Kanavu Kavithai Nee
()
About this ebook
ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜுவாலா படிப்பில் மட்டுமல்ல குறும்பு செய்வதிலும் வல்லவள்.
ஒரு பந்தயத்தால் அவள் வாழ்க்கையில் பல மாற்றங்கள். டாப் கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கும் அவள் அங்குதான் யுவனை சந்திக்கிறாள். இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் சுவாரசியத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Read more from Lakshmi Sudha
Puthiya Raagam Rating: 5 out of 5 stars5/5Azhagiya Maalaiyil Rating: 0 out of 5 stars0 ratingsOru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Natchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Mayakkiya Poongatre Rating: 0 out of 5 stars0 ratingsSaaral Sollum Sangeetham! Rating: 5 out of 5 stars5/5Malargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Paadum Boopalam... Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Kaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Thullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Manathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsUn Thanimai Sugamaa? Rating: 5 out of 5 stars5/5Pookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Sagiye Snegithiye Rating: 0 out of 5 stars0 ratingsMayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Poo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Poo Mazhai Ennul...! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Mazhai Kaalam Rating: 4 out of 5 stars4/5Roja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5En Swasakaattru Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsPaniyil Nanaintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsUrugiyathey En Ullam! Rating: 0 out of 5 stars0 ratingsKaatrinile Varum Thendral Rating: 4 out of 5 stars4/5Panneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Moongil Kaatril Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5
Related to Kanavu Kavithai Nee
Related ebooks
Velicha Poove Vaa Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Mazhaiyiley Naan Rating: 0 out of 5 stars0 ratingsUllam Irandum Ondru Rating: 0 out of 5 stars0 ratingsManjam Vantha Thendral Rating: 5 out of 5 stars5/5Varuvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Swasamadi Nee Enakku Rating: 4 out of 5 stars4/5En Swasakaattru Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsEnnamo Yetho… Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesuthey... Rating: 0 out of 5 stars0 ratingsPoongatru Sangeetham Aanathu! Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Vaa Nila Rating: 0 out of 5 stars0 ratingsIndha Pookkal Unakkaga Rating: 4 out of 5 stars4/5Nilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsVaanamenum Veedhiyiley...! Rating: 0 out of 5 stars0 ratingsOli Pookkum Malai... Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Pookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Ithu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Un Paarvai Oru Varam Rating: 0 out of 5 stars0 ratingsNee En Sanrothayam Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsPonmagal Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Mazhai Kaalam Rating: 4 out of 5 stars4/5Sagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Nenjathil Nee Rating: 5 out of 5 stars5/5Vaanmathiye Vaa! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanavu Kavithai Nee
0 ratings0 reviews
Book preview
Kanavu Kavithai Nee - Lakshmi Sudha
https://www.pustaka.co.in
கனவு கவிதை நீ
Kanavu Kavithai Nee
Author:
லட்சுமி சுதா
Lakshmi Sudha
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 1
மேகம்
காற்றுக்கு
தூது
விட்டு
கொண்டிருக்கிறது...
மழை
காதலியை
சந்திக்க
மேகம்
காற்றுக்கு
தூதுவிட்ட
வண்ணம்
உள்ளது.
எனக்கும்
இதற்கும்
சம்பந்தம்
இல்லை
என்பது
போல்
காற்று
விலகி
விலகி
செல்கிறது.
மேகம்
அதை
துரத்திப்
பிடிக்கிறது.
மெல்ல
மழை
வருகிறது.
வானில் மேகங்கள் பஞ்சுப்பொதிகளாக மிதந்து கொண்டு இருந்தன.
கருநிற மேகங்கள் மழை வரப்போகிறது என்று சொல்லாமல் சொல்லின.
டீ எஸ்டேட்டில் இருந்து வரும் வாசனையை நுகர்ந்தபடி சைக்கிளில் சென்று கொண்டிருந்தாள் ஜுவாலா.
சடசடவென மழை துளிகள் அவள்மேல் விழத் தொடங்கின.
அதை துளி கூட பொருட்படுத்தாமல் சைக்கிளை அதே வேகத்துடன் மிதித்தபடி சென்று கொண்டிருந்தாள் அவள்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள கங்கரா என்னும் இடத்தில் மழை ரொம்ப சாதாரணம்.
அதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் மழையை பொருட்படுத்தாமல் வேலையை செய்தவண்ணம் இருந்தனர்.
ஜுவாலாவும் அந்த ரகத்தை சேர்ந்தவள் தான்.
ஐந்து நிமிடத்தில் வீட்டை அடைந்தாள் அவள்.
அக்கா ஆதர்ஷினி அவள் வருகைக்காக காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
என்னடி இன்னைக்கு லேட்டா? தலையை தொட
என்று அவளிடம் துடைத்துக்கொள்ள டவலை நீட்டினாள்.
அட அதெல்லாம் ஒன்னும் வேணாம் இந்த மழை புதுசா என்ன நமக்கு.
அதுசரி அம்மா பாத்தா என்ன தானே திட்டுவாங்க. சரி இன்னைக்கு ஏன் இவ்வளவு லேட்டு.
காலேஜ் பைனல் இயர்ல ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் இருந்தது.
உனக்கு எப்படி படிப்பில இவ்வளவு இன்டர்ஸ்ட். நல்ல காலம் நான் உன்னாட்டம் இல்லை. பிளஸ் டூ-விற்கு மேல் எனக்கு படிக்கவே பிடிக்கவில்லை. நான் அம்மா மாதிரி நீ அப்பா மாதிரி போல
"அப்பாவுடன் என்னை கம்பேர் செய்து பேசாதே அது எனக்கு துளிகூட பிடிக்கவில்லை.
அப்பா ஒரு கோழை ஒரு சுயநலவாதி நம்பிக்கை துரோகி." என்றாள் கோபமாக ஜுவாலா.
ஏய் அப்படி எல்லாம் பேசாதே என்ன இருந்தாலும் நமக்கு உயிர் கொடுத்தவர் அவர்.
"உயிர் கொடுத்தால் மட்டும் போதுமா.
இளம் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு போன அப்பா நமக்கு உயிர் கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்.
அதற்கப்புறம் அம்மா பட்ட கஷ்டங்கள் ஒன்றா இரண்டா?
ஓய்வு ஒழிச்சலின்றி இரவு பகல் பாராமல் நம்மை வளர்ப்பது அம்மா.
என்னைப் பொறுத்தவரை அப்பா அம்மா எல்லாமே எனக்கு அம்மாதான்."
என்ன அம்மா அம்மா அப்படின்னு என்னோட தலை உருளுது
என்றபடியே சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் கங்காபாய்.
எனக்கு அப்பா அம்மா எல்லாம் நீங்க தான் என்று அக்காகிட்ட சொல்லிட்டு இருந்தேன் அம்மா.
அப்பாவைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்றும் உங்கள் இருவருக்கும் பலமுறை சொல்லியிருக்கிறேன்.
என்ற அவளின் குரலில் விரக்தியும் வெறுப்பும் தெரிந்தது.
"என்ன செய்வது ஏதாவது ஒரு கட்டத்தில் அவரைப் பற்றிய பேச்சு வரத்தானே செய்யும்.
நாங்கள் அமைதியாக இருந்தாலும் சுற்றியுள்ளவர்கள் சும்மா இருக்கிறார்களா என்ன" என்ற ஜுவாலாவின் குரலில் கோபம் தெரிந்தது.
"மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்துக் கேட்க கூடாது.
இந்த ஊரில் உள்ளவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ரொம்பவே பொறாமை.
எந்த ஆண் துணையின்றி உங்கள் இருவரையும் நான் வளர்த்த ஆளாகி இருப்பது கண்டு அவர்களுக்கு பொறாமை"
"அது சரிதான் அம்மா.
அக்கா உங்களைப்போல் துணிகள் வைப்பதில் கில்லாடி.
எவ்வளவு அழகான வண்ணங்கள் நிறைந்த உடைகளை அவள் தன் கைவண்ணத்தில் தயார் செய்து இருக்கிறாள்."
ஏய் நீ மட்டும் என்ன சும்மாவா. பிளஸ் 2-வில் நீதான் ஸ்கூலில் முதலிடம் பிடித்தாய். அந்த நாளை மறக்க முடியுமா?
அக்கா போதும்
என்று செல்லமாக சிணுங்கினாள் ஜுவாலா.
சரி ரெண்டு பேரும் சாப்பிட்டு பொழுதோட படுங்க.
என்று விரட்டினாள் தாயார்.
அத்தியாயம் 2
நீல
வானம்
பரந்து
விரிந்திருக்கிறது.
வண்ணப்
பூக்களால்
பூமி அலங்கரிக்கப்
பட்டுள்ளது.
மூங்கில்
காடுகளின்
மத்தியில்
சல சல
என்ன
நதி
ஓடிக்
கொண்டிருக்கிறது.
ஒரு பறவையின்
கானம்
காதில்
மெல்ல
பாய்கிறது.
நீ வருவாய்
என
காத்திருக்கிறேன்
நான்.
சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆஃப் ஹிமாச்சல் பிரதேஷ்.
படிக்கும் மாணவர்களின் கனவு வளாகம் அது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற யுனிவர்சிட்டிகல்லில் அதுவும் ஒன்று.
மனிதவள மேம்பாடு, இலக்கியம், வணிகம், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெரைன் டெக்னாலஜி, காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ், டெக்ஸ்டைல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என பல கோர்ஸ்கள் இந்த யுனிவர்சிட்டியில் வழங்கப்படுகின்றன.
இங்கேதான் ஜுவாலா மனிதவள மேம்பாட்டில் இளங்கலை கோர்ஸில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.
இரண்டு வருடங்களும் அவள் தான் கல்லூரியில் டாப்பர்.
அதனால் அவள் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் ரொம்பவே பிரபலம்.
அதுமட்டுமின்றி அவள் குறும்புகள் செய்வதிலும் வல்லவள்.
அதனால் எப்பவும் அவளை சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், பணக்கார வட்டத்தை சேர்ந்தவர்கள்.
கல்லூரிக்கு காரில் தான் வந்து இறங்குவார்கள்.
அவர்கள் மத்தியில் சைக்கிளில் கல்லூரிக்கு வரும் ஒரே பெண் இவள் தான்.
கல்லூரியில் முதல்முதலாக சேர்ந்த பொழுது தன் பொருளாதார சூழ்நிலையை குறித்து அவளுக்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.
அவளை சில ஸ்டூடெண்ட்ஸ்சும், இன்சல்ட் செய்தவண்ணம் இருந்தனர்.
அவளுடைய ஏழ்மையை சுட்டிக்காட்டி கிண்டலடிப்பது அவர்களுக்கு வழக்கமாக இருந்தது.
ஆனால் அதையெல்லாம் துளிக்கூட பொருட்படுத்தாமல் நான் இங்கு வந்திருப்பது படிப்பதற்கு மட்டுமே வேறு எதற்கும் இல்லை என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, தன்னுடைய முழு முயற்சியையும் படிப்பில் அவள் செலுத்தினாள்.
அவள் முயற்சி வீணாகவில்லை.
கல்லூரியில் வைத்த தேர்வுகளில் அவள்