Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanga Thamarai Malare!
Thanga Thamarai Malare!
Thanga Thamarai Malare!
Ebook152 pages1 hour

Thanga Thamarai Malare!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பாக்கியலட்சுமி – சங்கர் தம்பதியினர் நிறைந்த மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்திய போதிலும், அவர்களின் தாம்பத்தியத்திற்குச் சான்றாய் ஒரு குழந்தை பிறக்கவேயில்லை. ஒவ்வொரு முறை பாக்கியலட்சுமி கருவுறும் போதெல்லாம் எல்லோரும் ஆவலோடு காத்திருப்பர். ஆனால், ஒன்று குழந்தை இறந்து பிறக்கும், அல்லது பிரசவத்திற்கு முன்பே வயிற்றில் கரைந்து விடும்.

ஒரு முறை பிரசவப் போராட்டத்தில் பக்கியலட்சுமியும், குழந்தையும் இறந்து விட, சங்கருக்கு பாக்கியலட்சுமியின் தங்கை சுமித்ராவைத் திருமணம் செய்து வைக்கின்றனர் பெரியோர்கள்.

திருமணத்திற்குப் பின் ஒரு முறை எதேச்சையாக அக்கா பாக்கியலட்சுமியின் டைரியைப் படித்த சுமித்ரா அதிர்ச்சியடைகிறாள். சங்கரின் நிஜ முகத்தை டைரியில் அக்கா புட்டுப் புட்டு வைத்திருந்தாள். அக்கா சாவிற்கே காரணமே சங்கர்தான் என்பதைப் புரிந்து கொண்ட தங்கை சுமித்ரா, எப்படி தன் கணவரை எதிர் கொண்டாள்...? அவரைப் பழிவாங்க என்னென்ன உத்திகளைக் கையாண்டாள்? என்பதை சுவைபட எழுதியுள்ளார் நாவலாசிரியர்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130004811
Thanga Thamarai Malare!

Read more from Mukil Dinakaran

Related to Thanga Thamarai Malare!

Related ebooks

Reviews for Thanga Thamarai Malare!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanga Thamarai Malare! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    தங்கத் தாமரை மலரே!

    Thanga Thamarai Malare!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 27

    அத்தியாயம் – 28

    அத்தியாயம் – 29

    அத்தியாயம் – 30

    அத்தியாயம் – 31

    அத்தியாயம் - 1

    சுமித்ரா அலுவலகத்திற்கு லீவு போட்டிருந்தாள். காரணம்? இன்று அவள் வீட்டில் பெண் பார்க்கும் படலம்.

    ஏய்... சுமித்ரா... இன்னிக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றது உன்னைப் பெண் பார்க்க அல்ல...! உன்னோட அக்கா பாக்கியலட்சுமியைப் பார்க்க...! அதனால நீ லீவெல்லாம் ஒண்ணும் போட வேண்டாம்...! மொதல்ல ஆபீஸுக்குக் கிளம்பு...! கிளம்பு! தாய் மனோன்மணி, வேறொரு காரணத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு அவளை விரட்டினாள்.

    ம்மா... நீ பேசாம இரும்மா...! நான் ஒண்ணும் சும்மா லீவு போடலை...! அக்கா கூட இருந்து அவளுக்கு அப்சரஸ் மாதிரி அலங்காரம் பண்ணி... மாப்பிள்ளைப் பையன் முன்னாடி நிறுத்தி... ஒரே பார்வைல அவரை ஓ.கே! பண்ண வைக்கப் போறேன்...! அதுக்குத்தான் லீவு போட்டிருக்கேன்! தங்கை சுமித்ரா வேறொரு கோணத்தில் தன் பதிலைச் சொன்னாள்.

    ப்ச்...! அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்... நீ புறப்படு சாமி. கிட்டத்தட்ட கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாய் மனோன்மணி மகளைத் துரத்தினாள்.

    த பாரும்மா...! எனக்கு நிறைய லீவு ஸ்டாக்குல இருக்கும்மா...! எடுத்துக்கிட்டா எடுத்துக்கலாம்...! இல்லேன்னா வீணாய்த்தான் போயிடும்...! என்கேஷ் பண்ணவெல்லாம் முடியாது...! அதனாலதான் நான் லீவு போட்டுட்டு இருக்கேன்...! இந்த லீவுனால எனக்கு எந்தப் பாதிப்பும் வராது...! போதுமா? ஆணித்தரமாய்க் கூறினாள் சுமித்ரா.

    மனோன்மணியால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் போய் விட, அமைதியானாள்.

    அப்போது சமையலறைப் பக்கம் வந்த தந்தை கோவிந்தராஜ், என்ன மனோ... எல்லாம் ரெடியா...? அவங்க சரியா பதினோரு மணிக்கு வந்திடுவாங்க! என்றார் டென்ஷனாய்.

    இங்க சமையல் அறைப்பக்கம் எல்லாம் ரெடி...! நீங்க அங்க ஹால்ல பண்ண வேண்டியதையெல்லாம் பண்ணிட்டீங்களா? கணவனைத் திருப்பிக் கேட்டாள் மனோன்மணி.

    ம்... ம்... அங்கியும் எல்லாம் ரெடி...! என்னாச்சு... பாக்கியலட்சுமி ரெடியாயிட்டாளா?

    இதோ... அக்காவுக்கு மேக்கப் போடறதுக்குன்னே இங்க ஒருத்தி ஆபீஸுக்குப் போகாம லீவு போட்டுட்டு உட்கார்ந்திட்டிருக்கா... அவளைக் கேளுங்க! என்றாள் மனோன்மணி சுமித்ராவைக் கை காட்டி.

    கோவிந்தராஜ் திரும்பி இளைய மகளைப் பார்க்க,

    அப்பா... பத்தே நிமிஷத்துல அக்கா தயாராயிடுவா...! இப்பவே மேக்கப் போட்டுட்டா... அப்புறம் அவங்க வர்ற நேரத்துல எல்லாம் கலைஞ்சு போய் ஒரு மாதிரியா இருக்கும்னுதான் வெய்ட் பண்ணிட்டிருக்கேன்! என்றாள் சுமித்ரா.

    இப்ப மணி என்னாச்சு? என்றவர் மணிக்கட்டை உயர்த்தி வாட்சைப் பார்த்து விட்டு, ஆச்சு... பத்தே காலுக்கு மேலே ஆயிடுச்சு...! போ... இப்பவே வேலையை ஆரம்பிச்சிடு... அப்பத்தான் சரியாயிருக்கும்! என்றார்.

    ஓ.கே...! டன் சொல்லி விட்டு எழுந்த சுமித்ரா, போகிற போக்கில் பாயசத்திற்காக தாய் எடுத்து வைத்திருந்த முந்திரிப் பருப்பில் இரண்டைக் கையில் எடுத்துக் கொண்டு போக,

    ஏய்... ஏய்...என்று அவளை அதட்டிய மனோன்மணி, உன்னையெல்லாம் சமையல் ரூமுக்குள்ளார விட்டதே தப்பு! என்று கூவினாள் மகளின் முதுகைப் பார்த்து.

    உள் அறையில் தேமே என்று அமர்ந்திருந்த அக்கா பாக்கியலட்சுமியிடம் சென்ற சுமித்ரா, ஏய்... என்னடி கல்யாணப் பொண்ணு இப்படி சோகமா... அசோகவனத்துச் சீதையாட்டம் உட்கார்ந்திட்டிருக்கே...? என்னாச்சு...? மேக்கப் ஆரம்பிக்கலாமா? கேட்டாள்.

    ஏ... நீ வருவே... மேக்கப் பண்ணி விடுவே!ன்னுதாண்டி வெய்ட் பண்ணிட்டிருக்கேன்...? எங்க போய்த் தொலைஞ்சே இத்தனை நேரம்? செல்லமாய்க் கோபித்தாள் பாக்கியலட்சுமி.

    கட்டிலின் மீது குவித்து வைக்கப்பட்டிருந்த சேலைகளைப் பார்வையால் அளந்த சுமித்ரா, எதுக்கு இத்தனை சேலைகளை எடுத்துக் குவிச்சு வெச்சிருக்கே?

    இதுல... எதைக் கட்டறதுன்னு ஒரே கன்ஃப்யூஸ்

    ஓ.கே...! நான் செலக்ட் பண்ணித் தர்றேன்...! நான் தர்றதை பேசாமக் கட்டிக்கணும்...! என்ன? சொல்லியவாறே அந்தச் சேலைக் குவியலுக்கு அருகே அமர்ந்து ஒவ்வொன்றாய் எடுத்துப் புரட்டிப் போட்ட சுமித்ரா, அதிலிருந்து மாம்பழ நிறச் சேலையொன்றை எடுத்துக் காட்டி, இந்தா... இதைக் கட்டு! என்றாள்.

    ஏண்டி... இதை செலக்ட் பண்றே...? இதை விட நல்ல கலர்ல... நிறைய சேலைக இருக்கே?

    "ப்ச்...! இதைக் கட்டுன்னா கட்டு... அவ்வளவுதான்...! இந்தக் கலர்தான் ஆம்பளைகளுக்கு ரொம்ப பிடிக்கும் என்றாள் சுமித்ரா.

    ம்... எப்படிச் சொல்றே?

    நீ வேணாப் போயி... ஒரு பத்து ஆம்பளைகளைக் கூட்டிட்டு வந்து... இதுல ஒண்ணை செலக்ட் பண்ணச் சொல்லிக் கேட்டுப் பாரு... அதுல எட்டு அல்லது ஒன்பது பேர் இந்தக் கலரைத்தான் செலக்ட் பண்ணுவாங்க...! ஐ நோ ஜெண்ட்ஸ் டேஸ்ட்! என்றாள் சுமித்ரா.

    பாவி... ஆம்பளைகளைப் பத்தி பெரிய ஆராய்ச்சியே பண்ணி வெச்சிருப்பே போலிருக்கே? அக்கா பாக்கியலட்சுமி சிரித்துக் கொண்டே சொல்ல,

    பின்னே...? எத்தனை ஆம்பளைகளைப் பார்க்கறேன்?

    ஏய்... ஏய்... என்னடி சொல்றே? அதிர்ந்து போய்ச் கேட்டாள் அக்கா.

    ஏன் ஷாக் ஆகறே...? ஆம்பளைகளெல்லாம் சத்தமில்லாம ஆயிரம் பேரை சைட் அடிப்பாங்க... பொம்பளைக அட்லீஸ்ட் ஒரு நூறு பேரையாவது சைட் அடிக்க வேண்டாமா?

    ம்ஹூம்... இது ஒண்ணும் சரியில்லை...! அப்பாகிட்ட சொல்லி உடனே உனக்கும் ஒரு மாப்பிள்ளையை பார்த்திட வேண்டியதுதான்! தலையை இட, வலமாய் ஆட்டிக் கொண்டு பாக்கியலட்சுமி சொன்னாள்.

    வேணா... இப்படிக் கூடச் செய்யலாம்...! இன்னிக்கு வர்ற மாப்பிள்ளை கிட்ட ஸ்பெஷல் ஆஃபர்... அக்காவைக் கட்டிக்கிட்டா தங்கச்சி இலவசம்ன்னு சொல்லி... நம்ம ரெண்டு பேரையுமே கட்டி வெச்சிடலாம்...! மனுஷன் ஒண்ணுக்கு ரெண்டு கிடைக்கும் போது வேண்டாம்ன்னா சொல்லிடுவார்? சொல்லி விட்டு கல... கலவெனச் சிரித்தாள் சுமித்ரா.

    வர... வர... உனக்கு வாய்க்கொழுப்ப்ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுடி சொன்னபடியே பாக்கியலட்சுமி தங்கையை அடிக்க வர,

    சரி... சரி... பேசிக்கிட்டே இருந்தா அவங்க வந்திடுவாங்க... முதல்ல வந்த வேலையைப் பார்ப்போம்! சுமித்ரா அடியிலிருந்து தப்பியவாறே சொன்னாள்.

    தங்கையின் விருப்பப்படி அவள் எடுத்துக் கொடுத்த அந்த மாம்பழ நிற சேலையையே கட்டிக் கொண்டாள் பாக்கியலட்சுமி.

    நல்லாயிருக்கா? கேட்டாள்.

    சூப்பராயிருக்கு...! அப்படியே வந்து உட்கார்... மேக்கபொஐயும் முடிச்சிடறேன்! என்றாள் சுமித்ரா.

    தன்னுடைய மொத்த திறமையையும் காட்டி அக்காவுக்கு அலங்காரம் செய்த சுமித்ரா, மேக்கப்பை முடிப்பதற்கும் வெளியே கார் வந்து நிற்பதற்கும் சரியாயிருந்தது.

    அவங்க வந்திட்டாங்க போலிருக்கே? டென்ஷனானாள் பாக்கியலட்சுமி.

    ஒண்ணும் பிரச்சினையில்லை...! மேக்கப்பும் முடிஞ்சிடுச்சு! சுமித்ரா ஃபைனல் டச்சப் செய்தாள்.

    *****

    அத்தியாயம் - 2

    முன் ஹாலில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் ஒரு புறமுமாய் அமர்ந்திருக்க,

    மாப்பிள்ளை சங்கரும், அவனது தகப்பனார் கஸ்தூரியும் மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.

    பாக்கியலட்சுமியின் தந்தை கோவிந்தராஜ் கீழே

    Enjoying the preview?
    Page 1 of 1