Ennodu Vaa Nila
()
About this ebook
மதுமிதா ஒரு அழகான கல்லூரி பெண். இவளுடைய அப்பா இறந்ததால் குடும்பத்தை கவனிக்க வேண்டியிருந்ததால் பேபி-ஸிட்டிங்க்காக நிஷாந்தின் வீட்டிற்க்கு வேலைக்காக செல்கிறாள். அங்கு இருவருக்குமிடையே எவ்வாறு அன்பு மலர்கிறது? அந்த அன்பு மலரை இருவரும் சூடுவார்களா? என்பதைப் பார்ப்போம்.
Read more from Lakshmi Sudha
Natchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Mayakkiya Poongatre Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Oru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Pookkal Paadum Boopalam... Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Puthiya Raagam Rating: 5 out of 5 stars5/5Thullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Saaral Sollum Sangeetham! Rating: 5 out of 5 stars5/5Malargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsPookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Urugiyathey En Ullam! Rating: 0 out of 5 stars0 ratingsSagiye Snegithiye Rating: 0 out of 5 stars0 ratingsRoja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5Azhagiya Maalaiyil Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsMayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Pookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Kaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Mazhai Kaalam Rating: 4 out of 5 stars4/5Manathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsUn Thanimai Sugamaa? Rating: 5 out of 5 stars5/5Velicha Poove Vaa Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5En Swasakaattru Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Kaatrinile Varum Thendral Rating: 4 out of 5 stars4/5Poo Mazhai Ennul...! Rating: 0 out of 5 stars0 ratingsPaniyil Nanaintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ennodu Vaa Nila
Related ebooks
Thanjam Eppothadi Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsTholai Thoora Velicham Nee! Rating: 4 out of 5 stars4/5Nilavu Thoongum Neram! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Devathai Vanthu Vittal Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Mayakkiya Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Nee En Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsSuriyan Theyumo? Rating: 0 out of 5 stars0 ratingsKuyilosai Kettayo! Rating: 0 out of 5 stars0 ratingsEn Swasakaattru Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsPerazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Puthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Anbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Devathai Nee Ena Kandean! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogiraai Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsNin Vasamaathal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsMounam Un Mozhiya? Rating: 0 out of 5 stars0 ratingsPon Maalai Pozhuthu Rating: 2 out of 5 stars2/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsMargazhi Maatha Nila! Rating: 4 out of 5 stars4/5Eppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5Kanavu Kavithai Nee Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 3 Rating: 5 out of 5 stars5/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Nenjamellam Neeyadi Penney! Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanavu Nee Thaanadi..! Rating: 3 out of 5 stars3/5
Reviews for Ennodu Vaa Nila
0 ratings0 reviews
Book preview
Ennodu Vaa Nila - Lakshmi Sudha
https://www.pustaka.co.in
என்னோடு வா நிலா!
Ennodu Vaa Nila
Author:
லட்சுமி சுதா
Lakshmi Sudha
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
முன்னுரை
வாங்க... பேசலாம்.
ஹலோ! நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வாழ்க்கையை எப்படி நடுநிலையில் நடத்துவது என்பதை விளக்கும் ஓர் அழகான கதை.
புத்தரின் போதனைகளைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டு இருந்தான் ஓர் இளவரசன். அவன் பெயர் ஷ்ரோனா.
புத்தரின் சீடராக வேண்டும் என்பது அவனின் ஆசை. அவன் ராஜபோக வாழ்க்கையில் திளைத்து, வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வந்தவன்.
புத்தர் அவன் நாட்டிற்கு வந்தார். அவன் புத்தரைச் சந்தித்து, அவன் விருப்பத்தைக் கூறினான். புத்தர் அவனிடம் சந்நியாசி ஆவது அவ்வளவு சுலபம் இல்லை என்று விளக்கிக் கூறினார்.
தங்கத் தேரில் பவனி, அரண்மனையில் அழகிய பெண்களுடன் உல்லாச வாழ்க்கையை அனுபவித்த உன்னால் துறவறம் மேற்கொள்ள முடியுமா?
என்று வினவினார்.
நான் முடிவு எடுத்தால் எடுத்ததுதான்,
என்று அவன் சொன்னதால், அவனை அவர் சேர்த்துக்கொண்டார்.
ஷ்ரோனா சந்நியாசியான பின்பு, அடுத்த நாள் புத்தர் எதிர்பார்த்தபடிதான் அவர் நடந்துகொண்டார். எல்லா சந்நியாசிகளும் குறைந்தபட்ச ஆடைகள் அணிந்து இருந்தனர்.
ஆனால் ஷ்ரோனா, எந்த ஆடையும் இன்றி நடந்தார். எல்லோரும் சாலையின் ஓரத்தில் நடந்ததால், இவர் சாலையை விட்டு, கல்லிலும், முள்ளிலும் நடந்தார்.
மற்ற சந்நியாசிகள் மர நிழலில், உச்சி வேளையில் இளைப்பாறும் பொழுது, இவர் வேண்டும் என்றே சூரிய வெப்பத்தில் நடப்பார்.
தொடர்ந்து இந்த மாதிரி செய்ததால், அவர் உடல் உருக்குலைந்தது. அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நடப்பதற்குக்கூட அவர் சிரமப்பட்டார்.
இதைப் பார்த்த புத்தர், நள்ளிரவு அவர் இடத்திற்குச் சென்றார். ஷ்ரோனாவை எழுப்பினார்.
நீ சித்தார் வாசிப்பதில் வல்லவன் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அது உண்மைதானே...?
ஆமாம் குருவே! உங்களுக்கு ஏன் இந்த வேளையில் இந்த சந்தேகம்?
ம்... சித்தாரின் தந்திகள் ரொம்ப இறுக்கமாக இருந்தால், இசை எப்படி இருக்கும்?
இசை, இனிமையாக இருக்காது.
சரி... தந்திகள் ரொம்பத் தொய்வாக இருந்தால்...?
அப்பவும் இசை இனிமையாக இருக்காது.
ம்... அப்படி என்றால், இரண்டுக்கும் இடைப்பட் நிலையில் தந்திகள் இருந்தால்தான் நாதம் இனிமையா இருக்கும் என்று ஒத்துக்கொள்கிறாய்தானே!
ஆமாம்...!
வாழ்க்கையும் அப்படித்தான். சந்நியாசியாக இருந்தாலும் நடு வழிப்பாதையைத் தேர்ந்தெடு. மற்ற சந்நியாசிகளைப் போல் இரு!
என்றார் புத்தர்.
இந்த வழிமுறையை உறவு முறைகளுக்கும் பின்பற்றலாம். எந்த உறவு முறையும் தொடங்கும்போது இருக்கும் ஆர்வம் பின்னால் குறைந்து போவதற்கு நடு வழியைப் பின்பற்றாததே காரணம்.
திருமணம் ஆன புதிதில் தேவதை போல் தெரிந்த மனைவி, நாள் ஆக ஆகப் பிசாசாகத் தெரியக் காரணம் இதுவே.
குரு, சிஷ்யர் உறவு முறையைத் ‘தீயோடு’ ஒப்பிடுவர். தீயின் அருகே ரொம்ப நெருங்கிப்போனால் கை சுட்டுவிடும்.
ரொம்பத் தள்ளிப்போனால், தீயின் இதம் தெரியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில் இருந்தால் இதமாகக் குளிர் காயலாம்.
இது குரு, சிஷ்யன் உறவு முறையில் மட்டும் இல்லை, எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.
வாழ்க்கையைப் பயனுள்ளதாக, இனிமையானதாக வாழ வேண்டிய பொறுப்பு, நம் எல்லோருக்கும் உண்டு.
என் கதையைத் தொடர்ந்து படித்து விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்ளும் எல்லா வாசகர்களுக்கும் என் நன்றி!
இந்த நாவலுக்கும் உங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நட்புடன்,
லட்சுமி சுதா
lakshmisudha2010@yahoo.com
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
ஒரு
மாலைப்
பொழுது!
நிலவு
புறப்படும்
நேரம்!
…..
வானமெனும்
வீதியில்
உலா
வரும்
வேளை!
கோபித்துக்
கொண்டு
மறையும்
சூரியன்!
.....
உன்னை
நினைவுபடுத்துகிறது!
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் முதல் தளத்தில் வண்ண விளக்குகள் மின்னின.
அந்த ‘பார்ட்டி ஹாலின்’ முன்பு கார்பெட் மேல் பூக்களால் போடப்பட்டு இருந்த ரங்கோலி கோலம் விருந்தினர் கண்களுக்கு விருந்து அளித்தது.
ஹாலுக்கு வெளியே கும்பல் கும்பலாக, ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பேசிய வண்ணம் இருந்தனர்.
ஹாலின் வாசலை ஒட்டி இருந்த பெயர்ப் பலகையில், ‘மாஸ்டர் நிகில் பர்த்டே’ என்ற எழுத்துக்கள் விளக்கொளியில் தகதகவெனப் பொன்னிறமாக ஒளிர்ந்தது.
டேய்... இந்த ஹால்தானேடா...!
என்று தன் உடன் வந்த சிறுவனின் கைப்பிடித்து அழைத்தபடியே வந்தான் நிஷாந்த்.
ஆமாம் அப்பா... இங்கேதான் நிகில் பர்த்டே பார்ட்டி நடக்குது. இதோ பாருங்க... போர்டு தெரியுது... அதோ என் ஃபிரெண்ட் ராகேஷ்...
என்று சொன்னபடியே சட்டெனக் கையை விடுவித்துக்கொண்டு ஓடினான் சஞ்சய்.
ஏய்... வெயிட்...
என்று கத்தியபடியே அவனைத் துரத்திக்கொண்டு ஓடினான் நிஷாந்த்.
ஆனால் அதற்குள் சிறுவன் கூட்டத்தின் இடையே புகுந்து, புகுந்து சிட்டாக மறைந்துவிட்டான்.
‘சே! இப்படிக் கண் இமைக்கிற நேரத்தில் எப்படி இவனால மாயமா மறைய முடியுது...?’ அப்படின்னு அதிசயப்பட்டுக் கொண்டே ஹாலினுள் நுழைந்தான் நிஷாந்த்.
ஹாலில் ‘ஐயாம் எ பார்பி கேர்ள்’ பாட்டு ஒலித்துக் கொண்டு இருந்தது.
நாற்காலிகளில் பெற்றோரும், தாத்தா, பாட்டிகளும் அமர்ந்து இருந்தனர்.
மேல் தளத்தில் விளக்குகளுக்குப் போட்டியாக வண்ண வண்ணப் பலூன்கள் தொங்கவிடப்பட்டு இருந்தன. ஹாலின் முன்னால் இருந்த ஸ்டேஜில், ஒரு டேபிள் போடப்பட்டு இருந்தது.
அங்கே ஒரு கேக் வைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகே தொப்பி போட்ட ஹோட்டல் சிப்பந்தி ஒருவர் நின்றுகொண்டு இருந்தார்.
அவர் அங்கே இருப்பதால்தான் கேக் பிழைத்தது. இல்லாவிட்டால் இந்த வாண்டுகள் கேக்கை ஒரு வழி செய்து இருக்கும் என்று நினைத்தபடியே தனக்குத் தானே சிரித்துக்கொண்டான் நிஷாந்த்.
ஹாய் நிஷாந்த்... என்ன, தானா சிரிச்சுட்டு இருக்க...? என்னடா ஆச்சு?
என்று அவன் தோளில் கை பதித்தான் ராகவ்.
ஏய் ராகவ்... எங்க உன் சுட்டி பார்கவ்...?
என்றபடியே புன்னகைத்தான் நிஷாந்த்.
அதோ, அங்கே பார்... அவன் ஃபிரண்ட்ஸோட உடனே ஜோதியில் ஐக்கியமாகிவிட்டதை... சரி மச்சி... நீ என்னடா தானா சிரிச்சுட்டு இருக்க...?
ம்... இடுக்கண் வருங்கால் நகுக அப்படின்னு வள்ளுவர் சொல்லி இருக்கார்...
ஓஹோ... வள்ளுவர் காட்டிய பாதையில் நீங்க நடக்கிறீங்களோ...! டேய்... அப்படி என்னடா துன்பம் உனக்கு?
ம்... சஞ்சயை நினைத்தால்தான் கவலையா இருக்கு...
என்னடா ஆச்சு...? சஞ்சய் ரொம்ப ஸ்மார்ட் பாய் ஆச்சே!
ம்... அது என்னவோ சரிதான். ஆனால் அவனைப் பார்த்துக்கொள்ள சரியான ஆள் கிடைக்க மாட்டேங்குது!
ஓ...! சஞ்சய் பாட்டி உன்னோட இருந்தாங்களே...! அவங்க தானே அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தாங்க...
ம்... அவங்க இருந்த வரை பிரச்னை இல்லை. ஆனால் இப்ப அவங்க சிங்கப்பூருக்குப் போய் இருக்காங்க!
ஓ...! அங்க எதுக்குடா போனாங்க...? யார் இருக்காங்க அங்க...?
சஞ்சயின் சித்திக்குக் குழந்தை பிறக்கும் சமயம். அதனால்தான் அம்மாகூட இருப்பது நல்லது என்று நான்தான் அவர்களை அங்கே போய் இருக்கச் சொன்னேன்.
ஓ...! அப்படியா? நல்ல விஷயம்தான். சரி, அவங்க எப்ப வருவாங்க இங்க?
"ம்... அங்க சஞ்சய் சித்தியைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. அவங்க வேலைக்கு வேற போறாங்க… அதனால