Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavai Thedum Vaanam
Nilavai Thedum Vaanam
Nilavai Thedum Vaanam
Ebook112 pages42 minutes

Nilavai Thedum Vaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703702
Nilavai Thedum Vaanam

Read more from Vidya Subramaniam

Related to Nilavai Thedum Vaanam

Related ebooks

Reviews for Nilavai Thedum Vaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavai Thedum Vaanam - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    நிலவை தேடும் வானம்

    Nilavai Thedum Vaanam

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    இதாம்மா மயிலாப்பூர் குளம். எங்க போவணும் உனக்கு? ஆட்டோ ஓட்டுநர் கேட்டதும் அவசர அவசரமாக தனது கைப்பையில் கை விட்டு துண்டுச்சீட்டை எடுத்தாள் அகிலா. ஆறுமாதத்திற்கு முன் அழகான தமிழில் சுந்தரேசன் எழுதிக்கொடுத்திருந்த விலாசம் அது. ஆட்டோ ஓட்டுநரிடம் படித்து காட்டினாள்.

    அந்த தெருவுக்கு போகணும்னா மேல இருபது ரூபா ஆகும். இல்லாட்டி இங்கயே இறங்கி பொடி நடையா போறதுனா போய்டு.

    நா ஊருக்குப் புதுசுங்க. கொஞ்சம் கொண்டுவிட்ருங்களேன்.

    இருபது ரூபா சேர்த்து தரயா…?

    பத்து ரூபா தரேனே.

    அப்பொ பாதி தூரம் தான் போவ முடியும்.

    சரிப்பா இருபது தரேன்.

    அகிலா வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள ஆட்டோ ஒரு உறுமு உறுமி விட்டுக் கிளம்பியது.

    சந்து பொந்துகளில் நுழைந்து ஒரு வீட்டின் முன் நின்றது. புதுப்பிக்கப்படாத பழைய வீடு அது. வாசலை ஒட்டி இடதுபக்கமாய் மாடிப்படி சென்றது. வாசற்படியில் அமர்ந்து ஒரு வயது குழந்தைக்கு சோறூட்டிக் கொண்டிருந்த பெண்மணி ஒருத்தி இவளை யாரென்பது போலப் பார்த்தாள்.

    சுந்தரேசன் இங்க தானே இருக்கார்? அவளிடம் விசாரித்தாள்.

    சுந்தரேசனா...? அப்படி யாரும் இங்க இல்லையே... என்ன நெம்பர் ..? இந்த தெரு தானே?

    அகிலா விலாசச் சீட்டை அவளிடம் காட்டினாள்.

    ஆமா. இந்த வீட்டு விலாசம் தான் எழுதியிருக்கு. ஆனா அப்படி யாரும் இங்க இல்லையேம்மா. இது எங்க சொந்த வீடு. வாடகைக்கு கூட யாருக்கும் இதுவரை விட்டதில்லையே.

    அகிலாவுக்குப் புரிந்தது. "சுந்தரேசன் பொய் விலாசம் கொடுத்து ஏமாற்றியிருக்கிறான். அப்படியானால் அவன் நல்லவன் இல்லையா…? அவனை நம்பியா…? அவளுக்கு

    அழுகை வந்தது. பயத்தில் அடிவயிறு சற்றே உதறியது. தொண்டை காய்ந்து போயிற்று.

    கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா…? மெலிந்த குரலில் கேட்க, அந்தப் பெண்மணி உள்ளே சென்று பானையிலிருந்து நீர் மொண்டு வந்து நீட்டினாள். சில்லென்ற நீர் தொண்டையில் இதமாய் இறங்கியது. குடிக்கும் போதே அடுத்து என்ன செய்வதென யோசித்தாள். ஊரிலிருந்து புறப்பட்டு வந்தது பெரும் தவறெனப் புரிந்தது. இனி ஊருக்குத் திரும்பிச் சென்றால் ஊர் மதிக்குமா என்பதும் கேள்விக்குறி தான். அப்பா இருந்தவரை ஏதோ ஒரு பாதுகாப்பு இருந்தது. இப்போது அதுவும்மில்லை. அவரது மரணம் தானே எல்லாவற்றிற்கும் காரணம். முகம் தெரியாத சுந்தரேசன் அறிமுகமானது கூட அவரது மரணத்தில் தானே...!!

    அகிலா காலி சொம்பை நீட்டி விட்டு நன்றி சொன்னாள்.

    எங்கேர்ந்து வரம்மாநீ… யாரிந்த சுந்தரேசன்…? ஏன் எங்க விலாசத்தைக் கொடுத்தான்…? என்ன பிரச்சனை உனக்கு…?

    அவள் கேட்டதும் அழுகை தொண்டையில் வலியாய்க் கிளம்பியது. அடக்கச் சிரமப்பட்டதில் கண்கள் சிவந்து மூக்கு விடைத்தது.

    எங்களுக்குத் தெரிஞ்சவர். ஒரு உதவி வேண்டி அவரைத் தேடி வந்தேன். கொஞ்சநாள் எங்க ஊர்ல வேலை பார்த்தவர். ஆனா ஏன் பொய் விலாசம் கொடுத்தார்னு தெரியல.

    இப்பொ என்ன செய்யப் போற?

    பரவாயில்லை. நா ஊருக்கே திரும்பிப்போறேன் அகிலா அவளுக்கு மீண்டும் நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள். நடை தளர்ந்திருந்தது. புறப்பட்டதிலிருந்து பட்டினி கிடந்த வயிறு சோற்றுக்கு அலறியது. உள்ளே ஒரு சின்னஞ்சிறு ஜீவனும் சேர்ந்து அலறியது அம்மா… பசிக்கிறதே…!

    அகிலா சட்டென நின்றாள். அருகிலிருந்த திண்ணைக் கடை கையேந்தி உணவகத்திற்குச் சென்றாள். மூன்று இட்லி வாங்கி விழுங்கினாள். காசு எண்ணி கடைக்காரரிடம் கொடுத்து விட்டு எழும்பூர் ரயிலடிக்கு எந்த பேருந்தில் செல்ல வேண்டும் என்று விசாரித்தாள்.

    முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் நல்ல காலம் கூட்டம் அதிகமில்லை. இருக்கை ஒன்றில் அமர்ந்து சாய்ந்த படி கண் மூடினாள்.

    சார்...

    யாரது…? உள்ளே வாங்கோ.

    என் பேர் சுந்தரேசன். அடுத்த வீட்டு சங்கரனோட சிநேகிதன். உங்ககிட்ட போன வருஷத்து பஞ்சாங்கம் இருந்தா கொஞ்சம் தர முடியுமா?

    கொஞ்சம் என்ன? முழுசாவே எடுத்துக்கோ அவர் சிரித்தபடி பஞ்சாங்கத்தை எடுத்து நீட்டினார்.

    போன வருஷத்து பஞ்சாங்கத்துல என்ன பார்க்கணும்?

    எங்கப்பாவோட திதி மறந்து போச்சு. போன அக்டோபர்லதான் போனார். நாளை வெச்சு திதியைத் தெரிஞ்சுக்கத்தான். வந்த இடத்துல ஒரு திதி கொடுத்துடலாம்னு தோணுது.

    தேதி சொல்லு அவர் பஞ்சாங்கத்தை வாங்கி பிரித்தார். திதி பார்த்து சொன்னார்.

    அடடா... துவாதசி திதி இன்னிக்காச்சே.

    போய்டுச்சா… பாருங்க அது கூட தெரியல எனக்கு.

    பரவாயில்ல நாளை விடியற்காலை வரை திதி இருக்கு. கார்த்தால இருட்டோட எழுந்து ஆற்றில் ஒரு முங்கு போட்டு திதி குடுத்துடேன்.

    நன்றி அய்யா.

    இருக்கட்டும். எங்க இருக்க? என்ன வேலை பார்க்கற?

    "சென்னைல இருக்கேன். தனியார் வங்கியில் மானேஜரா வேலை பார்க்கறேன். சங்கரனுக்கு தூரத்து உறவு. பெண் பார்க்கறதுக்காகத்தான் உங்க ஊருக்கு

    வந்திருக்கேன்."

    யாருக்கு பெண்? உனக்கா?

    எனக்கே தான்.

    பார்த்தாச்சா…? பெண் யாரு?

    எனக்கே இன்னும் சொல்லலை. வெள்ளிக்கிழமை போகும் போது பார்த்துக்கோன்னு சொல்லிட்டான். அது சரி நீங்க தனியாவா இருக்கீங்க..? வீட்ல வேற யாரும் இல்லையா?

    என் பொண்ணு இருக்காளே. உள்ள வேலையார்க்கா.

    ஓ.ஹோ... அவன் பார்வை கூடம் தாண்டி உள்ளே சென்றது. அவன் அங்கிருந்து கிளம்பும் வரை அந்தப் பெண் வெளியில் வரவில்லை.

    அவன் பெரியவரிடம் விடை

    Enjoying the preview?
    Page 1 of 1