Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanavillai Vandhavale!
Vanavillai Vandhavale!
Vanavillai Vandhavale!
Ebook147 pages1 hour

Vanavillai Vandhavale!

Rating: 2.5 out of 5 stars

2.5/5

()

Read preview

About this ebook

Mrs. Uma Balakumar started writing in 2005 and she has written around 42 novels so far. Most of her novels are nice romantic novels. She has also written 5 spiritual novels. Her first novel is “Theendi Chendra Thendral” which got published in 2005 in Kanmani Magazine. All her novels are available as printed books in Arun publications. She has also written around 15 short stories. She has got an award from Thanga Mangai and another award from Kumutham Snehithi for her short stories.

She born and brought up in Kumbakonam, Tamilnadu. She loves long drives and to hear melodious music. Her husband has encouraged her throughout her journey as a author. She strongly believes that “God is the ultimate power” and has written 5 spiritual books too including a travelogue on “Sadhuragiri”.

Languageதமிழ்
Release dateJul 21, 2019
Vanavillai Vandhavale!

Read more from Uma Balakumar

Related to Vanavillai Vandhavale!

Related ebooks

Reviews for Vanavillai Vandhavale!

Rating: 2.5 out of 5 stars
2.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanavillai Vandhavale! - Uma Balakumar

    http://www.pustaka.co.in

    வானவில்லாய் வந்தவளே!

    Vanavillai Vandhavale!

    Author:

    உமா பாலகுமார்

    Uma Balakumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/uma-balakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    1

    நீல வானில், பிரகாசமாய் உலா வந்து கொண்டிருந்த பகலவன், காற்றுக் கரங்களுக்கு ஏற்ப அசைந்தாடிய பாதையோர மரங்களை, சோம்பலாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

    நீண்ட நைல் நதியில் மிதக்கும் படகுகளாய், வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக, நெடிய தார்ச்சாலையில் ஊர்ந்து பயணித்தன.

    அந்த போக்குவரத்து நெரிசலைக் கண்டு மனம் நொந்தபடி, மெதுவாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்தான் சிற்பி.

    சட்டென்று எதிரே சிக்னல் விழுந்துவிட, காரை நிறுத்திவிட்டு அசுவாரசியமாய் திரும்பியபோதுதான், அந்தக் காட்சி அவன் கண்களில் விழுந்து மனதிற்குள் நுழைந்தது!

    கண் தெரியாத ஒரு இளைஞனை, அவனுடைய கைப்பிடித்து கனிவுடன் வழிநடத்திய படி பாதையைக் கடந்து வந்து கொண்டிருந்தாள், ஒரு இளம் பெண்.

    சாலையில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் பிறரைப் பற்றிய அக்கறையின்றி கடந்து கொண்டிருக்க, அவளுடைய மனித நேயமும், பரிவும் ஏனோ உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்து நிறைந்தன.

    ஒரு மெச்சுதலோடு அவர்களை கவனிக்கும் போதே, பூங்குழலியின் நினைவு அழையா விருந்தாளியாய் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.

    அவளும் இப்படித்தான் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதென்றால் ஓடி ஓடிச் செய்பவள்.

    ஆனால் அவளுடைய காருண்யமும், மனிதாபிமானமும் கடைசியில் எப்படித் தோற்றது என்று எண்ணும் போதே, இதயம் கனத்துப் போனது.

    எதிரே சிக்னலில் பச்சை ஒளிர, உடனே காரை உசுப்பிக் கிளப்பியவன், தான் வேலை செய்கின்ற சாப்ட்வேர் நிறுவனத்திற்குச் சென்றான்.

    இந்தியாவில் பல இடங்களில் கிளை விரிந்திருக்கும் அந்த நிறுவனத்தில் புரொஜெக்ட் மேனேஜராகப் பணிபுரிகிறான் அவன்.

    கை நிறைய சம்பாதித்தும், எல்லா வசதிகளிலிருந்தும், மனம் மட்டும் நிம்மதியைத் தொலைத்து வெகு நாட்களாகியிருந்தன.

    இப்போதெல்லாம் வீட்டிற்குச் சென்றால் நிம்மதி தருகின்ற ஒரேயொரு செய்கை குழந்தை மதியுடன் விளையாடுவது மட்டும்தான்.

    அவளும் அவனிடம் பாசமாக ஒட்டிக் கொண்டு விடுவாள்.

    பூங்குழலியின் நினைவுகளை மறக்கச் செய்பவளும் அவள்தான்... நெருப்புத் திரியாய் தூண்டி விடுபவளும் அவள்தான்.

    ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் அலுவலகத்திற்குச் சென்றவனுக்கு கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்தபோது, இந்த உலகமே மறந்து போயிற்று.

    ***

    அதே நேரம் வீட்டில் அவனுடைய தாய் சாரதா, குழந்தை மதியை உறங்க வைத்துக் கொண்டிருந்தார்.

    தாயை இழந்த அந்த சிறு குழந்தையைப் பார்த்தால், அவருக்குப் பெரும் வேதனையாய்!

    பூங்குழலியை நினைத்தாலோ இதயமே வெடித்து விடும் போல் வலிக்க ஆரம்பிக்க... அப்போது அழைப்பு மணி ஒலித்தது.

    வாசல் கதவைத் திறந்தால் எதிரே அழகிய இளம் பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.

    தந்தச்சிலை போல் அழகாக... விழிகளிரண்டும் கவிதை பேச... உயரமாய் ஒரு ஓவியம் போல் நின்றிருந்தவளையே, ஒரு கணம் ஆழ்ந்து நோக்கினார் அவர்.

    உடனே, தன்னுடைய கரங்களை டியூலிப் மலர்களாய் குவித்து அவரை வணங்கியவள், வணக்கம்மா! நான் பிரதாயினி! பக்கத்து வீட்டை விலைக்கு வாங்கி நாங்க அதிலே குடி வரப்போறோம். நாளைக்குக் காலையில ஏழு மணிக்கு சிம்பிளா கிரஹப் பிரவேசம் பண்ணி பால் காய்ச்சிக் குடிக்கலாமின்னு இருக்கோம். உங்களை அவசியம் வரச் சொல்லி அம்மா சொல்லிட்டு வரச் சொன்னாங்க. வந்துடுங்கம்மா! சாரல் மழையாய் அழைத்தாள்.

    முதல்லே நீ உள்ளே வாம்மா! ரொம்ப சந்தோஷம். நான் நாளைக்கு கட்டாயம் வரேன்...! என்றபடி நகர்ந்து வழி விட்டார் சாரதா.

    அதை பிறகு அவள் சோபாவில் அமர, உங்க அப்பா, அம்மா எல்லாரும் இந்த ஊர்தானாம்மா? மெதுவாக விசாரித்தார் அவர்.

    இல்லைம்மா. பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம்! அப்பாவுக்கு பிசினஸ்... இங்கே டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் வெச்சிருக்காங்க. முன்னாடி பிளாட்டில் இருந்தோம். அம்மாவுக்கு தான், தனி வீட்டிலே இது மாதிரி தோட்டமும் வீடுமா இருக்கணும்னு ரொம்ப ஆசை. அதான் இந்த வீட்டை வாங்கிட்டு வந்துட்டோம்.

    விழிகளில் மின்னலுடன் அவள் பகர, ஒரு நிமிஷம் இரும்மா. காபி குடிச்சிட்டுப் போகலாம் என்றபடி சாரதா எழுந்தார்.

    இல்லைம்மா! இப்பதான் குடிச்சேன். இன்னும் ரெண்டு மூணு வீட்டுக்குப் போகணும். நாளைக்குக் கட்டாயம் வந்திடுங்கள். வீட்டில் எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க என்றபடி அழகிய முறுவலுடன் விடை பெற்றாள், அவள்.

    உன் பேரென்னம்மா சொன்னே?

    அவர் கேட்க, பிரதாயிணிம்மா... 'பிரதா’ன்னு எல்லாரும் கூப்பிடுவாங்க! கூறிவிட்டு அவள் விடை பெற, அந்த துறுதுறுப்பும் வேகமும் அவருக்கு பூங்குழலியை அப்படியே நினைவு படுத்தின.

    மறுநாள் காலையில் பிரதாயிணியின் வீட்டிற்குப் போனபோது, அன்புடன் வரவேற்ற லட்சுமணனையும், ரங்கநாயகியையும் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது.

    குழந்தை நிறைமதி ஆவலுடன் பிரதாவிடம் தாவ, வாஞ்சையுடன் அவளைத் தூக்கிக் கொண்டாள் அவள்.

    அந்தத் தெருவிலிருந்து பலரும் வந்திருக்க, பரிசைக் கொடுத்த பிறகு அனைவரிடமும் பேசிவிட்டு பூஜை முடிந்து சாப்பிட்டு விட்டுக் கிளம்பினார் அவர்.

    தாம்பூலப் பையைக் கொடுத்து ரங்கநாயகி வழியனுப்ப, மதிதான் அந்தப் பெண் பிரதாவிடமிருந்து வர மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தாள்.

    அம்மா குழந்தை இங்கேயே இருக்கட்டுமே நான் பாத்துக்கறேன். அவ என்ன சாப்பிடுவாள்னு மட்டும் சொல்லுங்க. ஊட்டிவிட்டு அப்புறமா கொண்டு வந்து விடறேன்.

    ஆர்வத்துடன் கூறிய பிரதாவிடம் மறுக்க மனமின்றி சரியென்றவர், இட்லி மட்டும் குடும்மா. நான் போயிட்டுக் கொஞ்ச நேரம் கழிச்சி எங்க வீட்டு சமையல் காரம்மாவை அனுப்பறேன். குடுத்தனுப்பிடுங்க. உங்களுக்கும் வேலை இருக்குமே! என்றபடி விடை பெற்றார்.

    மதி அவளிடம் இயல்பான பிரியத்துடன் ஒட்டிக் கொள்ள, சாப்பிடக் கொடுத்து விட்டு அவளுடனே சுற்றிக் கொண்டிருந்தாள் பிரதா!

    அப்போது பக்கத்து வீட்டிலிருந்து மதியைத் தூக்கிச் செல்ல வந்த கனகத்திடம், அரை மனதுடன் அவளை அனுப்பிவிட்டு சாப்பிடுபவர்களை கவனிக்க ஆரம்பித்தாள் அவள்.

    திடீரென்று லட்சுமணன் அவளை அழைக்கும் குரல் கேட்டது.

    பிரதா! வசுந்தரா வந்திருக்காங்க பாரு. வாங்க வாங்க உற்சாகத்துடன் இரைந்தார்.

    வசுந்தரா ஹைகோர்ட்டில் சீனியர் லாயர். அவரிடம் தான் ஜூனியராக பணியாற்றுகிறாள் பிரதாயினி.

    சீனியர் என்பதைவிட ஒரு உடன் பிறவா சகோதரி என்றே அவரைக் கூறலாம். இருவருக்கும் ஏழு வருடங்களாகப் பழக்கம்.

    அவள் ‘பி.எல்.’ படிப்பதற்கு முன்பிலிருந்தே இரு குடும்பமும் இனிய நட்புடனிருந்தனர்.

    அவள் வக்கீலுக்குப் படித்ததற்குக் காரணமே, வசுந்தரா தான் என்று கூட சொல்லலாம்.

    உடனே ஓடிவந்து அவரை வரவேற்றவள், வாங்கக்கா! காலையிலேருந்து எதிர்பார்த்துட்டிருந்தேன் என்றாள் ஆதங்கத்துடன்.

    "ம்... சாரி பிரதா... உனக்குத் தான் தெரியுமே. சங்கவியைப்

    Enjoying the preview?
    Page 1 of 1