Nee Vendum Ennarukil!
()
About this ebook
Mrs. Uma Balakumar started writing in 2005 and she has written around 42 novels so far. Most of her novels are nice romantic novels. She has also written 5 spiritual novels. Her first novel is “Theendi Chendra Thendral” which got published in 2005 in Kanmani Magazine. All her novels are available as printed books in Arun publications. She has also written around 15 short stories. She has got an award from Thanga Mangai and another award from Kumutham Snehithi for her short stories.
She born and brought up in Kumbakonam, Tamilnadu. She loves long drives and to hear melodious music. Her husband has encouraged her throughout her journey as a author. She strongly believes that “God is the ultimate power” and has written 5 spiritual books too including a travelogue on “Sadhuragiri”.
Read more from Uma Balakumar
Mazhai Tharumo En Megam…! Rating: 4 out of 5 stars4/5Vanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Manam Vizhithathu Mella! Rating: 2 out of 5 stars2/5Vannam Konda Pennilave! Rating: 1 out of 5 stars1/5Nenjil Unthan Ninaive Rating: 1 out of 5 stars1/5Uyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkena Thavamirunthen Rating: 0 out of 5 stars0 ratingsNesam Thanthaval Neethane! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Theetiya Oviyame! Rating: 4 out of 5 stars4/5En Sorgam Nee Penne Rating: 5 out of 5 stars5/5Uyir Thotta Urave! Rating: 2 out of 5 stars2/5Ullam Kavar Kalvan! Rating: 5 out of 5 stars5/5Nooru Jenmam Nee Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Thodatha Nilavu! Rating: 3 out of 5 stars3/5Kanne Undhan Nizhalavean Rating: 0 out of 5 stars0 ratingsUllam Unvasamanathadi Rating: 3 out of 5 stars3/5Theendi Sendra Thendral Rating: 5 out of 5 stars5/5Swasamai Kalandhavale! Rating: 4 out of 5 stars4/5Varam Tharum Vasanthame! Rating: 5 out of 5 stars5/5Engum Nirai Porsudare Rating: 0 out of 5 stars0 ratingsManathil Vizhuntha Mazhai Thuliye….! Rating: 5 out of 5 stars5/5Gnabagam Poo Mazhai Thoovum Rating: 0 out of 5 stars0 ratingsNeethane En Vasantham...! Rating: 4 out of 5 stars4/5Mounam Kalaindha Devathai! Rating: 2 out of 5 stars2/5Maruva Kaadhal Kondean! Rating: 5 out of 5 stars5/5Naan Unnai Neenga Maatten! Rating: 5 out of 5 stars5/5Sagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratingsUn Paarvai Oru Varam Rating: 0 out of 5 stars0 ratingsImaiyaga Naaniruppen...! Rating: 5 out of 5 stars5/5
Related to Nee Vendum Ennarukil!
Related ebooks
Kanne Undhan Nizhalavean Rating: 0 out of 5 stars0 ratingsImaiyaga Naaniruppen...! Rating: 5 out of 5 stars5/5Nooru Jenmam Nee Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsNesam Thanthaval Neethane! Rating: 0 out of 5 stars0 ratingsInba Naalum Indru Thaane! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnai Neenga Maatten! Rating: 5 out of 5 stars5/5Mounam Kalaindha Devathai! Rating: 2 out of 5 stars2/5Idhayam Theetiya Oviyame! Rating: 4 out of 5 stars4/5En Sorgam Nee Penne Rating: 5 out of 5 stars5/5Maayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Uyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsLayam Thedum Thaalangal Rating: 5 out of 5 stars5/5Sorgathiley Idhu Mudivaanathu Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vaithu Kaathirunthean! Rating: 0 out of 5 stars0 ratingsThen Pothigai Santhana Kaatrey! Rating: 3 out of 5 stars3/5Maruva Kaadhal Kondean! Rating: 5 out of 5 stars5/5Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Sagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Mayakkiya Poongatre Rating: 0 out of 5 stars0 ratingsUn Paarvai Oru Varam Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Mazhai Kaalam Rating: 4 out of 5 stars4/5Ithu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Uyir Thotta Urave! Rating: 2 out of 5 stars2/5Ullam Kavar Kalvan! Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Santhithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5Varam Tharum Vasanthame! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Nee Vendum Ennarukil!
0 ratings0 reviews
Book preview
Nee Vendum Ennarukil! - Uma Balakumar
https://www.pustaka.co.in
நீ வேண்டும் என்னருகில்!
Nee Vendum Ennarukil!
Author:
உமா பாலகுமார்
Uma Balakumar
For more books
https://www.pustaka.co.in/home/author/uma-balakumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
1
விடியல்… அற்புத அழகுடன் ரம்யமாய் பூமியை உசுப்ப ஆரம்பித்திருந்தது.
விண்மீன்கள் மங்கத் துவங்கியிருந்த அந்த அதிகாலைப் பொழுதில், நீலநிற வானில் நாடோடிப் பறவைக் கூட்டம் ஒன்று அழகிய கோடாய் அணிவகுத்துப் பறந்து கொண்டிருந்தது.
இளம் காலை தோட்டத்துப் புற்கள், வெள்ளிப் பனித் துளிகளை சூல் கொண்டு சுமந்து தலை சாய்த்திருந்தன!
உறக்கம் கலைந்து இமைச் சிப்பிகளை சோர்வுடன் திறந்த வினித்ராவுக்கு… ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை!
விழிகளைச் சுழற்றி தான் படுத்திருந்த அறையை அளவிட்டபோது, எல்லாமே புதிதாய்!
ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டலின் அறையைப் போல் வெகு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த அறை!
நான் எங்கிருக்கிறேன்… பதறி எழுந்து அமர்ந்தவளுக்கு லேசாகத் தலை சுற்றுவதைப் போல!
பயத்துடன் தலையைப் பற்றியபோது, இடதுபுறம் சிறு பேண்டேஜ் ஒன்று கைக்குத் தட்டுப்பட, மெதுவாகத் தடவிப் பார்த்தாள்.
மரத்துப் போயிருந்த உணர்வுகள் மெல்ல விழிக்க ஆரம்பிக்க, ஒருவித வேகப் படபடப்புடன் உள்ளே புகுந்தன… கடந்த கால நிகழ்வுகள்!
இன்று என்ன தேதி…!
அருகிலிருந்த டீப்பாயில் கழட்டி வைக்கப்பட்டிருந்த வாட்ச், அன்றைய தேதியை அறிவிக்க, நேற்றுதான் அந்த பயங்கர நிகழ்வு நடந்ததைப் புலன்கள் நினைவுறுத்தின.
இதயத்தில், ஒருவித விதிர்ப்பும், மிரட்சியும் ஞாபகங்களுடன் கைகோர்த்தன.
நேற்று மாலை… அவள் தன் வேலையில் எப்போதும் போல் சுறுசுறுப்புடனும், ஆர்வத்துடனும் ஆழ்ந்திருந்தாள்.
அன்று ஆடிட்டிங் சம்பந்தமாக வேலை அதிகம் என்பதால் அவளால் எப்போதும் போல் வீட்டிற்குக் கிளம்ப முடியவில்லை!
சேலத்திலிருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் அக்கவுண்ட்ஸ் செக்ஷனில் பணிபுரிந்து வருகிறாள் வினித்ரா!
இன்று முக்கியமான கணக்குகளை முடித்து ஆடிட்டருக்கு அனுப்ப வேண்டுமென்பதால், தொழிற்சாலை முடிந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் மும்முரமாக வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.
பிறகு, வேலை முடிந்து கைகளை சொடக்கி சோர்வுடன் நிமிர்ந்த போதுதான், பேக்டரியின் மேனேஜர் குமரவேல், ஒருவித அசிங்கமான வழிசல் சிரிப்புடன் அருகில் நிற்பது தெரிந்தது.
உடன் விதிர்த்து எழுந்தவள், சார்… என் வேலை முடிஞ்சிடுச்சி. நான் கிளம்பறேன்!
ஹேண்ட் பேகை எடுத்துத் தோளில் மாட்டியபடி வெளியேற முயன்றாள்.
உடனே முன்னால் வந்து அவள் வழியை மறித்தவன், ஏய்… என்ன… என் வேலை இன்னும் முடியலை… அதுக்குள்ளே ஓடறேங்கறே?
மிரட்டலாக அதட்டினான்.
சார் இது ஆபீஸ்… இங்கே நான் ஒரு சத்தம் போட்டாப் போதும்… எல்லாரும் வந்துடுவாங்க… மரியாதையா வழி விடுங்க. பாஸ் இல்லைன்னாலும் மத்தவங்க இருக்கறது ஞாபகம் இருக்கட்டும்!
அடிக்குரலில் எச்சரித்தாள்.
எல்லாரும் எப்பவோ போயாச்சு… வாட்ச்மேன் மட்டும்தான் இருக்கான். அவன் கூட, என்னோட ஆளு தெரியுமா?
அசிங்கமான விழி உருட்டலும், முகபாவமுமாய் அவன் நெருங்க அந்த பயத்திலும், படபடப்பிலும் டேக் வேண்டோ பயின்ற லாவகத்துடன் செயல்பட்டு, அவனைப் பிடித்து வேகமாகத் தள்ளிவிட்டு வெளியே ஓட ஆரம்பித்தாள் அவள்.
வெளியே நின்றிருந்த வாட்ச்மேனும் அவள் ஓடுவதைக் கண்டதும், ஒன்றும் புரியாமல் விழித்தான்.
உடனே சமயோசிதமாய்… உள்ளே பாம்பு… பாம்பு…
என்று கத்திவிட்டு, கதவைத் திறந்து மெயின் ரோட்டிற்குச் செல்லும் பாதையில், வினி ஓடத் துவங்கினாள்.
அவனும் பதறி உள்ளே ஓட, அப்போதுதான் வெளியே வந்த குமரவேல், ஏய் அந்தப் பொண்ணு ஓடறா பாருடா… புடி… புடி
என்று இரைந்தான்.
அப்போதுதான் விபரம் புரிந்து அந்தக் காவலாளியும் அவளைத் துரத்த, சுடிதாரணிந்ததால் அவளால் வேகமாக ஓட முடிந்தது.
பதட்டமும் பயமும் அதிகரிக்க மெயின் ரோடிற்குச் சென்றுவிட்டால் எந்த வண்டியையாவது நிறுத்தித் தப்பி விடலாம் என்ற எண்ணம் அசுர பலத்தைத் தர ஓடிய போது, பெரிய கல் தடுக்கிக் கீழே விழுந்தாள்.
அப்படியே திரும்பிப் பார்த்தால், இருவருமே துரத்தி ஓடிவந்து கொண்டிருப்பது தெரிய உடனே பயத்துடன் எழுந்து ஓட்டத்தை தொடர்ந்தவள் மெயின் ரோடிற்கு அருகே வந்து விட்டாள்.
மாலைப் பொழுது இருட்டியிருந்தது.
இதயம் தாறுமாறாய்த் துடித்து மூச்சு வாங்க, தார்ச் சாலையின் விளிம்பிற்கு வந்தாள்.
சாலையில் சற்று தூரத்தில் தெரிந்த ஒரு காரின் ஹெட்லைட் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்ய, உணர்வுகள் மயங்கி அப்படியே தொய்ந்து சரியத் துவங்கினாள்.
கானல் நீராய்… அதிகாலைக் கனவாய்… எல்லா உணர்வுகளும் மறைந்தன.
நினைவுகள் மங்கலாகி இருளுக்குள் மறைய, பிறகு என்ன நடந்ததென்பதே அவளுக்கு ஞாபகமில்லை!
புலன்கள் நிகழ்காலத்திற்குத் திரும்ப, உடனே பொங்கிய பயத்துடன் குனிந்து பார்த்தபோது தன் உடையில் எந்த மாற்றமுமில்லை என்பது புரிய, அழகிய போர்வை ஒன்று அவள் மேல் போர்த்தப்பட்டிருந்தது.
தலையிலிருந்த சிறு பேண்டேஜ், தனக்கு யாரோ முதலுதவி செய்திருப்பதையும் உணர்த்த, குழம்பியபடி அமர்ந்திருந்தாள்.
‘இது யாருடைய வீடு… என்னை இங்கே அழைத்து வந்தது யார்?’ இதயம் துடித்தது.
மெல்ல எழுந்தபோது அந்த அறைக் கதவு திறக்கப்பட, ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி சிறு புன்னகையுடன் உள்ளே நுழைந்தார்.
என்னம்மா… எழுந்திரிச்சாச்சா? இப்ப பரவாயில்லையா? உடம்புல வலி எல்லாம் இல்லையே?
கனிவுடன் விசாரித்தார்.
இறந்துபோன தன் தாயின் நினைவில் கண்கள் பனித்துவிட, பரவாயில்லைம்மா!
அவள் மெல்லத் தலையசைத்தாள்.
எதிரே… அழகிய ரவிவர்மாவின் ஓவியம் போல்…
அப்போதுதான் மலர்ந்த புதிய பூவாய்… சாமுத்ரிகா லட்சணத்தின் மொத்த உருவாய்… அந்த நிலையிலும் கம்பீர அழகுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை மனதிற்குள்ளே பிரமிப்புடன் ரசித்தார் அந்தப் பெண்மணி!
பிறகு அவளருகில் வந்து அந்த தலைக் காயத்தை மெல்ல வருடியவர், நீ யாரும்மா? அந்த முரடனுங்க ரெண்டு பேரும் ஏன் உன்னைத் துரத்திட்டு வந்தாங்க?
கவலையுடன் வினவியது அவர் குரல்!
அம்மா…
பழைய நினைவில் நடுங்கியபடி அவரது கையை ஆறுதலாகப் பற்றியவள், நடந்ததைக் கூற ஆரம்பித்தாள்.
அவள் பயத்துடன் பகர்ந்ததை முழுவதுமாகக் கேட்டதும், நீ கவலைப்படாதேம்மா! இனிமே அந்த பேக்டரிக்கு நீ வேலைக்குப் போக வேண்டாம்… என் மகன்கிட்டே சொல்லி நம்ம பழப்பண்ணை, காய்கறிப் பண்ணை கணக்கை எல்லாம் நீயே பாக்க ஏற்பாடு பண்றேன்!
என்றார் ஆறுதலாக!
ரொம்ப நன்றிம்மா… நீங்க யாரு… நான் இப்ப எங்கே இருக்கேன்?
அவள் தவிப்புடன் கேட்டாள்.
நான் திலகவதி! நீ இப்ப, ஏற்காட்டுல இருக்கற எங்க எஸ்டேட் பங்களாவிலதான் இருக்கே! எங்களுக்கு இங்கே காபித்தோட்டம், பழம், காய்கறிப் பண்ணை எல்லாம் இருக்கு நானும் என் பையனும் நேத்து சேலத்துக்கு ஒரு ஃபங்ஷனுக்குப் போயிட்டு காரிலத் திரும்பிட்டிருந்தோம்…
அப்பதான் நீ எங்க காருக்கு முன்னாடி ஓடி வந்து மயங்கி விழுந்தே! உடனே காரை நிறுத்தி இறங்கி வந்து பாத்தா உனக்குப் பின்னாடி ரெண்டு பேர் துரத்திட்டு வந்துட்டிருந்தாங்க!
"ஆனா எங்களைப் பார்த்ததும் அவங்க மிரண்டு போய்த் திரும்பி ஓடிட்டாங்க! உடனே என் பையனும், டிரைவருமாத்தான் உன்னைக் காரிலே தூக்கி ஏத்தினாங்க.
அப்புறம், இங்கே எங்க பேமிலி டாக்டர்கிட்டே அழைச்சிட்டுப் போனோம்!
அவர்தான் உனக்கு தலைக் காயத்துக்கு மருந்து போட்டு, ட்ரீட்மெண்ட் செஞ்சாரு! நீ மயக்கத்திலேயே எழுந்து கதறித் திரும்பவும் மயக்கமாயிட்டே!"
ஏதோ ஒரு நிகழ்வு உன்னைப் பாதிச்சிருக்கிறதா சொல்லி, அவர் தூங்கறதுக்கு ஊசியும் போட்டாரு! காலையில எழுந்தவுடனே சாப்பிடக் குடுக்கச் சொன்னாரு! ஒரு நிமிஷம் இரு… ஏதாவது குடிக்க குடுத்தனுப்புறேன்
என்றவர் எழுந்தார்.
ரொம்ப நன்றிம்மா!
என்று கைகூப்பியவள், நானே வர்றேம்மா! முதல்லே குளிச்சிட்டு வரேன்
எனும்போதுதான், தனக்கு மாற்றுத் துணிகூட இல்லை என்பது புரிவதாய்!
சிறு புன்னகையுடன் அவளுடைய தயக்கத்தை உணர்ந்தவர், உனக்கு போட்டுக்கறதுக்கு நார்மல் சைஸிலே ரெண்டு சுடிதாரும் ஸ்லிப்பும் வாங்கி அதோ அந்த சோபாவில வெச்சிருக்கேன் பாரு!
நேத்து வரும்போதே வாங்கிட்டேன்! இது கெஸ்ட் ரூம்தான். பாத்ரூமில் எல்லாமே இருக்கு… குளிச்சிட்டு வா!
பரிவுடன் உரைத்துவிட்டு வெளியேறினார்.
உடனே அந்த சோபாவிடம் சென்றபோது, விலை உயர்ந்த அந்த சுரிதார்களுடன் ஒரு துண்டும் ஸ்லிப்பும் கூடவே இருந்தன.
கடவுள், இவ்வளவு கஷ்ட நேரத்திலும் ஒரு அன்பான உதவிக்கரத்தை நீட்டியது, வினிக்கு பெரும் இதம் தருவதாய்!
மறுகணமே, குளியலறைக்குள் சென்றபோது, அவளுக்குத் தேவையான எல்லாமே அங்கிருந்தன!
பிறகு அவசரமாகக் குளித்துவிட்டு வெளியே வந்தவள், முடியை உதறி இருபுறமும் க்ளிப் செய்து உலர்வதற்காக விரித்து விட்டபடி வெளியே வந்தாள்.
அந்தப் பெரிய ஹால் ஒருவருமின்றி வெறிச்சோடியிருக்க,
உயர்ரக சோபாக்களும் பிளாஸ்மா டிவியும், சுவரிலிருந்த அழகிய ஓவியங்களும் அந்த வீட்டின் பணச் செழுமையைப் பறைசாற்றின.
திலகவதி