Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athu Oru Mazhai Kaalam
Athu Oru Mazhai Kaalam
Athu Oru Mazhai Kaalam
Ebook225 pages1 hour

Athu Oru Mazhai Kaalam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

தனது ஒரே ஒரு துணையான தன் பாட்டியின் இழப்பை தாங்க முடியாமல் கால்போன போக்கில் செல்கிறாள் வர்த்தினி. தனிமையாலும், சோர்வினாலும், மழைக்காகவும் ஒதுங்கிய அவளின் வாழ்க்கையில் ஒருவன் அறிமுகமாகிறான். அவனையே திருமணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. அந்த திருமணத்தினால் அவளது வாழ்க்கையில் ஏற்படப்போகும் திருப்பங்கள் என்னவென்று அறியாமல் இருக்கிறாள். பார்ப்போம் அந்த மழைக்காலம் இனிமையானதா என்று.

Languageதமிழ்
Release dateSep 20, 2021
ISBN6580140906968
Athu Oru Mazhai Kaalam

Read more from Lakshmi Sudha

Related to Athu Oru Mazhai Kaalam

Related ebooks

Reviews for Athu Oru Mazhai Kaalam

Rating: 4.333333333333333 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athu Oru Mazhai Kaalam - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    அது ஒரு மழைக் காலம்

    Athu Oru Mazhai Kaalam

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    உன் பார்வைக்கு

    அப்படி என்ன

    சக்தி?

    என்

    கோபம்

    ஆணவம்

    திமிர்

    எல்லாம்

    அடங்கிப்

    போனது!

    ஒரு புதிய

    ஊற்று

    என்னில்

    சுரக்கிறது!

    நான்

    புதிதாக

    இந்தப்

    பூமியில்

    பிறந்தது

    போல்

    உணர்கிறேன்!

    வர்த்தினி கால் போன போக்கில் அலைந்தாள். சாலை முழுவதும் மழைநீர் வெள்ளமாக ஓடிக் கொண்டு இருந்தது.

    சாலையில் ஒரு ஈ காக்கை இல்லை. மழை பெய்து கொண்டு இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. எல்லா இடமும் இருளில் மூழ்கி இருந்தது.

    ஆனால் வர்த்தினிக்கு அதெல்லாம் பொருட்டாகத் தோன்றவில்லை. அவள் மனம் சோர்ந்து போய் இருந்தது.

    அவளுக்கு ஒரே ஆதரவாக இருந்த பாட்டியும் இப்பொழுது உயிரோடு இல்லை. சில தினங்களாக நோய் வாய்ப்பட்டு இருந்தார்கள். காலையில் இனி வர்த்தினிக்குத் தொல்லை தரக் கூடாது என்ற முடிவோடு அவர்கள் உயிர் பிரிந்தது.

    நோய் வாய்ப்பட்டு இறந்தாலும், பாட்டியின் இழப்பை அவள் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. பத்து வயது முதல் அவளை வளர்த்து ஆளாக்கியது பாட்டிதான்.

    பள்ளியில் இருந்து அவள் வரும் பொழுது அவளைச் செல்லமாக அணைத்து அவள் சொன்ன கதைகளைக் கேட்டபடி அவளுடன் உட்கார்ந்து வீட்டுப் பாடம் செய்ய உதவி செய்த பாட்டி.

    அவள் கல்லூரி போகும் பொழுது அவளிடம் தோழி போல் பழகிய பாட்டி, அவளின் எல்லாச் செயல்களுக்கும் ஆதரவு அளித்த பாட்டி, என அவள் கண் முன்னே பாட்டி திரும்பத் திரும்பத் தோன்றினாள்.

    பாட்டியின் விருப்பப்படி அவளின் உடலையே மருத்துவ ஆராய்ச்சிக்குத் தானம் செய்தாள் வர்த்தினி. மனம் கொஞ்சம் நிம்மதியானது போல் உணர்ந்தாள்.

    ஆனால் இனித் தனக்கென யாரும் இல்லை என்ற நினைப்பு அவள் மனதை வாட்டியது.

    அப்பா அம்மா விபத்தில் இறந்த பின் தன்னைக் கவலை தெரியாமல் பாதுகாத்த பாட்டி இனி இல்லை... என்ற உண்மை அவளை அழுத்தியது.

    நடந்து கொண்டிருந்தவளின் காலை இடறியது ஒரு கல். வலி பொறுக்க முடியாமல் கதறினாள் அவள்.

    அதற்கு மேல் நடக்க முடியாது என்று முடிவு செய்தாள் அவள். சுற்றும் முற்றும் பார்த்தாள். எங்கும் இருள் சூழ்ந்து இருந்தது.

    அந்த இடம் எது என்று அவளுக்குத் தெரியவில்லை. சாலை ஏதும் சரியாகப் போடப்படவில்லை என்பதை அவளுக்குச் சூழ்ந்திருந்த புதர்களும் மரங்களும் உணர்த்தின.

    சட்டென ‘ஆள் அரவமில்லாத அந்த இடமும், இருள் சூழ்ந்து கருமை எங்கும் கசிந்திருந்த கோலமும், அவள் அடி வயிற்றில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.

    பாட்டியின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காகக் கொடுத்து விட்டுக் கால் போன போக்கில் தான் நடந்து வந்து விட்டோம் என்று அவளுக்குப் புரிந்தது.

    சற்றுத் தொலைவில் வீடு போல் ஒன்று அவள் கண்களுக்குத் தெரிந்தது. அதைப் பார்த்தவுடன் அவள் மனதில் நிம்மதி பிறந்தது.

    அந்த வீட்டை நோக்கி அவள் கால்கள் தானாக நடக்கத் தொடங்கின. நடந்து நடந்து கால்கள் ஓய்ந்து தள்ளாடுவதை அவளால் உணர முடிந்தது.

    மழையில் தொப்பலாக நனைந்திருந்ததால் அவள் உடல் குளிரினால் நடுங்கத் தொடங்கியது. சமாளித்துக் கொண்டு அந்த வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் வர்த்தினி.

    அந்த வீட்டைச் சுற்றி மதில் சுவர் ஏதும் இல்லை. உள்புறம் விளக்கு எரிந்து கொண்டு இருந்ததால்தான் அங்கே ஒரு வீடு இருக்கிறது என்று யாராலும் நம்ப முடியும்.

    மேல் பூச்சு வண்ணத்தைக் காணாத சுவர்கள், அங்கங்கே பெயர்ந்திருந்த சுவர் என்று அந்த வீடு ரொம்பவே பாழடைந்து இருந்தது.

    துணிவை வரவழைத்துக் கொண்டு அங்கிருந்த மரக் கதவைத் தட்டினாள் வர்த்தினி. உள்ளிருந்து எந்தப் பதிலும் வராததால் சற்றே பலமாகத் தட்டினாள்.

    அப்பொழுதும் எந்தப் பதிலும் வரவில்லை. மேலும் வேகமாகப் பலமாகக் கதவைத் தொடர்ந்து தட்டினாள் வர்த்தினி. கால் வலியோடு கை வலியும் சேர்ந்தது தான் மிச்சம்.

    உள்ளே இருந்து ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. நாயை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டுச் சென்று இருப்பார்களோ என்று யோசித்தாள்.

    விடாது மழை பெய்து கொண்டு இருந்தது. இனி இந்த மழையிலே இருந்தால் உடல் விரைத்துப் போய் மயங்கி விழுந்து விடுவேன். அதனால் எப்படியாவது வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

    உள்ளே உள்ள நாய் கடித்தால் கூடப் பரவாயில்லை. இந்த உடைந்த கண்ணாடி ஜன்னல் வழியாகக் குதித்து விடலாமா என நினைத்தாள்.

    என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று துணிவை வரவழைத்துக் கொண்டு, கதவைக் கடைசி முறையாகப் பலமாகத் தள்ளினாள். கதவு சட்டெனத் திறந்தது.

    திடீரெனத் திறந்ததால் நிலை தடுமாறி வீட்டினுள் விழுந்தாள் அவள். ஒரு நாய் வேகமாக அவளை நோக்கிப் பாய்ந்தது. பயத்தால் அலறக் கூட முடியாமல் தோற்றுப் போய் நிலை குலைந்தாள் வர்த்தினி.

    கிங்! பீ ஸைலண்ட். அப்படியே இரு! என்று வீட்டினுள் இருந்து ஒரு கடுமையான ஆண் குரல் கேட்டது.

    அந்தக் குரலைக் கேட்டவுடன் அந்த நாய் ஏதும் செய்யாமல் அவளை உற்றுப் பார்த்தது. நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அவளையே உற்றுப் பார்த்த அந்த உயர்ஜாதி நாயைக் கண் இமைக்காமல் பார்த்தபடி இருந்தாள் அவள்.

    தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, ‘ஹலோ கிங்’ என்று சொல்லியபடியே நாயை நோக்கி மெதுவாகக் கை நீட்டினாள்.

    அந்த நாய் அவளை உற்றுப் பார்த்தது. அதன் வால் வேகமாக ஆடியது. நாக்கால் அவள் கையை லேசாக நக்கியது அது.

    வர்த்தினியின் முகத்தில் நிம்மதி ரேகைகள் பரவின. சில நொடிகள் முன்பு தான் இந்த நாயைப் பார்த்து எப்படிப் பயந்தோம் என்று நினைத்துப் பெருமூச்சுப் பிறந்தது அவளிடமிருந்து.

    கிங்... உட்கார், ப்ளீஸ்! என்றாள் நாயின் கண்களைப் பார்த்து. அந்த நாய் சமர்த்தாக அவள் அருகே உட்கார்ந்தது. வாலைச் சுருட்டிக் கொண்டு, காதுகள் அடங்கி, அது அடக்கமாக உட்கார்ந்து இருப்பதைக் கவனித்தாள் வர்த்தினி.

    காலடிச் சத்தம் கேட்கத் தலை நிமிர்ந்து பார்த்தாள் அவள். அந்தப் புதியவனின் தோற்றம் அவளைக் கலவரப்படுத்தியது.

    கடுமையான முகம், கோபம் கொப்புளிக்கும் கண்கள், கலைந்த கேசம் என்று அவன் தோற்றம் அவனுடைய முரட்டுத் தனத்தைப் பறைசாற்றியது.

    அவன் அணிந்திருந்த உடைகளும் முரட்டுத் தனமாகவே இருந்தன. ஒரு காட்டன் சட்டையும் ஒரு முரட்டு ஜீன்ஸும் அவன் கடுமையான தோற்றத்தை மேலும் முரட்டுத்தனமாகக் காட்டின.

    யார் நீ? ஏன் இங்கே வந்தாய்? என்று குரைத்தான் அவன்.

    வர்த்தினிக்குப் பயத்தில் உதடு ஒட்டிக் கொண்டது. வாயிலேயே வார்த்தைகள் சிக்கின. கண்ணில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.

    கேட்கிறேனே... காதில் விழவில்லை.

    நான்... நான் தெரியாமல்... இங்கே... மழை ரொம்பப் பெய்கிறது... என்று ஏதோ உளறினாள்.

    வார்த்தைகள் கோர்வையாக வராமல் சதி செய்தன.

    பொய் சொல்லாதே... ஏன் இங்கே வந்தாய்?

    நான்... நான் பொய் சொல்லவில்லை.

    மூடு வாயை... உன் போன்ற பெண்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

    நான் ஏதோ ஞாபகத்தில் எனக்கே தெரியாமல் மழையில் இந்த இடத்திற்கு வந்து விட்டேன். நான் ரொம்ப நேரமாக நடந்து வந்ததில் கால் ரொம்ப வலிக்கிறது.

    ப்ளீஸ் மழை விட்ட பின்பு நான் போய் விடுகிறேனே! என்று எப்படியோ திணறிச் சொல்லி முடித்தாள் வர்த்தினி.

    ஓ... அவ்வளவு தைரியமா? நான் யார் என்று தெரியுமா? நான் சிறையில் இருந்து தப்பி வந்த கைதி. என்ன குற்றம் செய்திருப்பேன் சிறைக்குச் செல்ல என்று யோசிக்கிறாயா...?

    நான் ஒரு கொலையாளி... நான் பல பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டு இருக்கிறேன்... சிறைக்குச் சென்ற நான் அங்கே இருந்த கைதிகள் உதவியோடு அங்கிருந்து தப்பி வந்தேன்.

    என்னைப் பார்... கொலையாளி போல் தெரிகிறதா? தெரிகிறதுதானே! என்று உறுமியபடி அவள் அருகே வந்தான்.

    வர்த்தினியின் கண்கள் பயத்தால் ஒரு நொடி படபடத்தன. தன்னைச் சமாளித்துக் கொண்டாள் அவள்.

    எனக்கு ரொம்ப சோர்வாக இருக்கிறது. நேற்று இரவு சாப்பிட்டேன். காலையில் என் பாட்டி இறந்து விட்டார்கள்.

    அதற்குப் பின்பு... என்று சொல்ல முடியாமல் குரல் உடைந்தது.

    தன்னை நிதானப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

    "நீங்கள் எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் பரவாயில்லை. மழை கொஞ்சம் நின்ற பின் போய் விடுகிறேன். பசிக்குக் காய்ந்த ரொட்டி, பிஸ்கெட் என எது இருந்தாலும் பரவாயில்லை.

    ப்ளீஸ் கொடுங்கள்... ரொம்பப் பசிக்குது.

    ஏய்... ஏன் இப்படி உயிரை வாங்குகிறாய்? எனக்குக் கொடிய தொற்று நோய் உள்ளது.

    "ஸ்வைன் ப்ளூ காய்ச்சல் மாதிரி ஒன்று என்னைத் தாக்கி உள்ளது.

    என் மூச்சுக்காற்றுப் பட்டாலே போதும். அது உனக்கும் வந்துவிடும். அதனால்தான் நான் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து இதில் இருக்கிறேன்.

    போ... இப்பொழுதாவது... என்று அவன் கத்தினான். அவன் கத்துவதைத் தொடர்ந்து ஒரு இருமல் அவனிடமிருந்து வெளிப்பட்டது. அந்த இருமல் சத்தம் தீவிரமாக இருந்தது.

    நன்றாக நடிக்கிறான் என்று நினைத்தாள் வர்த்தினி.

    ஆனால் அவன் முகம் வெளுத்துப் போய், பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அடக் கடவுளே! நிஜமாகவே இவனுக்கு உடம்பு சரி இல்லை போல் தெரிகிறதே என்று பதறினாள்.

    அவள் மனஓட்டத்தை அறிந்து கொண்டவன் போல் அவன் அவளை உற்றுப் பார்த்தான்.

    போ... இங்கிருந்து... நான் என்ன சொன்னால் நீ நம்புவாய்? நான் என்ன சொன்னால் நீ என்னைக் கெட்டவன் என்று புரிந்து கொண்டு இங்கிருந்து ஓடுவாய்? என்று உறுமினான்.

    நடுங்கும் உதட்டைப் பற்களால் அழுந்தக் கடித்தாள் அவள். இதற்கு மேல் இங்கே இருக்க வேண்டாம் என்று உள்ளுணர்வு சொல்லக் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி கதவை நோக்கிச் சென்றாள் வர்த்தினி.

    வெளியே பேய்க் காற்றும் அடை மழையும் அவளை எதிர் கொண்டன.

    ஒரு வேளை நானும் பாட்டி போன இடத்திற்குப் போய் விடுவேன் போல. அதற்குத் தான் இதெல்லாம் நடக்கிறதா என யோசித்தபடி மழை நீரில் இறங்கினாள்.

    கொஞ்ச தூரம் நடந்து இருப்பாள். அதற்கு மேல் நடக்க வழியில்லாமல் ஒரு பெரிய மரம் சாலையில் விழுந்து கிடந்தது. நான் இங்கேயே இரவு முழுவதும் இருக்க வேண்டியதுதானா என அஞ்சினாள் வர்த்தினி.

    ஒரு நாய் குரைக்கும் சத்தம் தொலைவில் கேட்டது. சிறிது நேரம் கழித்து அது அவள் அருகில் கேட்டது. திரும்பினாள் அவள்.

    கிங்... நீ ஏன் இங்கே வந்தாய்? கிங் எனும் நாய் எந்தப் பதிலும் சொல்லாமல் பல்லால் அவள் உடையை இழுத்தது.

    கிங்! நான் வரலை. அவருக்குப் பிடிக்கவில்லை.

    அவள் சொன்னதைச் சட்டை செய்யாமல் கிங் அவளை மீண்டும் வீட்டினுள் இழுத்துச் சென்றது.

    வீடு அமைதியாக இருந்தது. அவளைத் திட்டித் தீர்த்துப் பயமுறுத்திய அந்தப் புண்ணியவானைக் காணவில்லை.

    ஒரு வேளை அவன் உடல்நிலை நிஜமாகவே ரொம்ப மோசமாகி விட்டதோ. இருக்கலாம் எனப் பதறினாள் அவள்.

    கிங்... உன் எஜமானர் எங்கே? அவருக்கு உடம்பு ரொம்ப மோசமாகி விட்டதா?

    அதனால்தான் என்னை நீ அழைத்து வந்தாயா? சொல்லு, எங்கே அவர்?

    அந்த வாயில்லாப் பிராணி ஏதும் செய்யாமல் வாலை மட்டும் ஆட்டியது.

    கிங்... சொல்லு. அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதா? காட்... உயிர் என்பது எவ்வளவு விலைமதிப்பில்லாத ஒன்று. சீக்கிரம் சொல்.

    அவருக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், பாவம் நீ! உன்னைப் பார்த்துக் கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள்! என்று ஆதரவாக அதன் தலையை வருடினாள்.

    எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நீ இன்று இரவு மட்டும் இங்கே தங்கலாம்... அதற்கு மேல் ஒரு நொடி கூட நீ இங்கே இருக்கக் கூடாது! என்று உள்ளே இருந்து அவன் குரல் கேட்க, நிம்மதிப்

    Enjoying the preview?
    Page 1 of 1