Inge Mazhai…! Ange…!
By Jaisakthi
2/5
()
About this ebook
Read more from Jaisakthi
Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Poothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsAnalukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Nenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Aruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Paattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsNee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Oviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNaaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsMegam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Ennul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Kanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Sudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5
Related to Inge Mazhai…! Ange…!
Related ebooks
Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Ennulle Nirainthai Rating: 0 out of 5 stars0 ratingsNee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Naanendrum Neeyendrum...! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsNin Vasamaathal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthi Vaithai Ennai! Rating: 0 out of 5 stars0 ratingsVaruven Naan Unakkaga...! Rating: 4 out of 5 stars4/5Nesathin Thottililey! Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsNeedhan... Nee Mattum Dhan! Rating: 0 out of 5 stars0 ratingsNatchathirangalin Naduvey...! Rating: 0 out of 5 stars0 ratingsIlaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Kavithai Sirippinile... Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Vanavil Oviyame! Rating: 0 out of 5 stars0 ratingsMalarndha Malarchudare! Rating: 0 out of 5 stars0 ratingsSollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Devathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsVaasamalar Theane......! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsNee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Anbu Pookkalile Kuzhaitha Aasai Karangalo! Rating: 3 out of 5 stars3/5Pesi Vidu Maname Pesividu…! Rating: 0 out of 5 stars0 ratingsKannukkul Paaintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Ilankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Pesumilankiliye! Rating: 0 out of 5 stars0 ratingsMalarkanai Rating: 5 out of 5 stars5/5Oomaiyin Ragam... Rating: 0 out of 5 stars0 ratingsVeliyatra Veedu… Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Inge Mazhai…! Ange…!
1 rating0 reviews
Book preview
Inge Mazhai…! Ange…! - Jaisakthi
http://www.pustaka.co.in
இங்கே மழை…! அங்கே…!
Inge Mazhai…! Ange…!
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
குத்து விளக்கு ஏற்றினாள் ஒரு பெண்.
வெண்தாமரைப் பதிப்பகம் களை கட்டி இருந்தது. கோவை நகரில் புகழ் பெற்ற பதிப்பகம். பல நாட்களாக அது இயங்கி வருகிறது. இருந்தாலும் இப்பொழுது அதை நவீனப்படுத்தி இருந்தார்கள்.
புதியதாக ஷோகேஸுகள் கண்ணாடி அலமாரிகள், இரண்டு மூன்று மாடிகள் என்று அதை புதுப்பித்திருந்தார்கள். ஒவ்வொரு மாடியிலும் தரம் பிரித்து புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. கீழே புகழ் பெற்ற நாவலாசிரியர்கள் நாவல்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், என்று ஒவ்வொரு இடத்திலும் வகை பிரித்து வைத்திருந்தார்கள்.
எல்லோருக்கும் நடுவிலே அந்த இளைஞன் நின்று கொண்டிருந்தான். ஹலோ மிஸ்டர் தூயவன்! பிரமாதப் படுத்திட்டீங்க!
என்று உள்ளே வந்த ஒருவர் வணக்கம் சொன்னார்.
எல்லாம் பெரியப்பாவோட ஆசீர்வாதம்தான்!
என்று அவன் பக்கத்திலே இருந்த ஒரு பெரியவரைக் காட்டினான். உள்ளே வந்தவர் பெரிசா பதிப்பகத்தை வளர்த்துட்டீங்க! அடுத்து யாருக்குக் கொடுப்பீங்கன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். பரவாயில்லை! தம்பி மகனையே கொண்டு வந்து நிறுத்திட்டீங்க!
என்றார்.
ஆமா, தூயவனுக்கு இந்த மாதிரி புத்தக சமாச்சாரங்களில் விருப்பம் உண்டு. அதைப் பத்தின மதிப்பு தெரிஞ்சவங்களுக்குத்தானே பொறுப்பைக் கொடுக்கணும்!
என்றார் அன்பழகன்.
அப்புறம்? தம்பி... தம்பி வைஃபெல்லாம் வந்திருக்காங்களா?
என்று கேட்டார் வந்தவர்.
ஆமா! அதோ பாருங்க மதிவாணன் காஞ்சனா எல்லாரும் அங்கே இருக்காங்க!
என்றார்.
கோவையின் புகழ் பெற்ற எழுத்தாளர்களும், கவிஞர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். தூயவன் அதற்கு ஏற்ற வகையிலே உடை அணிந்திருந்தான். அவனைப் பார்த்தாலே ஒரு எழுத்தாளரைப் போலத்தான் இருந்தது.
அவனும் கவிதைகள் எழுதுபவன்தான். ஆதலால் அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். இந்த புத்தக விழா முடிந்தவுடனே அந்தப் பதிப்பகத்தின் பின்னாலே குடோனுக்காக ஒரு கட்டடம் இருந்தது.
ஒரு அறுநூறு சதுரடி அளவிலே இருந்த அந்தக் கட்டிடத்திலே புத்தகங்களை எல்லாம் ஒரு பக்கமாக அடுக்கி வைத்து விட்டு கடையின் மேற்பரப்பிலே இப்போதைக்கு இறக்கி வைத்து விட்டு அங்கே ஒரு சிறிய கூட்டம் போட ஏற்பாடு செய்திருந்தார்கள்.
புத்தகங்களினால் வாழ்கிறவர்கள், புத்தகங்களுக்காக வாழ்கிறவர்கள் என்று பலரும் அங்கே பேசினார்கள். ஒரு புத்தகம் எப்படி ஒரு மனிதனைப் போல விளையாடுகிறது. மனசை குளிர்விக்கிறது. சோகமான நேரங்களில் எப்படிக் கை கொடுக்கிறது என்றெல்லாம் ஒவ்வொருவரும் விரிவாகப் பேசினார்கள். அறிவு ஜீவிகளுக்கான கூட்டமாக அது இருந்தது.
அதிக பட்சம் ஒரு இருநூறு பேர் இருப்பார்கள் என்றாலும் அவர்கள் தேர்ந்தெடுத்த இலக்கியவாதிகளாக இருந்தார்கள். தூயவனுக்கும் அந்தக் கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. பிற்பகல் வரை கூட்டம் நடந்தது. அதற்குப் பிறகு எல்லோருக்கும் எளிமையான உணவு ஒரு சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், ஒரு கூட்டு, கொஞ்சம் ஊறுகாய் என்று ஏற்பாடு செய்திருந்தான்.
எல்லோரும் உணவருந்தினர்கள். புறப்படுகிறவர்கள் புறப்பட்டார்கள். இருப்பவர்கள் கொஞ்ச நேரம் ஆங்காங்கே அமர்ந்தார்கள். தூயவன் கடை முன்பகுதிக்கு வந்து விட்டான். அங்கே இப்பொழுது வியாபாரமும் பெரியதாக இருந்தது. அதையும் மேற்பார்வை பார்க்க வேண்டியிருந்தது.
இங்கேயும் அந்தக் கட்டிடத்திற்குமாக நடந்து போகும் பொழுதுதான் கவனித்தான். பெரியப்பா சற்றுக் களைப்பாக இருந்தார். ஆனால், மன நிறைவோடும் இருந்தார். வேகமாக எல்லோரும் கிளம்பிய பிறகு தூயவனை அழைத்து தன் அருகிலே அமர்த்திக் கொண்டார்.
ரொம்ப நன்றிடா!
என்றார்.
என்ன பெரியப்பா? இப்படிச் சொல்றீங்க?
என்றான் அவன் ஆதுரத்துடன்.
இல்லை, நீ படிச்ச படிப்புக்கு உனக்கு எங்கெங்கயோ வேலை கிடைக்கும். ஆனாலும் நான் கேட்டுக்கிட்டவுடனே இந்தப் பதிப்பகத்துக்கு வந்தியே! எனக்கு இன்னைக்கு ஆத்மாவே நிறைஞ்ச மாதிரி இருக்கு!
என்றார்.
அவன் பெரியப்பாவின் கரங்களை அன்புடன் பற்றிக் கொண்டான். என்ன பெரியப்பா? ஒவ்வொரு லீவுக்கும் இங்கேதான் வருவேன். உங்களோட தான் இருப்பேன். இந்தப் புத்தகங்களுக்கு நடுவிலே குடியிருப்பேன். தவம் கிடப்பேன். உங்களுக்குத் தெரியாதா? எங்க அப்பா கூட சொல்வாரு இவன் எங்க அண்ணனுக்கு வாரிசான்னு? எப்பவோ உங்களுக்கு என்னை வாரிசா கொடுத்திட்டாரு. இனிமே நீ எங்கண்ணனுக்கு மகன்டான்னு சொல்லிட்டாரு.!
என்று சிரித்தான் தூயவன்.
அது சரி, அவங்களுக்கும் ஆதவன் இருக்கான் இல்லே! அவன் கை கொடுப்பான்!
என்றான் அவர். ஆதவன் தூயவனுடைய தம்பி.
எல்லோரும் கேட்பார்கள் யார் இப்படிப் பேர் வைத்தது என்று. அதற்கு 'எங்க தாத்தாவுக்கே தமிழ் ஆர்வம். அதான் எங்க அப்பாவுக்கு மதிவாணன் பெரியப்பாவுக்கு அன்பழகன்னு பேர் வச்சாங்க அன்பழகன் பெரியப்பா பதிப்பகம் ஆரம்பிச்சாங்க. அவரோட ஆர்வத்தினால்தான் எனக்குத் தூயவன், என் தம்பிக்கு ஆதவன்னு பேர் வச்சாங்க!' என்று சொல்வதுண்டு.
விழா முடிந்ததற்குப் பிறகு மதிவாணனும், காஞ்சனாவும், ஆதவனும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். அவர்கள் வீடு ஒன்றும் வெகு தூரத்தில் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து ஒரே மணி நேரத்தில் செல்கிற அளவில் திருப்பூரில் இருந்தார்கள். அதுவும் புகை வண்டியில் பயணம் செய்தால் முக்கால் மணி நேரம்தான்.
சரிங்கண்ணா, கடையைப் போட்டது போட்ட படி வந்திருக்கேன். உங்களுக்குத்தான் ஒருத்தன் இருக்கானே. நீங்க தான் ரொம்ப டயர்டா இருக்கீங்க எதுனாலும் உடனே கூப்பிடுங்க ரொம்ப அலைஞ்சுக்காதீங்க. உட்கார்ந்துகிட்டு இவனை கைட் பண்ணுங்க!
என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள்.
காஞ்சனா பெரியவனுடைய கன்னத்தை வருடிக் கொடுத்து விட்டு கிளம்பினாள். அம்மா, நான் என்ன சின்னக் குழந்தையா? இங்கிருந்து கார் எடுத்தா முக்கால் மணி நேரத்தில் வரப்போறேன். நீங்க அங்கிருந்து கார் எடுத்தா முக்கால் மணி நேரத்தில் வரப்போறீங்க!
என்று சிரித்தான் தூயவன்.
காஞ்சனாவுக்கு உள்ளூர முழுக்க முழுக்க அவனைப் பெரியப்பாவுக்கு என்று கொடுத்து விட்ட மாதிரி இருந்தது. ஆனால் அது அவன் எதிர்காலத்திற்கு நல்லதுதான் என்பதை அவளும் உணர்ந்திருந்தாள். சரி, சரி நான் ஒரு சமையல்காரம்மா ஏற்பாடு பண்ணியிருக்கேன்னு சொன்னேன் இல்லே, நாளைக்கே அனுப்பி வைக்கிறேன்!
என்றவள் தன்னுடைய மூத்தாரைப் பார்த்து இதோ பாருங்க அத்தான். இனிமேல் நீங்க சும்மா சமையல் பண்றேன்னு கஷ்டப்பட்டுட்டு இருக்காதீங்க. தூயவனும் ஓரளவுக்கு செய்வான். ஆனால் அவனுக்கு இங்கே வேலை இருக்கு. அதனால வீட்டையெல்லாம் பராமரிக்கறதுக்கு வீட்டோட இருக்கற மாதிரி ஒரு ஐம்பது வயசு அம்மாவுக்கு சொல்லியிருக்கேன் வந்துடுவாங்க. நீங்க கேர்ஃபுல்லா உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க!
என்றாள்.
சரிம்மா, அதான் தூயவன் வந்துட்டான் இல்லே, இனிமேல் நான் எதைப் பத்தியும் கவலைப்படப்போறதில்லை. இனிமே எல்லாப் பொறுப்பும் அவன் கிட்டேதான்
என்று சொல்லி விட்டார் அன்பழகன். அதே போல அந்த மூன்று மாதங்களும் அன்பழகன் நிம்மதியாக இருந்தார். கொஞ்சம் மகிழ்ச்சியாகக் கூட இருந்தார்.
தங்கள் வெண்தாமரைப் பதிப்பகத்தினுடைய எல்லா விவரங்களையும் தூயவனுக்குத் தெரிவித்து விட்டார். தூயவனும் அந்த வகையிலே ஆர்வமாக எல்லாவற்றையும் கற்றுக் கொண்டான்.
அன்பழகன் கேபினில் அமர்ந்திருந்தார். அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். தூயவன் கல்லாவிலே அமர்ந்தான். சுற்றிலும் பராமரித்தான். எல்லாத் தளங்களிலும் கேமரா பொருத்தி புத்தகங்கள் வெளியே வராத அளவுக்கு ஏற்பாடு செய்து விட்டான். கிட்டத்தட்ட ஐம்பது பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு தளத்திற்கும் புத்தகங்களை எடுத்துக் கொடுப்பதற்கு என்று ஐந்து ஐந்து பேர் இருந்தார்கள். பின்னாலே குடோனில் பத்துப்