Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthiya Raagam
Puthiya Raagam
Puthiya Raagam
Ebook134 pages55 minutes

Puthiya Raagam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சென்னையை சேர்ந்த நந்தினி மன மாற்றத்திற்காக வேலை நிமித்தமாக காசிக்கு செல்கிறாள். அங்கு நிறைய திருப்பங்களை அவள் சந்திக்கிறாள்.

கேப்டன் சுஷாந்த் இதற்கு முக்கிய காரணம். கேப்டனுக்கும் அவளுக்கும் இடையே நடக்கும் மௌன யுத்தம் எப்படி முடிகிறது?

காசியில் பயணிக்கலாம் வாருங்கள்.

இந்த நாவலைப் பற்றிய உங்கள் விமர்சனங்களை பகிர்ந்து கொள்ளவேண்டிய இமெயில் முகவரி

Lakshmisudha2010@gmail.com or lakshmisudha2010@yahoo.com

அன்புடன்

லட்சுமி சுதா

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580140908329
Puthiya Raagam

Read more from Lakshmi Sudha

Related to Puthiya Raagam

Related ebooks

Reviews for Puthiya Raagam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthiya Raagam - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    புதிய ராகம்

    Puthiya Raagam

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 1

    "சின்னச்சின்ன

    மழைத்துளிகள்

    பூமியை

    நனைகின்றன...

    வானம்

    கருணை

    உள்ளது...

    பூமிக்கு

    மழையை

    விட்டுக்

    கொடுக்கிறது..

    கொடைவள்ளல்

    வானம்

    தான்.

    என்னுடைய

    வறண்ட

    பாலைவனத்தில்

    உயிர்

    மழையாக

    நீ

    வந்த

    பின்பு

    வேறென்ன

    வேண்டும்

    எனக்கு?"

    ***

    கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ஏசி வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தாள் ந்தினி.

    சென்னையிலிருந்து காசிக்கு இதைக்காட்டிலும் விரைவாக செல்லும் ட்ரெயின் ஏதும் இல்லை.

    திங்கட்கிழமை தான் யுனிவர்சிட்டியில் ஜாயின் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமைசாயங்காலம் ட்ரெயினில் ஏறினா ஞாயிற்றுக்கிழமை காலையில் வாரணாசி போய்விடலாம். காசிக்கு போவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    பிராப்தம் இருக்கவேண்டும் என்று அப்பா வாய்க்கு வாய் சொன்னது அவள் மனதில் ஓடியது. என் போன்ற ஆட்கள் காசிக்குப் போனால் என்னோட பாவம் காசி நகரத்திற்கு வந்திட போகுது. என்னோட துரதிருஷ்டம் அந்த நகரத்துக்கு  ஒட்டிக்க போகிறது என்று நினைத்துக்கொண்டாள்.

    தன் நிலையை நினைக்கும் போது கண்கள் கலங்கின. அப்பா தவறி ஒரு மாதம் ஆகிவிட்டது. குற்ற உணர்வில் மனமுடைந்து போனதால்தான் அப்பா சீக்கிரமாக தெய்வத் திருவடிகளை அடைந்து விட்டார் போல. என்னுடைய வாழ்க்கையில் எந்த உறவும் சாசுவதம் இல்லை. அது நன்றாக தெரிகிறது.

    'நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமமே' என்ற திருமங்கை ஆழ்வார் பாசுரத்தை அப்பா தினமும் பக்தியுடன் பெருமாள் மீது பிரேமையோடு பாடுவது அவள் நினைவுக்கு வந்தது. அப்பா மாதிரி இருந்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது போல.

    'எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான். எல்லோருக்கும் அவன் படி அளப்பான்.' என்ற அதீதமான நம்பிக்கை சில நேரங்களில் தேவை. ஏதோ ஒரு சக்தி நம்மை பார்த்துக்கொள்ளும். நம்மை கவனித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருந்தால் போதும் மனதில் நிம்மதி பிறக்கும் போல. நான் யாருக்குமே எந்த கெடுதலும் செய்யவில்லை பின்பு ஏன் எதற்கு இந்த மாதிரி ஒரு சோதனை? போன ஜென்மத்தின் கர்மவினை போல. அதனால்தான் என்னுடையது பீடை ஜாதகமாக துக்கிரி ஜாதகமாக அமைந்து விட்டது போல. சுய பச்சாதாபத்தில் அவள் கண்கள் கலங்கின. யோசனையில் மூழ்கி இருந்தவளை கலைத்தது டிடிஆர் இன் குரல்.

    மேடம் டிக்கெட்

    இதோ என்று அவள் கைப்பையில் இருந்த பர்சில் இருந்து ஆதார் கார்டை எடுத்து காட்டினாள்.

    தேங்க்யூ என்றபடி இடத்தைவிட்டு அகன்றார் அவர். சுயபச்சாதாபதற்கு இடம் கொடுக்கக் கூடாது. இல்லாவிட்டால் கங்கைக்கு போட்டியாக என் கண்ணில் இருந்து நீர் பெருகிக் கொண்டே இருக்கும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

    குண்டூர் ஸ்டேஷன் வந்துவிட்டது போல ட்ரெயின் நிற்கிறதே என்று நினைத்துக் கொண்டாள் அவள். அவள் இருந்த  கம்பார்ட்மெண்டில் அவளை தவிர சென்னையில் யாரும் ஏறவில்லை. இங்கே யாராவது ஏற வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போதே ஒரு சர்தார்ஜி அவளுடைய கம்பார்ட்மெண்டில் ஏறினார். ஆறடி உயரத்தில் வயது ஆன போதிலும் கம்பீரமாக இருந்தார் அவர்.

    நமஸ்தே பேட்டி என்றார் புன்னகைத்தபடியே அவளைப் பார்த்து.

    நமஸ்தே என்றாள் இவளும் லேசான புன்முறுவலுடன். அவர் தன்னை பேட்டி என்றழைத்தது அவள் மனதை நெகிழச் செய்தது.

    ஹிந்தி பிரச்சார் சபாவில் ஹிந்தி முறைப்படி கற்றுக்கொண்டு பிரவீன் உத்தாரத் பரிட்சையில் அவள் தேர்ச்சி பெற்றெடுக்கிறாள். ஹிந்தி டியூசன் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தாலும் அவளுடைய ஹிந்தி அப்டேட் ஆக இருந்தது.

    சாப்பிட்டாச்சா பேட்டி என்றார் அவர் ஆங்கிலத்தில்.

    ஏகாதேசி. அதனால் விரதம். நான் எதுவும் சாப்பிட மாட்டேன் என்றாள் அவளும் ஆங்கிலத்தில்.

    ஓ அப்படியா உங்களை பார்க்க வைத்துக் கொண்டு சாப்பிட எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்றார் அவர்.

    அவள் லேசாக புன்னகை செய்தாள்.

    பரவாயில்லை நீங்க சாப்பிடுங்க. நான் படுத்து தூங்க போகிறேன். குட்நைட்

    ஓ சரி பேட்டி. குட் நைட். நான் தூங்க எப்படியும் நேரம் ஆகும் இந்த ஒரு லைட் மட்டும் நான் போட்டுக் கொள்கிறேன் பரவாயில்லை தானே

    உங்களுக்கு எது சௌகரியமோ அதை செய்யுங்கள்.

    உங்களைப்போல எல்லா மனிதர்களும் இருந்து விட்டார்கள் என்றால் நாட்டில் பிரச்சனையே வராது சண்டை சச்சரவு இருக்காது அவள் லேசாக புன்னகைத்தது தலையசைத்தாள்.

    பின்பு அவள் சீட்டின் மேல் பெட் சீட்டையும் கம்பளியையும் பரப்பினாள். அதில் படுத்துக் கொண்டாள் நந்தினி.

    வீட்டில் பழக்கமான இடத்தில் படுத்தாலே தூக்கம் வராது. ட்ரெயினில் நிச்சயமாக வராது என்று அவளுக்கு தெரியும். கண்மூடி மனதை அமைதிப்படுத்த முயற்சி செய்தாள்.

    அத்தியாயம் 2

    "முதலும்

    நீ…

    முடிவும்

    நீ…

    ஆதியும்

    நீ

    அந்தமும்

    நீ

    என்

    நம்பிக்கையும்

    நீ…

    என்

    பயமும்

    நீ…

    என்

    கனவும்

    நீ

    என்

    வெளிச்சமும்

    நீ…

    என்

    வாழ்வின்

    தொடக்கமும்

    நீ…"

    ***

    இரவெல்லாம் தூங்காததால் காலையில் கண் அசந்தாள் நந்தினி. ட்ரெயின் பலத்த குலுக்கலுடன் நின்றது. சட்டென விழிப்பு வந்தது அவளுக்கு. ஏசி கம்பார்ட்மெண்டில் பெரும்பாலும் வியாபாரிகள் யாரும் வர மாட்டார்கள். காப்பி டீ ஏதும் வராது. ஆனால் அப்பொழுது காப்பி டி என்று யாரோ ஒருவரின் குரல் அவள் காதில் கேட்டது.

    உடனே எழுந்து உட்கார்ந்தாள் அவள். முதல்நாள் எதுவும் சாப்பிடாததால்

    பசி வயிற்றை கிள்ளியது.

    காபியா டீயா மேடம் என்றார் காப்பி

    Enjoying the preview?
    Page 1 of 1