Oru Kaadhali Kaadhalikavillai
()
About this ebook
1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.
கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.
சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.
குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.
அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.
தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.
இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.
கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.
சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.
Read more from Vedha Gopalan
Kaadhalin Pon Sangili Rating: 5 out of 5 stars5/5Uyirvarai Inithaval Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Puyal Rating: 5 out of 5 stars5/5Aanmeega Siruthuligal Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Yenadi! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire… Rating: 0 out of 5 stars0 ratingsManathil Amarntha Mayile... Rating: 0 out of 5 stars0 ratingsKaanai Kaattu Pothum Rating: 3 out of 5 stars3/5Vizhi Pesum Mozhi Puthithu Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mounamana Neram Rating: 0 out of 5 stars0 ratingsWhatsapp Ennum Vallal Rating: 0 out of 5 stars0 ratingsMuganoolil Mugam Paarkirean - part 2 Rating: 0 out of 5 stars0 ratingsEnakkagava Babu? Rating: 0 out of 5 stars0 ratingsSiruvan Pragalathanum, Narasimharum Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kavya! Rating: 0 out of 5 stars0 ratingsPyramidgalum Avai Patriya Athisayangalum Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vendam Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsVarugirean Veena! Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsMuganoolil Mugam Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsAyyayiram Plus Ainooru Rating: 0 out of 5 stars0 ratingsIni Ithu Vasanthakaalam Rating: 0 out of 5 stars0 ratingsKaalathukkum Nee Vendum Rating: 0 out of 5 stars0 ratingsEngey Antha Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsNee Verum Pennthan! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Thana? Ivan Thana? Rating: 0 out of 5 stars0 ratingsAzhagana Aaviye! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oru Kaadhali Kaadhalikavillai
Related ebooks
தாய்ப் பறவை Rating: 0 out of 5 stars0 ratingsThaai Paravai Rating: 5 out of 5 stars5/5Unakkagavey Naan... Rating: 5 out of 5 stars5/5Kaadhal Solli Vidai Peruvathu... Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Kaithanean! Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsThavazhum Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsIntha Nerathil Ithu - Thevaidhan! Rating: 0 out of 5 stars0 ratingsEppodhumalla, Eppodhavathu Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vaasam Purappadum Penney Rating: 4 out of 5 stars4/5Pani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Ganga Rating: 5 out of 5 stars5/5Linga Bairavi Rating: 0 out of 5 stars0 ratingsபூவும்... பொட்டும்..! Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Thaimaiyil Kaniyum Iraimai Rating: 0 out of 5 stars0 ratingsKai Veesum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsமலரே என்னை நெருங்காதே! Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5Kalaintha Suruthi Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalai Nokki... Rating: 0 out of 5 stars0 ratingsUrimai Urangukirathu! Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Vilai Rating: 5 out of 5 stars5/5Oru Mudivin Aarambam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsOru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5T.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsIravukkum Pagalukkum Idaiye... Rating: 0 out of 5 stars0 ratingsNeeyenbathu Naanallavo Rating: 5 out of 5 stars5/5
Reviews for Oru Kaadhali Kaadhalikavillai
0 ratings0 reviews
Book preview
Oru Kaadhali Kaadhalikavillai - Vedha Gopalan
http://www.pustaka.co.in
ஒரு காதலி காதலிக்கவில்லை
Oru Kaadhali Kaadhalikavillai
Author:
வேதா கோபாலன்
Vedha Gopalan
For more books
http://pustaka.co.in/home/author/vedha-gopalan\
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
1
அவள் அதிர்ச்சியுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். என்ன சொல்றீங்க?
கண்களில் கண்ணீர் நின்றது. லேசாய் மேக்-அப் ஒற்றிய கன்னங்களில் வழிந்த நீர் பவுடரைக் கலைக்க, கேவினாள்.
யெஸ். நான் தமிழ்லதான் சொன்னேன். போயிடு. இப்பவே உன் காதலன் பின்னால போயிடு. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் இங்க திரும்பி மட்டும் வந்துடாதேம்மா தாயே.
அவனின் குரலில் ஆத்திரத்தின் உச்சம்.
அவள் தலைகுனிய, அவன் தொடர்ந்து அடுத்த ஆத்திரக் கணையை வீசினான்.
இத பாரு... போறதுக்கு முன்னாடி உன்னோட தாலியைக் கழற்றி என் கையில் குடுத்துட்டு அப்புறம் கிளம்பு.
அவள் மீது யாரோ திராவகம் ஊற்றின மாதிரி அதிர்ந்து திரும்பினாள். என்னை நம்புங்க. அவனுக்கும் எனக்கும் இப்போ எந்தவிதமான சம்பந்தமும் கிடையாதுங்க.
ஓஹோ! ‘இப்ப’ கிடையாது. அப்பிடின்னா... முன்னே இருந்திச்சுன்னுதானே அர்த்தம்?
பல்லைக் கடித்த விதத்தில் அரக்கன் தெரிந்தான்.
ஆண்டவா. நான் என்ன சொல்லி உங்களுக்கு என்னை நிரூபிப்பேன்? நான் தான் உண்மையை நம்ம... நம்ம... கல்யாணம் நடந்த அன்னிக்கே சொல்லிட்டேனே?
புடவைத் தலைப்பை எடுத்து வாயில் பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
அதனாலதான் கேட்கறேன். எப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியோ, அன்னிக்கே அவனை நீ மறந்திருக்கணும். ஆனால் உன்னால் மறக்க முடியாததால்தானே என்னண்டை அவனைப் பத்திச் சொன்னே?
கணவனின் குரலில் தெரிந்த குரூரத்துக்கு அவள் மேனி சிலிர்த்து நடுங்கி அடங்கியது.
இப்போது அவள் குரலிலும் லேசாய்ச் சூடு ஏறியிருந்தது. இல்லைங்க. இல்லவே இல்லை. நான் அவனை முழுசாய் மறந்துட்டேன். அதனால்தான் உங்ககிட்ட அத்தனை தைரியமாய்ச் சொல்லவும் முடிஞ்சது. இல்லாட்டி மனசில் வெச்சிக்கிட்டுக் கழுத்தை அறுத்திருப்பேன்.
அவள் குரலில் இருந்த கோபத்துக்கு அவன் பதில் கோபம் காட்டினான்.
சீ நாயே... எதிர்த்தா பேசறே? போடி வீட்டை விட்டு...
கத்தல் காதைக் கிழித்தது.
இப்போது அவள் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டவள் போலச் சட்டென்று தலை நிமிர்ந்தாள். சரி... நீங்க என்னை நம்ப மாட்டீங்கதானே?
மாட்டேன்டீ... என்ன, பயமுறுத்திப் பார்க்கறீங்களோ?
கிண்டல் தொனித்த குரலில் கேட்டான்.
நான் போயிட்டு வரேன்,
என்றாள் சட்டென்று.
அவன் வீட்டுக்குத்தானே?
ஆத்திரமாய்க் கேட்டான்.
நான்தான் உங்களை விட்டுப் போகப்போறேனே? எங்கே போனா உங்களுக்கென்ன?
கேட்டவள் மடமடவென்று உள் அறையை நோக்கி நடக்க, அவன் உக்கிரமானான்.
எங்கேடீ போறே? வெளியே போன்னா உள்ளே போறே? என் சொத்தைச் சுருட்டிக்கிட்டுப் போகப் பார்க்கறியா?
இல்லைங்க. என் சொத்தை மட்டும்தான் சுருட்டிக் கிட்டுப்போறேன்.
சொல்லிக் கொண்டே வெளியில் வந்தவளின் கையில் சுருட்டியிருந்த துணியில் சின்னஞ்சிறுசாய் ஒரு குழந்தை! நாளைக்கு இதுக்கு அப்பா நீங்கதானான்னு கூட நீங்க சந்தேகப்படுவீங்க,
என்றாள்.
தபாரு. என் குழந்தையைத் தொட்டால் தெரியும் சேதி. விட்டுட்டுப் போ.
என்றான்.
அவள் கொஞ்சமும் கவலைப்படாமல் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டு, திடீரென்று நினைத்துக் கொண்ட மாதிரி குழந்தையைக் கீழே விட்டுவிட்டு, ஏதோ சங்கிலியைக் கழற்றுவதுபோல் தாலியைக் கழற்றிக் கொடுத்து விட்டுக் கிளம்ப, அவள் தாலிக்கு மேல், ‘இடைவேளை’ என்ற எழுத்துக்கள் போடப்பட்டன.
பார்த்துக் கொண்டிருந்த குமாருக்குக் கண்கள் கூசின.
தியேட்டருக்கு வெளியே சிகரெட்டும், டீயும் சுறுசுறுப்பாய்க் காசாகிக் கொண்டிருக்க, இப்படியெல்லாம் படம் எடுக்கறாங்களே. இது மாதிரி நிஜமாய் நடக்குமா மச்சி?
என்று கேட்டவனைப் பார்த்தான் குமார்.
ஏன் நடக்காது? இதைவிடவும் விநோதமாய்க் கூட நடக்குமே என்று நினைத்துக் கொண்டான்.
2
குமார் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்தில் கனவு. கனவில் அவன் தூங்கிக் கொண்டிருந்தான். இரண்டு பக்கம் இரண்டு பெண்கள் வந்து எழுப்பினார்கள். நிமிர்ந்து பார்க்கிறான். ஒரு பக்கம் தேவதை. இன்னொரு பக்கம் பிசாசு. அவனால் எழுந்திருக்க முடியவில்லை. இரண்டுமாய்ச் சேர்ந்து அழுத்துகின்றன. தேவதைப் பெண் முத்தம் கொடுக்கிறாள். பிசாசுப் பெண் கழுத்தை நெறிக்கிறாள். அவனுக்கு இரண்டுமே பிடிக்கவில்லை. அப்போது தேவதை பாட ஆரம்பிக்கிறாள். என்ன இது? பாட்டு அழுகை போல் ஒலிக்கிறதே? அவன் சந்தேகத்துடன் கண்களைத் திறந்து பார்க்கிறான். நிஜத் தூக்கத்திலிருந்தும் கண் விழித்திருக்கிறான் போலும்.
தேவதையாவது, பிசாசாவது? அவன் குழந்தை தூளியிலிருந்து கால் வழிய இப்படியும் அப்படியும் நெளிந்தாடி அழுது கொண்டிருந்தது. வீல் வீல் என்ற கத்தல். தூளிக்குக் கீழே சின்னதாய் ஒரு சிற்றோடை. அழுகையில் காரணம் புரிந்தது. மெல்ல எழுந்து கடிகாரம் பார்த்தான். இரவு மணி இரண்டு. த்சு. த்சு. அழாதேடீ கண்ணம்மா,
என்று சொன்னவாறு அந்தக் குழந்தையை ஒரு புஷ்பக் கொத்துபோல் எடுத்து அதன் ஈரப்பகுதிகளைத் துடைத்து, நனைந்த ஜட்டியை நுனி விரலால் தூக்கிப்போட்டு வேறு மாற்றினான். அத்தனையையும் அதீதப் பொறுமையுடன் செய்தான்.
இதை மட்டும்தான் என்றில்லை. எதையுமே பொறுமையாய்ச் செய்யக் கூடியவன் அவன்.