்டு தனது அழுத்தமான நடையுடன் சென்று தன்னுடைய பைக்கை எடுத்தான்.
*****
அத்தியாயம் - 2
அண்ணா!
என்று குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்தான் உதயபாரதி. இளைய பாரதி தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தான்.
தன்னுடைய அலுவலக அறையிலே அமர்ந்து கொண்டிருந்தான் உதய பாரதி. அது பெரிய வீடு இல்லை என்றாலும் அது நடுத்தரக் காரர்கள் ரசிக்கக் கூடிய செமி பங்களாவாகத்தான் இருந்தது. அது அவர்கள் அப்பா காலத்தில் வாங்கிய வீடு. அப்பாவின் காலத்திற்குப் பிறகு அவர்களுடைய பொருளாதார நிலையில் பெரிய சரிவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஆட்டம் கண்டு விட்டது என்றே சொல்லலாம்.
அதையெல்லாம் உதயபாரதி தான் சமாளித்தான். ‘அவன் எப்படி சமாளித்தான் இப்பொழுதும் என்ன செய்து கொண்டிருக்கிறான். எப்படி குடும்பச் செலவுகளை சமாளிக்கிறான்’ எதுவும் அழகம்மாளுக்குத் தெரியாது.
அழகம்மாள் அவருடைய கணவர் இருந்த காலத்திலேயே அதையெல்லாம் தெரிந்து கொண்டதும் இல்லை. அவனும் அழகம்மாளுக்கு அதையெல்லாம் தெரிவித்ததும் இல்லை. செலவுக்கு கேட்டால் கொடுப்பார். அதிலும் அழகம்மாளுடைய விசேஷம் என்னவென்றால் அவள் போன தலைமுறையை சேர்ந்தவள். அதனால் கணவன் என்ன சொல்லுகிறாரோ அதைக் கேட்டுக் கொண்டு இருந்து விடுவாள்.
சாதாரணமாக மற்ற குடும்பத்துப் பெண்கள் போல கல்யாணத்துக்கு செல்லும் போது அப்படிச் வேண்டும் இப்படிச் செல்ல வேண்டும் என்பது மாதிரியான ஆடம்பர ஆசைகளெல்லாம் அவருக்கு இருந்ததில்லை. அதனால் குடும்பத்தில் ஏதும் தொல்லைகள் இருக்கவில்லை. இருந்தும் கூட சந்தான பாரதி தன்னுடைய இறுதிக் காலத்திலே ஒரு பெரிய பிரச்சினையை சந்தித்து விட்டார். தொழிலில் ஏற்பட்ட அந்தப் பிரச்சினையே அவருடைய உடல் நலக் குறைவுக்கும் மறைவுக்கும் காரணமாகி விட்டது.
இப்போது முழுப் பொறுப்பும் உதயபாரதியைத் தான் சார்ந்திருந்தது. அவன் தன்னுடைய பிரச்சினைகளை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. வீட்டிற்கு அம்மாவிற்கு செலவுக்குக் கொடுத்து விடுவான். அப்பாவினுடைய தொழிலை தொடர்ந்து நடத்துகிறான் என்று அம்மா கேள்விப்பட்டதோடு சரி. என்ன நடக்கிறது என்று அவளுக்கு தெரியாது.
அது போல வீட்டிலும் ஒரு அலுவலக அறை அமைத்திருந்தான். அங்கே உட்கார்ந்து கொண்டு ஏதோ பங்கு வியாபாரம் செய்கிறான் என்று மட்டும் தாய்க்குப் புரிந்திருந்தது. ஒரு கமிஷன் ஏஜெண்டு போல சரக்குகளை கைமாற்றி விட்டு ஏதோ சம்பாதிக்கிறான் என்பதெல்லாம்