Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paattu Kalanthidavey Part 2
Paattu Kalanthidavey Part 2
Paattu Kalanthidavey Part 2
Ebook272 pages2 hours

Paattu Kalanthidavey Part 2

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352854264
Paattu Kalanthidavey Part 2

Read more from Jaisakthi

Related to Paattu Kalanthidavey Part 2

Related ebooks

Reviews for Paattu Kalanthidavey Part 2

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paattu Kalanthidavey Part 2 - Jaisakthi

    http://www.pustaka.co.in

    பாட்டுக் கலந்திடவே...!

    பாகம் 2

    Paattu Kalanthidavey…!

    Part 2

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jaisakthi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    பாட்டுக் கலந்திடவே...!

    பாகம் -2

    1

    பூஜை அறையில் நின்று கொண்டிருந்தாள் குழலி. மனம் சமனப் படுவதற்கு வெகு நேரம் ஆகியது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் மௌனக் கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்தாள்.

    நல்ல வேளையாக அம்மாவும், அப்பாவும் மாலையில் கோவிலுக்குப் போயிருந்தார்கள். பார்த்திபன் இன்னும் வந்து சேர்ந்த பாடில்லை. அதனால் தப்பித்தாள். அரைமணி நேரத்திற்கு நின்று கொண்டே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். பிறகு அமர்ந்து கொண்டாள்.

    அவர்கள் வீட்டு பூஜை அறை மிகவும் அழகாக இருக்கும். "முருகா! நான் எப்போதும் பெற்றோர்களுக்கு ஏற்ற மகளாகவே இருக்க விரும்புகிறேன். அவர்கள் மனம் வெறுக்கக் கூடிய எந்தக் காரியத்தையும் நான் செய்ய விரும்பவில்லை என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். அதைக் காட்டிலும் நரேந்திரன் நல்லவர்தான். நல்லவர் என்பதற்காக வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படியே சரி என்று சொன்னால் உடனே மேகலா சொன்னது தான் சரியென்று ஆகிவிடுமல்லவா என்று என்னென்னமோ எண்ணங்கள் அவள் மனதுக்குள்ளே தோன்றியது.

    மனத்தை மாற்றுவதற்காக கந்த சஷ்டி கவசம் கொஞ்ச நேரம் பாடினாள். பிறகு விளக்குப் பூஜை செய்தாள். விளக்குப் பூஜை செய்ததற்குப் பிறகு கொஞ்சம் மனம் அமைதி அடைந்தது. அரை மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்து பாடல்களைப் பாடினாள். அதற்குப் பிறகுதான் மனம் தெளிவாகியது.

    ‘எதைப் பற்றியும் முடிவெடுப்பதற்குத் தனக்குத் தகுதியில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நரேந்திரனுடைய குடும்பம் நமக்கு மீறிய குடும்பம். அந்தக் குடும்பத்தில் தொடர்பு வைத்துக் கொள்வது என்பது சுய மரியாதையை அடகு வைப்பது.’

    தன்னுடைய தந்தை வேலை செய்த காலத்தில் எல்லோரிடமும் பணிவாக இருப்பார். ஆனால், கூழைக் கும்பிடு போடமாட்டார். அதனால் அலுவலகத்திலேயே அவர் பேரில் மரியாதை உண்டு. லஞ்சம் கொடுத்து சாதிக்கிறவர்கள் கூட ‘இவருகிட்ட நம்ம காரியம் நடக்காது. அதனால் நாம வேற டேபிளுக்குப் பேப்பர் போற மாதிரி பார்த்துக்கலாம்!" என்று நகர்ந்து போய் விடுவார்கள்.

    ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கஷ்டம் இருந்தது. ஆனால் இவர் இப்படித்தான் என்று தெரிந்ததற்குப் பிறகு யாரும் அவரை பெரிதாகத் தொந்தரவு செய்ய வில்லை. இளம் வயதிலேயே முறுக்கோடும் மிடுக்கோடும் விஷயங்களை மறுத்துச் சொல்லுவார். ஆனால் கொஞ்சம் அனுபவம் வந்ததற்குப் பிறகு நயமாகத் தடுத்து விடுவார். வேண்டாம் சார், இதெல்லாம் என்னால் முடியாது. நீங்க வேற டேபிள் பார்த்துக்கங்க! என்று சொல்லிவிடுவார். அப்படி வாழ்ந்தவருடைய மகள் நான். கேவலம் பணக்காரர்கள் என்பதற்காக நான் சரியென்று சொல்வேனென்று நரேந்திரன் நினைத்தால் அதை விடப் பெரிய தவறு வேறு எதுவும் இல்லை" என்று எண்ணிக் கொண்டாள்.

    அதற்குப் பிறகு மனம் தெளிவாகியது. கோயிலில் இருந்து வந்ததற்குப் பிறகு அவர்களோடு ஒன்றாக இரவு உணவு அருந்தி விட்டு படுக்கைக்குப் போனாள்.

    இரவு படுக்கப் போகும்பொழுது அவளுக்குப் பிடித்த கதாசிரியர் புத்தகங்களைப் படிப்பதுண்டு. அப்படி அன்றைக்கும் படித்தாள். ‘எதையும் யோசித்துத் தெளிவாக முடிவெடுத்துவிட்டு அதற்குப் பிறகு நிம்மதியாக இருப்பதுதான் வாழ்க்கைக்கு நல்லது’ என்று கதைப் போக்கிலே அந்த நாவலாசிரியை ஒரு இடத்திலே சொல்லி இருந்தார். அது ஏதோ தனக்கே சொன்னது போல உணர்ந்தாள் குழலி.

    அதன் பிறகு வேறு விஷயங்களில் கவனம் செலுத் தலாம் என்று தான் முடிவெடுத்தாள். எனவே நிம்மதியாக உறங்கப் போகலாம் என்று படுக்கைக்குப் போனாள்.

    அப்போது செல்ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தாள். நரேந்திரனின் எண்.

    பேச வேண்டுமா? நான் தான் இனிமேல் வகுப்புக்கு வரமாட்டேன் என்று சொல்லியாகி விட்டதே. இனிமேல் எதற்காகப் பேச்சு? என்று சலிப்பும் தோன்றியது. ஆனால் உடனே இன்னொரு மனம் சொன்னது. ‘திடீர் என்று நீ போக மாட்டேன் என்று சொன்னால் அதனால் என்னென்ன விமர்சனங்கள், என்னென்ன கணிப்புக்கள் எல்லாம் நிகழும். இதைப் பக்குவமாகத் தான் கையாள வேண்டும்’ என்று எண்ணியவளாக ஃபோனைக் கையிலே எடுத்தாள்.

    குட் ஈவ்னிங் சார்! என்றாள்.

    குட் ஈவ்னிங் அப்படின்னு சொல்ல மாட்டேன்! என்றான் நரேந்திரன்.

    இந்தப் பக்கம் குழலி மௌனம் காத்தாள். மிஸ் குழலி, நான் சொல்றதைக் கொஞ்சம்...ஒரே ஒரு நிமிஷம் காது கொடுத்துக் கேட்கறீங்களா? என்றான் வினயமாக.

    அவள் அதற்கும் மௌனம் சாதித்தாள்.

    தாங்க்ஸ்... மிஸ் குழலி, நான் உங்ககிட்டே ஒரு ப்ரோபஸல் சொன்னேன். அது என் பக்கத்து முடிவு. அதை நீங்க ஏத்துக்கணுங்கற எந்தக் கட்டாயமும் இல்லை. உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நீங்க அதை சொல்லிடலாம். ஆனா அது வேற, ஸ்ரீ லேகாவுக்கு வகுப்பு எடுக்கறது வேற. தயவு செய்து இது ரெண்டையும் குழப்பிக்காதீங்க. அது மட்டும் இல்லை, ஒரு விஷயம் மட்டும் நான் உறுதியாச் சொல்றேன். பார்த்திபனுக்கு வேலை கொடுத்ததுக்கும் நான் உங்க கிட்ட ப்ரபோஸ் பண்ணினதுக்கும் ஒரு கடுகளவுகூட சம்பந்தம் இல்லை. தயவு செய்து இதை நீங்க நம்பணும்! என்றான்.

    அவள் மேலும் மௌனம் சாதிக்கவே. மிஸ் குழலி, கேட்டுகிட்டிருக்கீங்களா? என்றான்.

    ம்...! என்றாள் அவள்.

    ஒருமையில் பேசியவன் திடீரென்று மரியாதைக்குத் தாவியதைப் பார்த்தவுடன் அவளுக்கும் வருத்தமாகத் தான் இருந்தது. ஆனால் வேறு வழி இருக்க வில்லை. மறுபடியும் நீங்க ஒருமையில் பேசுங்கள் என்று சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.

    நரேந்திரன் தொடர்ந்தான். மிஸ் குழலி, நீங்க வழக்கம் போல கிளாசுக்கு வாங்க. நான் கண்டிப்பா இனிமேல் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். முடிந்த வரைக்கும் நீங்க வர டைம்க்கு நான் இருக்க மாட்டேன். ரொம்பத் தவிர்க்க முடியாமல் நாம எதிரெதிரே சந்திச்சாலும் கூட ஒரு ஃபார்மலான ஒரு குட் ஈவினிங்கோ குட் மார்னிங்கோ ஏதோ ஒண்ணு சொல்லிட்டு நீங்க போயிட்டே இருக்கலாம் என்றான்.

    ம்...! என்றாள் குழலி.

    தாங்ஸ், அப்போ நாளைக்குக் கிளாசுக்கு வர்றீங்க தானே? என்றான்.

    அவள் இப்பொழுதுதான் மெல்ல வாயைத் திறந் தாள். இல்லைங்க சார்! எனக்கு ஒரு நாலஞ்சு நாள் லீவு கொடுத்துருங்க. நான் கொஞ்சம் மனசைத் தெளிவு பண்ணிட்டு அதற்குப் பிறகு வரேன்! என்றாள்.

    ஓகே, உங்க இஷ்டம்... மறுபடியும் நான் சொல்றேன். ஐ வோண்ட் டிஸ்டர்ப் யூ இன் எனி வே! என்றான்.

    தாங்க்ஸ் சார்! என்றாள்.

    அவன் மிஸ் குழலி! என்றான்.

    மறுபடியும் இந்த முறை குரல் குழைந்திருந்தது. இப்படியெல்லாம் சொல்றதுனால நான் மாறிடலை. உங்க முடிவுக்கு நான் மதிப்புக் கொடுக்கறேன். அதான் விஷயம். ஆனா, என் முடிவுல இப்பன்னு இல்லை. எப்பவுமே உறுதியா இருப்பேன். அதையும் நீங்க மனசுல ஒரு ஓரத்துல போட்டு வச்சுக்கோங்க என்றான்.

    அவள் ஒன்றும் பேசவில்லை. "ஓகே பை... தாங்க்ஸ்! என்று வைத்து விட்டாள்.

    அவள் மனம் வருந்தியது. ‘எவ்வளவு பெரிய பணக்காரன்! எத்தனை தொழில்களை நிர்வாகம் செய்கிறான். வீட்டிலும் சரி இங்கேயும் சரி, லேசான ஒரு கை அசைவில், தலை அசைவில் கண் அசைவில் என்று வேலையாட்களை ஆட்டிப் படைப்பான்’. அவனுடைய அலுவலகத்திலே நடைபெறுகிற விஷயங்களை எல்லாம் பார்த்திபன் வந்து சொல்லக் கேட்டிருக்கிறான்.

    அப்பா, செம கறார்டி நம்ம நரேந்திரன் சார்! உண்மையாவே அவருகிட்டே நிறைய கத்துக்கணும். சின்ன வயசுலயே பின்னி பெடல் எடுக்கறார்! என்று ஆச்சரியப்படுவான் பார்த்திபன்.

    இவள் கூட ஒரு நாள் கேட்டாள். ரொம்பத் திட்டுவாரோ?! என்றாள்.

    திட்டுவாரு, திட்டுவாரு. ஆனா கத்தறதெல்லாம் கிடையாது. அப்படி லைட்டா குரல் எழும்பும். அப்படியே அடங்கிடும். ஆனா வார்த்தை கத்தி மாதிரி பாயும். எல்லார் கிட்டயும் இல்லை. ஏமாத்தறாங்க பாரு. ஓபி அடிக்கறாங்களே, அவங்ககிட்டே. ஆனா நல்லா வேலை செய்யறவங்க கிட்டே அது ஒரு விதமா பேசுவாருடி. லைட்டா கண்டிப்பு இருக்கும். அதுக்காக நான் ஒண்ணும் இறங்கி வந்திடலைன்னு காட்டிடு வாரு. ஆனா உங்களை எனக்கு பிடிக்கும் அப்படின்னு காட்டிடுவாரு. அதை எப்படித்தான் அந்த மனுஷன் சாதிக்கிறோரோ தெரியலை! என்பான்.

    அப்படிப்பட்ட ஒருவன் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவனாக இருக்கக் கூடாதா? இல்லை ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவனாக இருக்கக் கூடாதா? என்ற ஏக்கம் கூட இப்பொழுது அவள் மனத்தில் தோன்றியது. ஒரு பெருமூச்சு விட்டாள். அதற்குப் பிறகு தூக்கம் வருவேனா என்றது. கொஞ்ச நேரம் ஆனது.

    அதே சமயத்தில் பேசி முடித்து விட்டு ஃபோனை வைத்த நரேந்திரன் சற்று நேரம் இரண்டு கைகளாலும் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு தனது படுக்கையிலே அமர்ந்திருந்தான்.

    ‘எத்தனை அழகான பெண்களை கிளப் மீட்டிங்கில், உறவினர் வீடுகளில், வெளி இடங்களில், பிஸினஸ் கூட்டங்களில் என்று பார்த்திருக்கிறான். கம்பீரமான பெண்கள், அழகான பெண்கள், அறிவான பெண்கள், வசதியான பெண்கள், இவர்கள் வசதிக்கு ஒத்தது என்று தெரிந்து கொண்டு மேகலா கூட தூண்டில் போட்டிருக் கிறாள். ஏன் அந்தப் பெண்களே கூட இவனை வசீகரிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் எதுவுமே இவன் உள்ளே சென்றதே இல்லை.

    வெளியிலேயே ஒரு அரை அடி தள்ளித்தான் அவனுடைய உறவுகள் எல்லாம் நின்றிருக்கிறதே தவிர உள்ளே செல்லவில்லை. இந்தப் பெண்ணிடத்திலே என்ன இருக்கிறது என்று தன் மனம் போனது என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். ஆனாலும் "இல்லை, அவகிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு. இயல்பான ஒரு நடை உடை பாவனை! உன் பணம் என்னை எதுவும் செய்யாது என்பது போல நடந்து கொண்ட விதம். இவர்கள் வசதியைப் பார்த்து அவள் வாயைப் பிளப்பது இல்லை. ஆனால் புதிய விஷயங்களைக் கண்டால் இயல்பாக ரசிப்பாள்.

    அவனிடம் பேசும் பொழுது அந்த ஃபிளவர் வாஸ் ரொம்ப நல்லாயிருக்கு சார்! என்பாள். அதிலே நமக்கு அந்த மாதிரி இல்லையே என்கிற ஏக்கம் தெரியாது. இருக்கறதைக் கொண்டு வாழ்க்கையை நிறைவாக வாழ வேண்டும் என்ற தொனி அவள் பேச்சில் தெரியும். அவளுடைய அந்த நிறைவான மனநிலை தான் தன்னை ஈர்த்ததோ? ஒரு கணம் கூட இது உயர்வு அது தாழ்வு என்றெல்லாம் பேசி அவன் கேட்டதே இல்லை. அவளுடைய அப்பாவைப் போலவே இது போதும், எனக்கு இதுதான் நியாயமாக வந்தது என்று தான் எண்ணிக் கொள்வாள் போலும். அதனால்தான் அவள் முகத்திலே எப்போதும் ஒரு களை. நிறைவான மனத்தினுடைய களை.

    எவ்வளவு கஷ்ட காலத்திலும் அப்படித்தான் இருப்பாள். ஒரு கணம் கூட ‘இப்படி ஆகிவிட்டதே எனக்கு’ என்று அவள் புலம்ப மாட்டாள் என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது.

    அவளிடம் இப்போது மானசீகமாகப் பேசினான். குழலி, கண்டிப்பாக நான் உன்னை உன்னுடைய வெளி அழகுக்காக விரும்பலை. உங்கிட்ட இருக்கிற ஒரு கேலிபர், காடர், ஒரு கம்பீரம் இதெல்லாம்தான் எனக்குள்ளே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துச்சு. மேகலாக்கா உன்னை அவ்வளவு இன்சல்ட் பண்ணினப்பக் கூட நாங்க ரிக்வெஸ்ட் பண்ணினதுக்காக நீ மறுபடியும் வந்தே. உங்கிட்டே இருக்கக் கூடிய அந்த கேலிபர் தான் மேகலாவை டிஸ்டர்ப் பண்ணுது. இதெல்லாம் யோசிச்சுத் தான் நான் உன்னைத் தேர்ந்தெடுக்கறதா முடிவு பண்ணினேன். இல்லையில்லை, நான் எந்த முடிவும் பண்ணலை. நீயா வந்து என் மனசுக்குள்ள உட்கார்ந்துட்டே. அதுதான் உண்மை.ஆனா அது உனக்கு எப்பப் புரியப் போகுதுன்னு தெரியலை. எப்பப் புரிஞ்சாலும் சரி, புரியலைன்னாலும் சரி நான் உன்னை நினைக்கறதையோ உன்னை விரும்பறதையோ உன்னால தடுக்க முடியாது. அதிலே எப்பவும் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியாக சொல்லிக் கொண்டவன் அதற்குப் பிறகு நிம்மதியாகப் படுத்து உறங்கினான்.

    உறக்கத்திலும் அவள் பின்னல் அசைய நடந்து வந்தாள். பாட்டு சொல்லிக் கொடுத்தாள். ஸ்ரீ லேகா வோடு சேர்ந்து சிரித்தாள். சிவராத்திரி விழாவிலே விளையாடினாள். டம்ளரிலே நாசுக்காக காஃபி குடித்தாள். அதையெல்லாம் அவனால் தடுக்கவே முடியாமல் போனது!

    2

    பத்து நாட்கள் ஓடி விட்டது!

    கிட்டத்தட்ட ஏழெட்டு வகுப்புகளுக்குப் போய் விட்டு வந்துவிட்டாள் குழலி. நரேந்திரன் சொன்ன வார்த்தையை முழுமையாகக் காப்பாற்றினான். எந்த விதத்திலும் அவளுக்குத் தொல்லை தராமல், எதிரே வராமல் அவள் இருக்கும் நேரத்தில் வீட்டில் இராமல் என்று விவரமாகப் பார்த்துக் கொண்டான்.

    முதல் நான்கைந்து நாட்களுக்கு நரேந்திரன் வராதிருப்பதே நல்லது என்று தோன்றியது குழலிக்கு. ஆனால் இரண்டாவது வாரம் போகும் பொழுது அவளுக்கே கஷ்டமாக இருந்தது. ‘எவ்வளவு பெரிய முதலாளி! கெட்டிக்காரன்! அவனைப் போய் நாம் இப்படி நடத்தி விட்டோமே. அவனுடைய வீட்டிலேயே என் எதிரே நீ வரக்கூடாது என்பது போல பேசி கட்டுப்பாடு விதித்து விட்டோமே’ என்று வருத்தப் பட்டுக் கொண்டாள்.

    ஒரு நாள் ஸ்ரீ லேகாவுக்கு ஃபோன் செய்து வகுப்பு நேரத்தை மாற்றிக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வந்தாள்.அந்த நேரம் தன்னுடைய அலுவல கத்தில் அமர்ந்து கொண்டிருந்தான் நரேந்திரன். இவள் பாராதவளைப் போல வகுப்புக்குப் போனாள். ஸ்ரீலே காவிற்கு வகுப்பு எடுத்து விட்டுத் திரும்ப வரும் பொழுது அவன் அலுவலகத்திலேயே தான் இருந்தான்.

    ஏதோ முக்கியமான இரண்டு மூன்று அலுவலர்களை வீட்டிற்கே வரவழைத்து கான்ஃபிடென்ஷியல் மீட்டிங் நடத்தியிருப்பான் போலும் என்று எண்ணிக் கொண்டாள் குழலி. அப்பொழுதுதான் அவளுக்கு அந்த எண்ணம் தோன்றியது. சட்டென்று அவனுடைய அலுவலகத் திற்கு போனாள்.

    யாருடனோ ஃபோனில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவன் சுழல்நாற்காலியைத் திருப்பி அந்தப் போனை அதன் தாங்கியில் வைத்து விட்டு திரும்பியவன் அவளைப் பார்த்தவுடன் ஒரு கணம் திகைத்தான்.

    இரண்டு புருவங்களும் ஒரு நிமிடம் மேலேறி இறங்கின. என்ன மிஸ் குழலி? வாங்க! என்றான். சார், ஒரு இரண்டு நிமிஷம்! என்றாள் அவள்.

    பை ஆல் மீன்ஸ்! உட்காருங்க!

    அவள் அமர்ந்தாள். சொல்லுங்க! என்றான்.

    சாரி சார்! என்றாள்.

    எதுக்கு? என்றான் அவன்.

    இல்லைங்க சார்! உங்க வீட்லயே நீங்க குறிப்பிட்ட நேரத்துல இல்லாத மாதிரி வேணும்னே சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கிற மாதிரித் தெரியுது! என்றாள்.

    அவன் டேபிள் வெயிட்டை உருட்டிக் கொண்டே அவளைப் பார்க்காமல் மேஜையை பார்த்துக் கொண்டே அவள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான்.

    பிறகு நிமிர்ந்து அவளைப் பார்த்து விட்டு ஆமா, மிஸ் குழலி, உங்களுக்கு எந்த விதத்திலும் நான் டிஸ்டர் பென்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். அதை நான் காப்பத்தணுமில்லே! என்றான்.

    அவள் சார், நீங்களும் படிச்சவங்க. எனக்கும் இங்கிதம் தெரியும். அந்த மேட்டர் அதோட முடிஞ்சது. அவ்வளவுதான். மற்றபடி அதுக்காக செயற்கையா எந்தச் சூழ்நிலையும் கிரியேட் பண்ணிக்க வேண்டாம் சார்! என்றாள்.

    அவன் தோளை குலுக்கிக் கொண்டான். வேற? என்றான்.

    அவளுக்கு ஒரு மாதிரியாகப்

    Enjoying the preview?
    Page 1 of 1