Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nesathin Thottililey!
Nesathin Thottililey!
Nesathin Thottililey!
Ebook130 pages1 hour

Nesathin Thottililey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அதிதி எனும் அழகு எழில் கொஞ்சும் தேவதை. நிரஞ்சன் அதிதியின் தந்தையார் நிலத்தை வாங்கி அங்கு தொழிற்சாலை கட்டவிருக்கிறான். அங்கே அதிதி அறிமுகமாகிறாள். நிரஞ்சனின் மனதில் இடம் பிடிக்கும் அதிதியின் முகத்தில் ஒரு வெறுமை தென்படுகிறது. அந்த வெறுமையின் காரணத்தை அறிகிறான். அத்தகைய வெறுமையிலிருந்து அதிதியை வெளியில் கொண்டு வந்தானா நிரஞ்சன்? அப்படி அதிதி வாழ்க்கையில் நடந்தது என்ன? சுவாரஸ்ய காதல் கதைக்களத்துடன் தொடருவோம்...
Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580106007180
Nesathin Thottililey!

Read more from Jaisakthi

Related to Nesathin Thottililey!

Related ebooks

Reviews for Nesathin Thottililey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nesathin Thottililey! - Jaisakthi

    https://www.pustaka.co.in

    நேசத்தின்தொட்டிலிலே!

    Nesathin Thottililey!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் -1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் -6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம்- 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    ஆசிரியர் உரை

    அன்பு நிறை வாசக நெஞ்சங்களே!

    ஜெய்சக்தியின் அன்பு வணக்கங்கள்.

    2016 ஆம் ஆண்டில் உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு பொங்கல் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கரும்போடும், பச்சரிசிப் பொங்கலோடும் உங்கள் வீட்டு அரும்புகளோடும் இந்த இனிய பொங்கலை கொண்டாடி மகிழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    கடந்த ஆண்டில் பெருமழை பெய்ததனால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இந்த ஆண்டில் நல்ல முறையில் விடிவு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தொடர்ந்து எனது நாவல்களுக்கு நல்லாதரவை அளித்து வரும் வாசகர்களுக்கு எனது அன்பு கனிந்த நன்றிகள்.

    எனது முயற்சிகளுக்கெல்லாம் தோள் கொடுத்து ஊக்குவிக்கும் எனது குடும்பத்தாருக்கும் என் நன்றிகள். மீண்டும் உங்களை அடுத்த நாவலில் சந்திக்கிறேன்.

    அன்புடன்

    ஜெய்சக்தி

    அத்தியாயம் -1

    நல்ல விஷயத்துக்காகப் போறோம். பார்த்து ஓட்டுப்பா! என்றார் நிரஞ்சனின் பி. ஏ. நல்லசிவம். நிரஞ்சன் லேசாக புன்னகைத்துக் கொண்டான்.

    நல்லசிவம் நிரஞ்சனைப் பார்த்துப் புன்னகைத்தார். ஏன் சார் சிரிக்கறீங்க? என்றார்.

    இல்லல்லே, உங்க நம்பிக்கையைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது! என்றான்.

    இல்லே, ஒரு நல்ல காரியத்துக்காக போறோம். பார்த்துப் பொறுப்பா வண்டி ஓட்டறது அவசியம் தானே? என்றான்.

    ஆமாமா! என்று புன்னகைத்துக் கொண்டான்.

    கார் சர்ரென்று அந்தக் கிராமத்துக்குள் நுழைந்தது. வரும் வழியெல்லாம் கூட சுத்தமாக இருப்பதைப் பார்த்தான். இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி அந்தக் கிராமத்திலேயே பெரிய வீடாக இருந்த அந்த வீட்டுக்கு முன்பாகக் கார் வேகத்தைக் குறைத்தது.

    வரும் வழியெல்லாம் நிரஞ்சன் கவனித்துப் பார்த்திருந்தான். வளமையான ஏரியா. பக்கத்திலேயே ஆறு ஓடுகிறது. அதனால் கரும்புத் தோட்டங்களும், வாழை மரங்களும் நெற்பயிர்களும் நிறைந்த வயல்கள் எங்கும் பரவிக் கிடந்தன. பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது.

    ஊர்க்காரர்கள் விவசாயத்தை நம்பியே இருந்தாலும் திறமையான விவசாயிகளாக இருந்தார்கள் போலும். நன்றாகவே நிலங்களைப் பராமரிக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டான். இப்படி ஒரு இடத்தில் தங்களுடைய வேண்டுகோளுக்கு அந்த ஊர்க்காரர்கள் மறுப்புத் தெரிவிக்காமல் ஒத்துக் கொண்டது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

    'கார் அந்த பெரிய கேட்டுக்கு உள்ளே நுழைந்தது. அவன் இறங்கிய உடனே 'வாங்க தம்பி வாங்க!' என்று வரவேற்றார் அவிநாசியப்பர். பக்கத்திலே அவருடைய மனைவியார். பக்கத்தில் இன்னொரு இளைஞன். இளைஞன் என்றால் டீன் ஏஜ் பருவத்தில் இருந்தான் போலும்.

    இன்னும் சில பெரியவர்களும் இந்தக் குடும்பத்திற்குப் பின்னாலே நின்றிருந்தார்கள். 'வாங்க தம்பி!' என்றார்கள். நிரஞ்சனும் இறங்கி வணக்கம் சொன்னான். முழுக்கை சட்டை அணிந்திருந்தான். வெள்ளை நிற சட்டை. அதற்கேற்றார் போல டார்க் பிரவுன் நிறத்திலே பேண்ட் அணிந்திருந்தான்.

    இடது கையிலே சற்றே பெரிய வாட்ச். உற்றுக் கவனித்தால் கழுத்திலே ஒரு மெல்லிய செயின் அணிந்திருப்பது தெரிந்தது. வலது கையிலே ஒரு மோதிரம். இவையெல்லாம் அவனுடைய அழகுக்கு அழகு சேர்ப்பது போலத்தான் இருந்தது. கம்பீரமாக இருந்தான்.

    மாநிறம். கவர்ந்திழுக்கும் கண்கள். சிரித்தால் வரிசைப் பற்கள் பளிச்சென்று மின்னின.

    வணக்கம், வணக்கம் ஐயா! என்றான் அவனும்.

    இது நம்ம சம்சாரம் கருணாம்பிகைன்னு பேரு! என்றார்.

    அவன் லேசாகப் புருவங்களை உயர்த்தினான். எவ்வளவு பொருத்தமா இருக்கு! அவிநாசி கோயில்லே அவிநாசியப்பர், கருணாம்பிகைன்னு பேரு. நாங்க அந்தக் கோயிலுக்கு அடிக்கடி போறதுண்டு! என்று சிரித்தான்.

    அவிநாசியப்பரும் சிரித்தார். நம்ம ஏரியாவிலே நிறைய வீடுகள்லே இது போல இருக்கும் தம்பி. ஏன்னா இந்த ஏரியாக்காரவுங்களுக்கு அந்தக் கோயில் ரொம்ப முக்கியமான கோயில்! என்றார்.

    மகனை இவரு பேரு திருநாவுக்கரசு! என்று அறிமுகப்படுத்தினார். அழகழகான பேர்கள்! என்று அவனும் புன்னகைத்தான்.

    பிறகு பின்னாலே நின்றிருந்த பெரியவர்களையெல்லாம் அறிமுகப்படுத்தினார். அவர்களும் எல்லோரும் வணக்கம் செய்தார்கள்.

    ஹாலிலே போய் சற்று நேரம் அமர்ந்தார்கள். அளவளாவினார்கள். எல்லாரும் நல்லா யோசிச்சு முடிவு செஞ்சிருக்கீங்க இல்லையா? பொதுவா திருப்பூர் ஏரியாவிலே நொய்யல் ஆறு வறண்டுதான் கிடக்கும். ஆனா உங்க ஊரு திருப்பூருக்கும், இந்தப் பக்கம் பொள்ளாச்சிக்கும் இடையிலே வருது. அதனாலே உங்களுக்கு ஒரு நல்ல ஆறு ஓடுது. வளமா இருக்கீங்க. அதனால தான் நிலம் குடுப்பீங்களா மாட்டீங்களா அப்படின்னெல்லாம் ரொம்ப யோசிச்சுக் கேட்டேன் என்று அவிநாசியப்பரைப் பார்த்து சிரித்தான்.

    என்ன தொழிற்சாலை ஆரம்பிக்கறதா முடிவு பண்ணியிருக்கீங்க தம்பி? என்று கேட்டார் அவிநாசியப்பர்.

    நீங்க கொடுக்கற இடத்தைப் பொறுத்து எனக்கு ஒரு ஃபிஃப்டி ஏக்கர்ஸ்லே இருந்து ஹண்ட்ரட் ஏக்கர்ஸ் வேணும். ஆனா நான் இங்கே எந்தத் தொழிற்சாலை பிளான் பண்ணினாலும் அது உங்க விவசாயத்துக்குத் துணையாத்தான் இருக்கும். வினையா இருக்காது! என்றான்.

    அப்படின்னா சந்தோஷங்க தம்பி. ஆனா விளை நிலங்களைக் கொடுக்க மாட்டோம். காடு, புஞ்சைக் காடுக இருக்குது. ஓகே வா? என்றார் அவிநாசியப்பர்.

    தாராளமா! எனக்கு இடம் வேணும். இந்த மாதிரி நல்லா விளையற நிலங்கள் பக்கத்திலே இருக்கணும். அவ்வளவுதான்! என்றான்.

    சரி, இடத்தைப் பார்த்துட்டு வந்துடலாமா? என்றார்கள். போனான். ஊருக்கு வெளியே ஒரு பத்து நிமிட இடைவெளியில் போய் சேருகிற மாதிரி இருந்தது. அந்தப் பக்கம் பூரா ஆத்துத் தண்ணி இருக்குது. அரை கிலோ மீட்டருக்குள்ளே ஆத்து நீர்ப் பாசனம் வருது. இந்தப் பக்கம் கொஞ்சம் மண்ணு சரியில்லை.

    அதனால இப்படிப் போட்டு வச்சுக் கிடக்குது. இதை வேண்ணா நீங்க எடுத்துக்கறதுன்னா எடுத்துக்கங்க! என்று காண்பித்தார்கள்

    இடம் அவனுக்குப் பிடித்துத்தான் இருந்தது. நூறு ஏக்கர் வேண்ணாலும் எடுத்துக்கோங்க. எல்லாம் அக்கம் பக்கத்துல பூராவும் நம்ம ஆளுங்க தான். சொன்னாக் கேட்பாங்க! என்றார் அவிநாசியப்பர்.

    இந்த நிலத்துக்காரங்க...? என்றான் கேள்விக்குறி போல. உடனே ஏழெட்டுப் பேர் வந்து நின்றார்கள்.

    எங்களுக்கு இங்கே ஆளுக்கு எட்டு ஏக்கர் பத்து ஏக்கர்னு இருக்குது. தொடர்ச்சியா வர்ற மாதிரி எடுத்துக்கோங்க! என்றனர்.

    அங்கேயே அமர்ந்து விலை நிலவரம் பேசினார்கள். ஓரளவுக்குப் படிந்து வருகிற மாதிரி இருந்தது. நிரஞ்சனுக்கு மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது.

    சரி, அப்பா, அம்மாவைக் கூட்டிட்டு வந்து காண்பிச்சுடறேன். அல்மோஸ்ட் டிசைடட்தான். அவங்க உனக்குப் பிடிச்சிருந்தா சரின்னு சொல்லிட்டாங்க. இருந்தாலும், பெரியவங்களையும் கூட்டிட்டு வந்து காண்பிச்சர்றேன்! என்றான்.

    சரிங்க தம்பி. அதெல்லாம் பிரச்சினை இல்லை. வாங்க நம்ம வீட்ல சாப்பாடு சாப்பிட்டுட்டுத்தான் கிளம்பணும்! என்றார் அவிநாசியப்பர். அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பனிரெண்டரை ஆகி இருந்தது. "ஒண்ணும்

    Enjoying the preview?
    Page 1 of 1