Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuyil Koovum Solai!
Kuyil Koovum Solai!
Kuyil Koovum Solai!
Ebook137 pages1 hour

Kuyil Koovum Solai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரவிந்தன் மற்றும் வாஸந்தி இவர்கள் இருவரும் வசதியாக குடும்ப சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள். சந்தோஷமாக பொழுதை கழித்த அரவிந்தன் வாழ்வில் இடியாக கடன் சுமை விழ, அதை எவ்வாறு ஈடு செய்தான் அதற்காக அவன் மேற்கொண்ட வழிமுறைகள் யாவை? இறுதியில் அவன் நிலைமை எப்படி மாறின? அதற்கு அவனுக்கு பக்கபலமாக வாஸந்தி எந்த முறையில் உதவி செய்கிறாள்? எவ்வாறு இருவரும் இணைந்தார்கள் என்பதை இக்கதையின் சுவாரஸ்யம். வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580106007178
Kuyil Koovum Solai!

Read more from Jaisakthi

Related to Kuyil Koovum Solai!

Related ebooks

Reviews for Kuyil Koovum Solai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuyil Koovum Solai! - Jaisakthi

    https://www.pustaka.co.in

    குயில் கூவும் சோலை!

    Kuyil Koovum Solai!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    ஆசிரியர் உரை

    அன்பு நிறை வாசக நெஞ்சங்களுக்கு!

    ஜெய்சக்தியின் அன்பு வணக்கங்கள்! கடந்த வெளியீடான என் நாவல் உங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன்.

    வழக்கம் போல தொலைபேசியிலும், ஈ மெயிலிலும், முக நூலிலும் நீங்கள் வைத்த கருத்துக்கள் எனக்கு மிகவும் ஊக்கம் தருபவையாக அமைந்தன. இந்த முறை குயில் கூவும் சோலை! என்ற நாவலுடன் உங்களைச் சந்திக்கிறேன். படித்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

    அடுத்த நாவலில் உங்களைச் சந்திக்கிறேன்...

    அன்புடன்,

    ஜெய்சக்தி

    அத்தியாயம் - 1

    பூஜைக்கு எல்லாம் ரெடியாயிடுச்சுப்பா! என்று குரல் கொடுத்தாள் வாஸந்தி.

    சரிம்மா! இதோ வந்துடறேன்! என்று தன்னுடைய அறையிலே இருந்து இறங்கி வந்தார் சக்திவேல்.

    இன்றைக்குப் பௌர்ணமி பூஜை. பௌர்ணமி அன்றைக்குக் காலையிலேயே சம்பிரமமாக பூஜை செய்வார் சக்திவேல். உடன் அவருடைய மனைவி கஸ்தூரியும் மகள் வாஸந்தியும் உதவி செய்து கொண்டு பூஜையிலே கலந்து கொள்வார்கள்.

    அந்தப் பெரிய பங்களாவில் பூஜை அறையை மட்டும் அவ்வளவு அழகாக அமைத்திருந்தார் சக்திவேல். தேக்கு மரத்தால் ஆன கதவு அந்த சிறிய கதவுகளைத் திறந்தால் அந்தக் கதவுகளில் கட்டப்பட்டிருக்கும் மணிகள் ஒலிக்கும். உள்ளேயும் பூஜை அறையிலும் பஞ்சலோக சிலைகள் வாங்கி வைத்திருந்தார்.

    தினமும் காலையில் பூஜை செய்து விட்டுத்தான் வெளியே செல்வார். இன்னைக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கும்மா. அதனாலதான் நேரத்திலேயே பூஜை பண்ணிடலாம் அப்படின்னு சொன்னேன்! என்றார் சக்திவேல்.

    சரிங்கப்பா! என்று புன்னகைத்தாள் வாஸந்தி. அவரது பார்வை மகளின் முகத்திலே ஒரு நிமிடம் நிலைத்து நின்றது. அழகே உருவானது போல் வடிவெடுத்து நிற்கிறாள் மகள். ‘இவளுக்கேற்ற ஒரு மாப்பிள்ளையைப் பிடிக்க வேண்டும். வசதியாக வளர்த்து விட்டோம். ஆனாலும் பொறுப்புத் தெரிந்தவள் அவளே உற்சாகத்தின் காரணமாக வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள்.’ ‘அப்பா எதுவும் தெரியாம இருக்கக் கூடாதுப்பா!’ என்று சொல்லி சமையல் கற்றுக் கொண்டாள். கை வேலைகள் கற்றுக் கொண்டாள். வீணை கற்றுக் கொண்டாள். படிப்பிலும் சுட்டி, அதனால் அவருக்கு மிகவும் பெருமை. ‘இவளை ரொம்ப நல்ல இடமா பார்த்து குடுக்கணும். குறையில்லாம வச்சுக்கணும்!’ என்று அந்த நிமிடம் எண்ணிக் கொண்டார்."

    அப்பா! என்னப்பா அப்படிப் பார்க்கறீங்க? என்றாள் வாஸந்தி.

    ஒண்ணும் இல்லம்மா! சும்மா இன்னைக்கு ப்ரெஷ்ஷா இருக்கியேன்னு பார்த்தேன்! என்று சிரித்தார் அப்பா.

    போங்கப்பா, கிண்டல் பண்ணாதீங்க! என்றாள் மகள்.

    இது என்னடா வம்பாப் போச்சு. எம் மகள் அழகா இருக்கா அப்படின்னு அப்ரிஷியேட் பண்ணினா அது கிண்டலா? என்றார் சக்திவேல்.

    அதானே? இன்னைக்குக் கிழக்கே போற சூரியன் மேற்கே வந்துடுச்சு. அதுதான் நீங்க பாராட்டிட்டீங்க மகளை! என்று சிரித்தாள் கஸ்தூரி...

    உனக்கு ஏம்மா பொறாமை? என்றார்.

    சிரித்தபடி பூஜை அறைக்குப் போனாள் கஸ்தூரி.

    வழக்கம் போல சிவபுராணம் சொல்லி அபிராமி அந்தாதியிலே இருந்து ஒரு நாலைந்து பாடல்களைப் பாடி ‘நீருண்டு பொழிகின்ற காருண்டு!’ என்று வள்ளலார் பாடல்களைப் பாடிப் பூஜையை முடித்து விட்டு வெளியே வந்தார் சக்திவேல்.

    அப்பாடா! இன்னைக்கு பூஜை நல்லபடியா நடந்துச்சு! என்றார்.

    ஆமாம்ப்பா! ஃபோன் கால் அது இதுன்னு எந்த டிஸ்டர்பென்சும் வரலை! என்றாள் வாஸந்தி.

    ம்ஹும்... அவரு போனை சுவிட்ச் ஆஃப்ல வச்சுட்டாரு! என்றார் கஸ்தூரி.

    அதானே பார்த்தேன்! என்றாள் மகள்.

    சரி, மீட்டிங் கிளம்பணும்! என்று அவர் பரபரக்க.

    இத பாருங்க! டிஃபன் ரெடியா வச்சிருக்கேன். டைனிங் டேபிள்ல சூடா ரெண்டு இட்லி சப்பாத்தி சாப்பிட்டுட்டுக் கிளம்புங்க! என்றார் கஸ்தூரி.

    ஆமா, நீ சொன்னதுக்கு அப்புறும்தான் வயிறு கடிக்குது! என்று புன்னகைத்தவர் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தார்.

    சூடாக இரண்டு இட்லியை எடுத்து வைத்தார் கஸ்தூரி.

    அப்பா, உலகத்துலேயே பெஸ்ட் ஃபுட் இட்லி அப்படின்னு நிரூபிச்சிருக்காங்க. உடம்புக்கு நல்லதாம். அரிசி உளுந்தை மொதல் நாளே ஆட்டி வச்சு புளிக்க வச்சு பக்குவப் படுத்தறது எல்லாமே பெஸ்ட் மெத்தட் அப்படின்னு பாராட்டியிருக்காங்களாம்! என்றாள் வாஸந்தி.

    ஆமாம்மா, நம்ம பயலுகளுக்கெல்லாம் வெளி நாட்டிலே இருந்து பாராட்டு வந்தாத்தான் புரியும். நம்மூர் மகிமை தெரியும்! என்றார் சக்திவேல்.

    ஆமாப்பா! நம்மளோட பெருமை நம்மளுக்குத் தெரியறதே இல்லை! என்றாள் வாஸந்தி. இந்த விஷயத்தில் மகளைப் பற்றித் தந்தைக்கும் பெருமைதான். வசதியான வீட்டுப் பெண் என்பதால் தாறுமாறாக உடை அணிந்து கொள்வது. கண்டபடி செலவு செய்வது என்ற பழக்கமெல்லாம் மகளுக்கு இல்லை. சொல்லிச் சொல்லி வளர்த்திருந்தார்.

    பணத்தின் அருமையும் தெரியும். அதற்காகக் கஞ்சத்தனம் என்று இல்லை. இல்லாதவர்களுக்கு உதவுகிற வழக்கமும் உண்டு. அவள் படித்த பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி ஏதாவது இரண்டு ஏழைப் பெண்களுக்கு ஃபீஸ் கட்டுவாள். துணி மணி எடுத்துக் கொடுப்பாள். நல்ல துணிமணிகளாகவே எடுத்துக் கொடுப்பாள். நாலுவருடம் ஆனாலும் அவள் உடுத்துகிற உடை பழையது போலவே ஆகாது அந்த மாதிரி துணிகளை எடுத்துக் கொண்டு போய் யாருக்காவது கொடுப்பாள். இப்படி அவளுக்கு நல்ல பழக்க வழக்கங்கள்.

    ஆமாம்மா! நீ அப்படி இல்லை, அது எனக்கு ரொம்ப சந்தோஷம்! என்றார் சக்திவேல்.

    போதும்! போதும்! இன்னைக்கு என்ன ஒரே பாராட்டு மழையா இருக்கு. உங்க கண்ணே பட்டுடும் போல இருக்கு! என்று நெறித்தாள் கஸ்தூரி.

    அப்பாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். அவர் உணவை முடித்து விட்டு வந்து சோபாவிலே அமர்ந்தார். அப்போது ஒரு ஃபோன் ஒலித்தது. அவருடைய பி.ஏ. கோதண்டன் பேசினார்.

    என்ன கோதண்டம்? என்றார் சக்திவேல். பிறகு ஓரிரு நிமிடங்களுக்கு ‘ம்... ம்..!’. என்று கேட்டுக் கொண்டார்.

    அப்படியா? ரொம்ப நல்லதாப் போச்சு. கொஞ்சம் ரிலாக்ஸ்டா கிளம்பி வரேன்! என்று ஃபோனை வைத்தார்.

    மீட்டிங் ஒரு மணி நேரம் போஸ்ட் போன்டாமம்மா. அங்கே ஃபாரினர்ஸ் எல்லாம் வராங்களாம். ஏதோ கோயில் பார்த்துட்டு வராங்களாம்! என்றார் சக்திவேல்.

    சரிப்பா! இன்னைக்காவது கொஞ்ச நேரம் எங்கிட்டே உட்கார்ந்து பேசுங்க! என்றாள் மகள்.

    தினமும் தானேம்மா உங்கிட்ட பேசறேன்! என்றார்.

    ஆனா காலையிலே பேசறது இல்லையில்லே? ஃபார் எ சேஞ்ச் இப்ப உட்கார்ந்து ரிலாக்ஸா பேசறது நல்லாயிருக்குமில்லே? என்றாள்.

    போச்சுடா! நீ காலேஜ் படிப்பை முடிச்சாலும் முடிச்சே. உனக்குப் பொழுது போகமாட்டேங்குது! என்றார்.

    யாருப்பா சொன்னாங்க? அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. இன்னைக்கு நான் வெளியே போகத்தான் போறேன். நான் பெரிய சோஷியல் ஆக்டிவிஸ்ட் ஆயிடுவேன் தெரியுமா?

    செய்ம்மா செய்! ஏதாவது ஒண்ணை செய்! என்றார்.

    பிறகு நினைவு வந்தவர் போல அடடா! அந்தப் பையன் இன்னைக்கு வரேன்னானே?

    Enjoying the preview?
    Page 1 of 1