Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naanendrum Neeyendrum...! Part - 1
Naanendrum Neeyendrum...! Part - 1
Naanendrum Neeyendrum...! Part - 1
Ebook309 pages3 hours

Naanendrum Neeyendrum...! Part - 1

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

நல்ல ஓவிய கலைஞன் உமாகாந்தன், அவனது வளர்ச்சிக்கு பக்கபலமாக விளங்கும் அவனது சகோதரன் சத்திய பிரகாஷ். நான் ஒருபுறம், நீயொரு புறம் என வாழும் சகோதரர்கள் மத்தியில் நானென்றும் நீயென்றும் என இணைந்து வாழும் சகோதரர்கள்.

ஓவிய கண்காட்சிக்கு வரும் ஏழிசை வல்லபி. உமாகாந்தின் ஓவியத்தில் நெகிழ்ந்து போகிறாள். மேலும் உமாகாந்தனின் ரகசியங்களை அறிந்து உறைந்தும் போகிறாள்.

ஏழிசை வல்லபியினால் சத்திய பிரகாஷ் மற்றும் உமாகாந்தின் வாழ்வில் ஏற்பட போகும் மாற்றங்கள் என்ன? உமாவை பற்றி அறியும் அந்த அதிர்ச்சிகரமான செய்தி என்ன? இந்த கதையின் முதல் பாகத்தில் உள்ள இனிப்பு மற்றும் கசப்பும் கலந்த அனுபவங்களை முழுமையாக காண்போம் வாருங்கள்…

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580106007517
Naanendrum Neeyendrum...! Part - 1

Read more from Jaisakthi

Related to Naanendrum Neeyendrum...! Part - 1

Related ebooks

Reviews for Naanendrum Neeyendrum...! Part - 1

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naanendrum Neeyendrum...! Part - 1 - Jaisakthi

    https://www.pustaka.co.in

    நானென்றும் நீயென்றும்...! பாகம் - 1

    Naanendrum Neeyendrum...! Part – 1

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம்- 7

    அத்தியாயம் -8

    அத்தியாயம் -9

    அத்தியாயம்- 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 1

    நல்ல ஓவியங்கள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன!

    நீண்ட பெரிய ஹாலில் இரண்டு புறமும் ஏன்? நான்கு புறமும் கூட, ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    ஏழிசை வல்லபி மிகுந்த ஆர்வத்துடன் காலை எட்டி உள்ளே வைத்தாள். மெதுவாக இடது புறத்தில் இருந்து ஒவ்வொரு ஓவியமாக நின்று பார்க்க ஆரம்பித்தாள்.

    அத்தனையும் கோட்டோவியங்கள். பென்சிலால் வரையப்பட்டிருந்தன.

    மிக அழகான ஓவியங்களாக இருந்தன. வெறும் பென்சிலை வைத்துக் கொண்டு இத்தனை மந்திர ஜாலங்கள் காட்ட முடியுமா? என்பது போல அந்த ஓவியங்கள் அந்த பெரிய ஹாலையே அழகு படுத்திக்கொண்டிருந்தன.

    பெரிய அளவில் கூட்டம் இல்லை. அழகான முறையில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த ஹால்.

    கோவையினுடைய முக்கியமான அறக்கட்டளை நிறுவனம்

    ஒன்று அந்த ஹாலை இளம் ஓவியர்களுக்காக, வளரும் ஓவியர்களுக்காக இலவசமாகவே கொடுத்துக் கொண்டிருந்தது.

    மாதம் ஒரு முறையாவது ஓவியக் கண்காட்சி நடந்து கொண்டிருக்கும்.

    ஏழிசை வல்லபியும் தவறாது அந்த ஓவியக் கண் காட்சியைக் காண்பதற்கு வருவாள். நுண் கலைகளில் அவளுக்கு ஆர்வம் எங்கெல்லாம் கவிதைகள் படிக்கிறார்களோ அங்கெல்லாம் போய் கூட்டத்தில் ஒருத்தியாக அமர்ந்து ரசித்துக் கேட்பாள். இத்தனைக்கும் அவளே ஒரு கவிதாயினிதான்.

    எங்கெல்லாம் பட்டிமன்றங்கள் நடக்கிறதோ அங்கே போய்க் கேட்பாள். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அவள் பட்டிமன்ற மேடைகளில் ஏறுவதும் உண்டு.

    எங்கெல்லாம் கலை தொடர்பான விஷயங்கள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் ஏழிசை வல்லபியை பார்க்கலாம்.

    நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வருகிறாள் ஏழிசை வல்லபி. ஒரு சகோதரனும், ஒரு சகோதரியுமாக அவளது வாழ்க்கை இனிமையாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

    பெரிய ஏற்றத் தாழ்வுகள் இல்லை. பெரிய அளவில் சுக துக்க வேறுபாடுகள் இல்லை. அதனால் வாழ்க்கை சம தளத்தில் ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் சொல்லப் போனால் அழகான ஒரு ஆறு போல ஓடிக் கொண்டிருந்தது.

    சகோதரனுக்கே இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால், இன்னமும் அவளது திருமணம் பற்றிய பேச்சு எடுக்கப்படவில்லை.

    நல்லது ‘இப்போதைக்கு தப்பித்தோம் எவ்வளவுக்கு எவ்வளவு ரசனைகளை மேம்படுத்திக்கொள்ள முடியுமோ? அவ்வளவுக்கவ்வளவு ரசனைகளை மேம்படுத்திக்கொண்டு வாழ்க்கையை அனுபவிப்போம்’ என்ற முடிவோடு இருந்தாள்.

    ஒரு பள்ளியிலே மேல்நிலைப் பள்ளி ஆசிரியையாக அவள் வேலை பார்த்தாள். அதனால் வார இறுதி நாட்களிலேயே அவளுக்கு நேரம் கிடைத்தது.

    ஒரு பெண் - கிராமத்துப் பெண் - அவள் தன் கணவனுக்காக காத்திருக்கிறாளாம். அவள் நின்று கொண்டிருந்த விதமும், சேலைக்கட்டும் அவ்வளவு அற்புதமாக இருந்தது. பின்கொசுவம் வைத்து சேலை கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

    குடிசையின் முன்புறத்திலே உள்ள தாழ்வாரத்தில் இருந்து இறங்கிய அந்த மூங்கில் தூணைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

    அவள் கண்களில் கணவனுக்கான எதிர்பார்ப்பும் காத்திருப்பும், காதலுமாக, அத்தனை உணர்வுகள் காட்டப் பெற்றிருந்தன.

    அந்த ஓவியத்தை விட்டு நகரவே முடியாதவள் போல நின்று கொண்டிருந்தாள் ஏழிசை வல்லபி.

    அந்த ஓவியத்தின் ஒரு பக்க கீழ் மூலையிலே யாருடைய கையெழுத்து இருக்கிறது என்று குறுகுறுப்பாக பார்த்தாள். ‘உமா’ என்று கிறுக்கலாக எழுதியிருந்தது.

    உமா..!

    அடேயப்பா...!

    இதை வரைந்தவள் ஒரு பெண்ணா? இருக்கும் இருக்கும்.

    ஒரு பெண்ணால்தான். இத்தனை உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்.

    அந்தப் பின்னணியும் சரி. அந்த பெண் நிற்கிற விதமும் சரி...! அந்த குடிசைக் கதவை லேசாக திறந்து வைத்திருந்த அழகும் சரி...! பின்னாலே அடுப்பின் மேலே இருந்த பானையும் சரி! அதிலே இருந்து லேசாக வந்து கொண்டிருந்த ஆவியும் சரி... இத்தனையும் சோறு பொங்கி வைத்துக் கொண்டு கணவனுக்காக காத்திருக்கிற அந்த பெண்ணினுடைய யதார்த்த நிலையை அழகுற எடுத்துக் காட்டியது!

    "ஓவியம்னா இப்படித்தான் இருக்கணும்! அந்த பெண்ணை மட்டும் நினைக்காம அவ நின்னுட்டு இருக்கிற நேரம்! சாப்பாடு சூடா ஆகியிருக்காம் பாரேன் எப்படி கற்பனையை! என்று எண்ணிக் கொண்டாள்.

    நினைச்சேண்டி நீ கண்டிப்பா இதுக்கு வருவேன்னு என்று குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள்! சுபத்ரா அவளது கல்லூரித் தோழி.

    ஏழிசை வல்லபி ஆச்சரியப்பட்டாள் முகம். மலர்ந்தது ஏய் சுபத்ரா என்னாச்சு கொஞ்ச நாளா உன்னைக் காணலை.

    என்ன ஆச்சு குழந்தை அழுகுது என்றாள் சுபத்ரா.

    ஏழிசை சிரித்தாள். ஜோக்காக்கும்!

    இல்லடி! நிஜமாவே குழந்தை அழுது. குழந்தை பொறந்துருச்சுல்ல. ஏழெட்டு மாசமாச்சுல்ல. விட்டுட்டு வரமுடியலை. இன்னிக்குத்தான் ஒரு டூ அவர்ஸ் எங்க வீட்டுக்காரரை கொஞ்சம் பார்த்துக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன். வீட்லேயே இருந்து எனக்கு தலையே வெடிச்சிரும் போல ஆயிருச்சு.

    என்னடி இப்படி சொல்றே? குழந்தையே ஒரு ஓவியம் மாதிரிதான். அது நிக்கறதும் நடக்கறதும் போறதும் வர்றதும் எவ்ளோ அழகா இருக்கும். கைய கால ஆட்டி அதோட கண்கள பார்க்கறதும் சிரிக்கிறதும்! அதைவிட என்னடி பெரிய டென்ஷன் ரிலீஃப் வேணும்?

    அதெல்லாம் உண்மைதான் ஆனால் த்ரூ அவுட் வீட்லேயே இருக்கிறது கஷ்டமாயிருக்கு. குழந்தையை இந்த ஸ்டேஜ்ல எடுத்துக்கிட்டு அலைக்கழிக்கிறது தப்பில்லையா? இன்பெக்ஷன் ஆகலாம். அப்புறம் ஒரு கூடையைத் தூக்கிட்டு எல்லாத்தையும் எடுத்துட்டு வரணும். அதனால எங்கேயும் போறது இல்லைடி!

    ......!

    "ஒரு டென் மந்த்ஸ் ஆகட்டும். ஒன் இயராவது ஆகட்டும்னு வெயிட் பண்றேன். அப்படியிருந்தும் எனக்கு இந்த உமாவோட ஓவியம்ன ஒடனே மனசு கேக்கலை. அதை சாக்கா வைச்சுட்டு ஒரு டூ அவர்ஸ் பார்த்துக்கங்களேன்னு விட்டுட்டு வந்திருக்கேன்.

    இன்ஃபாக்ட் கார்ல வெளியில வெயிட் பண்றாரு குழந்தை கையில இருக்கு" என்றாள்.

    அப்படியா? பேபி சிட்டிங்னு உட்கார வைச்சுட்டியாக்கும் என்றால் ஏழிசை வல்லபி.

    ஏன்? நம்ம நாள் முழுக்க பாக்கறது இல்லையா? டூ அவர்ஸ் பார்க்கட்டுமே. பார்த்தாத்தான் கஷ்டம் தெரியும். என்றாள் இவள்.

    அப்படியெல்லாம் சொல்ல முடியாது. ஒரு வேளை அவர் என்ஜாய் பண்ற டைப்பா இருந்தா?

    அப்படி இருந்தா நல்லதுதானே? இப்படி ஒரு டிரையல் பார்த்திருக்கேன். ஒரு வேளை ஒத்து வந்துட்டா அப்பப்ப வெளியில விசிட் அடிச்சிரலாம்ல என்று கண்ணைச் சிமிட்டினாள் சுமித்ரா.

    இரு இரு. நான் போய் அவர்கிட்ட வார்னிங் கொடுத்திடறேன் என்றாள்.

    வந்திருவீங்களே இதுக்குன்னே கொஞ்சம் பேரு என்று அவள் செல்லமாக கடிந்து கொண்டாள்.

    இரண்டு பேரும் சிரித்தார்கள்.

    இல்லடி. என் ஹஸ்பெண்ட் ரொம்ப நல்ல டைப்தான். இன்ஃபாக்ட் அவரு தான் சொன்னாரு. வீட்லயே அடைஞ்சு கிடக்கிறியேம்மா வா. காரை எடுத்துக்கிட்டு போவோம். நீ வேண்ணா அந்த எக்ஸிபிஷன்லே போய் ஒரு டூ அவர்ஸ் சுத்திட்டு வா. நான் குழந்தையோடு வெளியில கார்ல இருக்கிறேன். ஏதாவது அவசரம்னா கூப்பிட்டா வந்துருவீல்ல. அப்படின்னு சொல்லி கூட்டிட்டு வந்தாரு" என்றாள் சுபத்ரா பெருமையுடன்

    ஏழிசை வல்லபிக்கு முகத்தில் ஆச்சரியக் குறி தோன்றியது. நிஜமாவாடி?

    ஆமாடி மாசம் இருபத்தஞ்சாயிரம் ரூபாய் சம்பாதித்து கொடுக்கிறேன்ல என்றாள் சுபத்ரா.

    அப்புறம் வீட்ல இருக்கேன்னே? என்று கேட்டாள்.

    இப்பத்தான் ஆறு மாசம் லீவு கொடுக்கிறாங்களேடி. முதலில் ஒரு மூணு மாதம் லீவு போட்டிருக்கேன் எம்.எல் போட்டிருக்கேன். முடிச்சுட்டு போய், நைன் மந்த்ஸ் ஆனவுடனே போய் ஜாயின் பண்ணிக்கலாம்னு இருக்கேன் என்றாள்.

    ஏழிசை வல்லபி பெருமூச்சு விட்டாள். பரவாயில்லடி நீங்க ஆபீஸ்ல இருக்கிறதுனால அதுவும் கவர்மெண்ட் ஆபீஸா இருக்கிறதுனால இப்படியெல்லாம் லீவு கிடைக்குது. ஆனா நாங்கெல்லாம் நைன் மந்த்ஸ் எடுத்தோம்னா ஸ்டூடன்ஸோட ஸ்டடிஸ் பாதிச்சிரும். அவ்வளவு சீக்கிரம் குடுக்கமாட்டாங்க. என்றாள்.

    அதென்னடி அவங்க குடுக்கறது. நம்ம லீவு நம்ம எடுத்துக்கலாம். என்றாள்.

    எடுத்துக்கலாம் ஆனால் நமக்குன்னு ஒரு மனசாட்சி இருக்குல்ல என்றாள் ஏழிசை வல்லபி.

    சரிசரி, மனசாட்சியையே பார்த்துக்கிட்டு உட்கார்ந்திரு என்றாள்

    ஏழிசை வல்லபி புன்னகைத்தாள். என்னடி! இப்பத்தான் என்னமோ எனக்கு கல்யாணமாகி குழந்தை வரிசையில நிற்கிற மாதிரி வேற நாம பேச ஆரம்பிச்சுட்டோம் என்றாள்.

    அதெல்லாம் சொல்லவே முடியாது. டபக்குன்னு இன்னிக்கே ஒரு மாப்பிள்ளை அமையலாம். நாளைக்கே ஒரு மாப்பிள்ளை அமையலாம் என்றாள் சுபத்ரா.

    இப்போதைக்கு வேணாம்னு வேண்டிக்கிட்டிருக்கேன்டி. ஆனா நீ சொன்ன மாதிரி இன்னிக்கு நாளைக்கெல்லாம் நடக்காது. ஏன்னா அண்ணா இருக்காங்கள்ளே, அண்ணாவுக்கு முடிச்சுட்டுத்தான் என்றாள் ஏழிசை வல்லபி.

    அதையும் நம்பிக்கிட்டு இருக்காதே. ஜென்ட்ஸ் திடீர்னு திரும்பிடுவாங்க. எப்படி ஒரு தங்கையை வச்சுக்கிட்டு கல்யாணம் பண்றதுன்னு உங்க அண்ணன் சொன்னான்னு வச்சுக்க உடனே உங்க பேரன்ட்ஸ் ஒத்துக்குவாங்க என்றாள் சுபத்ரா.

    வேண்டாண்டி. அதையெல்லாம் சொல்லி பயமுறுத்தாதே. நாம என்ஜாய் பண்ண வந்திருக்கோம் லெட் அஸ் என்ஜாய் என்று திரும்பி சுபத்ரா இங்க பாரேன் இந்த ஓவியத்தில் எவ்வளவு ஒரு அழகு! அந்தப் பொண்ணு காத்துக்கிட்டு நிக்கிற விதத்தையும் அந்த கண்ணுல தெரியற ஆர்வம்...! எதிர்பார்ப்பு...! காதல்...! நிஜமாவே இந்த ஓவியர் நல்ல ஓவியர்டி எப்படி இத்தனை நாள் தெரிஞ்சுக்காம போனேன்? என்று கேட்டாள்.

    அது டு இயர்ஸ் முன்னாடி தான் ஒரு கண்காட்சி வச்சாப்ல. அதுக்குப்பிறகு இப்பத்தான் வச்சிருக்கிறாரு என்றாள்.

    உமான்னு போட்டுருக்கு, வச்சிருக்காரு அப்படின்னு சொல்றே என்று கேட்டாள் ஏழிசை வல்லபி.

    அது உமாகாந்தன்! முழுப் பேரு என்று சுபத்ரா ஏதோ சொல்ல வந்தவள் போல ஆரம்பித்து விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டு வேண்டாம், அதைப்பத்தி என்ன இப்போ? என்றாள்.

    எதைப் பத்தி என்றாள் ஏழிசை வல்லபி.

    அதெல்லாம் ஒரு நாளைக்கு தெரிஞ்சுக்கலாண்டி. இப்ப நமக்குத் தேவை ஓவியத்தை பார்க்கறதுதான். பார்க்கலாம் என்று சுற்றிப் பார்த்தார்கள்.

    இங்கே பாருடி என்று சற்று தூரத்திலே ஒருவரை காட்டினாள் இவருதான் சத்யபிரகாஷ். உமாவோட அண்ணன் என்றாள்.

    ஓ! என்று அவள் லேசாக கண்களை அந்த இளைஞன் மேல் ஓட்டினாள்.

    ஓரளவு உயரம்! மாநிறம்! அரும்பு மீசையும் களையான முகமுமாக நின்று கொண்டிருந்தான் அந்த இளைஞன். சட்டையை இன் பண்ணி இருந்தான். இவருன்னா இவருதான் இந்த கண்காட்சியை நடத்தறாரா என்று கேட்டாள் ஏழிசை வல்லபி.

    ஆமா! அவருதான் அவரோட பிரதருக்கு ரொம்ப இன்ஸ்பிரேஷன். வாட் எ நைஸ் பர்ஸனாலிட்டி என்றாள்.

    என்ன பண்றாரு, தெரியுமா? என்று கேட்டாள் ஏழிசை வல்லபி.

    தெரியலை. ஏதோ சின்னதா பிஸினஸ் பண்ற மாதிரி கேள்விப்பட்டேன். என்ன பண்றாங்கன்னு தெரியலை. அந்த அளவுக்கு டீட்டெய்ல்ஸ் தெரியலை."

    சற்று நேரம் மூன்று நான்கு படங்களை பார்த்ததற்கு பிறகு ஓரிடத்திலே போய் அமைதியாக நின்றார்கள். ஏனென்றால் அந்த ஓவியம் அவர்கள் அப்படி கண்ணை இழுத்தது.

    இரண்டு இளம் பெண்கள் நொண்டி விளையாடுவது போன்ற ஓவியம்,

    பரவாயில்லடி இப்படி ஒரு பிரதர் கிடைக்கிறதுக்கு அந்த ஓவியர் ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும் என்றாள் ஏழிசை வல்லபி.

    அதென்னமோ நிஜம்தாண்டி. உண்மையாவே உமாவுக்கு இப்படி ஒரு பிரதர் கிடைக்கிறதுக்கு உமாகாந்தன் குடுத்துத்தான் வச்சிருக்கணும் என்றாள் சுபத்ரா.

    சுபத்ரா பேசுவதில் ஒரு அர்த்தம் தொக்கி நிக்கிறாற் போல தோன்றியது. கல்லூரி நாட்களில் இருந்தே அவள் இப்படித்தான். எப்பொழுதும் புலம்பலாகத்தான் பேசுவாள். ‘உனக்கு என்னடிம்மா’ என்பது போலத்தான் பேச்சே ஆரம்பிப்பாள். எல்லோருடனும் அப்படித்தான் பேசுவாள்.

    ஏதோ தனக்கு குறை போலவும் மற்றவர்களுக்கெல்லாம் வாழ்க்கை நிறைவாக இருக்கிறாற்போலவும்தான் பேசுவாள். அதனால் அவள் இப்போது அப்படிப் பேசியது ஏழிசை வல்லபிக்கு பெரிய அளவிலே வித்தியாசமாக தெரியவில்லை.

    சிரித்துக் கொண்டாள். ஆனால் அந்த சத்தியபிரகாஷை இன்னொரு முறை திரும்பிப் பார்க்க வேண்டும் போல தோன்றியது.

    திரும்பிப் பார்த்தாள்! கன கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

    அதே நேரத்திலே அவனுடைய பார்வையும் அவளிடத்திலே வந்து மோதியது.

    கவரப்பட்டாற்போல இரண்டு பேரும் ஓரிரு விநாடிகள் பார்த்துக் கொண்டார்கள்.

    பிறகு சட்டென்று ஏழிசை வல்லபி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவனும் அங்கிருந்து வேகமாக ஏதோ வேலை இருப்பவன் போல நகர்ந்து சென்றுவிட்டான்.

    இன்னும் சற்று தூரம் போனார்கள். இன்னும் இரண்டு மூன்று ஓவியங்களைப் பார்த்தார்கள்.

    சுபத்ரா திரும்பி ஏழிசை வல்லபியிடம்.

    நிச்சயமா இந்த ஓவியங்களை பார்க்கறதுக்கு டூ அவர்ஸ் பத்தாதுடி மறுபடியும் நாளைக்கு டூ அவர்ஸ் வரப் போறேன் என்று சொன்னாள்.

    அதற்குள்ளாக அவளது செல்ஃபோன் ஒலித்தது. குழந்தை அழறான் போல இருக்குடி. நான் கிளம்பறேன் என்று சொல்லி திரும்பியவள் சட்டென்று நின்றாள்.

    அப்போது எதிரே அந்த இளைஞன் வந்தான்.

    சற்று முன் பார்த்த இளைஞன் அல்ல வேறொரு இளைஞன்.

    அவன் வந்தான்.

    சுபத்ரா நின்று ஹலோ உமாகாந்தன் இங்கே வாங்க என்றாள்.

    அவன் வந்தான். திரும்பி இவங்க ஏழிசை வல்லபி இவங்கள இன்ட்ரொட்யூஸ் பண்ணிக்கோங்க. கோயமுத்தூர்ல ஒரு முக்கியமான ஃபிகர். நிறைய நுண்கலை விஷயங்களில் ஆர்வமுள்ளவங்க. பேசுவாங்க! கவிதை எழுதுவாங்க, ஓவியம் கூட கொஞ்சம் ட்ரை பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். பாடுவாங்க. அறிமுகப்படுத்திக்கோங்க சார் என்று சொல்லிவிட்டு நான் வரேன் என்று வேகமாக போய்விட்டாள்.

    ஏழிசை வல்லபி உமாகாந்தனை நோக்கி வணக்கம் போட்டாள்.

    உமாகாந்தன் மிகச் சிறிய வயதினனாக இருந்தான். ஓரிரு நிமிடங்கள் நின்று பார்க்கப் பார்க்கத்தான் அந்த உண்மை ஏழிசை வல்லபிக்கு புரிந்தது.

    அது மெல்ல மெல்ல உள்ளே உள்ளே இறங்கியது

    அத்தியாயம் - 2

    என்னடா இன்னும் முடிக்கலையா என்று கேட்டுக் கொண்டிருந்தாள் ஏழிசை வல்லபி.

    இல்லை மிஸ். எனக்கு சரியா வரமாட்டேங்குது என்றான் மாணவன்.

    ஏழிசை வல்லபி அந்த மாணவனுடைய அருகிலே போய் நின்று பார்த்தாள்.

    பிராக்டிக்கல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது.

    ஏழிசை வல்லபி அந்த மேனிலைப்பள்ளியிலே வேதியியல் எனப்படும், கெமிஸ்டிரி பாடத்தைப் போதிப்பவளாக இருந்தாள்.

    அது ஒரு கிராமத்துப் பள்ளி. அங்கே இருக்கிற குழந்தைகள் எல்லாம் கிராமத்திலே இருந்து வருகிறவர்கள்.

    அவர்களுடைய முதல் பிரச்சினை அவர்களுக்கென்று இருக்கின்ற தாழ்வு மனப்பான்மை. அதனால் அவர்கள் வேதியியல் பாடம் என்றாலே ஏதோ வானத்தில் இருந்து குதித்தாற் போல எண்ணிக் கொள்கிறார்கள் என்பது அவளுக்குப் புரிந்திருந்தது. அதனால் அவர்களுக்கு மெது மெதுவாக புரிய வைக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இருந்தது.

    பொதுவாக எல்லாரும் இலக்கணம் கணிதம், இதையெல்லாம் பார்த்தாலே பயப்படறீங்க. எதுக்கு? அதை புரிஞ்சுக்கிட்டா அது மாதிரி சுவாரசியமான விஷயம் இல்லை. அதுமாதிரி நீங்களும் இந்த சப்ஜெக்ட்டை லைக் பண்ணப் பழகிக்கணும். எடுத்தவுடனே பயந்தீங்கன்னா அதுவே மனசுல ஒரு திரை போட்ட மாதிரி ஆயிடும். அதுக்குள்ள போகவே உங்களால முடியாது. புரிஞ்சுக்குங்க என்று பலமுறை சொல்லி இருக்கிறாள்.

    பலவிதங்களில் அவள் ஸ்டிரிக்டான ஆசிரியை என்று பெயர் பெற்றிருந்தாலும் கூட அவள் மாணவர்களிடம் காட்டுகிற பரிவுக்காகவும் அணுகுமுறைக்காகவும் அவளை மாணவர்கள் பெரிதும் விரும்பினார்கள்.

    ‘கெமிஸ்டிரி பாடத்தைக் கூட இப்படி ஜாலியா சொல்லிக் கொடுக்க முடியுமா?’ என்று மற்ற ஆசிரியர்கள் பார்த்து ஆச்சரியப்படுகிற அளவிலேதான் அவளுடைய வகுப்பு இருக்கும்.

    பொதுவாக அறிவியல் பாடங்களில் மாணவர்கள் ஏதோ ஒரு கவசத்தை மாட்டிக் கொண்டு கவனமாக கவனிக்கிறாற் போல தீவிரமாக அமர்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஏழிசை வல்லபியினுடைய வகுப்பில் அவள் சிரித்துக் கொண்டேதான் பாடம் எடுப்பாள்.

    மாணவர்களும் அவ்வப்போது கலகலவென்று சிரிப்பார்கள். அவள் கொடுக்கிற உதாரணங்கள் அப்படி இருக்கும். ஆனால் மாணவர்களுக்கு பாடத்தைப் பொறுத்தவரை பயம் கிடையாது ஆனால் மற்ற விஷயங்களில் அவள் கண்டிப்பாகத்தான் இருப்பாள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    இந்த ஃபார்முலாவை நூறு தடவை எழுதிட்டு வந்துரு என்பாள்.

    மேடம், இம்போஸிஷனெல்லாம் கொடுக்கக் கூடாது என்பான் மாணவன் அவள் பக்கத்திலே வந்து.

    இது இம்போஸிஷன் இல்லையே. இன்னிக்கு நீ சொல்லாம விட்டுட்டே உம்மனசுல நிக்கலை. இத்தனை தடவை எழுதினா உன் மனசுல நிக்கும் அவ்வளவுதான்.

    அவனும் அவள் ஆசிரியர் அறைக்கு செல்லும் வரை பக்கத்திலேயே நடந்து வந்து என்னென்ன விதமாக எதிர்க்க முடியும் என்று பார்ப்பான்.

    அவளும் சிரித்துக் கொண்டே கண்டிப்பாக அதே நிலையில் நின்றுவிடுவாள்.

    போங்க மிஸ். உங்க கிட்ட கேட்டுப் பிரயோஜனம் இல்லை என்பான் அவன்.

    தெரியுதில்லை அப்புறம் ஏன் கஷ்டப்படறே பேசாம எழுதிரு. எழுதிறதுக்கு முன்னால வேண்ணா என் மேல கோபம் இருந்தா ஒரு பேப்பரை எடு. அதுல என்னைப் பத்தி என்னென்ன திட்டணுமோ திட்டிக்கோ. திட்டிட்டு அப்புறம் கிழித்து போட்டுடு. திரும்பி எழுது என்றாள்.

    திரும்பி பார்முலாவா எழுது என்பாள்.

    அவன் சிணுங்குவான் உங்களப் பத்தி திட்டி எழுதுறதுக்கு பதிலா பேசாம நான் பார்முலாவே எழுதிருவேன் என்பான்.

    சரி அதைச் செய்

    Enjoying the preview?
    Page 1 of 1