Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini Ithu Vasanthakaalam
Ini Ithu Vasanthakaalam
Ini Ithu Vasanthakaalam
Ebook90 pages34 minutes

Ini Ithu Vasanthakaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580128404595
Ini Ithu Vasanthakaalam

Read more from Vedha Gopalan

Related to Ini Ithu Vasanthakaalam

Related ebooks

Reviews for Ini Ithu Vasanthakaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini Ithu Vasanthakaalam - Vedha Gopalan

    http://www.pustaka.co.in

    இனி இது வசந்தகாலம்

    Ini Ithu Vasanthakaalam

    Author:

    வேதா கோபாலன்

    Vedha Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/vedha-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    காலையில் சோம்பல் முறித்து எழுந்தபோது ''உன் புருஷன் செத்துப் போய்விட்டான் என்று செய்தி வரப் போவது தெரியாமல், மாலினி அதீத சந்தோஷத்தில் பாட்டுப் பாடியவாறு எழுந்தாள். தலையைக் கோதிக் கொண்டு நிமிர்ந்தாள். நாற்பது வயது என்று கோயிலில் வைத்துச் சத்தியம் பண்ணினால்கூட நம்ப முடியாத உடம்பை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். பிளஸ் டூ படிக்கிற மகள் ஒருத்தி இருக்கிறாள் என்று யாரும் நம்பவே முடியாமல், ''இது யாருங்க; உங்க தங்கையா? என்று கேட்பார்களே அது வாஸ்தவம்தான்.

    அதென்னமோ எதற்கென்று தெரியாமல் காலையில் உற்சாகமாய்ப் பாட்டுப் பாட வேண்டும் போல் இருந்தது. பெண்ணே பெண்ணே மயங்காதே... பெண்மையை வழங்கத் தயங்காதே என்று முணுமுணுப்பாய்ப் பாடினாள். காலை வேளை. யாரேனும் கேட்டால் சிரிப்பார்கள். 'ஐந்து மணிக்கு என்ன காதல் பாட்டு வேண்டியிருக்கு. விவஸ்தை இல்லையோ. அதிலும் வயசென்ன? பதினெட்டா? நாற்பதாகலையோ?' என்று முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு ஜாடையாய்ச் சிரித்துக் கொள்ளுவார்கள்.

    ''நெற்றியில் உள்ள குங்குமம்... அவர் நெஞ்சின்மீது...'' பாடியவாறு பால் பாக்கெட்டுக்காக வாசல் பக்கம் துழாவினாள்.

    "என்ன மேடம்... இன்னிக்கு செம மூடு போல இருக்கு... உன் புருஷன் டூர் முடிச்சுக்கிட்டுத் திரும்பி வரப் போறான்னு குஷி கிளம்பிக்கிச்சாக்கும்'' கேட்டது மூன்றாம் மனுஷியில்லை; ரோடில் போகிறவளில்லை. மாலினியின் சொந்த மகள்.

    அடிக்கண்ணா... எழுந்துட்டியா? மெத்தையின் அருகில் போய் மெல்ல உச்சியில் முத்தமிட்டு மகளைப் பார்த்தாள். ''ஆமாம்டீ.... என் புருஷன் வரப்போறார். எனக்குக் குஷி கிளம்பிக்கிச்சு. தப்பென்ன?" மகள் சிந்தியாவின் தலையைக் கோதிவிட்டவாறு கேட்டாள்.

    சிந்துவிற்கும் சந்தோஷம் உள்ளேயிருந்து புறப்பட்டிருக்க வேண்டும். அது முகத்தில் வந்து உட்கார்ந்து கொண்டது தெளிவாய்த் தெரிந்தது. பத்து நாட்கள் கழித்துத் தன் அப்பாவைப் பார்க்கப் போகிற மகிழ்ச்சி, கண்களில் எழுதி ஒட்டியிருந்தது.

    "சேச்சே... உன் குஷியை யாரு குற்றம் சொன்னது? காலை வேளையில் என் தூக்கத்தைக் கெடுத்தியே. அதுக்கு என்ன கூலி குடுக்கலாம்னு யோசனை பண்றேன். அதிலும் புதுப்பாட்டுப் பாடாமல் சங்க காலத்துப்பாட்டு, கணக்காய் ஒண்ணைப் பாடறியே. அதுக்கு ஆண்டவன் உனக்கு என்ன தண்டனை குடுக்கப் போறானோ... போ'' சிரித்தவாறு சொல்லி போர்வை விலக்கி எழுந்தாள். அந்த வாக்கியம் அச்சானியமாய் அவள் வாயில் வந்திருக்க வேண்டாம்.

    அடையாறில் சின்னதாய்ச் சிமிழ் மாதிரியிருந்த அந்த ரோஸ் நிற வீடு, காலை வேளையிலேயே அழகாய்க்களை கட்டிவிட்டது.

    நகரும் கோவிந்தம்மா... நான்தான் இன்னிக்குக் கோலம் போடப் போறேன். என்று சொல்லி, கோலப் பொடியைக் கையில் வாங்கி என்னமோ மார்கழி மாசம் தட்டுக் கெட்டுப் போகிற மாதிரி பிரம்மாண்டமாய்க் கோலம் போட்டாள். மாலினி, நைட்டியுடன் அவள் குனிந்து நிமிர்ந்து கோலம் போட்ட அற்புத அழகைப் பார்த்துக் கொண்டு வாயில் டூத் பிரஷ்ஷடன் நின்றிருந்த மகள் சிந்தியா பிரமித்துக் கொண்டிருந்தாள்.

    ''இத பாருங்க. எனக்கு ஃபிளாட் கீட்டெல்லாம் வேண்டாம். அழகாய்ச் சின்னதாய் ஒரு வீடு கட்டிக் குடுங்க போதும். காம்பவுண்டு இருக்கணும். நாலு செடி போட வசதியாய்க் கொஞ்சமாவது இடம் வேணும். எல்லாத் தையும்விட வாசலில் பெரிசாய்க் கோலம் போட பிளாட்பாரம் வேணும். படி வீடு சின்னதாய் இருந்தால்கூடப் பரவாயில்லை." இரண்டு வருஷத்துக்கு முன் அம்மா அப்பாவிடம் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

    சின்ன வீடுதானே. வெச்சுக்கிட்டால் போச்சு என்று அப்பாவும் சீரியஸ் முகத்துடன் ஜோக் அடித்தபோது, அம்மா பொய்க் கோபத்துடன் அவரை அடிக்கக் கையில் மெல்லிசாய் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு நாலு தடவைகள் சோபாவைச் சுற்றிச் சுற்றித் துரத்தியது சிந்தியாவுக்கு நினைவில் மிதக்க, கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தாள்.

    ''காலங்கார்த்தால் வாயில் பிரஷ்ஷுடன் சிரிக்காதேடீ. புரையேறிக்கப் போகுது; போய் மேஜை மேலிருந்து காம்ப்ளானை எடுத்துக் குடி... என்று அக்கறையுடன் சொன்ன அம்மா, இரு… இரு... ஒரு நிமிஷம் நில்லு... எதுக்குச் சிரிச்சே?" என்று கேட்கவும்.

    ''அதாம்மா. அந்தச் சின்ன வீடு ஜோக் நினைவுக்கு வந்தது" என்று சொல்லிவிட்டுத் திரும்பியவள், எதேச்சையாய் எதிர் வீட்டைப் பார்த்தாள்.

    சட்டென்று குரலைத் தாழ்த்திக் கொண்டாள். "மம்மி... யாரவன்?

    Enjoying the preview?
    Page 1 of 1