Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Eppozhuthum Un Ninaivu!
Eppozhuthum Un Ninaivu!
Eppozhuthum Un Ninaivu!
Ebook177 pages1 hour

Eppozhuthum Un Ninaivu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பயணக் குழுவில் எதிர்பாராத விதமாக பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அக்ஷிதாவிற்கு தாவரவியல் படிப்பு படித்து இருந்தாலும் ஆள் மாறாட்டம் செய்து அத்தைக்கு பதிலாக பயணக் குழுவில் வேறு வழி இன்றி தன்னை இணைத்து கொண்டு செல்வதில் அவளுக்கு விருப்பம் இல்லை. குழுவின் தலைவன் ஆஷிஷ் இவளிடம் சிடுசுடுவேன இருக்கிறான். பூக்களின் பள்ளத்தாக்கில் அவர்கள் குழு மேற்கொள்ளும் பயணம் வெற்றி அடைகிறதா? படியுங்கள்.....
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906581
Eppozhuthum Un Ninaivu!

Read more from Lakshmi Sudha

Related to Eppozhuthum Un Ninaivu!

Related ebooks

Reviews for Eppozhuthum Un Ninaivu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Eppozhuthum Un Ninaivu! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    எப்பொழுதும் உன் நினைவு!

    Eppozhuthum Un Ninaivu!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 1

    வெண்ணிலா

    வானவீதியில்

    ஊர்வலம்!

    ............

    நட்சத்திரங்கள்

    புடை சூழ

    அதைப்

    பார்த்தவுடன்

    மனதில்

    உன்

    நினைவு!

    சாலையில்

    நீ

    தோழிகளுடன்

    நடந்து

    வந்து

    கொண்டு

    இருக்கிறாய்!

    ............

    பூமியில் நீ!

    ............

    வானில் நிலா!

    அக்ஷிதா கை நிறையக் கவர்களைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கஷ்டப்பட்டுப் படி ஏறி வந்தாள். மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை பவர் சப்ளை கிடையாது.

    அதனால் லிஃப்ட் வேலை செய்யாது. நல்லகாலம் சென்னையில் இருப்பதால் இது ஒரு சௌகரியம்... பவர் கட் இரண்டு மணி நேரம்தான்.

    வேறு எங்காவது என்றால் மூன்று இல்லை நான்கு மணி நேரம் கரெண்ட் இருக்காது... என்று நினைத்தபடியே பூட்டின் துவாரத்தினுள் சாவியைப் பொருத்திப் பூட்டை விடுவித்தாள்.

    கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவள், முதல் வேலையாகக் கவர்களைக் கீழே வைத்துவிட்டுக் குளியல் அறையினுள் நுழைந்தாள்.

    சில்லென்ற நீரில் முகத்தைக் கழுவினாள். புதுத்தெம்பு வந்தது போல் இருந்தது அவளுக்கு. டர்க்கி டவலால் முகம், கழுத்தைத் துடைத்துக்கொண்டு வந்தவள், தன் அறைக்குள் சென்றாள்.

    அங்கே இருந்த ஏ.ஸி. ரிமோட்டை எடுத்து ஏ.ஸி.யை உயிர்ப்பித்தாள். ஏ.ஸி.யின் குளிர்காற்று மேனியை இதமாக வருடியது.

    நாற்காலியில் உட்கார்ந்தவள், ஏ.ஸி.யின் இதத்தை அனுபவித்தாள். இந்த வசதிகள் எல்லாம் தனக்குக் கிடைப்பதற்குக் காரணமாக இருக்கும் அத்தை சந்திராவை நினைத்து அவள் மனம் நெகிழ்ந்தது.

    அத்தை மட்டும் இல்லாவிட்டால் தன் வாழ்க்கை என்னவாக ஆகி இருக்கும்? நினைக்கும் பொழுதே அவள் உடல் அதிர்ந்தது.

    கார் விபத்தில் அப்பாவும், அம்மாவும் சட்டென இறந்துபோன பொழுது அக்ஷிதாவிற்கு வயது பதினாறு.

    அப்பாவும், அம்மாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அலுவலக வேலை சம்பந்தமாக இருவரும் மும்பை சென்றனர்.

    அங்கே அலுவலக வேலை முடிந்த பின்பு வழக்கம்போல் கெஸ்ட் ஹவுஸிற்குக் காரில் பயணம் செய்யும் பொழுதுதான் விபத்து ஏற்பட்டது.

    கார்மேல் எதிரில் வந்த லாரி வேகமாக ஒரு வளைவில் மோத, கார் உருத்தெரியாமல் போனது. டிரைவர் உட்பட எல்லோரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துவிட்டனர்.

    அக்ஷிதாவால் நடந்ததை நம்பவே முடியவில்லை. அப்பாவின் அலுவலக மானேஜர் கிரிதரன் வீட்டிற்கு வந்து விஷயத்தைச் சொன்ன அந்தக் 'கறுப்புத் திங்கட்கிழமை' அவள் வாழ்விலேயே மறக்க முடியாத ஒன்று.

    பிரமை பிடித்தவள் போல் இருந்தாள் அவள். கிரிதரன் உடனடியாக, அவள் அத்தையைத் தொடர்புகொண்டு, அவர்களை உடனே வரவழைத்தார்.

    சென்னையிலேயே அதிர்ஷ்டவசமாக அன்று அத்தை இருந்ததால், அவர்களால் உடனேயே வர முடிந்தது. மளமளவென எல்லா வேலைகளையும் முன்நின்று நடத்தி முடித்த அத்தை, கையோடு அக்ஷிதாவையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    அப்பா அம்மாவுடன் தங்கி இருந்த வீடு வாடகை வீடு என்பதால், காலி செய்வதில் எந்தப் பிரச்சனையும் எழவில்லை.

    அவள் கல்லூரி படிப்பதற்கு உதவி செய்தது அத்தையே. பெற்றோர்களின் பெயரில் இருந்த வங்கிக்கணக்கின் பணம் அவசரத்துக்குக் கிடைக்கவில்லை.

    சட்ட சம்பந்தமான விஷயங்கள் முடிந்த பின்புதான் பணம் அவள் பெயரில் மாற்ற முடியும் என்பதை வக்கீல் திட்டவட்டமாகச் சொல்லியது அவள் நினைவுக்கு வந்தது.

    அத்தை தன் தொழிலை நேசித்த பொழுதும், தன்னிடம் அன்பைச் செலுத்தத் தவறியதே இல்லை என்பதை நினைத்தபொழுது, அவள் கண்கள் அவளை அறியாமலே கலங்கின.

    தன் தொழில் மேல் உள்ள காதலால் அத்தை திருமணமே செய்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்தபொழுது அத்தை மேல் இருந்த மரியாதை அதிகமானது.

    ஆபத்து நிறைந்த காடுகள், மலைகள் இவற்றில் உள்ள மரம், செடி, கொடிகளை ஆராய்வதே அத்தை சந்திராவின் வேலை.

    பாட்டனி ரிசர்ச் அஸிஸ்டெண்டாக வேலையில் சேர்ந்தவர் 'சயின்டிஸ்ட்' என்ற கவுரவம் கிடைத்த பின்பு கூட வேலையில் இன்னும் அதே டெடிகேஷன், சின்ஸியாரிட்டியுடன் பணியாற்றுவதே அவரின் சிறப்பு.

    அக்ஷிதாவும் கல்லூரியில் தாவரவியல் சம்பந்தப்பட்ட கோர்ஸை எடுத்து இருந்ததால், இருவரும் மணிக்கணக்காகச் செடிகளைப் பற்றிப் பேசிய வண்ணம் இருப்பார்கள்.

    ஆராய்ச்சி சம்பந்தமாக அத்தை ஆப்பிரிக்கா, ஐரோப்பா என வெளிநாட்டிற்குச் செல்லும்பொழுது, அவருக்குப் பயணத்திற்குத் தேவையானதை எல்லாம் அக்ஷிதாதான் பெட்டியில் அடுக்குவாள்.

    நீயும் என்னோடு வாயேன். என்னுடன் வந்தால் புது இடங்களைப் பார்த்த மாதிரி இருக்கும்.

    தாவரவியல் பற்றி நிறைய அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... என்று அத்தை சொல்லும்பொழுது எல்லாம் அதைத் தீர்மானமாக மறுத்து விடுவாள்.

    அவள் மனதில் பதிந்து இருப்பதுகூடத் தன் மறுப்பிற்குக் காரணமாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டாள் அவள்.

    யோசனையில் மூழ்கி இருந்தவளைக் கலைத்தது குயில் போல ஒலித்த கைபேசி ஓசை. யாராக இருக்கும் என்று யோசித்தாள்.

    காரணம், கைபேசியின் திரையில் தெரிந்தது ஒரு புதிய நம்பர்.

    ஹலோ... அக்ஷிதா ஸ்பீக்கிங்.

    அக்ஷிதா... நான் ரஞ்சன் பேசறேன்.

    சொல்லுங்க அங்கிள்!

    ம்... சந்திராவுக்குச் சின்ன விபத்து.

    வாட் அங்கிள்? என்று அலறினாள் அவள்.

    ம்... பதட்டப்படாதே. சின்ன விபத்துதான். பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை.

    எ... என்ன ஆச்சு அங்கிள்?

    "சந்திரா யுனிவர்ஸிடியில் க்ளாஸ் எடுத்து முடித்த பின்பு க்ராஸ் செய்வதற்காக ரோட்டின் ஓரத்தில் நின்றுகொண்டு இருந்தாள்.

    அப்பொழுது டூ-வீலரில் வந்த ஒருவன் தெரியாமல் வேகமாக அவள் கால் மேல் வண்டியை ஏற்றிவிட்டான் போல...

    ஓ... காட்! அத்தை இப்ப எப்படி இருக்காங்க? சொல்லுங்க அங்கிள்.

    நத்திங் டு வொரி அக்ஷிதா. அதிர்ச்சியில் அத்தை மயங்கி விழுந்து விட்டாள் போல...

    அப்புறம்... எப்படி... எப்படி... இப்ப ஹாஸ்பிடலில் தானே இருக்காங்க?

    "யெஸ்... அந்த டூ-வீலரில் வந்தவனே அவர்களை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டான்.

    அப்புறம் அத்தையின் கைப்பையில் இருந்த விசிட்டிங் கார்டைப் பார்த்து எனக்குப் போன் செய்தான்.

    ம்... பரவாயில்லை. அட்லீஸ்ட் அதையாவது செய்தானே அந்தப் புண்ணியவான்!

    யெஸ்... கெட்டதிலும் ஒரு நல்லது அதுதான். காலில் ஃப்ராக்சர் என்று டாக்டர்ஸ் சொல்லி விட்டார்கள்.

    அடக் கடவுளே!

    ம்... அதனால் சந்திரா பெட் ரெஸ்ட்டில்தான் இருக்க வேண்டும் போல...

    சே... அத்தை இதை எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறார்கள்?

    ம்... அதுதான் எனக்கும் யோசனையாக இருக்கிறது!

    எவ்வளவு நாள் அங்கிள் பெட் ரெஸ்ட்டில் இருக்க வேண்டும்?

    ம்... அதை நிச்சயமாகச் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் பேசிக் கொள்வதை வைத்துப் பார்க்கும்பொழுது அட்லீஸ்ட் ஒரு மாதம் ஆகும் என நான் நினைக்கிறேன்.

    சே... அத்தை இதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.

    மறுமுனையில் ரஞ்சனின் சிரிப்புச் சத்தம் அவளுக்குக் கேட்டது.

    யெஸ்... யூ ஆர் ரைட். இப்பவே ஹாஸ்பிடலை உண்டு இல்லை என்று ஒரு வழி செய்துவிட்டாள் அவள்.

    "ம்... புரிகிறது. அவர்களால் சாப்பிடாமல், தூங்காமல் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இருக்கமுடியும்.

    "ஆனால் காடுகளுக்குப் போய்ப் பூக்களையும் செடிகளையும் பற்றி ஆராய்ச்சி செய்யாமல் இருக்கவே முடியாது.

    அது அவர்கள் ரத்தத்தில் ஊறிவிட்டது என்று நினைக்கிறேன். இட் இஸ் ஹெர் பேஷன்.

    "ம்... ஆமாம்... ஏற்கெனவே டாக்டர்ஸிடம் அவள் சண்டை போட்டு விட்டாள்.

    'என்னால் இந்த மாதிரி ஹாஸ்பிடலில், பெட்டில் படுத்துக்கொண்டு நேரத்தை வீணடிக்க முடியாது. அதனால் என்னைச் சீக்கிரமாக டிஸ்சார்ஜ் செய்து விடுங்கள்,' என்று நச்சரித்துக்கொண்டு இருக்கிறாள். ஷி இஸ் வெரி டஃப்.

    ஆமாம்... அத்தைக்கு இந்த மாதிரி இடமெல்லாம் ஸெட்டாகவே ஆகாது. எந்த ஹாஸ்பிடலில் அட்மிட் ஆயிருக்காங்க?

    ம்... பாலாஜி நர்சிங் ஹோம்.

    கிண்டியில் இருக்கே... அதுதானே!

    யெஸ்... அதுதான். ஆக்ஸிடெண்ட் கேஸ் என்பதால் அங்கே அட்மிட் செய்யும்படி ஆகிவிட்டது.

    சரி... நான் இப்ப அங்கே புறப்பட்டு உடனே வரேன் அங்கிள்.

    ம்... அக்ஷிதா... இப்ப நீ வர வேண்டாம்.

    ஏன் அங்கிள்?

    மோஸ்ட்லி சந்திராவை இன்னிக்கு டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள்.

    அதனால் அவள் வீட்டிற்கு வரும்பொழுது நீ அங்கு இருந்தால் நல்லது.

    ஓ... அப்படியா அங்கிள். சரி... சீக்கிரமாக வந்துவிடுங்கள்... ப்ளீஸ்! என்றவளின் குரல் உடைந்தது.

    ரஞ்சனிடமிருந்து பெருமூச்சுப் பிறந்தது.

    அத்தியாயம் 2

    பூக்கள்

    பூத்துக்

    குலுங்குகின்றன

    சோலையில்!

    ............

    சலசலக்கும்

    அருவி

    அருகில்!

    ............

    பச்சைக்

    கம்பளமாய்

    விரிந்துள்ள

    புல்வெளி

    மேல்

    கிரீடம்

    போல்

    பனித் துளிகள்!

    ............

    எல்லாமே

    அழகாகத்

    தெரிகின்றன

    பெண்ணே!

    உன்னாலே

    Enjoying the preview?
    Page 1 of 1