Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirvarai Inithaval
Uyirvarai Inithaval
Uyirvarai Inithaval
Ebook112 pages45 minutes

Uyirvarai Inithaval

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128404628
Uyirvarai Inithaval

Read more from Vedha Gopalan

Related to Uyirvarai Inithaval

Related ebooks

Reviews for Uyirvarai Inithaval

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirvarai Inithaval - Vedha Gopalan

    http://www.pustaka.co.in

    உயிர்வரை இனித்தவள்

    Uyirvarai Inithaval

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    தான் செய்வது எத்தனை பெரிய துரோகம் என்று மனசுக்குள். கலங்கியவாறு கதி கலங்கி அமர்ந்திருந்தாள் சிந்துஜா.

    வாசலில் பெரிசாய்க் கோலம் போட்டிருந்தாள் அம்மா. பெட்ரூமில் டிரஸ்ஸிங் மேஜை முன்னால் பதுமைபோல் அமர்ந்திருந்த சிந்துஜாவின் குட்டை முடியை அழகாய் பிரஷ் செய்து விட்டுக் கொண்டிருந்தார் கன்யாகுமாரி மேடம்.

    இத பாரு... சியர்புல்லாய் முகத்தை வெச்சுக்கணும். டென்ஷன் தெரியுது உன் கண்ணில்..." அன்பாய்ச் சொல்லி அவளது முகத்தை நிமிர்த்தினார் அந்தப் பெண்மணி.

    டீச்சர்... சீக்கிரம் குழந்தையை ரெடி பண்ணுங்க... அவங்க வர்ற நேரமாச்சு... அப்பா விரட்டினார்.

    அப்பா எப்போதுமே இப்படித்தான் சுத்த மோசம். விரட்டும் குணத்துக்காக மோசம் என்று சொல்ல வரவில்லை. எத்தனை பெரிய கல்லூரியில் விரிவுரையாளர் கன்யாகுமாரி மேடம். எவ்வளவு மாணவிகள் அவரைப் பார்த்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவரைப் போய் டீச்சர் என்று சர்வ சாதாரணமாய் அசிங்கமாய்க் கூப்பிடுவது அப்பாவின் வழக்கம்.

    சாதாரண மூடில் இருந்திருந்தால் இந்த சிந்துஜா சும்மாவா விட்டிருப்பாள்? என்னப்பா நீங்க? எங்க மேடம் எல்.கே.ஜிக்கா டீச் பண்றாங்க? அவங்களைப் போய் டீச்சர் அது இதுன்னு அசிங்கமாய்ச் சொல்லி கிட்டு.... என்று ஏகமாய் எகிறியிருப்பாள்.

    அவரும் உரிமையாய், ஏய்... அவங்களுக்குக் கல்யாணமாகி முப்பது வருஷம் ஆகுது. பிள்ளை இன்சினீயரிங் பாஸ் பண்ணிட்டு வெளிநாட்டுக்குப் போயிட்டான். தோளுக்கு மிஞ்சின மக ஒருத்தியும் இருக்கா.... இருந்தும் ஆயிரக்கணக்கான பொண்ணுங்க அவங்களை எத்தனை அசிங்கமாய் மிஸ்ஸுன்னு கூப்பிடறீங்க? மிஸஸ்னு மரியாதையாச் சொல்றீங்களா? என்று பதிலுக்குப் பாய்வார்.

    இவர்களின் சில்லறைச் சண்டையை மேடமும் கை தட்டி ரசித்திருப்பார்.

    ஆனால், இன்றைக்கு அவளுக்கும் திட்டுகிற மூட் இல்லை;

    அப்பாவுக்கும் எதிர்த்துக் கேள்வி கேட்கும் மனநிலை இல்லை;

    கன்யாகுமாரி மேடமும் ரசிக்கிற மூடில் இல்லை!

    ஏய்? அழறியா என்ன? மேடம் பதறிப்போய்க் கேட்டார்.

    எப்படி மேடம் அழாமல் இருக்கச் சொல்றீங்க? என்று கேட்ட போது, அவள் கன்னத்தில் சற்று முன் மேடம் சிரத்தையாய்ப் போட்டு விட்டிருந்த பிங்க் பவுடர் சின்ன சைஸ் காவேரியாய்ப் பாய்ந்து வழிந்து கொண்டிருந்தது.

    உள்ளே அம்மா டென்ஷன் மிகுந்த மூடில் காய்ந்து புகை விட்டுக் கொண்டிருந்த எண்ணெய்யில் கடலைமாவில் தோய்ந்த உருளைக்கிழங்கு வில்லைகளைப் பொரித்தெடுக்கும் வாசனை பெட்ரூம் வரைக்கும் வந்தது. காப்பிக்கு பில்டரில் டிகாக்ஷன் இறங்கும் மணமும் கேசரிக்கு ரவை வறுபடும் வாசனையுமாய்ச் சேர்ந்து ஒரு விநோதக் கலவை மணமாய்க் கொடுத்தது.

    சாதாரணமாய் இருந்தால் இவை எல்லாமே மகிழ்ச்சியையும் பரபரப்பையும் பரப்பும் சூழ்நிலைகள்தான். இருந்தும் இப்போது யாருக்குமே அப்படி இல்லை!

    இப்படியே லூசாய்த் தலை பின்னிவிடவா? மேடம் பரிவாய்க் கேட்டார். கல்லூரியே அவரைப் பார்த்தால் குடல் சரிய ஓடும். இந்தக் குடும்பத்தில் மட்டும் இப்படி ஒட்டுகிறார்.

    கொஞ்சம் நல்ல மூடில் இருந்தால் அவள் சிணுங்கியவாறு, என்ன மேடம், என்னை மாதிரியே என் பின்னலும் லூஸ் என்று மறைமுகமாய்க் கேலி செய்யறீங்களா? என்று கலாட்டா செய்திருப்பாள். இப்போது மெளனமோ மெளனம்.

    இந்தக் கல்லூரி விரிவுரையாளர் இந்தக் குடும்பத்துக்கு இவ்வளவு நெருக்கமாய் சிநேகிதமானதே ஒரு பெரிய கதை. காலேஜில் சிந்துஜாவின் அறிவையும் அழகையும் பார்த்துவிட்டு ஏகமாய் அவளைப் புகழ்ந்து தள்ளியவர், ஒருநாள் இவர்கள் வீட்டுக்கு வந்து சின்னதாய் விருந்து ஒன்று சாப்பிட்டுவிட்டுப் போனார்.

    அத்துடன் விட்டிருக்கலாம். தன் அமெரிக்க மகனை வளைத்துப் போட்டு இந்தப் பெண்ணைத் தன் மருமகளாக்கிக் கொண்டு விட வேண்டும் என்று அந்த அம்மாளுக்குக் கொள்ளைப் பிரியம். ஆனால் அவனின் குரங்கு மூஞ்சி போட்டோவைப் பார்த்தக் கணத்திலேயே சிந்துவுக்குப் பிடிக்கவில்லை. ஆசிரியையாயிற்றே எப்படிச் சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தவேளையில் அந்த மகன் தான். ஒரு வெள்ளைக்காரியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டதாய்க் கடிதம் போட்டு அந்தத் தாயின் மனசைச் சின்னாபின்னப்படுத்தி விட்டான்.

    வெள்ளைக்காரியோ, ரோஸ் காரியோ: தனது பிரச்னையைத் தீர்த்து வைக்க உதவியவள் என்ற முறையில் அந்தப் பெண்மணியின் கலர் போட்டோவைப் பார்த்த மாத்திரத்தில் சிந்துஜாவுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

    சிந்துஜா குடும்பத்தினர்கள் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொல்லி, அந்த அம்மாளின் மனசை மாற்றி இப்போது மகனிடம் பழைய ஓட்டுதலும் பாசமுமாய் இருக்குமளவுக்கு மாற்றி விட்டார்கள். நடுவில் ஒரு முறை தன் அமெரிக்க மனைவியுடன் அவன் வந்துவிட்டுப் போனபோது மறக்காமல் இவர்கள் வீட்டிலும் ஒரு வேளை விருந்து.

    உங்க வீட்டில் சிந்துஜாவுக்கு ஒரு அண்ணன் இருந்தால் எங்க விபுலாவைக் கண்ணை மூடிக்கிட்டு அவனுக்குக் குடுத்துடுவேன் என்று ஒரு நாள் சொன்ன மேடம் டக்கென்று அயம் ஸாரி... என்று உடனே மன்னிப்புக் கேட்டார்; அவர் மன்னிப்புக் கேட்டதற்கு வலுவான காரணம் இருந்தது.

    என்ன சிந்துஜா... ரெடியா? அவங்களைக் கூட்டிக்கிட்டு வர்றதுக்கு நான் ஸ்டேஷனுக்குப் போகலாமா? அப்பா மணி பார்த்துப் பறந்தார். அய்யய்ய.. உன்னைப் பார்த்தால் மேக் அப் பண்ணின பொண்ணு மாதிரியே இல்லை. டீச்சர் இன்னும் கொஞ்சம் பவுடர் அப்புங்க. என்று போகிற போக்கில் கட்டளை போட்டுவிட்டு ஓடினார்.

    கன்யாகுமாரி மேடம், சிந்துஜாவின் அழகிய முகத்தை இரண்டு கைகளாலும் பிடித்து நேராய் நின்று பார்த்தார். என்ன ஒரு அழகு! இதற்குப் பவுடராவது,

    Enjoying the preview?
    Page 1 of 1