Uyir Chedi
By Jaisakthi
5/5
()
About this ebook
Read more from Jaisakthi
Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Analukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Aruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Nenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Oviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Mouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsPoothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsThottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Ennul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Paattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsMegam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsNee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Naaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Paattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsSudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5
Related to Uyir Chedi
Related ebooks
Vanna Sudar Oliye...! Rating: 0 out of 5 stars0 ratingsIlankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Naaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthi Vaithai Ennai! Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Iru Kannilum Un Gnabagam… Rating: 4 out of 5 stars4/5Malarndha Malarchudare! Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Pesi Vidu Maname Pesividu…! Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsUllam Unvasamanathadi Rating: 3 out of 5 stars3/5Anbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Anal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Mozhi Ketuvittal…! Rating: 4 out of 5 stars4/5Sorgathiley Idhu Mudivaanathu Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Oviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Melliya Poongatre Rating: 5 out of 5 stars5/5Kannukkul Paaintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Anbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5Nesathin Thottililey! Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Paattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Ullathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5Velli Nila Muttrathile! Rating: 5 out of 5 stars5/5Poo Malarntha Pothu...! Rating: 0 out of 5 stars0 ratingsIlaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5
Reviews for Uyir Chedi
2 ratings0 reviews
Book preview
Uyir Chedi - Jaisakthi
http://www.pustaka.co.in
உயிர்ச்செடி
Uyir Chedi
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
http://www.pustaka.co.in/home/author//jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
நல்லாதாம்மா இருக்கு. இன்னும் எவ்வளவு நேரம் அலங்காரம் செய்வே?
என்று குரல் கொடுத்தார் குணசுந்தரி.
கிளம்பிட்டேம்மா!
என்று பதில் கொடுத்தாள் சாகரி. குரல் கொடுத்தவள் அறையை விட்டு வெளியே வந்தாள். வந்தவள் அம்மாவைப் பார்த்து அம்மா, அம்மா ஒண்ணே ஒண்ணு மறந்துட்டேன்!
என்று திரும்பவும் உள்ளே போனாள்.
குணசுந்தரி மெல்லமாகத் தலையில் அடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.
உள்ளே போய் மறுபடியும் வளையல்களை மாற்றிப் போட்டுக் கொண்டு வந்தாள் சாகரி. பாரும்மா அந்தக் கலர் வளையலை விட இந்தக் கலர் வளையல் தானே மேட்சா இருக்கு?
என்றாள்.
அடி என் தங்கம்! உனக்கு எல்லா வளையலும் மேட்சாத்தான் இருக்கும். எதுக்கு இப்படி அலைமோதறே? கண்ணாடியில பாரு!
என்றாள்.
தாய் சொன்னவுடனே கண்ணாடியில் நின்று பார்த்தாள் சாகரி. அழகாகவே இருக்கிறோம் என்று கர்வம் கூட தோன்றியது.
சந்தன நிறத்தில் புடவை. அதிலே மெருன் கலரில் நெய்யப்பட்ட வெள்ளைப் பூக்கள¢, டிசைனர் பிளவுஸ் அதற்கு ஏற்றபடி கம்மல், கழுத்திலே ஒரே ஒரு சன்னமான தங்க நெக்லஸ் என்று போட்டுக் கொண்டு நிற்கிற மகளைப் பார்த்து குணசுந்தரிக்கு மனமெல்லாம் பூரிப்பாகிப் போனது.
ஏங்க! ஒரு வழியா உங்க மக கிளம்பிட்டா. நீங்க இன்னும் கிளம்பலையா
என்று குரல் கொடுத்தார். எத்திராஜ் இதோ கிளம்பிட்டேனே
என்று வெளியே வந்தார்.
முழுக் கை சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார்.அந்த முழுக் கை சட்டையையும் மணிக்கட்டுக்கு மேலே அழகாக மடித்திருந்தார். குணசுந்தரியும் ரொம்பவும் பளபளப்பு இல்லாமல் ஆனால் அதே சமயத்தில் ஜரிகை எடுப்பாகத் தெரிகிற மாதிரி ஒரு சன்னக் கரை பட்டுப் புடவை கட்டியிருந்தார். பிறந்தநாள் விழாதானேங்க போதும். கல்யாணம்னா தான் ரொம்ப கிராண்டாப் போகணும்!
என்றாள் குணசுந்தரி.
சாகரி அம்மாவின் அருகில் வந்து அம்மா கழுத்தில் போட்டிருந்த இரண்டு மூன்று செயினில் இரண்டைக் கழற்றி விட்டு, மார்பு வரை தொங்குகிற மாதிரி ஒரு ஆரம் நடுவிலே ஒரு டாலர் உள¢ளது,அதைப் போட்டாள¢.
நீ கைப்பிடி அளவுக்கு செயின் போட்டா கசகசன்னு இருக்கு. இப்பப் பாரு எவ்வளவு அழகா இருக்கு
என்றாள்.
சரிடி அம்மா, நீ சொன்னா சரிதான்
என்றாள¢ குணசுந்தரி. எல்லாருமாகக் கிளம்பினார்கள். அம்மாவும் மகளும் வாசலுக்கு வாங்க. நான் காரை எடுக்கறேன்!
என்று அந்த சிறிய பங்களாவினுடைய முன்னாலே போர்ட்டிகோவில் இருந்த காரைப் போய் எடுத்தார்.
எத்திராஜ் சன்னமாக ஒரு ஜவுளிக்கடை வைத்திருந்தார். ஓரளவுக்கு பெரிய ஜவுளிக்கடைதான். குணசுந்தரியும் எப்போதாவது போய் பார்த்துக் கொள்வாள். சாகரி இப்போதுதான் பட்டப்படிப்பை முடித்திருந்தாள்.
அம்மா, நீயும் வந்து பிஸினஸைப் பார்த்துக்கோ. எனக்கு அப்புறம் நீதான் பார்த்துக்க போறே!
என்று சொல்லிக் கொண்டிருந்தார் எத்திராஜ்.
அவர்கள் எங்கே ஆர்டர் போடுவார்கள். எப்படி துணி மணி வாங்குவார்கள். என்பதையெல்லாம் சாகரி ஓரளவுக்குக் கற்று வைத்திருந்தாள். இருந்தாலும் முழுமையாக தொழிலில் இறங்கவில்லை.
அப்பா ஒரு சிக்ஸ் மந்த் டைம் கொடுங்க. என்ஜாய் பண்ணிட்டு அப்புறமா நான் இறங்கிடறேன்
என்று சொல்லிக் கொண்டிருந்தாள் மகள்.
சரிம்மா, உன்னோட ஆசையை ஏன் கெடுப்பானேன்?
என்றார் எத்திராஜ்.
ஆனா, அதுக்காக நான் டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன்பா. போஸ்டல்ல எம்.பி.ஏ. படிப்பேன்
என்றாள்.
என்ன வேண்ணாலும் செய்மா
என்று சொல்லியிருந்தார்.
மூவருமாக அந்த பிறந்த நாள் விழாவுக்குப் போய் இறங்கினார்கள். குணசுந்தரியின், தோழியின் மகளுக்குப் பிறந்தநாள். அவர்களுக்கு பல நாட்களுக்குப் பிறகு குழந்தை பிறந்ததால் அந்தக் குழந்தைக்கு இப்பொழுது பத்து வயது ஆகியிருந்தது. பெண் குழந்தை. குணசுந்தரியின் தோழி ரமா. பத்து வருடங்களாக வேறு ஊரில் இருந்தார்.
அவளுடைய கணவன் வேற்றூரில் வேலை செய்வதால் டிரான்ஸ்பஃரில் போய் விட்டார்கள். பத்து வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் வந்திருந்தார்கள். வந்தவுடனேயே இவளைத் தேடிக் கொண்டு வந்து விட்டாள் ரமா.
என்னப்பா பத்து வருஷமா நான் லெட்டர் போட்டாதான் நீ போடறது. நீயா ஒரு லெட்டர் கூட போடலை தெரியுமா?
என்று கோபித்துக் கொண்டாள்.
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. இப்பதான் போன் வந்துடுச்சில்லே. அதான் வேணுங்கறப்ப பேசிக்கறோமில்லே? அப்புறம் என்ன லெட்டர்?
என்றார் குணசுந்தரி.
அதுவும் அப்படித்தான். அதுவும் கூட நானா கூப்பிடணும். நீயா எப்பவும் கூப்பிட மாட்டியே
என்று அதற்கும் ஒரு பிடி பிடித்தாள்.
ஆமாம், ஒவ்வொருத்தருக்கு ஒரு மாதிரி நேச்சர்டி. இதுவரைக்கும் நான் இங்கே வீட்லே வேலைக்கு ஆளே வச்சுக்கலை. சாகரியை அனுப்பிச்சுட்டு வீடு, வாசலை கூட்டி எடுத்து சுத்தம் பண்ணி மெயிண்டனென்ஸ்கே டைம் ஆயிடும். அப்புறம் கொஞ்ச நேரம் கிடைச்சா அக்கடான்னு படுத்து ரெஸ்ட் எடுத்துக்கலாம்னு தோணுது. அதான் விஷயம் வேற எல்லாம் ஒண்ணும் இல்லை.இப்பத்தான் ஆள¢ போட்டிருக்கேன்.
என்றான் குணசுந்தரி.
இதுதாண்டி தப்பு. இந்த லேடீஸ்கிட்டே இருக்கிற பிரச்சினையே இதுதான். என்னைக்கு இருந்தாலும் ஃப்ரெண்ட்ஸ் வேணுமில்லை. எது இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேணும் இல்லடி
என்றாள்.
எனக்கு என்னடி குறை? நான் சந்தோஷமா தான் இருக்கேன்
என்று குணசுந்தரி சொன்னாள்.
சரி, நானும் இப்பக் காரியமாதான் வந்திருக்கேன். என் பொண்ணுக்கு பிறந்தநாள் வர்ற வாரம் சனிக்கிழமை. கண்டிப்பா நீங்க எல்லாரும் வரணும்
என்று கேட்டுக் கொண்டாள். அதன்படி தான் இன்றைக்கு எல்லாரும் வந்திருக்கிறார்கள்.
இவர்களைப் பார்த்தவுடனே ரமா ஆவலாக ஓடி வந்து ரொம்ப சந்தோஷம்டி, ஃபேமிலியோட வந்துட்டீங்க!
என்று வரவேற்றாள்.
எத்திராஜ் ஜவுளிக்கடையிலே இருந்து அழகாக அந்தப் பத்து வயதுப் பெண்ணுக்கு ஏற்ற மாதிரி ஒரு பட்டுச் சுடிதார் கொண்டு வந்திருந்தார்.
அதை கேக் வெட்டியதற்குப் பிறகு அவர்களுக்குக் கொடுத்தார்கள். ரமாவின் மகள் கீர்த்தனா மிகவும் ஆசையாக வாங்கிக் கொண்டாள். அப்பொழுதே பிரித்துப் பார்க்கச் சொல்லவும் பிரித்துப் பார்த்து விட்டு மகிழ்ச்சியாக சிரித்தாள்.
அதே நேரத்தில் குணசுந்தரி திரும்பிப் பார்த்து யாரையோ ஏய் லலிதா, வா. வா வா!
என்று வரவேற்றாள். அந்த லலிதாவும் இவர்களது பழைய தோழி. குணசுந்தரி அவளுடன் சற்று நேரம் அளவளாவி விட்டுத் தன் குடும்பத்தோடு வந்து சேர்ந்து கொண்டாள்.
ரமாவின் வீட்டுக்கு முன்னாலே புல் வெளி இருந்தது. அவள் அரசு