Kannamoochi Yenadi!
()
About this ebook
1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.
கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.
சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.
குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.
அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.
தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.
இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.
கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.
சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.
Read more from Vedha Gopalan
Kaadhalin Pon Sangili Rating: 5 out of 5 stars5/5Manathil Amarntha Mayile... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Puyal Rating: 5 out of 5 stars5/5Uyirvarai Inithaval Rating: 0 out of 5 stars0 ratingsKaanai Kaattu Pothum Rating: 3 out of 5 stars3/5Aanmeega Siruthuligal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mounamana Neram Rating: 0 out of 5 stars0 ratingsNaan Sanditha Prabalangal Rating: 0 out of 5 stars0 ratingsSiruvan Pragalathanum, Narasimharum Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire… Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Pesum Mozhi Puthithu Rating: 0 out of 5 stars0 ratingsWhatsapp Ennum Vallal Rating: 0 out of 5 stars0 ratingsNaanarintha Aanmeegam Rating: 0 out of 5 stars0 ratingsKaalathukkum Nee Vendum Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsVidiyal Vegu Thooramillai Rating: 0 out of 5 stars0 ratingsNee Verum Pennthan! Rating: 0 out of 5 stars0 ratingsPyramidgalum Avai Patriya Athisayangalum Rating: 0 out of 5 stars0 ratingsIni Ithu Vasanthakaalam Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Malavika!! Rating: 5 out of 5 stars5/5Ithu Thana? Ivan Thana? Rating: 0 out of 5 stars0 ratingsMuganoolil Mugam Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsWhatsappil Vanthavai Rating: 0 out of 5 stars0 ratingsMuganoolil Mugam Paarkirean - part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAzhagana Aaviye! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vendam Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsEnakkagava Babu? Rating: 0 out of 5 stars0 ratingsAyyayiram Plus Ainooru Rating: 0 out of 5 stars0 ratingsEngey Antha Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kannamoochi Yenadi!
Related ebooks
Ullam Varudum Thendral Rating: 5 out of 5 stars5/5Anumathi Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsVaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Sadugudu Rating: 5 out of 5 stars5/5Kaadhal Nilavey... Rating: 0 out of 5 stars0 ratingsManas Rating: 5 out of 5 stars5/5Irattai Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsOru Singam Muyalagirathu Rating: 4 out of 5 stars4/5Irandil Ondru Rating: 0 out of 5 stars0 ratingsIngeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsKadathal Nadagam Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthiya Maalai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Uyire... Uyire... Rating: 0 out of 5 stars0 ratingsThaai Paravai Rating: 5 out of 5 stars5/5தாய்ப் பறவை Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Pothum Rating: 0 out of 5 stars0 ratingsIththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Unnaik Kan(Gun) Theduthey Rating: 5 out of 5 stars5/5Kanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5தேடிவந்த உறவுகள்... Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Nee! Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Suriyan Theyumo? Rating: 0 out of 5 stars0 ratingsVanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Pagalil Ingey! Iravil Engey? Rating: 0 out of 5 stars0 ratingsIrandu Manam Vendum Rating: 4 out of 5 stars4/5இரண்டு மனம் வேண்டும் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kannamoochi Yenadi!
0 ratings0 reviews
Book preview
Kannamoochi Yenadi! - Vedha Gopalan
http://www.pustaka.co.in
கண்ணாமூச்சி ஏனடி!
Kannamoochi Yenadi!
Author:
வேதா கோபாலன்
Vedha Gopalan
For more books
http://pustaka.co.in/home/author/vedha-gopalan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
ஸ்டுல்மேல் ஏறி நின்று கொண்டாள் ரஸிகா. கன்னங்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள். தூக்குக் கயிற்றை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள். பக்கத்தில் தரையில் பார்த்தாள். மெல்லிய துணியில் கிடந்த குழந்தை வீர் வீர் என்று அழுது கொண்டிருந்தது.
வரேண்டா கண்ணா... போயிட்டு வரேன். அப்புறமாவது உங்கப்பாவுக்கு புத்தி வரட்டும்...
என்று மீண்டும் அழுதாள்.
ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டவள் போல முகத்தை உறுதியாய் வைத்துக் கொண்டாள் சட்டென்று கயிற்று வளைவில் கழுத்தைப் பொருத்திக் கொண்டாள். சடாலென்று ஸ்டூலை உதைத்துத் தள்ளினாள்!
கட்.
என்றார் டைரக்டர். ரஸிகா புன்னகையுடன் தன்னைக் கயிற்றிலிருந்து விடுவித்துக் கொண்டாள்.
அனைவரும் அவளின் நடிப்புத் திறமைக்காகப் பாராட்டுத் தெரிவிக்க, அனைத்தையும் ஒரு சின்னப் புன்னகையுடன் அலட்டல் இல்லாது இயல்பாய் ஏற்றாள்.
அந்த நிமிஷம் முதல் அவள் மனநிலை மாறும். மூட் அவுட் ஆகும். இது போன்ற காட்சிகளில் நடித்தால் அவள் அன்றைக்கு ராத்திரி குப்புறப் படுத்து அழுவாள்.
இந்த வயசில் மற்ற பெண்களுக்குக் கிடைக்கும் எத்தனையோ சலுகைகள் இவளுக்கு மறுக்கப் பட்டிருக்கின்றன.
பேக் அப் பண்ணிடலாமா?
என்று குரல் கேட்டபோது செட்டிலிருந்த மற்ற நடிகர்கள் பறந்தார்கள்.
ரஸிகாவுக்கு வீட்டுக்குப் போகும் ஆர்வம் ஏதுமில்லை.
அம்மா...போகலாமா...
மிக பவ்யமாய் இவளுக்கு 'அம்மா' மரியாதை கொடுத்த செக்ரட்ரி இருபது வருஷங்களுக்கு முன்னரே இவளின் வயசைக் கடந்தவர். எனினும் எஜமானியல்லவா?
ஐயோ...... நான் எத்தனை வாட்டி சொல்றது? தயவு பண்ணி என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுங்க சார்.
அது மரியாதை இல்லைம்மா… கிசுகிசு எழுதிடுவாங்க.
என்று சொல்லி காவி தெரியச் சிரித்தார் செல்வம்.
மேடம். உங்களைக் கவர் ஸ்டோரிக்குப் பேட்டி எடுக்க வந்திருக்கோம். அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கோம். பவ்யமாய்க் கேள்வி கேட்ட நிருபருக்கு பொறுமையுடன் பதில் சொன்னாள்.
"கடைசியா ஒரு கேள்வி. அத்தனை பெரிய பங்களாவில் நீங்க தனியா இருக்கீங்களாமே? அதனாலதான் நிருபர்களை வீட்டுக்கு வர அனுமதில்லைன்னு...'' வேண்டுமென்றே பாதி வாக்கியத்தில் நிறுத்தினார். புத்திசாலி நிருபர்.
புத்திசாலி பேட்ஸ்மேன் பயங்கரமான பந்தை எதிர்கொள்கிறமாதிரி அதையும் புன்னகையுடன் எதிர் கொண்டாள் ரஸிகா.
ரூமர். எங்க வீட்ல நிறைய உறவுக்காரங்க இருக்காங்க. அம்மா சைடு அப்பா சைடுன்னு ஏகப்பட்ட உறவுக்காரங்க...
அப்ப உங்க பேரன்ட்ஸ்...?
நிருபர் விடுவதாக இல்லை.
ரெண்டு பேரும் வெளி நாட்டுல இருக்காங்க. முடிஞ்ச போதெல்லாம் நான் அங்க போவேன்… அல்லது அவங்க இங்க வருவாங்க... வருஷத்துக்கு இரண்டு முறையாவது அவங்களை மீட் பண்ணிடுவேன்.
அழகாய்ச் சிரித்தாள். ஃபிளாஷ்
ஒரு பத்திரிகையில் உங்களை ஸி.ஆர்.ரஸிகான்னு போட்டிருந்ததே?
ஆங். எனக்கு ரெண்டு இனிஷியல்.'' சட்டென்று நிமிஷம் முக பாவம் மாற்றத் தெரிந்த நடிகையல்லவா?
அந்த இனிஷயலுக்கு விளக்கம் சொல்ல முடியுமா?
நிருபர் மிகுந்த திட்டத்துடன் வந்து மடக்குவதாய்த் தோன்றியது அவளுக்கு.
அப்பா பெயர் ராம்குமார். அம்மா சந்திரா.
என்று கண்ணில் நீர் வரச் சிரித்தாள். அதாவது அவள் சிரித்ததால் கண்ணில் நீர் வந்ததாக சுற்றியிருந்தவர்களை நினைக்க வைத்தாள்.
பேட்டிக்கு நன்றிகூறி நிருபரும் புகைப்படக்காரரும் கிளம்பிவிட்டார்கள்.
போலாமா?
எழுந்து சுற்றியிருப்பவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினாள்.
எதிர்பாராத விதமாகச் சீக்கிரம் வீட்டுக்குப் போய்விட்டாள். போனவுடனேயே உடையைக்கூட மாற்றாமல் படுக்கையில் விழுந்தாள். அவளையும் மீறிய அழுகை பீறிட்டுக் கிளம்பியது. முதுகு குலுங்க அழுதாள். கண்ணை மூடிக்கொண்டு இரண்டுமுறை அம்மா.... அம்மா...
என்று சொல்லிப் பார்த்தாள்.
அவளைப் பொருத்தவரையில் ரொம்பவும் இனிப்பான சொல் அது.
இது போல அடிக்கடி சொல்லிப் பார்த்துக் கொள்வதுண்டு. அப்படிச் சொல்லும் போதெல்லாம் கண்ணெதிரில் எந்த முகமும் வராமல் அவஸ்தைப் படுதல் அவளைப் பொருத்தவரை நரகம்.
சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.... ஸெல்ஃபோனை எடுத்துப் பூப்போல ஒற்றினாள்.
எதிர்ப்புறம் மூன்று ரிங் போனதுமே எடுத்துவிட்டார் திவாகர். அப்பா...
உற்சாகக் குரலில் கூப்பிட்டாள் ரஸிகா.
கல்யாணி!
திவாகரின் குரலிலும் அதே உற்சாகம்.
என் மகளே எப்பிடிடா இருக்கே?
நல்லாவேயில்லை டாடி!